May 27, 2009

பிரபாகரன் குறித்து இரு கட்டுரைகள்

1) பிரபாகரன் மற்றும் விடுதலைப் புலிகள் இயக்கம் குறித்து ஒரு குர்து வலைப்பதிவாளர் (Shexmus Amed) எழுதியிருக்கும் விமரிசனம் இது. குர்து மக்களின் போராட்டத்துக்கும் இலங்கைத் தமிழர்கள் போராட்டத்துக்கும் நிறைய ஒற்றுமைகள் இருப்பதாக இவர் கருதுகிறார். விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் பார்த்து தான் மிகவும் பெருமைப்படுவதாகக் குறிப்பிடும் Shexmus, இயக்கத்தின் பலத்தையும் பலவீனத்தையும் ஒருங்கே பட்டியலிட்டுத் தருகிறார்.

2) லங்கா கார்டியனில் அனிதா பிரதாப் எழுதியிருக்கும் கட்டுரையில் புதிதாக எந்த தகவலும் இல்லை. பிரபாகரனின் மரணம் குறித்து இவர் எழுப்பியிருக்கும் சந்தேகங்கள் ஏற்கெனவே இணையத்தில் பரவலாக விவாதிக்கப்பட்டவை. தனக்கு எட்டு ராசியில்லாத எண் என்று பிரபாகரன் ஒரு முறை அனிதா பிரதாப்பிடம் குறி்ப்பிட்டிருந்தாராம். பிரபாகரன் பிறந்தது நவம்பர் 26. கூட்டுத்தொகை எட்டு. 8, 17, 26 ஆகிய தினங்களில் பிரபாகரன் முக்கிய தாக்குதல் எதையும் தொடுக்கமாட்டாராம். பிரபாகரன் இறந்ததாக இலங்கை ராணுவம் குறிப்பிடும் தினம் மே 17. இறந்தவர் பிரபாகரன்தான் என்றால், அவர் நம்பிக்கை சரியாகவே இருந்திருக்கிறது என்கிறார் அனிதா பிரதாப்.

6 comments:

Anonymous said...

unga josialism numerologism ellathayaum suya nala karangalta use panni kasu porukki thinnunga. ena avar makkalukaha valbavar

butterfly Surya said...

பகிர்விற்கு நன்றி மருதன்.

இதையும் பாருங்கள்

எச்சரிக்கை: கோரமானவை..


http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5792:prabhananthikadal&catid=277:2009

Anonymous said...

இந்த அனிதா பிரதாப் ஏற்கெனவே எழுதிய அபந்தங்கள் இன்னும் ஞாபகத்தில் உள்ளது.

மருதன் said...

வண்ணத்துபூச்சியார்: மிகவும் கோரமான காட்சிகள். இலங்கையின் போர்க்குற்றத்துக்கு ஒரு சாட்சி இது. பிரபாகரனை மிகக் கடுமையாக விமரிசனம் செய்துவரும் பி. இரயாகரனும் இலங்கையின் மனிதாபிமானமற்ற இச்செயலை கண்டித்திருக்கிறார்.

சுடர் said...

அந்த குர்து எழுத்தாளரின் கருத்துகளை நான் ஏற்றுக்கொள்கிறேன். லிங்க் கொடுத்ததற்கு நன்றி

Anonymous said...

பிரபாகரனை மிகக் கடுமையாக விமரிசனம் செய்துவரும் பி. இரயாகரனும் இலங்கையின் மனிதாபிமானமற்ற இச்செயலை கண்டித்திருக்கிறார்.///
iyoo iyoo, maruthan rayaganin kooramana virupaai than kaati irukirar. avarkal kevalamanavarkal. thangalin tholilukketpa nadakirarkal. ethinai aariyam makkal sathathai poor kuttam eluthatvarkal ippa eaan elutha venum. pls rayakanai niyayapadutha vendam. tamilmandram endal yaaaurum varamattarkal endu tamilcircle endu pala site nadathum ivarkal rajapakshevai vida kettavarkal. pls