July 10, 2009

கிழக்கு மொட்டைமாடிக்கூட்டம் -- முதலாளித்துவ பயங்கரவாதம்

21 ஜூலை 2009 (செவ்வாய்) அன்று கிழக்கு மொட்டைமாடியில் முதலாளித்துவ பயங்கரவாதம் என்னும் தலைப்பில் உரையாற்ற புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியில் இருந்து இருவர் வருகை தருகிறார்கள்.

சுப. தங்கராசு
மாநிலப் பொதுச் செயலாளர்
பு.ஜ.தொ.மு.

பா. விஜயகுமார்
மாநிலப் பொருளாளர்
பு.ஜ.தொ.மு.

நேரம் : மாலை 6.15

நிறைய கேள்விகள் கேட்கலாம். விவாதிக்கலாம். அனைவரும் வருக!

17 comments:

சுடர் said...

நல்ல முயற்சி. வெற்றி பெற வாழ்த்துககள்

Anonymous said...

காவல்துறை பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா?

கம்யூனிசமும் முதலாளித்துவமும் சொல்லாடல் தொடங்கி கையாடல் சென்று நிற்காமல் இருக்கவுமே இக்கேள்வி.

புரட்சிக்கவி said...

6.15 க்கு ஆரம்பித்து எதுவரை இது நீளும் ?. நான் 7 மணிக்குதான் அலுவலகத்தில் இருந்து கிளம்ப முடியும் !!

superlinks said...

வணக்கம் மருதன்
இது வரவேற்கத்தக்க‌ நல்ல முயற்சி.
காலையா மாலையா
என்ன‌ நேர‌ம் என்ப‌தை குறிப்பிட‌வில்லையே.

நேர‌த்தை குறிப்பிடுங்க‌ள்.

மருதன் said...

புரட்சிக்கவி : ஒரு மணி நேரம் முன்னதாகக் கிளம்பி வரமுடியுமா என்று பாருங்கள். தாமதமாக வந்தாலும் பாதகமில்லை. சந்திப்பு நிச்சயம் ஒன்றரை மணி நேரம் நடக்கும். கலந்துரையாடலும் உண்டு. சந்திப்போம்.

மருதன் said...

நன்றி superlinks. மாலை 6.15க்கு வந்துவிடுங்கள். உங்கள் நண்பர்களிடமும் தெரிவித்துவிடுங்கள்.

Dhanasekar said...

வாழ்த்துக்கள் மருதன். கூட்டம் இனிதே நடைபெற வாழ்த்துக்கள். நான் ஊரில் இல்லை. எனவே வரமுடியாது. என்னை தெரிகிறதா? புக் ஃபேரில் சந்தித்திருக்கிறோம்.

மருதன் said...

Dhanasekar : கவலை வேண்டாம். கூட்டத்தின் முழு ஒலிவடிவத்தையும் பிறகு இங்கே அளிக்கிறேன்.

Anonymous said...

கிழக்கில் முதலாளித்துவ பயங்கரவாதமா? சபாஷ் சரியான போட்டி

Anonymous said...

புதுமைப்பித்தனோ சிதம்பர ரகுநாதனோ சொன்னதாக நினைவு. “இலக்கியத்தில் பத்தினி இலக்கியம் என்றோ பரத்தை இலக்கியம் என்றோ இல்லை. இலக்கியம் இலக்கியம்தான்”.
பயங்கரவாதத்தில் எத்தனை வகை? எத்தனை முகங்கள்?
முதலாளித்துவ பயங்கரவாதம்
தொழிலாளித்துவ பயங்கரவாதம்
இசுலாமிய பயங்கரவாதம்
இந்துத்தவா பயங்கரவாதம்
கிறிஸ்தவ பயங்கரவாதம்
எல்லாம் உண்டோ?
முகமிலி

superlinks said...

////புதுமைப்பித்தனோ சிதம்பர ரகுநாதனோ சொன்னதாக நினைவு. “இலக்கியத்தில் பத்தினி இலக்கியம் என்றோ பரத்தை இலக்கியம் என்றோ இல்லை. இலக்கியம் இலக்கியம்தான்”.
பயங்கரவாதத்தில் எத்தனை வகை? எத்தனை முகங்கள்?
முதலாளித்துவ பயங்கரவாதம்
தொழிலாளித்துவ பயங்கரவாதம்
இசுலாமிய பயங்கரவாதம்
இந்துத்தவா பயங்கரவாதம்
கிறிஸ்தவ பயங்கரவாதம்
எல்லாம் உண்டோ?
முகமிலி////





ஏய் யார் இந்த கொசு ?
மூஞ்ச காட்டுய்யா மொதல்ல..

இசுலாமிய பயங்கரவாதம்னு
சொல்ல மட்டும் வாய் வருது
ஆனா பார்ப்பன பயங்கரவாதம் இல்லையாம்
இந்துத்துவா பயங்கரவாதமாம்.

நல்லாத் தான் தெரியுது உன்னோட கிழிஞ்சு போன ஜட்டி.
எதுவாயிருந்தாலும் கிழக்கு மொட்டைமாடிக்கு
வந்து பேசு உன்ன மாதிரி ஆள்களை தான்
எதிர்பார்க்கிறோம்.
வருவீங்களா ?

rrmercy said...

Respected sir,
is there a way to make all future meeting on weekend? because from bangalore it's tough to attend that. sir could you please consider this as suggestion.

மருதன் said...

rrmercy:

நீங்கள் சொல்வது உண்மைதான். வார தினங்களில் மீட்டிங்கில் கலந்துகொள்வது வெளியிடங்களில் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல உள்ளூரில் இருப்பவர்களுக்கும்கூட கடினமானதுதான். எனவேதான், முடிந்தவரை வார இறுதியில் நாங்கள் கூட்டங்களை நடத்திக்கெர்ணடிருக்கிறோம்.

உரையாற்ற வரும் பிரமுகர்களுக்கு ஏற்ற வகையில் சில சமயங்களில் சந்திப்புகளை நடத்தவேண்டியுள்ளது. முதலாளித்துவ பயங்கரவாதம் குறித்து பேச இருக்கும் சுப. தங்கராசு டெல்லியில் இருந்து வருகிறார். இரு தினங்கள் மட்டுமே சென்னையில் இருக்கிறார். எனவே இந்த ஏற்பாடு.

கூட்டம் முடிந்தபிறகு, அதன் ஒலிவடிவை இங்கே இணைக்கிறேன். கேட்டு பயன் பெறுங்கள். உங்கள் கருத்துகளையும் எழுதுங்கள்.

Anonymous said...

ஏமாற்று வேலை நாங்கள் தொழிலாளார்களுக்கு எதிரானவர்கள் இல்லை என்று வெளி உலகுக்கு சொல்ல அரங்கேற்றம் செய்யும் நாடகம் இது.

தொழிலாளர்களுக்கு சாதகமாக இருக்கிறார்களாம் கிழக்கியர்கள்.

இவர்களுக்கு என்ன தெறியும் தொழிலாளர்களைப் பற்றி.

ஆட்டை கோவிலுக்கு வெட்டும் முன்பு மாலை மரியாதை செய்துதான் வெட்டுவார்கள், கிழக்கியர்களும் அப்படித்தான் என்று எல்லோருக்கும் தெறியும்.


ஆடு நினைகிறது என்று ஓநாய் அழுத கதையா இருக்கு.

superlinks said...

//////ஏமாற்று வேலை நாங்கள் தொழிலாளார்களுக்கு எதிரானவர்கள் இல்லை என்று வெளி உலகுக்கு சொல்ல அரங்கேற்றம் செய்யும் நாடகம் இது.

தொழிலாளர்களுக்கு சாதகமாக இருக்கிறார்களாம் கிழக்கியர்கள்.

இவர்களுக்கு என்ன தெறியும் தொழிலாளர்களைப் பற்றி.

ஆட்டை கோவிலுக்கு வெட்டும் முன்பு மாலை மரியாதை செய்துதான் வெட்டுவார்கள், கிழக்கியர்களும் அப்படித்தான் என்று எல்லோருக்கும் தெறியும்.


ஆடு நினைகிறது என்று ஓநாய் அழுத கதையா இருக்கு./////





அனானிமஸ் கிழக்கு பற்றி பேசுவதெல்லாம் இருக்கட்டும்.
எல்லோரை பற்றியும் எல்லோருக்கும் ஒரு மதிப்பீடு இருக்கிறது.

முதலில் நீங்கள் யார் என்பதை சொல்லுங்கள்
அதன் பிறகு பார்க்கலாம் கிழக்கை பற்றி பேசுவதற்கு
உங்களுக்கு தகுதி இருக்கிறதா என்பதை.

அதாவது மதிப்பீடு.. மதிப்பீடு..

அசோக் said...

வணக்கம் , கலந்துரையாடல் எங்கே நடக்க இருக்கிறது?
முகவரி அனுப்பவும்

மருதன் said...

அசோக்: முகவரி இதோ.

கிழக்கு பதிப்பகம்
33/15, எல்டாம்ஸ் சாலை
ஆழ்வார்பேட்டை
சென்னை 600018
தொடர்புக்கு: 42009601/9603/9604

(அடையாளம் : சி.பி. ஆர்ட் கேலரி, Lifestyle அருகே)