என் ஜிமெயில் ஐடி (marudhan@gmail.com) மூன்று தினங்களுக்கு முன்பு களவாடப்பட்டுவிட்டது. களவாடியவர், என் ஐடியைப் பயன்படுத்தி என் அட்ரெஸ் புக்கில் உள்ள சிலரிடம் (குறிப்பாக, பெண்களிடம்) சாட் செய்திருக்கிறார்.
என் ஐடியில் இருந்து சமீபத்தில் யார் யாருக்கு என்னென்ன மெயில்கள் சென்றிருக்கின்றன என்று தெரியவில்லை. சத்தம் போடாமல் மெயில் அனுப்பிவிட்டு அதை டெலீட்டும் செய்திருந்தால், என்னால் அதைக் கண்டுபிடிக்கவே முடியாமல் போய்விடும்.
இனி, கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்று முடிவு செய்திருக்கிறேன்.
மாற்று ஏற்பாடு செய்யப்படும்வரை, என் தற்போதைய ஐடி பயன்பாட்டில் இருக்கும். என்றாலும், அடுத்த பதினைந்து தினங்களுக்கு நான் சாட்டைப் பயன்படுத்தப்போவதில்லை.
இடையில், என் ஐடியில் இருந்து சந்தேகப்படும்படி ஏதாவது மெயில், சாட் வந்தால், பதிலளிக்க வேண்டாம்.
நிலைமை சீரானதும் தெரியப்படுத்துகிறேன்.
September 18, 2009
September 12, 2009
புதிய புத்தகம் : திபெத்
திபெத் குறித்து மினிமாக்ஸ் வெளியீடாக, ஒரு புதிய புத்தகம் வெளிவந்துள்ளது.

புத்தகத்தில் இருந்து சில பகுதிகள்.
திபெத் என்றவுடன் சில பிம்பங்கள் நம் மனத்தில் தோன்றும். புத்த மதம், தலாய் லாமா, காவி உடை, சீனா, சிம்லா ஒப்பந்தம், அமைதிக்கான நோபல் பரிசு, தர்மசாலா. திபெத் ஒரு இருண்ட புதிர் என்றால் ஒவ்வொரு பிம்பமும் அந்தப் புதிரைப் புரிந்துக்கொள்ள உதவும் துண்டு வெளிச்சம் என்று சொல்லலாம். இந்த பிம்பங்களை சேகரித்தால் திபெத்தை அறிந்து கொள்ளலாம் என்றாலும், திபெத்தை முழுமையாக அறிந்துகொள்ள இந்த பிம்பங்கள் மட்டுமே போதும் என்று நினைத்து விடக்கூடாது.
திபெத் என்பது என்ன? தேசமா? மாகாணமா? அல்லது வெறுமனே ஒரு நிலப்பரப்பு மட்டும்தானா? எந்தவொரு நாட்டுக்கும் நேராத ஒரு பெரும் குழப்பத்தை சுமந்துகொண்டிருக்கிறது திபெத். பாலஸ்தீனமும் பிரச்னைக்குரிய ஒரு பிரதேசம்தான். ஆனால், அதற்கு ஐ.நா.வின் அங்கீகாரம் உண்டு. திபெத்துக்கு அதுவும் கிடையாது. அந்த வகையில், தன்னுடைய அடையாளம் என்ன என்றே தெரியாமல் இன்று வரை தவித்துக்கொண்டிருக்கிறது திபெத்.
இன்றைய திபெத்தின் வரலாறு மட்டுமல்ல பண்டைய திபெத்தின் வரலாறும்கூட ஒரு புதிர்தான். திபெத்தின் தன்வரலாறுதான் இப்படி, திபெத் பற்றி பிற நாடுகளின் பார்வையை ஆராயலாம் என்றால் அதிலும் குழப்பமே மிஞ்சுகிறது. இந்தியா, சீனா, அமெரிக்கா, பிரிட்டன் என்று ஒவ்வொரு நாட்டிலும் திபெத்தின் வரலாறு ஒவ்வொரு விதமாக எழுதப்பட்டுள்ளது.
உதாரணத்துக்கு சீன வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டினால் திபெத், சீனாவின் ஒரு பகுதிதான் என்று திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டிருக்கும். பிரச்னைக்குரிய பகுதி என்று கூட சீனா குறிப்பிடாது. திபெத் என்பது சீனாதான்! அன்று முதல் இன்று வரை சீனாவின் கொள்கையில் மாற்றமில்லை.
நவீன திபெத்தின் வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டினால் வேறு பார்வை கிடைக்கிறது.
திபெத் ஒரு தனி நாடுதான் என்றும், சீனா திபெத்தைப் பலவந்தமாக ஆக்கிரமித்துள்ளது என்றும் அழுத்தமாக அவற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால், திபெத்தின் இந்த வாதத்தை ஏற்றுக்கொள்ள யாருமில்லை.
இன்றுவரை திபெத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்துக்கொண்டிருக்கிறது அமெரிக்கா. சீனா திபெத்தில் நிகழ்த்தும் கலாசாரப் படுகொலைகள் குறித்தும் கலாசார சீரழிவுகள் குறித்தும் மனித உரிமை மீறல்கள் குறித்தும் அமெரிக்க ஊடகங்கள் தொடர்ந்து எழுதியும் பேசியும் வருகின்றன. சீனாவை மிக அழுத்தமான மொழியில் கண்டிக்கவும் அவர்கள் தயங்குவதில்லை. எனில், திபெத் ஒரு தனி நாடுதான் என்று அமெரிக்கா ஏற்றுக்கொள்கிறதா? இங்குதான் சிக்கல். சீன அரசுக்குக் கட்டுப்பட்ட ஒரு சுயாட்சிப் பிராந்தியமாகத்தான் திபெத் இருக்கமுடியும் என்பதே அமெரிக்காவின் நிலைபாடு.
கட்டுப்பட்ட சுதந்தரம் என்றால் என்ன? சுதந்தரத்தைக் கட்டுப்படுத்த முடியுமா? அப்படி கட்டுப்படுத்த முடிந்தால் அதைச் சுதந்தரம் என்று சொல்ல முடியுமா? இந்தக் கேள்விகளுக்கு அமெரிக்காவின் விடை மௌனம்.
கலாசார ரீதியாகவும் மத ரீதியாகவும் வரலாற்று ரீதியாகவும் திபெத்தோடு தோழமை பாராட்டி வரும் மற்றொரு நாடு இந்தியா. பண்டைய காலம் தொட்டே இரு நாடுகளுக்கும் இடையே ஆரோக்கியமான உறவு நிலை இருந்திருக்கிறது. மாவோவின் கம்யூனிசக் கட்சியால் தனக்குப் பாதகம் நேரலாம் என்று அஞ்சிய தலாய் லாமா லாசாவை விட்டுத் தப்பிச் செல்ல நினைத்தபொழுது அவர் தேர்ந்தெடுத்த நாடு இந்தியா.
இத்தனைக்கும் தலாய் லாமாவை எப்படியாவது அமெரிக்காவுக்கு வரவழைத்துக்கொள்ள அத்தேசம் மிகவும் முயற்சி செய்தது. பல சலுகைகளைத் திபெத்துக்கு அள்ளி வழங்கியது. ஆனால் தலாய் லாமா நாடிச் சென்றது இந்தியாவைத்தான். இன்றளவும் இந்தியாவில் உள்ள தர்மசாலாதான் தலாய் லாமாவின் தலைநகரம்.
அப்படியானால் திபெத்தின் போராட்டத்துக்கு இந்தியா ஆதரவளிக்கிறதா? திபெத் ஒரு தனி நாடு என்று இந்தியா ஏற்றுக்கொள்கிறதா? கிடையாது.
திபெத் எனும் புதிருக்கு எங்குதான் விடைகளைத் தேடுவது?
நூல் குறித்த மேலதிக விவரங்கள் இங்கே.
0
திபெத் குறித்து நான் எழுதிய, அசுரப் பிடியில் அழகுக்கொடி கிழக்கில் 2006ல் வெளிவந்தது. நூலின் தலைப்பு, சீனாவின் பிடியில் திபெத் சிக்கியிருப்பதை குறிக்கிறதா என்று சிலர் கேட்டனர். கிடையாது, மதத்தின் பிடியில் திபெத் சிக்கியிருப்பதைத்தான் தலைப்பு குறிக்கிறது என்று நான் தெளிவுபடுததினேன்.

புத்தகத்தில் இருந்து சில பகுதிகள்.
திபெத் என்றவுடன் சில பிம்பங்கள் நம் மனத்தில் தோன்றும். புத்த மதம், தலாய் லாமா, காவி உடை, சீனா, சிம்லா ஒப்பந்தம், அமைதிக்கான நோபல் பரிசு, தர்மசாலா. திபெத் ஒரு இருண்ட புதிர் என்றால் ஒவ்வொரு பிம்பமும் அந்தப் புதிரைப் புரிந்துக்கொள்ள உதவும் துண்டு வெளிச்சம் என்று சொல்லலாம். இந்த பிம்பங்களை சேகரித்தால் திபெத்தை அறிந்து கொள்ளலாம் என்றாலும், திபெத்தை முழுமையாக அறிந்துகொள்ள இந்த பிம்பங்கள் மட்டுமே போதும் என்று நினைத்து விடக்கூடாது.
திபெத் என்பது என்ன? தேசமா? மாகாணமா? அல்லது வெறுமனே ஒரு நிலப்பரப்பு மட்டும்தானா? எந்தவொரு நாட்டுக்கும் நேராத ஒரு பெரும் குழப்பத்தை சுமந்துகொண்டிருக்கிறது திபெத். பாலஸ்தீனமும் பிரச்னைக்குரிய ஒரு பிரதேசம்தான். ஆனால், அதற்கு ஐ.நா.வின் அங்கீகாரம் உண்டு. திபெத்துக்கு அதுவும் கிடையாது. அந்த வகையில், தன்னுடைய அடையாளம் என்ன என்றே தெரியாமல் இன்று வரை தவித்துக்கொண்டிருக்கிறது திபெத்.
இன்றைய திபெத்தின் வரலாறு மட்டுமல்ல பண்டைய திபெத்தின் வரலாறும்கூட ஒரு புதிர்தான். திபெத்தின் தன்வரலாறுதான் இப்படி, திபெத் பற்றி பிற நாடுகளின் பார்வையை ஆராயலாம் என்றால் அதிலும் குழப்பமே மிஞ்சுகிறது. இந்தியா, சீனா, அமெரிக்கா, பிரிட்டன் என்று ஒவ்வொரு நாட்டிலும் திபெத்தின் வரலாறு ஒவ்வொரு விதமாக எழுதப்பட்டுள்ளது.
உதாரணத்துக்கு சீன வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டினால் திபெத், சீனாவின் ஒரு பகுதிதான் என்று திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டிருக்கும். பிரச்னைக்குரிய பகுதி என்று கூட சீனா குறிப்பிடாது. திபெத் என்பது சீனாதான்! அன்று முதல் இன்று வரை சீனாவின் கொள்கையில் மாற்றமில்லை.
நவீன திபெத்தின் வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டினால் வேறு பார்வை கிடைக்கிறது.
திபெத் ஒரு தனி நாடுதான் என்றும், சீனா திபெத்தைப் பலவந்தமாக ஆக்கிரமித்துள்ளது என்றும் அழுத்தமாக அவற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால், திபெத்தின் இந்த வாதத்தை ஏற்றுக்கொள்ள யாருமில்லை.
இன்றுவரை திபெத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்துக்கொண்டிருக்கிறது அமெரிக்கா. சீனா திபெத்தில் நிகழ்த்தும் கலாசாரப் படுகொலைகள் குறித்தும் கலாசார சீரழிவுகள் குறித்தும் மனித உரிமை மீறல்கள் குறித்தும் அமெரிக்க ஊடகங்கள் தொடர்ந்து எழுதியும் பேசியும் வருகின்றன. சீனாவை மிக அழுத்தமான மொழியில் கண்டிக்கவும் அவர்கள் தயங்குவதில்லை. எனில், திபெத் ஒரு தனி நாடுதான் என்று அமெரிக்கா ஏற்றுக்கொள்கிறதா? இங்குதான் சிக்கல். சீன அரசுக்குக் கட்டுப்பட்ட ஒரு சுயாட்சிப் பிராந்தியமாகத்தான் திபெத் இருக்கமுடியும் என்பதே அமெரிக்காவின் நிலைபாடு.
கட்டுப்பட்ட சுதந்தரம் என்றால் என்ன? சுதந்தரத்தைக் கட்டுப்படுத்த முடியுமா? அப்படி கட்டுப்படுத்த முடிந்தால் அதைச் சுதந்தரம் என்று சொல்ல முடியுமா? இந்தக் கேள்விகளுக்கு அமெரிக்காவின் விடை மௌனம்.
கலாசார ரீதியாகவும் மத ரீதியாகவும் வரலாற்று ரீதியாகவும் திபெத்தோடு தோழமை பாராட்டி வரும் மற்றொரு நாடு இந்தியா. பண்டைய காலம் தொட்டே இரு நாடுகளுக்கும் இடையே ஆரோக்கியமான உறவு நிலை இருந்திருக்கிறது. மாவோவின் கம்யூனிசக் கட்சியால் தனக்குப் பாதகம் நேரலாம் என்று அஞ்சிய தலாய் லாமா லாசாவை விட்டுத் தப்பிச் செல்ல நினைத்தபொழுது அவர் தேர்ந்தெடுத்த நாடு இந்தியா.
இத்தனைக்கும் தலாய் லாமாவை எப்படியாவது அமெரிக்காவுக்கு வரவழைத்துக்கொள்ள அத்தேசம் மிகவும் முயற்சி செய்தது. பல சலுகைகளைத் திபெத்துக்கு அள்ளி வழங்கியது. ஆனால் தலாய் லாமா நாடிச் சென்றது இந்தியாவைத்தான். இன்றளவும் இந்தியாவில் உள்ள தர்மசாலாதான் தலாய் லாமாவின் தலைநகரம்.
அப்படியானால் திபெத்தின் போராட்டத்துக்கு இந்தியா ஆதரவளிக்கிறதா? திபெத் ஒரு தனி நாடு என்று இந்தியா ஏற்றுக்கொள்கிறதா? கிடையாது.
திபெத் எனும் புதிருக்கு எங்குதான் விடைகளைத் தேடுவது?
நூல் குறித்த மேலதிக விவரங்கள் இங்கே.
0
திபெத் குறித்து நான் எழுதிய, அசுரப் பிடியில் அழகுக்கொடி கிழக்கில் 2006ல் வெளிவந்தது. நூலின் தலைப்பு, சீனாவின் பிடியில் திபெத் சிக்கியிருப்பதை குறிக்கிறதா என்று சிலர் கேட்டனர். கிடையாது, மதத்தின் பிடியில் திபெத் சிக்கியிருப்பதைத்தான் தலைப்பு குறிக்கிறது என்று நான் தெளிவுபடுததினேன்.
சீனாவும் விவாதங்களும்

கிழக்கு பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் வரும் ஞாயிறு (செப்டம்பர் 13, 2009) மதியம் 12.00 மணிக்கு ஆஹா எஃப்.எம் 91.9 மெகாஹெர்ட்ஸில் சீனா விலகும் திரை நூல் குறித்த விவாதம் ஒலிபரப்பாகிறது. பல்லவி அய்யர் ஆங்கிலத்தில் எழுதிய Smoke and Mirrors நூலின் தமிழாக்கம் இது. மொழிபெயர்ப்பாளர் ராமன் ராஜாவுடன் நான் உரையாடுகிறேன்.
பல்லவி அய்யர் அடிப்படையில் ஒரு பத்திரிகையாளர். தி ஹிந்துவில் சீனா குறித்து பல கட்டுரைகள் எழுதியுள்ளார். ஐந்து ஆண்டுகளுக்கு மேல் சீனாவில் இருந்திருக்கிறார். சீனாவிடம் இருந்து இந்தியாவும் இந்தியாவிடம் இருந்து சீனாவும் நிறைய கற்றுக்கொள்ளவேண்டும் என்பது இவருடைய கருத்து. நமக்கு நல்ல சாலைகள் வேண்டும், நல்ல மருத்துவ வசதிகள் வேண்டும், கல்வி வேண்டும், நல்ல ஆட்சி வேண்டும். சீனாவுக்கு ஜனநாயகம் வேண்டும், நிறைய கருத்து சுதந்தரம் வேண்டும், மாற்று கருத்துகளை வரவேற்கும் பக்குவம் வேண்டும். சீனாவின் தொழில் வளர்ச்சி பல்லவி அய்யரைக் கவர்ந்திருக்கிறது. ஆண்களுக்குச் சமமாகப் பெண்களை மதிக்கும் குணம், Dignity of labour ஆகியவற்றை பாராட்டுகிறார். அதே சமயம், சீனர்கள் அனைவரும் ஒன்றுபோலவே சிந்திக்கிறார்கள் என்று குறைபட்டுக்கொள்கிறார்.
இந்திய ஆட்சி முறை, சீன ஆட்சி முறை இரண்டையும் ஒப்பிடுகிறார். இங்கே, தேர்தலில் நின்று ஜெயித்து, ஆட்சியைப் பிடித்துவிட்டால், போதும். அதற்குப் பிறகு எதுவும் செய்யவேண்டியதில்லை. அடுத்த தேர்தல்வரை பிரச்னையில்லை. சீனாவில் இது சாத்தியமில்லை. ஆயிரத்தெட்டு கட்சிகள் இல்லை அங்கே. ஒற்றை கட்சி சர்வாதிகாரம். என்றாலும், தொடர்ந்து ஆட்சியில் நீடிக்கவேண்டுமானால் மக்களுக்கு அவ்வப்போது ஏதாவது நல்லது செய்யவேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். செய்கிறார்கள்.
மற்றபடி, கடுமையான ஒடுக்குமுறை உண்டு. நினைத்ததைப் பேசிட, எழுதிட முடியாது. இங்கே, மன்மோகன் சிங் அரசு ஒழிக என்று வெளிப்படையாக பாராளுமன்றத்துக்கு வாசலில் நின்று கோஷம் போடலாம். எதையும் எழுதலாம். ஒவ்வொருவருக்கும் வாக்கு உண்டு. ஆனால், இந்தச் சுதந்தரத்தை வைத்துக்கொண்டு நம்மால் எதுவும் சாதித்துக்கொள்ளமுடியவில்லை. சுதந்தரத்தைப் பறிகொடுத்துவிட்டு, சீனர்கள் சாதித்திருக்கிறார்கள். எனில், நமக்கு என்ன தேவை? ஜனநாயகம் இல்லாத வளர்ச்சியா? வளர்ச்சி இல்லாத ஜனநாயகமா?
பரவலாக விவாதிக்கப்படவேண்டிய புத்தகம் இது. ஒத்துக்கொள்வதற்கும், கற்றுக்கொள்வதற்கும், முரண்படுவதற்கும் பல விஷயங்கள் இதில் உள்ளன.
September 10, 2009
கிழக்கு மொட்டைமாடிக்கூட்டம் : அறிவியல்
செப்டம்பர் 26ம் தேதி (சனிக்கிழமை) கிழக்கு மொட்டைமாடியில் நடைபெறும் கூட்டத்தில், Dark Energy குறித்து டாக்டர் டி.வி.வெங்கடேசுவரன் உரையாட உள்ளார். இவர், மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகத்தில் பணியாற்றும் அறிவியலாளர். பிரபஞ்சம் உருவான கதை தொடங்கி பல சுவாரஸ்யமான விஷயங்கள் விவாதிக்கப்படும்.
நாள்: 26 செப்டெம்பர் 2009, சனிக்கிழமை
நேரம்: மாலை 6.00 மணி
இடம்: கிழக்கு மொட்டைமாடி, எல்டாம்ஸ் ரோடு, சென்னை
அனைவரும் வருக!
நாள்: 26 செப்டெம்பர் 2009, சனிக்கிழமை
நேரம்: மாலை 6.00 மணி
இடம்: கிழக்கு மொட்டைமாடி, எல்டாம்ஸ் ரோடு, சென்னை
அனைவரும் வருக!
September 7, 2009
ஹியூகோ சாவேஸ் யார் பக்கம்?

1. ஒப்பற்ற தலைவர்
லிபியாவின் அதிபர் கர்னல் கடாஃபி தனது நாற்பதாண்டு ஆட்சி அதிகாரத்தைக் கொண்டாடும் வகையில் ஒரு மாபெரும் விழாவை இந்த மாதத் தொடக்கத்தில் நடத்தினார். தலைநகரம் திரிபோலியில் ஒரு வாரம் நீடித்த இந்தக் கொண்டாட்டத்தில் உலகத் தலைவர்கள் பலரும் பங்கேற்றனர்.
ஹியூகோ சாவேஸும் மகிந்த ராஜபக்ஷேவும் முதல் முறையாக இங்கே கைகுலுக்கிக்கொண்டார்கள். மகிந்தவின் அர்ப்பணிப்பு உணர்வையும் புலிகளை ஒடுக்கியதில் அவர் காட்டிய தீவிரத்தையும், தீவிரவாதத்துக்கு எதிரான இறுதி யுத்தத்தில் இலங்கை அடைந்துள்ள மாபெரும் வெற்றியையும் மனம் திறந்து பாராட்டியிருக்கிறார் சாவேஸ். பிற நாடுகளுக்கு இது ஒரு படிப்பினை என்றும் அறிவித்திருக்கிறார்.
பாகிஸ்தான் அதிபர் கிலானி, பிலிப்பைன்ஸ் அதிபர் குளோரியா அரோயோ இருவரையும் சந்தித்திருக்கிறார் ராஜபக்ஷே. இருவரிடம் இருந்தும் பாராட்டுதல்கள் குவிந்திருக்கின்றன. தீவிரவாதத்தை ஒடுக்குவதில் நீங்கள் ஓர் ஒப்பற்ற தலைவர் என்று நேரடியாகவே ராஜபேக்ஷேவைப் பாராட்டியிருக்கிறார் அரேயோ.
தன் செல்வாக்கை வெளிச்சம் போட்டுக்கொட்டுவதற்காக கடாஃபி நடத்திய இந்த விழாவின் நாயகர் கடாஃபி அல்ல. மகிந்த ராஜபக்ஷேதான். உலக அரங்கில் கம்பீரமான ஒரு தலைவராக அவர் மாறியிருக்கிறார். தீவிரவாதத்துக்கு எதிரான போரை நடத்திக்கொண்டிருக்கும் ஒவ்வொரு நாடும் ராஜபேக்ஷேவை தனது ஆசானாக போற்றிப் புகழ்ந்துகொண்டிருக்கிறது. மாபெரும் வியாதி ஒன்றுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்ட ஆராய்ச்சியாளர் போல் வெற்றிக்களிப்புடன் கையசைத்துக்கொண்டிருக்கிறார் மகிந்த ராஜபக்ஷே. அவரிடம் இருந்து ரகசியங்களைக் கற்றுக்கொள்ளும் ஆர்வத்துடன் அவர் சகாக்கள் அவரை மொய்த்துக்கொண்டிருக்கிறார்கள். எப்படித் திட்டமிட்டீர்கள்? எப்படி இந்தப் போரை நடத்தினீர்கள்? எதிர்ப்புகளை எப்படி முறியடித்தீர்கள்? தயவுசெய்து எங்களுக்கும் கற்றுத்தாருங்கள், ஆசானே!
ராஜபேக்ஷேவின் வெற்றி சூத்திரத்தில் ரகசியங்கள் எதுவும் இல்லை. மிக எளிமையான விதிகளை உள்ளடக்கிய வெளிப்படையான சூத்திரம் அது. எதிரியைக் கண்டுபிடி. வெளிப்படையாகப் போர் பிரகடனம் செய். எதிரி மீது மட்டுமல்ல, எதிரி இனத்தின் மீதும். மனித இழப்புகள் பற்றி கவலைப்படாதே. பிரசார யுத்தத்தைத் தொடங்கு. உன் எதிரி நடத்துவது தீவிரவாதப் போர். எனவே, நீ நடத்துவது புனித யுத்தம். நீ அரசாங்கம். ஆகவே, நீ நடத்துவது நேர்மையான யுத்தம்.
அனைவருக்கும் தெரிந்ததுதான். அனைவரும் நடத்த விரும்புவதுதான். என்றாலும், சமகாலத்தில் இத்தனை கச்சிதமாக, இத்தனை வெற்றிகரமாக ராஷபக்ஷேவைப் போல் இந்த சூத்திரத்தைப் பயன்படுத்தியவர் வேறு யாருமிலர். அமெரிக்கா நடத்தாத போரா? அமெரிக்காவுக்குத் தெரியாத பயங்கரவாதமா? என்றாலும், ராஜபக்ஷேவுக்குக் கிடைத்த பாராட்டும் வரவேற்பும் புஷ்ஷூக்குக் கிடைக்காதது ஏன்? புஷ்ஷின் போர்க் கொள்கையை கிட்டத்தட்ட அப்படியே பின்பற்றும் ஒபாமாவுக்குக் கிடைக்காதது ஏன்?
2. அமெரிக்காவின் ஆசான்
இந்தியாவையும் இந்தப் போரில் இணைத்துக்கொண்ட ராஜபக்ஷேவின் ராஜதந்திரம்தான் காரணம். இந்தியாவின் உதவி இருந்ததால், ஆயுத பலமும் ஆள் பலமும் தொழில்நுட்ப பலமும் கிடைக்கப்பெற்றது. இந்தியாவின் உதவி இருந்ததால், ஐ.நா.வில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேறவில்லை. எங்கள் போருக்கு உதவுங்கள் என்று கோராமல், இது நம் போர் என்று இந்தியாவை அவரால் அழைக்கமுடிந்தது. உண்மையில், ராஜபக்ஷே நடத்தியது இருமுனைப் போர். ஒன்று, புலிகள் மீது (என்னும் பெயரில் மக்கள் மீதும்) நடத்தப்பட்ட போர். மற்றொன்று, ஊடகங்கள் மீது அவர் தொடுத்த போர். மிகக் கடுமையான தணிக்கை முறைகளை அவரால் கையாள முடிந்தது. இலங்கைக்கு உள்ளே மாத்திரமல்ல, வெளியிலும். இங்கும் இந்திய அரசின் உதவி அவருக்குக் கிடைத்தது. தி ஹிந்து உள்ளிட்ட இந்திய தேசிய பத்திரிகைகள், அதிகாரபூர்வமான இலங்கை அரசு தூதரகங்களாக செயல்பட்டன. ராஜபக்ஷே நடத்திக்கொண்டிருப்பது தீவிரவாதத்துக்கு எதிரான போர்தான் என்று தொடர்ந்து இவர்கள் பிரசாரம் செய்துவந்தார்கள். இலங்கையில் உருவாகும் மாற்றுக்கருத்துகள் வலுக்கட்டாயமாக நசுக்கப்பட்டன. இந்தியாவிலும் இதே நிலைமைதான். மக்களுக்கு உண்மை நிலை தெரியாதவாறு மத்திய அரசும் மாநில அரசும் பார்த்துக்கொண்டன. புலிகள் என்று மட்டுமல்ல, ஈழம், தமிழர்கள் என்றுகூட உச்சரிக்கமுடியாத நிலை ஏற்பட்டது.
இராக், ஆப்கனிஸ்தான் போன்ற நாடுகள் மீது அமெரிக்கா நடத்திய போரில் இந்த அளவுக்கு தணிக்கை முறையை கொண்டுவரமுடியவில்லை. மூடிமறைக்க முயன்றார்கள். எதிரிகளின் இழப்பு எண்ணிக்கையை மட்டுப்படுத்திக் காட்டினார்கள். பழியை அவர்கள் மீது சுமத்தினார்கள். இவையனைத்தும் சாத்தியமானது. ஆனால், யுத்தம் நடக்கவேயில்லை என்று முழு முற்றாக மறுதலிக்க முடியவில்லை. காரணம், அமெரிக்காவிலேயே பல இயக்கங்கள் இந்தப் போரை எதிர்த்தன. செய்திகளையும் வெளியிட்டன.
இலங்கையில் அரசாங்கம் மட்டுமே செய்திகளை உற்பத்தி செய்து அளித்து வந்தது. எதிர் இயக்கங்கள் இல்லை. இலங்கை அரசின் போக்கை சிங்களர்கள் இறுதிவரை கண்டிக்கவில்லை. காரணம், ராஜபக்ஷே ஊட்டிய இனவெறி. புலிகளோடு சேர்த்து தமிழர்களும் கொல்லப்பட்டபோது, சிங்களர்கள் பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடியிருக்கிறார்கள். ஒரே நாட்டில் வாழும் மற்றொரு பிரிவினரின் மரணத்தை இத்தனை வெளிப்படையாகக் கொண்டாடிய இன்னொரு இனம் இல்லை.
பெயரளவில் இலங்கையை அமெரிக்கா எதிர்த்து வந்தாலும், மகிந்த ராஜபக்ஷேவைக் கண்டு நிச்சயம் அமெரிக்கா உள்ளூர பொறாமை அடைந்திருக்கும். அந்த வகையில், அமெரிக்கா ராஜபக்ஷேவிடம் இருந்து மேலதிகம் கற்கவேண்டியிருக்கிறது.
3. இது அறியாமையா?
அமெரிக்கா எதிர்க்கிறது ஆகவே நான் ஆதரிக்கிறேன் என்னும் குருட்டுத்தனமான நம்பிக்கையோடு ராஜபக்ஷேவின் செயல்களை பாராட்டியிருக்கிறார் ஹியூகோ சாவேஸ். இலங்கையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் ஊடகங்கள் அளித்த செய்திகளை மட்டுமே சாவேஸ் அறிந்து வைத்திருக்கிறார் என்பது தெளிவாகிறது. சோஷலிசப் பாதையில் வெனிசூலாவை அழைத்துச்செல்லவேண்டும் என்னும் முனைப்புடன் இயங்கி வரும் சாவேஸ், இலங்கை விவகாரத்தில் மிகக் குறுகலாகச் சிந்தித்திருப்பதையும் புரிந்துகொள்ளமுடிகிறது.
க்யூபா செய்த அதே தவறை வெனிசூலா செய்திருக்கிறது. ரால் காஸ்ட்ரோ அரசாங்கமும் சாவேஸ் அரசாங்கமும், புரட்சிகர அரசியல் நெறியில் இருந்து வழி தவறி சென்றுவிட்டதை இலங்கை சம்பவம் உணர்த்துகிறது. ஒடுக்குபவர்கள் யார், ஒடுக்கப்படுபவர்கள் யார் என்பதை சாவேஸும் ரால் காஸ்ட்ரோவும் இறுதிவரை புரிந்துகொள்ளவேயில்லை. குறைப் புரிதலுடன் இலங்கையை ஆதரித்திருக்கிறார்கள். இந்தக் குறைப் புரிதலுடன் க்யூபாவையும் வெனிசூலாவையும் அணுகினால் என்ன ஆகும்? காஸ்ட்ரோவும் சாவேஸூம் சர்வாதிகாரிகளாகவே காட்சியளிப்பார்கள். இவர்களது ஆட்சி அராஜக ஆட்சியாக மட்டுமே எடுத்துக்கொள்ளப்படும். காரணம், மேற்குலக ஊடகங்களின் சித்தரிப்புகள் அவ்வாறுதான் இருக்கின்றன. ஆதிக்கத்தில் இருப்பவர்கள் அவர்கள்தாம் என்பதால் அவர்களைத்தான் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டியிருக்கும்.
சாவேஸின் இந்தத் தடுமாற்றம் கண்டிக்கத்தக்கது. பொறுமையாக ஆராயாமல், முழு உண்மையை உணராமல், அதிகாரத்தில் இருப்பவர்களின் செய்திகளை மட்டுமே நம்பி ஒரு முடிவுக்கு வருவதை அறியாமை என்று மட்டும் வரலாறு எடுத்துக்கொள்ளாது.
4. உலகளாவிய பார்வை
மாவோவின் முதல் மகன், மாவோ அனியிங் (Mao Anying) வடகொரியாவுக்கும் தென் கொரியாவுக்கும் இடையே நடைபெற்ற யுத்தத்தில் (1950-1953) கொல்லப்பட்டார். ஸ்டாலினின் மகன், யாகோவ் துகாஷ்விலி (Yakov Dzhugashvili) இரண்டாம் உலகப் போரின் போது, ஜெர்மனியால் சிறைபிடிக்கப்பட்டு இறந்துபோனார். சோவியத் சிறைபிடித்து வைத்திருந்த ஒரு ஜெர்மானிய ஃபீல்ட் மார்ஷலை (Friedrich Paulus) விடுவித்தால் யாகோவை விட்டுவிடுகிறோம் என்று ஹிட்லர் அரசாங்கம் பேரம் பேசியபோது, ஓர் உயர் அதிகாரிக்கு மாற்றாக சாதாரண ஒரு வீரனை அளிக்கமுடியாது என்று ஸ்டாலின் மறுத்துவிட்டார்.
அசலான கம்யூனிச தேசங்களாக சோவியத் யூனியன், சீனா இரண்டும் திகழ்ந்தபோது, அவை தம் நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல ஒடுக்கப்பட்ட பிற நாட்டு மக்களுக்கும் ஆதரவு அளித்துவந்தன. இந்தியா உள்பட உலகின் பல பகுதிகளில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்கள், சோவியத்திடம் இருந்தும் சீனாவிடம் இருந்தும் உத்வேகம் பெற்றனர். லெனின், ஸ்டாலின், மாவோ ஆகியோர் கொண்டிருந்த பரந்த, உலகளாவிய பார்வையே இதற்குக் காரணம். அருகில் மட்டுமல்ல தொலை தேசங்களில் நடந்துவரும் போராட்டங்களையும் அவர்கள் அறிந்து வைத்திருந்தனர். அந்தப் போராட்டங்களில், ஒடுக்கப்படுபவர்கள் யார், ஒடுக்குபவர்கள் யார் என்பது பற்றிய மதிப்பீட்டை அவர்கள் உருவாக்கி வைத்திருந்தனர். அவர்களது வெளியுறவுக் கொள்கை அவ்வாறே வடிவம் பெற்றது. கம்யூனிச நாடு, சோஷலிச நாடு என்று அறியப்படும் க்யூபாவும் வெனிசூலாவும் இந்தப் பண்பை வளர்த்துக்கொள்வது இன்றியமையாதது.
ஆதாரம் :
Libya's revolution anniversary, opportunity to boost political clout
Libya's Last Bedouin
Libya marks 40 years of Gaddafi
Libya celebrates 40 years since Gadhafi coup
Questions over Libyan Celebrations
Warm welcome to a close friend
September 2, 2009
தேடுதல் வேட்டை
சிக்னல் தொலைந்து இருபத்து நான்கு மணி நேரங்களுக்குப் பிறகு, வொய்.எஸ்.ஆரின் ஹெலிகாப்டரை கண்டறிந்திருக்கிறார்கள். வரலாற்றின் மிகப் பெரிய தேடுதல் வேட்டை என்னும் தலைப்பில் சிஎன்என்-ஐபிஎன், டைம்ஸ் நவ், ஆஜ் தக் என்று டிவி சானல்கள் கடந்த இருபத்து நான்கு மணி நேரங்களாக, நொடிக்கு நொடி ஃப்ளாஷ் நியூஸ் அளித்துக்கொண்டிருந்தன. அதி நவீன வரைபடங்கள், பொம்மை ஹெலிகாப்டர் பறந்து செல்லும் காட்சி, வழித்தடம், காணாமல் போன பகுதி, ஆந்திர மக்களின் உணர்வுகள், அரசியல் அறிக்கைகள், நம்பிக்கைகள், அச்சங்கள். கடைசியாக, மும்பை தாஜ் தாக்குதலின்போது வெளிப்பட்ட பரபரப்பு இப்போது மீண்டும்.
பிறகு, யூகங்கள். இதில் மாவோயிஸ்டுகளின் சதி இருக்கலாம். அவர்கள் விமானத்தை வீழ்த்தியிருக்கலாம். ரெட்டியை கடத்தியிருக்கலாம். ஏதேனும் கோரிக்கைகள் வைப்பார்கள், பார்த்துக்கொண்டே இருங்கள். நடந்திருப்பது விபத்துதான் என்று அடுத்தடுத்து செய்திகள் வெளிவர ஆரம்பித்ததும், மாவோயிஸ்ட் பீதி மறைந்துவிட்டது.
ஆகவே இப்போதைய ஃபோகஸ், அந்த ஹெலிகாப்டர் மீது. முன்னரே பழுதாகியிருந்ததாமே. பறக்க லாயக்கற்றது என்று ஒதுக்கியிருந்தார்களாமே. போயும் போயும் இதிலா ரெட்டியை ஏற்றி அனுப்பினார்கள்? எனில், இதைப் பாதுகாப்பு, தொழில்நுட்ப தோல்வி என்று கொள்ளலாமா? சந்திரபாபு நாயுடு 'ஐடி புரட்சி' நடத்திக்காட்டிய ஆந்திரத்திலா இப்படியொரு போதாமை?
நொறுங்கிய ஹெலிகாப்டர்களையும் உடல்களையும் கண்டறிய இரண்டாயிரம் வீரர்களும் 11 விமானங்களும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இலங்கை அரசின் உதவியை முன்னரே கோரியிருந்தால், தேடுதல் வேட்டை சீக்கிரம் முடிந்திருக்கக்கூடும். பிரபாகரனையும் புலிகளையும் கண்டுபிடிப்பதற்கான நாங்கள் அளித்த அதிநவீன ராடார் சாதனங்களில் ஒன்றிரண்டை அளிக்கவும். ரெட்டியைக் கண்டறிந்துவிட்டு மீண்டும் தந்துவிடுகிறோம் என்று விண்ணப்பித்துக்கொண்டிருக்கலாம். இந்திய அரசாங்கத்தால் வெளிப்படையாகக் கேட்கமுடியாமல் போனாலும், தி ஹிந்து ராமை அணுகியிருந்தால் நிச்சயம் அவர் உதவியிருப்பார். அல்லது, முரளிதர் ரெட்டிக்கு ஒரு மெயில் தட்டிவிட்டிருக்கலாம்.
பிறகு, யூகங்கள். இதில் மாவோயிஸ்டுகளின் சதி இருக்கலாம். அவர்கள் விமானத்தை வீழ்த்தியிருக்கலாம். ரெட்டியை கடத்தியிருக்கலாம். ஏதேனும் கோரிக்கைகள் வைப்பார்கள், பார்த்துக்கொண்டே இருங்கள். நடந்திருப்பது விபத்துதான் என்று அடுத்தடுத்து செய்திகள் வெளிவர ஆரம்பித்ததும், மாவோயிஸ்ட் பீதி மறைந்துவிட்டது.
ஆகவே இப்போதைய ஃபோகஸ், அந்த ஹெலிகாப்டர் மீது. முன்னரே பழுதாகியிருந்ததாமே. பறக்க லாயக்கற்றது என்று ஒதுக்கியிருந்தார்களாமே. போயும் போயும் இதிலா ரெட்டியை ஏற்றி அனுப்பினார்கள்? எனில், இதைப் பாதுகாப்பு, தொழில்நுட்ப தோல்வி என்று கொள்ளலாமா? சந்திரபாபு நாயுடு 'ஐடி புரட்சி' நடத்திக்காட்டிய ஆந்திரத்திலா இப்படியொரு போதாமை?
நொறுங்கிய ஹெலிகாப்டர்களையும் உடல்களையும் கண்டறிய இரண்டாயிரம் வீரர்களும் 11 விமானங்களும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இலங்கை அரசின் உதவியை முன்னரே கோரியிருந்தால், தேடுதல் வேட்டை சீக்கிரம் முடிந்திருக்கக்கூடும். பிரபாகரனையும் புலிகளையும் கண்டுபிடிப்பதற்கான நாங்கள் அளித்த அதிநவீன ராடார் சாதனங்களில் ஒன்றிரண்டை அளிக்கவும். ரெட்டியைக் கண்டறிந்துவிட்டு மீண்டும் தந்துவிடுகிறோம் என்று விண்ணப்பித்துக்கொண்டிருக்கலாம். இந்திய அரசாங்கத்தால் வெளிப்படையாகக் கேட்கமுடியாமல் போனாலும், தி ஹிந்து ராமை அணுகியிருந்தால் நிச்சயம் அவர் உதவியிருப்பார். அல்லது, முரளிதர் ரெட்டிக்கு ஒரு மெயில் தட்டிவிட்டிருக்கலாம்.
சீனா குறித்து ஒரு கம்யூனிஸ்ட்
பல்லவி அய்யர் ஆங்கிலத்தில் எழுதிய Smoke and Mirrors புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு சமீபத்தில் கிழக்கில் வெளிவந்துள்ளது. சீனா விலகும் திரை. (மொழிபெயர்ப்பு : ராமன் ராஜா). இந்தப் புத்தகம் பற்றிய தோழர் ரமேஷின் விமரிசனத்தை கீழே பிரசுரிக்கிறேன். ரமேஷ் ஒரு கம்யூனிஸ்ட், மொழிபெயர்ப்பாளர், நல்ல வாசிப்பாளர். தனியே வலைப்பதிவு இல்லாதததால், தன் விமரிசனத்தை எழுதி என்னிடம் அளித்தார்.
இந்தப் புத்தகம் குறித்து நான் பிறகு எழுதுகிறேன்.
0
சீனா விலகும் திரை-விமர்சனம்
- ரமேஷ்
பல்லவி ஐயர் எழுதியிருக்கும் சீனா விலகும் திரை என்ற புத்தகத்தைப் படித்ததில் உண்மையிலேயே மகிழ்ச்சியடைந்தேன். நான் ஒரு கம்யூனிச ஆதரவாளனாக இருந்தும், சீனா பற்றி பெரிதும் அறியாமலேதான் இருந்தேன். அங்கேயே சென்று தங்கியிருந்து பல்லவி ஐயர் எழுதியிருக்கும் இந்தப் புத்தகம் எனக்குப் பல விஷயங்களைப் புரிய வைத்துள்ளது. ஆனால் எனது அடிப்படை கோட்பாட்டை அது எந்த விதத்திலும் மாற்றி விடவில்லை என்பதையும் இங்கே கூறி விட வேண்டும். புத்தகம் முழுவதிலும் என்னை ஆகர்ஷித்த ஒரு விஷயம் அது மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் நேர்த்தி. மொழிபெயர்ப்பாளருக்கும், எடிட்டருக்கும் வாழ்த்துக்கள்.
துவக்கத்திலிருந்தே ஆசிரியர் அனைவரிடமும் கேட்க விரும்பக்கூடிய, தொடர்ந்து ஏமாற்றமடைந்த கேள்வி, உங்களால் வேறு விதமாக சிந்திக்க முடியாதா என்பது. அந்தக் கேள்வி கேட்கும் போதெல்லாம் அவர் சீன அரசுக்கு எதிராகவும், கம்யூனிஸ்ட் கட்சிக்கும், அதன் கோட்பாட்டுக்கும் எதிராகவும் எதாவது கூறி விடமாட்டார்களா என்ற தவிப்பு தெரிகிறது. முதலில் அங்கு நடப்பது ஜனநாயகம் என்று அவர்களே கூறவில்லை. அங்கு நடப்பது பாட்டாளி வர்க்க ‘சர்வாதிகார' ஆட்சி. இரண்டாவது அங்கு வரம்புக்குட்பட்ட ஜனநாயகம்தான் உண்டு. இந்தியா போன்று போலி ஜனநாயகம் அங்கு கிடையாது. ‘ஜனநாயகவாதிகள்' எப்போது பார்த்தாலும் டின்னமென் சதுக்கத்தை துணைக்கு அழைப்பார்கள். நான் எதிர்பார்த்தது போலவே இவரும் அதை துணைக்கு அழைத்துள்ளார். இவர்களிடம் கேட்பதற்கு எனக்கு ஒரே ஒரு கேள்வி உண்டு. தயவுசெய்து நீங்கள் யாராவது இந்த ஜனநாயக ஆட்சி பதவி விலக வேண்டுமென்று கோரி ஒருநாள், ஒரே ஒரு நாள் தில்லியில் செஞ்சதுக்கத்தில் அமர்ந்து காட்டுங்கள். பிறகு நான் ஒப்புக் கொள்கிறேன் இது ஜனநாயக நாடென்று. திருநெல்வேலியில் வெறும் மனு கொடுக்கச் சென்ற மாஞ்சோலைத் தொழிலாளர்கள் தாக்கப்பட்டு 17 பேர் செத்தார்கள். சமச்சீர் கல்வி வேண்டுமென்று ஆர்ப்பாட்டம் செய்து மந்திரியை பார்க்க அனுமது கேட்ட மாணவர்கள் இங்கே சென்னையில் போலீஸால் மூர்க்கத்தனமாகத் தாக்கப் பட்டார்கள். ராஜஸ்தானில் தண்ணீர் கேட்ட விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு கிட்டத்தட்ட 50 பேர் பலியானார்கள். இங்கே அண்ணா சாலையில் உரிமை கேட்டு ஊர்வலம் நடத்தி விடுங்கள் பார்க்கலாம். (திமுக உள்ளிட்ட கட்சிகள் நடத்தும், அது வேறு விஷயம்).
சரி, அது போகட்டும். இங்கே மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பது ஜனநாயகம் என்றால், பீகார், தமிழ்நாடு போன்ற இடங்களில் தேர்தலா நடக்கிறது? திருமங்கலம், மதுரை, கூட்டுறவு தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், இப்போது கம்பம் - இதுவா ஜனநாயகம்? முதலாளித்துவக் கட்சியில் போட்டியிட இடம் கேட்கவே பணம் கொடுக்க வேண்டும். சமீபத்தில் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளில் 300க்கும் மேற்பட்டோர் கோடீஸ்வரர்கள். இது போதாதா, யார் இங்கே போட்டியிட்டு வெல்ல முடியுமென்று அறிந்து கொள்ள?
சரி ஐயா, இதையும் விடுங்கள். அமெரிக்கா இவர்கள் பார்வையில் சிறந்த ஜனநாயக நாடுதானே? கடந்த ஜனாதிபதி தேர்தலில் அங்கு சுமார் 26,000 கோடி ரூபாய் வேட்பாளர்களால் செலவிடப்பட்டது. பணம் கொடுத்தது யார்? முதலாளிகள். பின்னர் அவர்கள் யாருக்கு கை கட்டி சேவகம் செய்வார்கள்? மக்களுக்கா?
நான் 1991ல் மும்பையில் பணி புரிந்து கொண்டிருந்தபோது கிழக்கு ஜெர்மெனியும், மேற்கு ஜெர்மெனியும் இணைந்த முதலாவது ஆண்டின் போது ஒரு செய்தியை டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டிருந்தது. அது கம்யூனிஸ்ட் பத்திரிகை அல்லவென்பதை ஒப்புக் கொள்வீர்கள் என நினைக்கிறேன். முன்னாள் கிழக்கு ஜெர்மனியில் இருந்த ஒரு பெண்ணிடம் நீங்கள் கேட்ட ஜனநாயகம் உங்களுக்கு கிடைத்து விட்டதல்லவா, நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்று கேட்டபோது, அவர் கூறினார். உண்மைதான். நாங்கள் முன்பு அவர்களை எதிர்த்து எதுவும் பேச முடியாது. குறைகளைக் களைந்து கொள்ளலாம் அவ்வளவுதான். இப்போது எங்களுக்கு எதை வேண்டுமானாலும் கூரையில் ஏறி நின்று கூவ சுதந்திரம் உண்டு. ஆனால் யாரும் கேட்க மாட்டார்கள்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு மக்கள் அடுத்த தேர்தல் வரை ஏமாளிகளாக உலா வருகிறார்களே, இதுவா ஜனநாயகம்? உங்கள் ஜனநாயகம், “Far the people, buy the people, Off the people”. போங்கய்யா, நீங்களும், உங்க ஜனநாயகமும்.
அடுத்தது, மீடியா பற்றியது. மீடியாவுக்கு சுதந்திரம் இல்லை என்று ரொம்பவே வருத்தப் பட்டிருக்கிறார். சோவியத் நாடு சிதறியதற்கு மீடியாவை கட்டவிழ்த்து விட்டது ஒரு முக்கியக் காரணம். சமீபத்தில் மும்பையில் தாஜ் தாக்கப்பட்ட போது, இந்த கார்ப்பரேட் மீடியாவின் பொறுப்பை(?) நேராகவே பார்த்தோம். இவர்களே வெளியே என்ன நடக்கிறது என்று விலாவாரியாக மக்களுக்கு (தீவீரவாதிகளுக்கு) செய்தி கொடுத்துக் கொண்டிருந்தார்கள். இவர்களை கட்டுப்படுத்த சட்டம் கொண்டு வர முயன்றது முறியடிக்கப்பட்டது. கார்ப்பரேட் மீடியாவை கட்டவிழ்த்து விடுவது சீன அரசுக்கு தற்கொலைக்கு ஈடானது. மேலும் சார்ஸ் பற்றி அவர் கூறுகிறார். இங்கு H1N1 விஷயத்தில் அவர்கள் அடிக்கும் கூத்தையும் நாம் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்.
ஒரு இடத்தில் கம்யூனிசக் கோட்பாடு காலம் கடந்தது என்று திருவாய் மலர்ந்திருக்கிறார். அம்மா, இப்போது பொருளாதார மந்தநிலை ஏற்பட்ட பிறகு சர்கோசி வரை அனைவரும் மார்க்சின் போதனைகளைத் தான் தேடிப் படித்துக் கொண்டிருக்கிறார்கள். உலகெங்கும் அவற்றுக்கு கிராக்கி ஏற்பட்டிருக்கிறது. அதையும் நீங்கள் தெரிந்து கொள்வது நல்லது.
சீனா முன்னேற வேண்டுமென்ற துடிப்பில் முதலாளித்துவத்தை சிறிய அளவில் அனுமதித்துள்ளது. அந்த நடவடிக்கையே பல ஏற்ற தாழ்வுகளை உண்டாக்கியுள்ளது என்பது அவரது எழுத்துக்களில் புலனாகிறது. மூலதனம் என்பது இலாபத்துக்காக எதையும் செய்யும். முன்னூறு சதவிகிதம் இலாபம் கிடைக்குமென்றால் மூலதனம் தன் முதலாளியைக் கொல்லக் கூடத் தயங்காது என்பது மார்க்சின் தூரதிருஷ்டி. இந்த வார்த்தைகளைத் தான் மேற்கண்ட செய்திகள் உறுதிப்படுத்துகின்றன. நான் சில நாட்களுக்கு முன் ஒரு செய்தியைப் படித்தேன். சீனாவிலிருந்து வந்த கண்டயினர்களில் ‘made in India” என்ற முத்திரையுடன் சீனாவில் செய்த தரமற்ற பொருட்கள் இருந்தன. இது எப்படி சாத்தியம் என்று திகைத்துப் போயிருந்தேன். இப்போது விடை கிடைத்து விட்டது.
பழைய வாசனையை அழிப்பது என்பது எனக்கும் ஏற்புடையது இல்லைதான். ஆனால் அதைப்பற்றி நான் எந்த முடிவும் செய்ய முடியாது. ஆனால் இங்கு கூவம் நதிக்கரையில் பணக்காரர்களுக்கு வீடு கட்ட ஏற்பாடு செய்ய ஏழைகளின் வீடுகளை இடிக்க முயல்கிறார்களே, அதைவிட சீனா பரவாயில்லை என்றே தோன்றுகிறது.
மதம் பற்றி அவர் பல விஷயங்களைக் கூறியுள்ளார். தற்போது அங்கு நிகழ்ந்த மதக்கலவரம் குறித்து அனைவரும் அறிந்தேயிருப்பர். அதற்குக் காரணம் அரபு நாடுகளுடன் வர்த்தகம் மேற்கொள்ள மதத்தை அனுமதித்ததே என்பது என் கணிப்பு. ஆனால் எந்த அரசா வது கலவரத்தை அடக்காமல் கையைக் கட்டிக் கொண்டு வேடிக்கை பார்க்க முடியுமா? அப்படி சீன அரசு நடவடிக்கை எடுத்தபோது கம்யூனிஸ்ட் எதிர்ப்பு மீடியாக்கள் அலறியதையும் பார்த்தோம். என்ன இருந்தாலும் அவர்களது கம்யூனிஸ்ட் எதிர்ப்பு இருக்கிறதே, சூப்பர்.
அடுத்தது திபெத். அங்கு சீனாவின் கால் இருப்பதால் அங்கு நல்ல முன்னேற்றம் இருக்கிறது என்பதை அவராலேயே மறுக்க முடியவில்லை. முன்பு தலாய்லாமா இருந்தபோது அங்குள்ள மக்கள் பெரும்பாலோர் புத்த மதத்தில் இருந்தனர். இல்லையென்றால் வாழக்கூட முடியாது. இப்போது சீன அரசு அவர்களுக்கு வாழ வழி செய்துள்ளது. பாகிஸ்தான் நம் நாடு காஷ்மீரத்தை அடக்கி ஆளுவதாகக் கூறிக் கொண்டிருக்கிறது. அதை ஒப்புக்கொண்டால், இதையும் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். ஆமாம், இவர்களெல்லாம் இஸ்ரேல் பாலஸ்தீனத்தில் செய்யும் ஆக்ரமிப்பையெல்லாம் கண்டு கொள்வதே இல்லையே ஏன்?
ஆனால் ஒன்று. என்ன சொன்னாலும், சீனா முன்னேறியிருக்கிறது என்பதையும், கீழ்மட்ட மக்கள் அங்கு வாழ்வதே சிறந்தது என்பதையும் மனம் திறந்து சொன்னதற்கு நன்றி. மீண்டும் நான் வலியுறுத்த விரும்புவது ஒன்றைத்தான். மூலதனம் இலாபம் சம்பாதிப்பதை மட்டுமே செய்வதாகும். அதற்காக எதை வேண்டுமானாலும் அது செய்யும். உலகமே அந்த மூலதனக் குவியலிலும், வரன்முறையற்ற பாய்ச்சலிலும் விழி பிதுங்கிப் போயிருக்கிறது. அதிலிருந்து தப்பித்து ஓரளவு மக்கள் சேவை செய்பவை கம்யூனிஸ்ட் நாடுகள் மட்டுமே. அவை இருந்து விட்டுத்தான் போகட்டுமே.
கம்யூனிஸ்ட் அரசும், கட்சியும் மக்களை விட்டு விலகியிருப்பதாகக் கூறியுள்ளார். இந்தத் தவறை சரி செய்து கொள்ளாவிட்டால், சோவியத் போல சீனாவும் விழுவதைத் தவிர்க்க முடியாது. ஆனால் ஆசிரியரே கட்சி இதை சரி செய்து விடும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார். காரணம் கம்யூனிஸ்ட் கட்சிகள் மாநாடுகளை முதலாளித்துவ கட்சிகளைப் போல் Gala functionகளாக நடத்துவதில்லை. பழைய தவறுகளிலிருந்து பாடம் கற்கவும், புதிய பாதையை உருவாக்கவும் திட்டமிடுகின்றன. அதுதான் அவர்களை சரியான பாதையில் வழிநடத்துகிறது. எனவே சோவியத்தின் வீழ்ச்சியைப் பார்த்த பிறகு மீண்டும் சீனக் கட்சி அதே தவறுகளைச் செய்யாது என்று நம்புவோம்.
இந்தப் புத்தகம் குறித்து நான் பிறகு எழுதுகிறேன்.
0
சீனா விலகும் திரை-விமர்சனம்
- ரமேஷ்
பல்லவி ஐயர் எழுதியிருக்கும் சீனா விலகும் திரை என்ற புத்தகத்தைப் படித்ததில் உண்மையிலேயே மகிழ்ச்சியடைந்தேன். நான் ஒரு கம்யூனிச ஆதரவாளனாக இருந்தும், சீனா பற்றி பெரிதும் அறியாமலேதான் இருந்தேன். அங்கேயே சென்று தங்கியிருந்து பல்லவி ஐயர் எழுதியிருக்கும் இந்தப் புத்தகம் எனக்குப் பல விஷயங்களைப் புரிய வைத்துள்ளது. ஆனால் எனது அடிப்படை கோட்பாட்டை அது எந்த விதத்திலும் மாற்றி விடவில்லை என்பதையும் இங்கே கூறி விட வேண்டும். புத்தகம் முழுவதிலும் என்னை ஆகர்ஷித்த ஒரு விஷயம் அது மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் நேர்த்தி. மொழிபெயர்ப்பாளருக்கும், எடிட்டருக்கும் வாழ்த்துக்கள்.
துவக்கத்திலிருந்தே ஆசிரியர் அனைவரிடமும் கேட்க விரும்பக்கூடிய, தொடர்ந்து ஏமாற்றமடைந்த கேள்வி, உங்களால் வேறு விதமாக சிந்திக்க முடியாதா என்பது. அந்தக் கேள்வி கேட்கும் போதெல்லாம் அவர் சீன அரசுக்கு எதிராகவும், கம்யூனிஸ்ட் கட்சிக்கும், அதன் கோட்பாட்டுக்கும் எதிராகவும் எதாவது கூறி விடமாட்டார்களா என்ற தவிப்பு தெரிகிறது. முதலில் அங்கு நடப்பது ஜனநாயகம் என்று அவர்களே கூறவில்லை. அங்கு நடப்பது பாட்டாளி வர்க்க ‘சர்வாதிகார' ஆட்சி. இரண்டாவது அங்கு வரம்புக்குட்பட்ட ஜனநாயகம்தான் உண்டு. இந்தியா போன்று போலி ஜனநாயகம் அங்கு கிடையாது. ‘ஜனநாயகவாதிகள்' எப்போது பார்த்தாலும் டின்னமென் சதுக்கத்தை துணைக்கு அழைப்பார்கள். நான் எதிர்பார்த்தது போலவே இவரும் அதை துணைக்கு அழைத்துள்ளார். இவர்களிடம் கேட்பதற்கு எனக்கு ஒரே ஒரு கேள்வி உண்டு. தயவுசெய்து நீங்கள் யாராவது இந்த ஜனநாயக ஆட்சி பதவி விலக வேண்டுமென்று கோரி ஒருநாள், ஒரே ஒரு நாள் தில்லியில் செஞ்சதுக்கத்தில் அமர்ந்து காட்டுங்கள். பிறகு நான் ஒப்புக் கொள்கிறேன் இது ஜனநாயக நாடென்று. திருநெல்வேலியில் வெறும் மனு கொடுக்கச் சென்ற மாஞ்சோலைத் தொழிலாளர்கள் தாக்கப்பட்டு 17 பேர் செத்தார்கள். சமச்சீர் கல்வி வேண்டுமென்று ஆர்ப்பாட்டம் செய்து மந்திரியை பார்க்க அனுமது கேட்ட மாணவர்கள் இங்கே சென்னையில் போலீஸால் மூர்க்கத்தனமாகத் தாக்கப் பட்டார்கள். ராஜஸ்தானில் தண்ணீர் கேட்ட விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு கிட்டத்தட்ட 50 பேர் பலியானார்கள். இங்கே அண்ணா சாலையில் உரிமை கேட்டு ஊர்வலம் நடத்தி விடுங்கள் பார்க்கலாம். (திமுக உள்ளிட்ட கட்சிகள் நடத்தும், அது வேறு விஷயம்).
சரி, அது போகட்டும். இங்கே மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பது ஜனநாயகம் என்றால், பீகார், தமிழ்நாடு போன்ற இடங்களில் தேர்தலா நடக்கிறது? திருமங்கலம், மதுரை, கூட்டுறவு தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், இப்போது கம்பம் - இதுவா ஜனநாயகம்? முதலாளித்துவக் கட்சியில் போட்டியிட இடம் கேட்கவே பணம் கொடுக்க வேண்டும். சமீபத்தில் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளில் 300க்கும் மேற்பட்டோர் கோடீஸ்வரர்கள். இது போதாதா, யார் இங்கே போட்டியிட்டு வெல்ல முடியுமென்று அறிந்து கொள்ள?
சரி ஐயா, இதையும் விடுங்கள். அமெரிக்கா இவர்கள் பார்வையில் சிறந்த ஜனநாயக நாடுதானே? கடந்த ஜனாதிபதி தேர்தலில் அங்கு சுமார் 26,000 கோடி ரூபாய் வேட்பாளர்களால் செலவிடப்பட்டது. பணம் கொடுத்தது யார்? முதலாளிகள். பின்னர் அவர்கள் யாருக்கு கை கட்டி சேவகம் செய்வார்கள்? மக்களுக்கா?
நான் 1991ல் மும்பையில் பணி புரிந்து கொண்டிருந்தபோது கிழக்கு ஜெர்மெனியும், மேற்கு ஜெர்மெனியும் இணைந்த முதலாவது ஆண்டின் போது ஒரு செய்தியை டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டிருந்தது. அது கம்யூனிஸ்ட் பத்திரிகை அல்லவென்பதை ஒப்புக் கொள்வீர்கள் என நினைக்கிறேன். முன்னாள் கிழக்கு ஜெர்மனியில் இருந்த ஒரு பெண்ணிடம் நீங்கள் கேட்ட ஜனநாயகம் உங்களுக்கு கிடைத்து விட்டதல்லவா, நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்று கேட்டபோது, அவர் கூறினார். உண்மைதான். நாங்கள் முன்பு அவர்களை எதிர்த்து எதுவும் பேச முடியாது. குறைகளைக் களைந்து கொள்ளலாம் அவ்வளவுதான். இப்போது எங்களுக்கு எதை வேண்டுமானாலும் கூரையில் ஏறி நின்று கூவ சுதந்திரம் உண்டு. ஆனால் யாரும் கேட்க மாட்டார்கள்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு மக்கள் அடுத்த தேர்தல் வரை ஏமாளிகளாக உலா வருகிறார்களே, இதுவா ஜனநாயகம்? உங்கள் ஜனநாயகம், “Far the people, buy the people, Off the people”. போங்கய்யா, நீங்களும், உங்க ஜனநாயகமும்.
அடுத்தது, மீடியா பற்றியது. மீடியாவுக்கு சுதந்திரம் இல்லை என்று ரொம்பவே வருத்தப் பட்டிருக்கிறார். சோவியத் நாடு சிதறியதற்கு மீடியாவை கட்டவிழ்த்து விட்டது ஒரு முக்கியக் காரணம். சமீபத்தில் மும்பையில் தாஜ் தாக்கப்பட்ட போது, இந்த கார்ப்பரேட் மீடியாவின் பொறுப்பை(?) நேராகவே பார்த்தோம். இவர்களே வெளியே என்ன நடக்கிறது என்று விலாவாரியாக மக்களுக்கு (தீவீரவாதிகளுக்கு) செய்தி கொடுத்துக் கொண்டிருந்தார்கள். இவர்களை கட்டுப்படுத்த சட்டம் கொண்டு வர முயன்றது முறியடிக்கப்பட்டது. கார்ப்பரேட் மீடியாவை கட்டவிழ்த்து விடுவது சீன அரசுக்கு தற்கொலைக்கு ஈடானது. மேலும் சார்ஸ் பற்றி அவர் கூறுகிறார். இங்கு H1N1 விஷயத்தில் அவர்கள் அடிக்கும் கூத்தையும் நாம் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்.
ஒரு இடத்தில் கம்யூனிசக் கோட்பாடு காலம் கடந்தது என்று திருவாய் மலர்ந்திருக்கிறார். அம்மா, இப்போது பொருளாதார மந்தநிலை ஏற்பட்ட பிறகு சர்கோசி வரை அனைவரும் மார்க்சின் போதனைகளைத் தான் தேடிப் படித்துக் கொண்டிருக்கிறார்கள். உலகெங்கும் அவற்றுக்கு கிராக்கி ஏற்பட்டிருக்கிறது. அதையும் நீங்கள் தெரிந்து கொள்வது நல்லது.
சீனா முன்னேற வேண்டுமென்ற துடிப்பில் முதலாளித்துவத்தை சிறிய அளவில் அனுமதித்துள்ளது. அந்த நடவடிக்கையே பல ஏற்ற தாழ்வுகளை உண்டாக்கியுள்ளது என்பது அவரது எழுத்துக்களில் புலனாகிறது. மூலதனம் என்பது இலாபத்துக்காக எதையும் செய்யும். முன்னூறு சதவிகிதம் இலாபம் கிடைக்குமென்றால் மூலதனம் தன் முதலாளியைக் கொல்லக் கூடத் தயங்காது என்பது மார்க்சின் தூரதிருஷ்டி. இந்த வார்த்தைகளைத் தான் மேற்கண்ட செய்திகள் உறுதிப்படுத்துகின்றன. நான் சில நாட்களுக்கு முன் ஒரு செய்தியைப் படித்தேன். சீனாவிலிருந்து வந்த கண்டயினர்களில் ‘made in India” என்ற முத்திரையுடன் சீனாவில் செய்த தரமற்ற பொருட்கள் இருந்தன. இது எப்படி சாத்தியம் என்று திகைத்துப் போயிருந்தேன். இப்போது விடை கிடைத்து விட்டது.
பழைய வாசனையை அழிப்பது என்பது எனக்கும் ஏற்புடையது இல்லைதான். ஆனால் அதைப்பற்றி நான் எந்த முடிவும் செய்ய முடியாது. ஆனால் இங்கு கூவம் நதிக்கரையில் பணக்காரர்களுக்கு வீடு கட்ட ஏற்பாடு செய்ய ஏழைகளின் வீடுகளை இடிக்க முயல்கிறார்களே, அதைவிட சீனா பரவாயில்லை என்றே தோன்றுகிறது.
மதம் பற்றி அவர் பல விஷயங்களைக் கூறியுள்ளார். தற்போது அங்கு நிகழ்ந்த மதக்கலவரம் குறித்து அனைவரும் அறிந்தேயிருப்பர். அதற்குக் காரணம் அரபு நாடுகளுடன் வர்த்தகம் மேற்கொள்ள மதத்தை அனுமதித்ததே என்பது என் கணிப்பு. ஆனால் எந்த அரசா வது கலவரத்தை அடக்காமல் கையைக் கட்டிக் கொண்டு வேடிக்கை பார்க்க முடியுமா? அப்படி சீன அரசு நடவடிக்கை எடுத்தபோது கம்யூனிஸ்ட் எதிர்ப்பு மீடியாக்கள் அலறியதையும் பார்த்தோம். என்ன இருந்தாலும் அவர்களது கம்யூனிஸ்ட் எதிர்ப்பு இருக்கிறதே, சூப்பர்.
அடுத்தது திபெத். அங்கு சீனாவின் கால் இருப்பதால் அங்கு நல்ல முன்னேற்றம் இருக்கிறது என்பதை அவராலேயே மறுக்க முடியவில்லை. முன்பு தலாய்லாமா இருந்தபோது அங்குள்ள மக்கள் பெரும்பாலோர் புத்த மதத்தில் இருந்தனர். இல்லையென்றால் வாழக்கூட முடியாது. இப்போது சீன அரசு அவர்களுக்கு வாழ வழி செய்துள்ளது. பாகிஸ்தான் நம் நாடு காஷ்மீரத்தை அடக்கி ஆளுவதாகக் கூறிக் கொண்டிருக்கிறது. அதை ஒப்புக்கொண்டால், இதையும் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். ஆமாம், இவர்களெல்லாம் இஸ்ரேல் பாலஸ்தீனத்தில் செய்யும் ஆக்ரமிப்பையெல்லாம் கண்டு கொள்வதே இல்லையே ஏன்?
ஆனால் ஒன்று. என்ன சொன்னாலும், சீனா முன்னேறியிருக்கிறது என்பதையும், கீழ்மட்ட மக்கள் அங்கு வாழ்வதே சிறந்தது என்பதையும் மனம் திறந்து சொன்னதற்கு நன்றி. மீண்டும் நான் வலியுறுத்த விரும்புவது ஒன்றைத்தான். மூலதனம் இலாபம் சம்பாதிப்பதை மட்டுமே செய்வதாகும். அதற்காக எதை வேண்டுமானாலும் அது செய்யும். உலகமே அந்த மூலதனக் குவியலிலும், வரன்முறையற்ற பாய்ச்சலிலும் விழி பிதுங்கிப் போயிருக்கிறது. அதிலிருந்து தப்பித்து ஓரளவு மக்கள் சேவை செய்பவை கம்யூனிஸ்ட் நாடுகள் மட்டுமே. அவை இருந்து விட்டுத்தான் போகட்டுமே.
கம்யூனிஸ்ட் அரசும், கட்சியும் மக்களை விட்டு விலகியிருப்பதாகக் கூறியுள்ளார். இந்தத் தவறை சரி செய்து கொள்ளாவிட்டால், சோவியத் போல சீனாவும் விழுவதைத் தவிர்க்க முடியாது. ஆனால் ஆசிரியரே கட்சி இதை சரி செய்து விடும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார். காரணம் கம்யூனிஸ்ட் கட்சிகள் மாநாடுகளை முதலாளித்துவ கட்சிகளைப் போல் Gala functionகளாக நடத்துவதில்லை. பழைய தவறுகளிலிருந்து பாடம் கற்கவும், புதிய பாதையை உருவாக்கவும் திட்டமிடுகின்றன. அதுதான் அவர்களை சரியான பாதையில் வழிநடத்துகிறது. எனவே சோவியத்தின் வீழ்ச்சியைப் பார்த்த பிறகு மீண்டும் சீனக் கட்சி அதே தவறுகளைச் செய்யாது என்று நம்புவோம்.
Subscribe to:
Posts (Atom)