May 13, 2010

அம்பேத்கரின் 22 உறுதிமொழிகள்

அம்பேத்கர், அக்டோபர் 15, 1956 அன்று நாக்பூரில் பௌத்த மதத்தைத் தழுவியபோது கீழ்கண்ட 22 உறுதிமொழிகளை ஏற்றுக்கொண்டார். அவருடன் சேர்ந்து எட்டு லட்சம் பேர் அன்று இந்து மதத்தில் இருந்து வெளியேறி பௌத்தத்தை ஏற்றுக்கொண்டனர். வரலாற்றில் நிகழ்பெற்ற மிகப் பெரிய மதமாற்றம் இது. பௌத்தம் இந்து மதத்தின் ஓர் அங்கம் அல்ல, அது இந்து மதத்துக்கு நேர் எதிரானது என்பதை அம்பேத்கர் அன்றைய தினம் தெளிவுபடுத்தினார்.
  1. பிரம்மா, விஷ்ணு, சிவன் மூன்றையும் கடவுளாகக் கருதி வணங்கமாட்டேன்.
  2. ராமன், கிருஷ்ணன் இரண்டும் இறைவனின் அவதாரமென எண்ணி வணங்கமாட்டேன்.
  3. கணபதி, 'கௌரி' மற்றும் இந்து தேவதைகளை தெய்வங்களாக ஏற்று வணங்கமாட்டேன்.
  4. கடவுள் பிறந்ததாகவோ, அவதாரம் எடுத்ததாகவோ நம்ப மாட்டேன்.
  5. மகாவிஷ்ணுவின் அவதாரம்தான் புத்தர் என்ற விஷமத்தனமான பிரசாரத்தை எதிர்த்து முறியடிப்பேன்.
  6. இறப்பு நிகழ்ச்சியில் இந்துமதச் சடங்குகளை செய்யமாட்டேன்.
  7. புத்தரின் போதனைகளையும் நெறிகளையும் மீறமாட்டேன்.
  8. பார்ப்பனர்களின் எந்தவொரு ஆச்சாரச் செயலையும் அனுமதிக்க மாட்டேன்.
  9. மானுட சமத்துவத்தை நம்புவேன்.
  10. சமுத்துவத்தை நிலைநிறுத்த முழுமூச்சாக பாடுபடுவேன்.
  11. புத்தரின் எட்டு வழிநெறிகளை நம்பிக்கையோடு பின்பற்றுவேன்.
  12. புத்தரின் பத்து தம்ம போதனைகளை ஏற்று செயல்படுவேன்
  13. எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் காட்டி, பாதுகாத்து, வாழவைப்பேன்.
  14. பொய் பேச மாட்டேன்.
  15. களவு செய்ய மாட்டேன்.
  16. உடல் இன்பத்துக்காகத் தவறுகள் இழைக்கமாட்டேன்.
  17. மது அருந்த மாட்டேன்.
  18. புத்தரின் அன்பு, அறிவு, பரிவு ஆகிய உயரிய நெறிகளின் அடிப்படையில் என் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முயற்சி செய்வேன்.
  19. மனித நேயத்துக்கு முரணான, சமுத்துவம் இல்லாத கேடுகெட்ட இந்து மதத்தை விட்டொழித்து, இன்றுமுதல் மேன்மைமிகு பௌத்தத்தை தழுவிக்ககொள்கிறேன்.
  20. புத்தரும் அவர் தம்மமும் உண்மையான மார்க்கம் என்று உறுதியாக ஏற்கிறேன்.
  21. இன்று மறுவாழ்வு பெற்றதாக நம்புகிறேன்.
  22. புத்தரின் கொள்கை கோட்பாட்டுக்கு ஏற்ப இன்று முதல் செயல்படுவேன்.
கடவுள் உண்டா? புத்தரின் பதில்.

7 comments:

சுதிர் said...

நிச்சயம் அனைவரும் கடை பிடிக்க வேண்டிய உறுதிமொழி

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

அருமை தோழா

Anonymous said...

hi,

* subject: add tell a friend button below each and every post of your blog. Even d newyork times uses this button.

wt is tell a friend button? it is a button which helps the reader in 5 ways.

help number 1:

tis button helps d reader to email the particular post to their friends.(Emailing a particular post facility is already available in your blogger. But it doesn't help d reader to get his/her contact list from his/her email account like Gmail, windows live mail, yahoomail etc.)

help number 2:

tis button helps d reader to bookmark d particular post in famous bookmarks like delicious, digg, google bookmark, yahoo bookmark, stumbleupon, digg, multiply, technorati, reddit, windows live bookmark, yahoo buzz, yahoo home page.... etc...

help number 3:

tis button helps d reader to share d particular post in social friend networks like orkut, facebook, my space, twitter etc....

help number 4:

tis button helps d reader to share d paticular post via their messengers like yahoo messenger, gtalk, live messenger etc

help number 5:

tis button helps d reader to add d particular post to his/her blog's dashboard.

To add this button below each n every post of ur blog visit http://tellafriend.socialtwist.com/index.jsp



Follow the steps mentioned in that site...it will be very easy...the most important facility available here is u can customize ur button according to ur wish.....add d tell a friend button.....




(பின்குறிப்பு: if u want to know how d button will look like and how it will work just see my blog http://kuranguthalaiyan.blogspot.com/ )

Sendeepan said...

இன்னும் நிறைய சொல்லியிருக்கார் நேரம் கிடக்கும் போது அதையும் பதிவு செய்யுங்கள்.
இந்து மதத்தால் யாருமே வாழ முடியாது

இந்த நாட்டில் நிலவும் இத்தகைய சூழல், புத்துணர்வற்ற நிலையை இனி ஆயிரம் ஆண்டு காலத்திற்கு அளித்துவிடும். இந்தச் சூழல் நிலவும் வரை, நம்முடைய முன்னேற்றத்திற்கானப் புத்துணர்வு ஒருபோதும் கிடைக்காது. இந்த மதத்திலிருந்து கொண்டு நாம் இதை எதிர்கொள்ளவே முடியாது. மநுஸ்மிருதியில் சதுர் வர்ணம் இருக்கிறது. சதுர்வர்ண அமைப்பு முறை மனித இனத்தின் முன்னேற்றத்திற்கு மாபெரும் ஊறு விளைவிக்கக் கூடியது. சூத்திரர்கள் அனைத்து வகையான இழிவான பணிகளைத்தான் செய்ய வேண்டும் என்று மநுஸ்மிருதி கூறுகிறது. அவர்களுக்கு ஏன் கல்வி அளிக்கப்பட வேண்டும்? பார்ப்பனர்கள்தான் கல்வி கற்க வேண்டும். சத்ரியன் ஆயுதங்களை எடுக்க வேண்டும். வைசியர்கள் வணிகம் செய்ய வேண்டும். ஆனால், சூத்திரர்கள் தொண்டூழியம் செய்ய வேண்டும். இந்த அமைப்பு முறையை யார் அழித்தொழிப்பது? இந்த அமைப்பு முறையில், பார்ப்பனன், சத்ரியன், வைசியன் எல்லோருக்கும் ஏதோ ஒரு வகை பயன் இருக்கிறது. ஆனால், சூத்திரர்களுக்கு என்ன இருக்கிறது? இந்த மூன்று வர்ணத்தைத் தவிர, பிற சாதியினருக்குப் புத்துணர்வு எப்படி வரும்? சதுர்வர்ண முறை என்பது ஒரு வழக்கமல்ல. அதிலிருந்து தப்பித்துக் கொள்ளவே முடியாது, அதுதான் மதம்.

இந்து மதத்தில் சமத்துவம் இல்லை. நான் ஒரு முறை காந்தியை சந்தித்தபோது, அவர் சொன்னார், ‘நான் சதுர்வர்ணத்தை நம்புகிறேன்.' நான் சொன்னேன்: உங்களைப் போன்ற ‘மகாத்மா'க்கள்தான் சதுர்வர்ணத்தை நம்புகிறார்கள். ஆனால், இந்த சதுர்வர்ணம் என்பது என்ன? சதுர்வர்ணம் என்பது மேல் அல்லது கீழ் என்று உள்ளது. அது எங்கு தொடங்கி எங்கு முடிகிறது? இந்தக் கேள்விக்கு காந்தி பதில் சொல்லவில்லை. அவர் என்ன பதில் சொல்ல முடியும்? நம்மை அழித்தவர்களும் இந்த மதத்தால் அழிக்கப்படுவார்கள். நான் தேவையில்லாமல் இந்து மதத்தைக் குற்றம் சொல்லவில்லை. இந்து மதத்தால் யாருமே வாழ முடியாது; அந்த மதமே ஓர் அழிவு மதம்.

இந்து மதத்தில் படிநிலைப்படுத்தப்பட்ட சாதி முறையில், மேலிருக்கும் வர்ணத்தைச் சார்ந்தவர்கள்தான் பயன் பெற்றார்கள். மற்றவர்களுக்கு என்ன பயன்? ஒரு பார்ப்பனப் பெண் குழந்தை பெற்றால், அவருடைய மனம் ஓர் உயர் நீதிமன்ற நீதிபதி பதவி எப்பொழுது காலியாகும் என்பது பற்றி சிந்திக்கிறது. ஆனால், இதற்கு நேர் மாறாக நம்முடைய துப்புரவுத் தொழிலாளர் பெண்மணி குழந்தை பெறும்போது, அரசாங்கத்தில் ஒரு துப்புரவுப் பணி எப்பொழுது காலியாகும் என்று நினைக்கிறார். இந்து மதத்தின் வர்ண அமைப்பு முறை தான் இத்தகைய விந்தையான சமூக அமைப்புக்கு காரணம். இதிலிருந்து என்ன வகையான மேம்பாட்டை நாம் காண முடியும்? பவுத்த மதத்தின் மூலமே நீங்கள் எதையும் சாதிக்க முடியும்.

ஆர். அபிலாஷ் said...

முக்கியமான பதிவு மருதன்!

Anonymous said...

அதில் எத்தனையை இன்று நீங்கள் கடைபிடிக்கிறீர்கள்.

Anonymous said...

”பவுத்த மதத்தின் மூலமே நீங்கள் எதையும் சாதிக்க முடியும்.”

ஆம் பெளத்தம்+சிங்களப் பேரினவாதம் மூலம் என்னவெல்லாம்
செய்ய முடியும் என்பது தமிழருக்குத்
தெரியும்.