May 22, 2011

கனியிருப்ப...


இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை கனிமொழியைச் சுழற்றி அடித்து திகாரில் தள்ளியிருக்கிறது.  நேற்று தொடங்கி இன்றுவரை ட்விட்டரில் கனியும் திகாரும் டாப் ட்ரெண்டிங். (தமிழகத்தில் கிடைக்காவிட்டால் என்ன, திகாரில் நாங்கள்தான் மெஜாரிட்டி). ஃபேஸ்புக்கிலும் கனிமொழியே நிறைந்திருந்தார். (முதலில், ஆ. ராசா. இப்போது, கனிமொழி. ஏக் 2ஜி கேலியே!) பர்கா தத் தொடங்கி இணையத்தில் நேற்று அக்கவுண்ட் ஆரம்பித்தவர்கள் வரை அனைவரும் கனிமொழியின் கைதை ஒருவித பரவசத்துடன் கொண்டாடித் தீர்த்துவிட்டார்கள்.
அன்னா ஹசாரேவுக்காக மெழுகுவர்த்தி ஏற்றியவர்கள் கனிமொழியின் கைதை ஊழலுக்கு எதிரான குறிப்பிடத்தக்க வெற்றி என்கிறார்கள். சட்டம் தன் கடமையைச் செய்திருக்கிறது. எத்தனை பெரிய அரசியல்வாதியாக இருந்தாலும், எவ்வளவு சக்தி வாய்ந்தவராக இருந்தாலும் சட்டத்தின் நீண்ட கரம் அவர்களை விட்டு வைக்காது. இது ஜனநாயகத்தின் வெற்றி. ஊழலுக்கு எதிரான போராட்டத்தின் வெற்றி. ஜனநாயகத்தின் வெற்றி. மீடியாவின் வெற்றி.  ஸோ அண்ட் ஸோ.

No comments: