May 11, 2009

இரண்டாம் உலகப் போர்

விரைவில் வெளிவரவிருக்கும் எனது புத்தகம்.

7 comments:

அக்னி பார்வை said...

வாழ்த்துக்கள் , ஒரு ஆர்டர போடுப்பா

suresh kumar said...

I am eagerly waiting for the book

R. Vinod said...

புத்தகத்துக்கு வாழ்த்துக்கள். அட்டைப்படம் அற்புதமாக இருக்கிறது. கிழக்கில் யார் அட்டைப்படங்களைத் தயர் செய்கின்றார்கள்? ஒரு கேள்வி. இரண்டாம் உலகப்போரினை இடதுசாரிப் பார்வையில் எழுதியிருக்கின்றீர்களா? பொதுவான பார்வையா? இடதுசாரி என்றால் சோவியத் இடதா? சீன இடதா? இன்னொரு கேள்வி. சமக்காலப் பிரச்னைகள் பல உலகெங்கும் மக்களைக் கவலைக்குள்ளாக்கி வரும் நிலையில், இலங்கை, பாலஸ்தீன், மியான்மர் போன்ற தேசங்களில் நியாயம் ஒடுக்கப்பட்டு, மக்கள் அவதிபட்டுவரும் சூழ்நிலையில் இரண்டாம் உலகப்போர் குறித்த ஒரு பதிவுக்கு இப்போதைய அவசியம் என்னவென்று கருதுகின்றீர்கள்? ஹிட்லர் செய்தவற்றைவிடப் பெரிய அளவிலான இன ஒழிப்பு நடவடிக்கை இலங்கையில் நடைபெற்றுவருகிற நிலையில், இலங்கையில் மீறப்படும் மனித உரிமைகள் பற்றி எழுதவேண்டும் என்று ஏன் நீங்கள் இன்னமும் நினைகவில்லை?

மருதன் said...

R. Vinod

1) அட்டைப் படங்கள் தயாரிப்பதற்காக தனியொரு பிரிவு இங்கே செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. வாழ்த்துக்கு நன்றி.

2) இரண்டாம் உலகப் போர் இடது சாரி பார்வையில் எழுதப்பட்டிருக்கிறதா? ஆமாம்.

3) சோவியத் இடதா? சீன இடதா? ஸ்டாலி்ன் காலத்து சோவியத் இடது.

4) ஏன் இரண்டாம் உலகப் போர்? காரணம், அது சொல்லப்படவேண்டிய, அறியப்படவேண்டிய அவசியமான வரலாறு. ஹிட்லர் தோற்றுவித்ததைவிட பெரும் நாசத்தை பலர் தோற்றுவித்திருக்கிறார்கள் என்பதை என் புத்தகத்தில் சுட்டிக்காட்டியிருக்கிறேன்.

5) இரண்டாம் உலகப் போர் பற்றிய புத்தகங்களில் பெரும்பாலும் ஹிட்லரே கதாநாயகனாகச் சித்தரிக்கப்பட்டிருப்பார். வில்லனாகவும். ஹிட்லர் என்னும் தனிப்பட்ட நபருக்கு நான் முக்கியத்துவம் அளிக்கவில்லை. ஹிட்லர் என்னும் கதாபாத்திரம் உருவானதற்கான அரசியல், சமூக, வரலாற்றுக் காரணங்களை அலசியிருக்கிறேன்.

6) நூல் குறித்த உங்கள் விமரிசனத்தை எதிர்பார்க்கிறேன்.

tamilan said...

மருதன் அவர்களே தங்கள் எழுதிய விடுதலை புலிகள் நூலில் என்னவெல்லாம் தலைப்புகளில் எழுதி இருக்கிறிர்கள்?
அவர்களின் முழு வரலாறும் அதில் குறிப்பிட்டு இருக்கிறிர்களா?
தங்கள் நூல்களை நான் சென்னையில் எங்கு வாங்க முடியும்???

மருதன் said...

tamilan: என்னுடைய விடுதலைப் புலிகள் புத்தகத்தில் இயக்கத்தை சுருக்கமாக அறிமுகம் செய்திருக்கிறேன். தற்சமயம், விரிவான மற்றொரு புத்தகத்தை எழுதிக்கொண்டிருக்கிறேன். சென்னையில் புத்தகங்கள் கிடைக்கும்.

tamilan said...

புலிகள் பற்றிய தங்கள் அடுத்த புத்தகம் எப்பொழுது வெளி வரும்?
படிக்க ஆவலாக உள்ளேன்..
உங்கள் கருத்துக்களும் கேள்விகளும் பொட்டில் அறைந்தது போல் நச் என்று உள்ளது..
மேதகு பிரபாகரன் அவர்கள் பற்றி அண்மைய செய்தி ஏதும் உள்ளதா??
புலிகள் இயக்கம் அவர் மரணத்தை ஒத்துக்கொண்டாலும் என்னால் அதை ஏற்று கொள்ள முடியவில்லை.