April 23, 2010

வயிற்றில் புழுக்கள்

மாவோயிஸ்ட் பயங்கரவாதம், சிவப்பு பீதி என்றெல்லாம் செய்திகள் உலாவும் இந்தத் தருணத்தில், ஜார்கண்டின் நிஜ பிரச்னையை அறிய இதோ ஒரு வாய்ப்பு.

குழந்தைகளின் வயிறு அளவுக்கு அதிகமாக வீங்கியிருந்தால் உள்ளே புழுக்கள் வசிக்கின்றன என்று அர்த்தம். ஜார்கண்டுக்கு கிழக்கே உள்ள சிங்பம் மாவட்டத்தில் உள்ள பழங்குடி மக்களின் நம்பிக்கை இது. வயிற்றில் இருக்கும் புழுக்களை வெளியில் எடுக்க பழுக்கக் காய்ச்சிய இரும்புக் குழலை வயிற்றுக்கு பக்கவாட்டில் வைத்து தேய்க்கிறார்கள். குழந்தை வீறிட்டு அழுதால் நிறைய புழுக்கள் இறந்துவிட்டன என்று அர்த்தம். குறைவாக அழுதால் குறைவான புழுக்களே இறந்துவிட்டதாக சோகம் கொள்கிறார்கள். ஆகவே, மீண்டும் ஒரு இழுப்பு!

குழ்ந்தைகளின் வயிறு வீங்குவதற்குப் பல காரணங்கள் இருக்கக்கூடும் என்கிறார்கள் மருத்துவர்கள். ஊட்டச்சத்துக் குறைபாடு, மலேரியா, குடல் காய்ச்சல், ரத்தப் புற்றுநோய் என்று காரணம் எதுவேண்டுமானாலும் இருக்கலாம். கண்டுபிடிக்காமல் விட்டுவிட்டால் உயிருக்கே ஆபத்து நேரக்கூடும்.

மருத்துவர்கள் அதிகம் இல்லாத பகுதி அது. அப்படியே இருந்தாலும், காசு கொடுத்து வைத்தியம் பார்க்கும் அளவுக்கு வசதியில்லை. மருத்துவருக்குக் கொடுக்கும் அளவுக்கு வசதி இருந்தால், வயிறு ஏன் வீங்கப்போகிறது? தவிரவும், ஊட்டுவதற்கு உணவே இல்லாதபோது, சத்துக்கு எங்கு போவது?

ஜார்கண்டில் உள்ள 24 மாவட்டங்களில் பதினேழில் உணவுப் பற்றாக்குறை நீடிப்பதாக அரசாங்கமே ஒப்புக்கொள்கிறது. உணவு கிடைக்காத குழந்தைகள் பட்டினி கிடக்கிறார்கள் அல்லது காட்டு எறும்புகளைப் பிடித்துச் சாப்பிடுகிறார்கள். சாப்பிடும் பொருளா என்பதை அறியாமலேயே இலை, வேர், கிழங்கு, பூ என்று கண்ணில் அகப்படுவதை உட்கொள்கிறார்கள். இரும்பு இழுத்த வயிறைச் சுட்டிக்காட்டி 'இப்போது என் வயிற்றில் புழு இல்லை தெரியுமா?' என்று சிரிக்கிறார்கள். 'சிகிச்சை' அளிக்கப்படும்போதே இறந்துவிடும் குழந்தைகளின் எண்ணிக்கையை அறியமுடியவில்லை.

இதை, இதை, இதை, இதை, இதை படித்துப்பாருங்கள்.

10 comments:

Dinesh said...

very moving post.

Anonymous said...

மாவோயியசப்பயங்கராவாதம் என்று சொல்லுகிறீரே?

உமக்கு மாவோயிசத்தைப் பற்றி என்னய்யா தெரியும்?

Ramesh Ramasamy said...

>> ஜார்கண்டில் உள்ள 24 மாநிலங்களில் 17 மாநிலங்களில் உணவுப் பற்றாக்குறை நீடிப்பதாக அரசாங்கமே ஒப்புக்கொள்கிறது.

-- என்னது ஜார்கண்ட் என்பது தனிமாநிலமா அல்லது தனிநாடா? ஆராய்க! நன்றி உங்கள் கட்டுரைக்கு

மருதன் said...

Ramesh Ramasamy : நன்றி. திருத்திவிட்டேன்.

தீக்கனல் said...

ஜார்கண்டின் நிஜ பிரச்னை மீது கவனத்தை திருப்பியதற்கு நன்றி மருதன்

Anonymous said...

நக்சல்பாரிகளுக்கு வெற்றி நிச்சயம்!

Anonymous said...

http://kuranguthalaiyan.blogspot.com/

tis is a model blog of me. see tis. There is an important reason to tell u to see my blog. U can see an archive page under d header of my blog. see it. click it. view it. if u want to have like that follow d steps mentioned here.

http://jacqsbloggertips.blogspot.com/2010/05/create-table-of-contents-or-archives.html#more

* (also note this. if u want to covert d label widget into a drop down menu format verify d same above blog jacqsbloggertips.blogspot.com)

* PLZ forward tis message to ur friends...

Anonymous said...

http://kuranguthalaiyan.blogspot.com/

tis is a model blog of me. see tis. There is an important reason to tell u to see my blog. U can see an archive page under d header of my blog. see it. click it. view it. if u want to have like that follow d steps mentioned here.

http://jacqsbloggertips.blogspot.com/2010/05/create-table-of-contents-or-archives.html#more

* (also note this. if u want to covert d label widget into a drop down menu format verify d same above blog jacqsbloggertips.blogspot.com)

* PLZ forward tis message to ur friends...

Anonymous said...

hi

subject: create archive page under header of ur blog

tis is again daydasher only...


எழுத்தாளர் ஜெயமோகன் கோப்பு(archive) என்ற ஒரு pageஐ தன் இணையதளத்தில் முகப்பு அருகில் மேலே வைத்துள்ளார். அந்த கோப்பு என்ற archive page மிகவும் உபயோகமானது. மிகவும் user friendlyயானது. அந்த archive pageல் அவரது blogல் உள்ள அத்தனை post titlesகளையும் மிக விரைவாக பார்க்க முடியும். அந்த archive page இல்லையென்றால் ஒவ்வொரு பக்கமாக தாவித் தாவி அத்தனை post titlesகளையும் பார்ப்பது ரொம்பவே சிரமமானது.

அதனால் நீங்களும் உங்கள் blogல் ஒரு archive pageஐ blog headerக்கு அடியில் உருவாக்குங்கள். முதலில் pages என்ற‌ widgetஐ layoutல் add செய்து கொண்டு அதை உங்கள் blog headerக்கு அடியில் drag செய்து place செய்யுங்கள். அதன் பின் இந்த இணையதளத்தில் http://jacqsbloggertips.blogspot.com/2010/05/create-table-of-contents-or-archives.html#more சொல்லபட்டுள்ளவற்றை அப்படியே follow செய்யுங்கள்.


(* பின்குறிப்பு 1: நீங்கள் archive pageஐ உருவாக்கியவுடனேயே எல்லா post titlesகளும் displayஆகிவிடாது. It will be empty only. Post titles wont appear immediately. அதற்கு ஒரு நாளோ அல்லது இரண்டு நாட்களோ ஆகும். அதுவரை பொறுமையாக இருக்கவும். அவசரப்பட்டு "என்ன எந்த post titlesகளுமே display ஆகவில்லையே?" என நினைத்து நீங்கள் உருவாக்கியுள்ள archive pageஐ delete செய்து விடாதீர்கள். )

பின்குறிப்பு 2: delete ur present archive list in d sidebar after all of d post titles appear within d archive page under ur blog header...if u do tis readers wil feel more pleasant look of ur blog

பின்குறிப்பு 3: see tis blog of me. http://kuranguthalaiyan.blogspot.com/
if u visit tis site u can have a prior idea of how an archive page will look after we create it....d........

Anisha Yunus said...

ஜார்கண்டில் மட்டுமில்லைங்ணா, இன்னும் பல இடத்தில் இந்த மாதிரி பசியில மடியற குழந்தைகள் அதிகம், அதிகம்னு சொன்னா குறைன்னு நினைக்கிறேன். ஒரிசா, பீஹார்னு பட்டியல் நீண்டுகிட்டே போகும். நம்மளை சுரண்டுகின்ற பெரிய பெரிய முதலைகள் கஞ்சத்தனத்துடன் பைசா அள்ளி கொடுத்தாலும் அவை வாழும். யார் உதவ சம்மதிக்கிறார்?

மற்றபடி, வித்தியாசமான ஒரு பதிவு. நன்றி.