ஆரவாரங்கள் தொடங்கும்போதே ஃபிடல் காஸ்ட்ரோ தெளிவாக அறிவித்துவிட்டார். ஜனவரி 1, 1959 அன்று. புரட்சி வெற்றி பெற்றுவிட்டது. கொடுங்கோல் அரசாங்கத்தை நாம் வெற்றிகரமாகத் தூக்கியெறிந்துவிட்டோம். உண்மை. ஆனால், இனி தேனாறும் பாலாறும் இங்கே ஓடப்போகிறது, இனி சிரமம் என்பதே உங்கள் வாழ்வில் இருக்காது என்று என்னால் சொல்லமுடியாது. போராட்டம் இனிதான் தொம்டங்கப்போகிறது. இனி வரும் காலங்களில் அதிக சிரமங்களை நாம் சந்திக்க நேரலாம். முன்னைகாட்டிலும் தீவிரமாகப் போராடவேண்டிவரலாம். க்யூபர்களே, இந்தத் தருணத்தைக் கொண்டாடும் அதே சமயம், மாபெரும் சவால்களை எதிர்கொள்ளவும் தயாராகவே இருங்கள்.
இரு பெரும் சவால்களை க்யூபா எதிர்கொள்ளவேண்டிவந்தது. ஒன்று, க்யூபாவுக்கு உள்ளே இருந்துகொண்டு புரட்சி அரசாங்கத்துக்கு எதிராகச் செயல்படுபவர்களின் சதிவேலைகள். இரண்டு, அமெரிக்கா. இரண்டும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. ஆபத்தானவை. புரட்சியின் ஐம்பதாவது ஆண்டு விழாவை க்யூபர்கள் இப்போது கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். க்யூபாவின் கடந்த ஐம்பது ஆண்டு கால சரித்திரம் முழுக்க முழுக்கப் போராட்டங்களால் மட்டுமே நிரம்பியிருக்கிறது. வெற்றிகளாலும்.
அதிரடியான தொடக்கம் அது. மே 1959-ம் ஆண்டு, அமெரிக்கச் சர்க்கரை ஆலைகளுக்குச் சொந்தமான லட்சக்கணக்கான ஏக்கர் நிலத்தைப் பறிமுதல் செய்தார் காஸ்ட்ரோ. மிக முக்கியமாக யுனைடெட் ஃப்ரூட் நிறுவனத்துக்குச் சொந்தமான நிலங்கள் பிடுங்கப்பட்டன. 'நீங்கள் என்ன விலைகொடுத்து வாங்கினீர்களோ, அதன் அடிப்படையில் உங்களுக்கு நஷ்ட ஈடு அளிக்க ஏற்பாடு செய்கிறேன்!' என்றார். எந்தவொரு அமெரிக்க நிறுவனமும் நிலத்துக்கான அசல் தொகையை செலுத்தி முறைப்படி வாங்கிக்கொண்டதில்லை. எல்லாமே அடிமாட்டு விலையில் ஏமாற்றி வாங்கப்பட்டவை. இந்தத் தொகைக்கு நஷ்டஈடு என்றால் எப்படியிருக்கும்?
நிலம் மட்டுமல்ல. அமெரிக்க எண்ணெய் நிலையங்கள், தொலைபேசி நிறுவனம், வங்கிகள் அனைத்தும் அரசுடமையாக்கப்பட்டன. அமெரிக்கா அலறியது. இதுவரை ஏகபோகமாக அவர்கள் அனுபவித்துவந்த நிலத்தை காஸ்ட்ரோ திடீரென்று பறித்து கொண்டதை அவர்களால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. இதுவரை தன் விருப்பத்துக்கு க்யூபர்களை ஆட்டிப்படைத்துக்கொண்டிருந்த அமெரிக்க நிறுவனங்கள் பெட்டியைத் தூக்கிக்கொண்டு வெளியேறின. கிட்டத்தட்ட 850 மில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துக்கள் அரசுடைமையாக்கப்பட்டன.
'நிலச்சீர்திருத்ததை தொடரவேண்டாம்!' என்று க்யூபாவை எச்சரித்தது அமெரிக்கா. எச்சரிக்கை புறக்கணிக்கப்பட்டது. தொடர்ந்து முன்னேறிய காஸ்ட்ரோ, ஓரியண்ட் மாகாணத்திலுள்ள 80 ஆயிரம் ஏக்கர் நிலத்தை நாட்டுமையாக்கினார். அமெரிக்கர்கள் நடத்தி வந்த உல்லாச விடுதிகளிலிருந்து பாதி வருமானம் அரசாங்கத்துக்கு வந்து சேரவேண்டும் என்று உத்தரவிட்டார். தன் விருப்பத்துக்கு ஏற்றவாறு பணம் வசூலித்து வந்த மின்சாரத்துறை சீர்செய்யப்பட்டது. அரசுடைமையாக்கப்பட்ட நிலங்கள் விவசாயிகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டன. இரண்டு லட்சம் மக்களுக்கு நிலமும் வீடுகளும் கிடைத்தன. நில வாடகை பாதியாகக் குறைக்கப்பட்டது. ஏழை விவசாயிகள் வீடுகள் கட்டிக்கொள்ள ஊக்கப்படுத்தப்பட்டனர்.
க்யூபா சிறிது சிறதாக ஒரு கம்யூனிஸ்ட் நாடாக மாறிவருவதைக் கண்டு திடுக்கிட்டது அமெரிக்கா. க்யூபாவிலிருந்த அமெரிக்க தூதரகம் இழுத்து மூடப்பட்டது. அமெரிக்கத் தூதர் திரும்பப்பெற்றுக்கொள்ளப்பட்டார். க்யூபாவுக்கு அமெரிக்கா கொடுத்த முதல் பதிலடி சர்க்கரை இறக்குமதியை நிறுத்திக் கொண்டதுதான். க்யூபாவிலிருந்து யாரும் சர்க்கரை வாங்கக்கூடாது என்ற கண்டிப்பான கட்டுப்பாட்டை அமெரிக்கா விதித்தது. அமெரிக்கா மட்டுமல்ல, பிற நாடுகளும் க்யூபாவிடமிருந்து சர்க்கரை கொள்முதல் செய்யக்கூடாது என்று கேட்டுக்கொண்டது.
சர்க்கரையில் தொடங்கிய கட்டுப்பாடு பொருளாதாரத் தடையாக விரிவடைந்தது. க்யூபாவிலோ சர்க்கரை பொங்கி வழிந்து கொண்டிருந்தது. அமோக விளைச்சல். நிலம் கிடைத்த மகிழ்ச்சியில் விவசாயிகள் அனைவரும் கரும்பு விளைச்சலில் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அமெரிக்காவின் இந்த திடீர் சர்க்கரை கட்டுப்பாடு அவர்களை முடக்கியது. கிட்டத்தட்ட 7 லட்சம் டன் சர்க்கரை கொள்முதல் செய்யப்படாமல் குன்றுபோல் குவிந்துக்கிடந்தது.
க்யூபாவின் இறக்குமதி முற்றிலுமாகக் கட்டுப்படுத்தப்பட்டது. அமெரிக்காவிலிருந்து ஒரு குண்டூசியைக் கூட க்யூபாவுக்கு கொண்டுபோகமுடியாது. க்யூபாவிலிருந்து ஒரு குண்டூசியைக்கூட அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யமுடியாது. இதனால் க்யூபா சந்தித்த இன்னல்கள் என்னென்ன? அன்றாட தேவைக்கான எண்ணெய் கிடைக்கவில்லை. உதிரிபாகங்கள் கிடைக்கவில்லை. ஓடிக்கொண்டிருந்த பஸ்கள் நின்றுவிட்டன. வயலில் டிராக்டர்கள் ஓடவில்லை. குழந்தைகளுக்குப் பால் இல்லை.
ஆனால், எழுத்தறிவு இயக்கம் தீயாகப் பற்றிக்கொண்டது. சுரங்கத் தொழிலாளர்கள் பணி முடிந்ததும் வகுப்பறைக்குப் படையெடுத்தனர். கடப்பாறையை வாசலுக்கு வெளியே படுக்க வைத்துவிட்டு ஓர் விவசாயி வகுப்பறைக்குள் நுழைவார். பைனாப்பிள் மரம் அறுப்பவர் கத்தியை மூடி வைத்துவிட்டு புத்தகத்தை திறந்துவைத்துக்கொள்வார். பற்களை தொலைத்த மூதாட்டிகளும் அமர்ந்திருப்பார்கள். இந்த வயதில் இதெல்லாம் எதற்கு என்று தயங்கியதில்லை. கற்பிப்பதற்கு நூற்றுக்கணக்கான இளைஞர்கள் முன் வந்தனர். பிள்ளைகள் பெற்றோருக்குப் பாடம் எடுத்தனர்.
பாடிஸ்டா அரசில் க்யூபாவின் எழுத்தறிவு 23.6 சதவிகிதம். பள்ளிகள் கவனிப்பாரற்று கிடந்தன. மாணவர்கள் ஒழுங்காகப் படிக்கிறார்களா என்ற அக்கறை ஆசிரியர்களுக்கு கிடையாது. ஆசிரியர்கள் ஒழுங்காகப் பாடம் நடத்துகிறாரார்களா என்று தெரிந்து கொள்ளும் விருப்பம் அரசாங்கத்திடம் இல்லை.
புரட்சிக்குப் பிறகு நிலைமை தலைகீழாக மாறியது. ஒரே ஆண்டு. எழுதப்படிக்கத் தெரியாதவர்களை தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 9-ம் வகுப்பு படித்த மாணவர்களின் விழுக்காடு 98.2 சதவிகிதத்தை எட்டிப்பிடித்தது. 37 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர். உலகிலேயே வேறெந்த நாட்டிலும் இத்தகைய விகிதாச்சாரத்தைக் காணமுடியாது. அனைத்து மட்டங்களிலும் கல்வி இலவசம். யுனெஸ்கோ, யுனிசெஃப் போன்ற அமைப்புகள் கல்வியில் க்யூபாவை முன்னுதாரணமாக நிறுத்தி உலகுக்கு பாடம் எடுத்தன. பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டபோது கூட மாணவர்களிடமிருந்து ஒரு பிசோவைக் கூட காஸ்ட்ரோ அரசு கட்டணமாக வசூலிக்கவில்லை.
கல்விப் புரட்சி நடந்து கொண்டிருந்த அதே சமயம் மருத்துவப் புரட்சியும் தொடங்கிவிட்டது. காளான்கள் போல மருத்துவமனைகள் முளைத்தன. குழந்தை ஒரு தாயின் வயிற்றில் உருவாகும்போதே அதன் உடல்நலனை காக்கும் முயற்சிகள் தொடங்கப்பட்டன. அடிப்படை மருந்துகள் கூட மறுக்கப்பட்ட நிலையில் மருத்துவத்துறை நான்குகால் பாய்ச்சலில் முன்னேறியது. புரட்சிக்கு முன்னர் க்யூபர்களின் சராசரி ஆயுட்காலம் 55 ஆண்டுகள். இது பின்னர் 75 ஆண்டுகளாக உயர்ந்தது.
மருந்துகள் கிடைக்காதபோது க்யூபர்கள் துவண்டுவிடவில்லை. 'நமக்குத் தேவையான மருந்துகளை நாமே உருவாக்குவோம்!' என்றார் காஸ்ட்ரோ. புதிய நோய்களைத் தடுக்க புதிய மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன.
அமெரிக்காவைப் பொறுத்தவரை காஸ்ட்ரோ, கண்களில் விழுந்த தூசி. தூசியை அகற்றினால்தான் நிம்மதியாக இருக்கமுடியும். அதற்காக எதை வேண்டுமனாலும் செய்யத் தயாராகவே இருந்தது அமெரிக்கா. பிள்ளைப் பேறில் இறக்கும் தாய்மார்களின் எண்ணிக்கை பத்தாயிரத்துக்கு 2.2 பேர். பத்தாயிரத்தில் 7.2 குழந்தைகள் பிறக்கும்போது இறக்கின்றன. உலகிலேயே குறைந்த அளவு இதுதான். உலகில் எங்கெல்லாம் இயற்கைச் சீற்றங்களும், போர்களும் பேரழிவுகளும் நேர்கின்றனவோ, அங்கெல்லாம் க்யூப மருத்துவர்களும், ஆசிரியர்களும் பணி செய்கிறார்கள். க்யூப அரசு தொழில் நுட்ப ஆதரவு அளிக்கிறது.
புதுவகைப் பயிர்களை உருவாக்கும் தொழில்நுட்பத்தில் அபாரமான தேர்ச்சியை சந்தித்திருக்கிறார்கள். திசு வளர்ப்பு மூலம் புதிய விதைகள் உருவாக்கப்பட்டுள்ளன. ரசாயன பூச்சிக்கொல்லிகளை ஒதுக்கிவைத்துவிட்டு இயற்கை பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தத் தொடங்கினர்.
எது தேவையோ அதை மட்டும் கையில் எடுத்துக்கொண்டார்கள், வெற்றிபெற்றார்கள். எது அத்தியாவசியமோ அது குறித்து மட்டுமே ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டன, நடத்தப்படுகின்றன. அமெரிக்காவையும் ரஷ்யாவையும் பார்த்து விண்வெளிப் பயணங்கள் மேற்கொள்வதில்லை. விமானங்களையோ, கணிப்பொறிகளையோ உருவாக்க அமெரிக்காவோடு போட்டி போடுவதில்லை. ஜப்பானோடு போட்டி போட்டுக்கொண்டு தொலைக்காட்சிப் பெட்டிகளையும் கார்களையும் உருவாக்க முயன்றதில்லை.
என்ன செய்யவேண்டும், என்ன செய்யக்கூடாது என்னும் தெளிவான இலக்குடன் முன்னேறிக்கொண்டிருக்கிறது க்யூபா. போராட்டம் முடியவில்லை. சவால்கள் ஓயவில்லை.
(ஆனந்த விகடனில் வெளிவந்த என் கட்டுரை)
January 20, 2009
January 12, 2009
கட்சிகளின் கதை 1 : தி.மு.க.
MiniMax வெளியீடாக வந்திருக்கும் கட்சிகளின் கதை வரிசையில் முதலாவதை இன்று வாசித்தேன். தி.மு.க. எழுதியிருப்பவர் ஆர். முத்துக்குமார். பெரியாரிடம் இருந்து தொடங்கும் இந்நூல், தி.மு.க. மீது வைக்கப்படும் விமரிசனங்களில் முடிவடைகிறது. எளிமையான, சுருக்கமான அறிமுகம். தமிழகக் கட்சிகளின் வரலாறு பற்றி (இந்திய கட்சிகள் பற்றியும்) அதிகம் தெரிந்துவைத்துக்கொள்ளாத என்னைப் போன்றவர்களுக்கு நிச்சயம் உதவக்கூடிய வரிசை இது.

அடுத்து, அ.தி.மு.க. படிக்கப் போகிறேன். இந்த வரிசையை விரிவாகவும் கிழக்கில் முத்துக்குமார் எழுதவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இதுபோன்ற புத்தகங்கள் அதிகம் தமிழில் இல்லை. அல்லது, நான் பார்க்கவில்லை. கட்சிகளே வெளியிடும் வரலாறுகளை எந்த அளவுக்கு நம்புவது என்று தெரியவில்லை.
இப்போதைய அரசியல் சூழலை, பிரச்னைகளை, சவால்களை, கட்சிகளின் வரலாறோடு பொருத்திப் பார்க்கும்போதுதான் முழுமையான சித்திரம் கிடைக்கு்ம். அந்த வகையில், இந்த வரிசை கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.

அடுத்து, அ.தி.மு.க. படிக்கப் போகிறேன். இந்த வரிசையை விரிவாகவும் கிழக்கில் முத்துக்குமார் எழுதவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இதுபோன்ற புத்தகங்கள் அதிகம் தமிழில் இல்லை. அல்லது, நான் பார்க்கவில்லை. கட்சிகளே வெளியிடும் வரலாறுகளை எந்த அளவுக்கு நம்புவது என்று தெரியவில்லை.
இப்போதைய அரசியல் சூழலை, பிரச்னைகளை, சவால்களை, கட்சிகளின் வரலாறோடு பொருத்திப் பார்க்கும்போதுதான் முழுமையான சித்திரம் கிடைக்கு்ம். அந்த வகையில், இந்த வரிசை கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.
நான் எடிட் செய்த புத்தகம் 5 : அயர்லாந்து
ஐ.ஆர்.ஏ. பற்றி ஏதாவது புத்தகம் இருக்கிறதா என்று நேற்று கிழக்கு அரங்கில் ஒருவர் வந்து கேட்டுவிட்டுப்போனார். தேடிப்பார்த்தேன். பிரதி கிடைக்கவில்லை. சொல்லியிருக்கிறேன். வந்துவிடும்.
என். ராமகிருஷ்ணனின் அயர்லாந்து அரசியல் வரலாறு சமீபத்தில் கிழக்கில் வெளிவந்துள்ளது. எனக்குத் தெரிந்து தமிழில் அயர்லாந்து பற்றி விரிவாக யாரும் எழுதியதாகத் தெரியவில்லை. எஸ்.வி. ராஜதுரை ஒரு புத்தகம் எழுதியிக்கிறார். சிறீ ராமுலு பதிப்பகத்தின் சார்பில் வெளிவந்த Penny Series-ல் டிவேலரா பற்றி நாராயண துரைக்கண்ணன் எழுதிய நூலில் அயர்லாந்து விடுதலைப் போராட்டம் பற்றிய அறிமுகம் இருப்பதாக நண்பர் ஒருவர் சுட்டிக்காட்டினார். நான் இன்னும் வாசிக்கவில்லை.
ரஷ்யப் புரட்சியைப் போலவே அயர்லாந்து போராட்டமும் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. காந்தியின் அறவழிப் போராட்டம் வேண்டாம், ஐரிஷ் மக்களைப் போல் நாமும் போராடுவோம் என்று அழைப்பு விடுத்தார் சுபாஷ் சந்திர போஸ்.
இந்தியாவைப் போலவே அயர்லாந்தும் பிரிட்டனின் காலனி நாடுதான். முதல் உலகப் போரை (1914-1918) ஐரிஷ் மக்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டார்கள். பிரிட்டனுக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டத்தை முடுக்கிவிட்டார்கள். இங்கே இந்தியாவில் காந்தி, நேர் எதிரான நிலைப்பாட்டை எடுத்தார். போரில் ஈடுபட்டிருக்கும்போது பிரிட்டனை எதிர்ப்பது சரியல்ல அவர்களுக்கு உதவவேண்டிய சமயம் இது என்றார்.

புத்தகத்தின் பின் அட்டை வாசகங்கள் கீழே.
அப்போதைய இங்கிலாந்தின் படைபலத்தோடு ஒப்பிட்டால் அயர்லாந்து சுண்டைக்காயைவிடச் சிறியது. மிதிக்கக்கூட வேண்டாம், தடவினாலே தடமின்றி போகும் அளவுக்குப் பூஞ்சையான தேசம் அது. அயர்லாந்து மக்கள் ஆட்டு மந்தைகள். அவர்களை அடக்கி அடிமைப்படுத்துவதில் தவறேதுமில்லை. இப்படித்தான் நினைத்தது இங்கிலாந்து. எதிர்பார்த்தபடியே சிறு எதிர்ப்பும் இன்றி அடங்கி சுருண்டுபோனது அயர்லாந்து.
தங்கள் மொழி, இனம், கலாசாரம், அடையாளம் அனைத்தும் சிறிது சிறிதாக அழிக்கப்படுவதைக் கண்ணால் கண்டு துடிதுடித்து நின்றனர் ஐரிஷ் மக்கள். வழிகாட்ட தலைவர் இல்லை. எதிர்த்து நின்று போராடுவதற்குப் படைபலம் இல்லை. ஒன்றுபடுத்தவும் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவும் வலிமையான அரசியல் சித்தாந்தம் எதுவும் இல்லை. தேசம் காக்கப்படவேண்டும். இழந்த உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும். மீட்பர் ஒருவர் வருவார், நிலைமை தாமாகவே மாறும் என்று கன்னத்தில் கைவைத்துக் கிடப்பதால் பலன் ஏதும் இல்லை. சிறு துரும்பையாவது கிள்ளிப்போடலாமே!
இப்படித்தான் தொடங்கியது அந்த வீரம்செறிந்த போராட்டம். சுமார் 800 ஆண்டு கால இடைவிடாத போராட்டத்தின் இறுதியில் அயர்லாந்து சுதந்தரம் அடைந்தது. உரிமைகளுக்காகக் கொடிபிடிக்கும் உழைக்கும் மக்களின் உந்துசக்தியாகத் திகழும் மகத்தான போராட்ட வரலாறு அது.
என். ராமகிருஷ்ணனின் அயர்லாந்து அரசியல் வரலாறு சமீபத்தில் கிழக்கில் வெளிவந்துள்ளது. எனக்குத் தெரிந்து தமிழில் அயர்லாந்து பற்றி விரிவாக யாரும் எழுதியதாகத் தெரியவில்லை. எஸ்.வி. ராஜதுரை ஒரு புத்தகம் எழுதியிக்கிறார். சிறீ ராமுலு பதிப்பகத்தின் சார்பில் வெளிவந்த Penny Series-ல் டிவேலரா பற்றி நாராயண துரைக்கண்ணன் எழுதிய நூலில் அயர்லாந்து விடுதலைப் போராட்டம் பற்றிய அறிமுகம் இருப்பதாக நண்பர் ஒருவர் சுட்டிக்காட்டினார். நான் இன்னும் வாசிக்கவில்லை.
ரஷ்யப் புரட்சியைப் போலவே அயர்லாந்து போராட்டமும் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. காந்தியின் அறவழிப் போராட்டம் வேண்டாம், ஐரிஷ் மக்களைப் போல் நாமும் போராடுவோம் என்று அழைப்பு விடுத்தார் சுபாஷ் சந்திர போஸ்.
இந்தியாவைப் போலவே அயர்லாந்தும் பிரிட்டனின் காலனி நாடுதான். முதல் உலகப் போரை (1914-1918) ஐரிஷ் மக்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டார்கள். பிரிட்டனுக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டத்தை முடுக்கிவிட்டார்கள். இங்கே இந்தியாவில் காந்தி, நேர் எதிரான நிலைப்பாட்டை எடுத்தார். போரில் ஈடுபட்டிருக்கும்போது பிரிட்டனை எதிர்ப்பது சரியல்ல அவர்களுக்கு உதவவேண்டிய சமயம் இது என்றார்.

புத்தகத்தின் பின் அட்டை வாசகங்கள் கீழே.
அப்போதைய இங்கிலாந்தின் படைபலத்தோடு ஒப்பிட்டால் அயர்லாந்து சுண்டைக்காயைவிடச் சிறியது. மிதிக்கக்கூட வேண்டாம், தடவினாலே தடமின்றி போகும் அளவுக்குப் பூஞ்சையான தேசம் அது. அயர்லாந்து மக்கள் ஆட்டு மந்தைகள். அவர்களை அடக்கி அடிமைப்படுத்துவதில் தவறேதுமில்லை. இப்படித்தான் நினைத்தது இங்கிலாந்து. எதிர்பார்த்தபடியே சிறு எதிர்ப்பும் இன்றி அடங்கி சுருண்டுபோனது அயர்லாந்து.
தங்கள் மொழி, இனம், கலாசாரம், அடையாளம் அனைத்தும் சிறிது சிறிதாக அழிக்கப்படுவதைக் கண்ணால் கண்டு துடிதுடித்து நின்றனர் ஐரிஷ் மக்கள். வழிகாட்ட தலைவர் இல்லை. எதிர்த்து நின்று போராடுவதற்குப் படைபலம் இல்லை. ஒன்றுபடுத்தவும் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவும் வலிமையான அரசியல் சித்தாந்தம் எதுவும் இல்லை. தேசம் காக்கப்படவேண்டும். இழந்த உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும். மீட்பர் ஒருவர் வருவார், நிலைமை தாமாகவே மாறும் என்று கன்னத்தில் கைவைத்துக் கிடப்பதால் பலன் ஏதும் இல்லை. சிறு துரும்பையாவது கிள்ளிப்போடலாமே!
இப்படித்தான் தொடங்கியது அந்த வீரம்செறிந்த போராட்டம். சுமார் 800 ஆண்டு கால இடைவிடாத போராட்டத்தின் இறுதியில் அயர்லாந்து சுதந்தரம் அடைந்தது. உரிமைகளுக்காகக் கொடிபிடிக்கும் உழைக்கும் மக்களின் உந்துசக்தியாகத் திகழும் மகத்தான போராட்ட வரலாறு அது.
புதிய போராளி
புதிய போராளி பின்னட்டையில் உள்ள ஒரு கவிதை.
முதலில் அவர்கள்
யூதர்களைத் தாக்கினார்கள்;
நான் எதுவும் சொல்லவில்லை -
ஏனெனில்
நான் யூதன் அல்ல.
பின்னர் அவர்கள்
கத்தோலிக்கர்களைத் தாக்கினார்கள்;
நான் எதுவும் பேசவில்லை
ஏனென்றால் நான் கத்தோலிக்கன்
அல்ல.
அடுத்து அவர்கள்
கம்யூனிஸ்டுகளை
வேட்டையாடினார்கள்
நான் எதுவும் கூறவில்லை
ஏனென்றால்
நான் கம்யூனிஸ்ட் அல்ல.
கடைசியாக அவர்கள்
என்னைத் தாக்க வந்தபோது...
எனக்காகக்
குரல் கொடுக்க
யாருமே இருக்கவில்லை!
மார்ட்டின் நீமொல்லர், ஜெர்மன்.
முதலில் அவர்கள்
யூதர்களைத் தாக்கினார்கள்;
நான் எதுவும் சொல்லவில்லை -
ஏனெனில்
நான் யூதன் அல்ல.
பின்னர் அவர்கள்
கத்தோலிக்கர்களைத் தாக்கினார்கள்;
நான் எதுவும் பேசவில்லை
ஏனென்றால் நான் கத்தோலிக்கன்
அல்ல.
அடுத்து அவர்கள்
கம்யூனிஸ்டுகளை
வேட்டையாடினார்கள்
நான் எதுவும் கூறவில்லை
ஏனென்றால்
நான் கம்யூனிஸ்ட் அல்ல.
கடைசியாக அவர்கள்
என்னைத் தாக்க வந்தபோது...
எனக்காகக்
குரல் கொடுக்க
யாருமே இருக்கவில்லை!
மார்ட்டின் நீமொல்லர், ஜெர்மன்.
சென்னை புத்தகக் கண்காட்சி நாள் :5
நடைபாதையில் நின்றுவிட்டேன். இருபது, முப்பது, ஐம்பது, நூறு என்று பிரித்து லேபிள் ஒட்டி அடுக்கி வைத்திருக்கிறார்கள். பக்க அளவு என்பதையும் தாண்டி, வேறு ஏதோ இலக்கணம் இதில் இருக்கவேண்டும். ஓரிடத்தில் தமிழ் புத்தகங்கள் மட்டுமே இருந்தன. பார்க்க ஆரம்பித்தேன். நிறைய எடுங்க தம்பி, டிஸ்கவுண்ட் தரேன் என்றார் கடைக்காரர். மதுரையில் இருந்து வந்திருக்கிறாராம். கட்டுப்படியாகிறதா என்று கேட்டேன். ஆகிறதாம். தங்கிக்கொள்ள இங்கே தெரிந்தவர் இருக்கிறார். போய், வர பேருந்து கட்டணம். காலையில் வந்துவிடுவேன். வெயில் வந்தால் தலைக்குமேலே பாலிதீன் கூரை. பொழுது சாய்ந்தால், எமர்ஜென்சி விளக்கு. கட்டுப்படியாகாவிட்டால், ராந்தல்.
ஐந்து புத்தகங்கள் எடுத்தேன். மகாத்மா புலே தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் (பல்கலைப் பதிப்பகம்), தத்துவம் என்னும் ஆயுதம், அமில்கர் கப்ரால் (விடியல்), ஏகாதிபத்திய எதிர்ப்பும் சாதி ஒழிப்பும், ஆனந்த் டெல்டும்ப்டெ, தமிழில்: எஸ்.வி. ராஜதுரை (விடியல்-புத்தா), வால்ட்டர் பெஞ்சமின்: நிலைமறுக்கும் வாழ்வு, மாம்மே ப்ராடர்சன் (விடியல்), ஆணாதிக்கமும் பெண்ணியமும், பி. இரயாகரன் (கீழைக்காற்று). மொத்தமாக 240 என்றார்.
எதை பைரேட் செய்யவேண்டும் என்று யார் முடிவு செய்கிறார்கள்? விலையை யார் நிர்ணயிக்கிறார்கள்? எதன் அடிப்படையில்? மார்ஜின் என்ன? லாபம் எவ்வாறு, யார் யாருக்கெல்லாம் பங்கிடப்படுகிறது? சொல்லி வைத்தது போல் அத்தனை நடைபாதை கடைகளிலும் ஒரே மாதிரியான புத்தகங்கள் கிடைப்பது எப்படி? Orhan Pamuk-க்கு நோபல் கிடைத்த மறுவாரமே அவரது அத்தனை நூல்களும் நடைபாதைக்கு வந்துவிட்டன. இந்திய புத்தகக்கடைகளில் விற்கப்பட்ட ஹாரி பாட்டர்களைவிட நடைபாதைகளில் விற்கப்பட்டவை அதிகம் என்று நம்புகிறேன்.
அஸ்வகோஷ் எழுதிய சொர்க்கம் எங்கே இருக்கிறது? (மங்கை பதிப்பகம்) இருபது ரூபாய்க்குக் கிடைத்தது. இராசேந்திர சோழனின் புனைப்பெயர் அஸ்வகோஷ். மார்க்ஸிய சிந்தனையாளர். இவரது பல புத்தகங்களை நான் வாசித்திருக்கிறேன். இரு தினங்களுக்கு முன்பு தொடர்பு கொண்டு விடுதலைப் புலிகள் புத்தகம் பற்றி பேசினார். அலுவலகத்தில் நேரில் வந்து சந்திப்பதாகச் சொன்னார். என்னுடைய தொடர்பு எண்ணைக் கொடுத்தேன். சரியாக இருக்கிறதா பாருங்கள் என்று எண்களை மீண்டும் சொன்னார். தமிழில். ஒரு வாக்கியம் அவரிடம் முழுவதுமாகத் தமிழில் பேசமுடியவில்லை. எண்களைத் தமிழில் சொல்வதற்குக்கூட பயிற்சி தேவைப்படுகிறது. அவமானம்.
அரங்கத்தில் கூட்டம் இல்லை. திரை வளாகத்தில் ஒரு தமிழ் குறும்படம் ஓடிக்கொண்டிருந்தது. வந்து பாருங்கள் என்று அழைத்தார் தோழர் நா.வே. அருள். இரண்டு நிமிடங்கள் நின்றபடி பார்த்தேன். தொடக்கத்தில் இருந்து பார்த்தால் புரியும் என்று நினைக்கிறேன் என்று சொல்லி விடைபெற்றுக்கொண்டேன்.
புதிய போராளி என்னும் இதழ் கீழைக்காற்றில் கிடைத்தது. மார்க்சிய லெனினிய மாவோவிய அரசியல் ஏடு. நேபாளம், தமிழ் ஈழம், வெனிசுவேலா என்று அட்டையில் எழுதப்பட்டிருந்தது. ஓமனூர் வட்டம், சேலம் மாவட்டத்தில் அச்சிடப்பட்டு வெளிவருகிறது. நக்ஸல்பாரிகளின் அரசியல் பிரசார இதழ். தொடர்ந்து கிடைத்தால் தொடர்ந்து வாங்குவேன்.
ஐந்து புத்தகங்கள் எடுத்தேன். மகாத்மா புலே தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் (பல்கலைப் பதிப்பகம்), தத்துவம் என்னும் ஆயுதம், அமில்கர் கப்ரால் (விடியல்), ஏகாதிபத்திய எதிர்ப்பும் சாதி ஒழிப்பும், ஆனந்த் டெல்டும்ப்டெ, தமிழில்: எஸ்.வி. ராஜதுரை (விடியல்-புத்தா), வால்ட்டர் பெஞ்சமின்: நிலைமறுக்கும் வாழ்வு, மாம்மே ப்ராடர்சன் (விடியல்), ஆணாதிக்கமும் பெண்ணியமும், பி. இரயாகரன் (கீழைக்காற்று). மொத்தமாக 240 என்றார்.
எதை பைரேட் செய்யவேண்டும் என்று யார் முடிவு செய்கிறார்கள்? விலையை யார் நிர்ணயிக்கிறார்கள்? எதன் அடிப்படையில்? மார்ஜின் என்ன? லாபம் எவ்வாறு, யார் யாருக்கெல்லாம் பங்கிடப்படுகிறது? சொல்லி வைத்தது போல் அத்தனை நடைபாதை கடைகளிலும் ஒரே மாதிரியான புத்தகங்கள் கிடைப்பது எப்படி? Orhan Pamuk-க்கு நோபல் கிடைத்த மறுவாரமே அவரது அத்தனை நூல்களும் நடைபாதைக்கு வந்துவிட்டன. இந்திய புத்தகக்கடைகளில் விற்கப்பட்ட ஹாரி பாட்டர்களைவிட நடைபாதைகளில் விற்கப்பட்டவை அதிகம் என்று நம்புகிறேன்.
அஸ்வகோஷ் எழுதிய சொர்க்கம் எங்கே இருக்கிறது? (மங்கை பதிப்பகம்) இருபது ரூபாய்க்குக் கிடைத்தது. இராசேந்திர சோழனின் புனைப்பெயர் அஸ்வகோஷ். மார்க்ஸிய சிந்தனையாளர். இவரது பல புத்தகங்களை நான் வாசித்திருக்கிறேன். இரு தினங்களுக்கு முன்பு தொடர்பு கொண்டு விடுதலைப் புலிகள் புத்தகம் பற்றி பேசினார். அலுவலகத்தில் நேரில் வந்து சந்திப்பதாகச் சொன்னார். என்னுடைய தொடர்பு எண்ணைக் கொடுத்தேன். சரியாக இருக்கிறதா பாருங்கள் என்று எண்களை மீண்டும் சொன்னார். தமிழில். ஒரு வாக்கியம் அவரிடம் முழுவதுமாகத் தமிழில் பேசமுடியவில்லை. எண்களைத் தமிழில் சொல்வதற்குக்கூட பயிற்சி தேவைப்படுகிறது. அவமானம்.
அரங்கத்தில் கூட்டம் இல்லை. திரை வளாகத்தில் ஒரு தமிழ் குறும்படம் ஓடிக்கொண்டிருந்தது. வந்து பாருங்கள் என்று அழைத்தார் தோழர் நா.வே. அருள். இரண்டு நிமிடங்கள் நின்றபடி பார்த்தேன். தொடக்கத்தில் இருந்து பார்த்தால் புரியும் என்று நினைக்கிறேன் என்று சொல்லி விடைபெற்றுக்கொண்டேன்.
புதிய போராளி என்னும் இதழ் கீழைக்காற்றில் கிடைத்தது. மார்க்சிய லெனினிய மாவோவிய அரசியல் ஏடு. நேபாளம், தமிழ் ஈழம், வெனிசுவேலா என்று அட்டையில் எழுதப்பட்டிருந்தது. ஓமனூர் வட்டம், சேலம் மாவட்டத்தில் அச்சிடப்பட்டு வெளிவருகிறது. நக்ஸல்பாரிகளின் அரசியல் பிரசார இதழ். தொடர்ந்து கிடைத்தால் தொடர்ந்து வாங்குவேன்.
January 11, 2009
நான் எடிட் செய்த புத்தகம் 4 : இந்திரா
வளைந்து கொடுக்காத உறுதியுடனும் எவருக்கும் அஞ்சாத அசாத்திய துணிச்சலுடனும் உள்ள ஒருவரை இரும்பு மனிதர் என்று அழைக்கிறோம். இந்திய அரசியல் களத்தில் இரண்டு இரும்பு மனிதர்கள் இருந்தனர். சர்தார் படேல். இந்திரா காந்தி. அதட்டி, மிரட்டி, உருட்டி பல சமஸ்தானங்களை இந்தியாவுடன் இணைத்துவைத்தார் படேல். எமர்ஜென்சி கொண்டு வந்து அடிப்படை மனித உரிமைகளை ரத்து செய்து, தன் பதவியைக் காப்பாற்றிக்கொள்ள யத்தனித்தார் இந்திரா.

இந்திரா ஆட்சிகாலத்தில், பல பெண்களுக்கு அவர் பெயர் சூட்டப்பட்டது. என் அம்மாவின் பெயர் இந்திரா. துணிச்சலான பெண்ணாக இரு என்றல்ல, இந்திரா காந்தி போல் இரு என்று வாழ்த்துவார்கள். இந்திரா காந்தி இருந்திருந்தால் இந்நேரம் பாகிஸ்தானை ஒரு வழி செய்திருப்பார், அப்படிப்பட்ட தலைவர்தான் நமக்கு இங்கே தேவை என்று சமீபத்தில்கூட பலர் முணுமுணுத்து கேட்டிருக்கிறேன். புரியவில்லை. கண்ணைமூடிக்கொண்டு இப்படியெல்லாம் எப்படி கொண்டாடமுடிகிறது இந்திராவை? அவ்வளவு ஞாபகமறதிக்காரர்களா நாம்?
ஆர். முத்துக்குமார் எழுதிய இந்திராவின் வாழ்க்கை வரலாறு கிழக்கு வெளியீடாக வெளிவந்துள்ளது. இந்திராவின் மீது நேரடியாகக் குற்றச்சாட்டுகளை இந்நூல் முன்வைக்கவில்லை என்றாலும், அவர் இழைத்த சில தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றன. இந்திராவின் அரசியல் வாழ்க்கையிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் ஆதிக்கம் செலுத்திய ஃபெரோஸின் ஆளுமை இப்புத்தகத்தில் வெளிப்படுகிறது.
நூலில் இருந்து ஒரு பகுதி.
1955ம் ஆண்டு. நாடாளுமன்றத்தில் ஃபெரோஸ் ஆற்றப்போகும் முதல் உரை. அதில்அவர் எடுத்துக்கொண்ட விவகாரம் காப்பீட்டுத் துறையில் நடைபெற்ற முறைகேடுகள். ராம் கிருஷ்ண டால்மியா என்ற பிரபல தொழிலதிபதிரின் நிர்வாகத்தில் இருந்த பாரத் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனியின் முறைகேடுகளை நாடாளுமன்றத்தில் வைத்து அம்பலப்படுத்தினார் ஃபெரோஸ். விவகாரம் வீரியமிக்கது என்பது தெரிந்ததும் உடனடியாக விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது.
துரித கதியில் விசாரணை நடந்தது. விளைவு, டால்மியா குற்றம் செய்திருப்பது நிருபிக்கப்பட்டது. வெற்றி. அற்புதமான வெற்றி. தன்னுடைய மாமனாருக்கு எதிராக. மனைவிக்கு எதிராக. தன்னுடைய குடும்பத்தைப் பிரிப்பவர்களுக்கு எதிராக. ஃபெரோஸின் இந்த முயற்சியால் காப்பீட்டுத் துறையில் அரசாங்கம் நுழைந்தது.
வெற்றி பெற்றது ஃபெரோஸ். ஆனாலும் இந்திராவால் அந்த வெற்றியைத் தாங்க முடியவில்லை. காரணம், ஃபெரோஸின் வெற்றி தன் தந்தைக்கு எதிரானது என்பதால். ஃபெரோஸை மேலும் வெறுக்கத் தொடங்கினார் இந்திரா.
1956ம் ஆண்டு. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி உறுப்பினராக இந்திராவைத் தேர்வு செய்வது என மூத்த தலைவர்கள் முடிவு செய்தனர். முக்கியமாக, லால் பகதூர் சாஸ்திரி. கட்சிக்குள் அதிகாரம் வாய்ந்த பதவி. ஆகவே, அதனை நியமன முறையில் அடைவதில் இந்திராவுக்கு விருப்பமில்லை.
தேர்தல் அறிவிக்கப்பட்டது. உறுப்பினர்களின் ஏகபோக ஆதரவோடு காரியக் கமிட்டி உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார் இந்திரா. இதனையடுத்து தேர்தல் பிரசாரம், கட்சி வளர்ச்சிப் பணிகள் என்று தொடர்ந்து அரசியல் நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார் இந்திரா. இதற்கு நேர்மாறாக ஃபெரோஸ் தாரகேஷ்வரி சின்ஹா, மஹ்முனா சுல்தானா, சுபத்ரா ஜோஷி என்று பல பெண்களுடன் வெளிப்படையாகப் பழக ஆரம்பித்தார்.
விஷயம் வெளியே கசிந்து அதன்மூலம் நேரு அவமானப்பட நேரிடுமே என்று ஃபெரோஸ் துளியும் கவலைப்படவில்லை. அந்த சமயத்தில் இப்படி ஒரு செய்தி. அல்லது வதந்தி.
‘இந்திராவுக்கும் மத்தாயுக்கும் ரகசிய உறவு.’

இந்திரா ஆட்சிகாலத்தில், பல பெண்களுக்கு அவர் பெயர் சூட்டப்பட்டது. என் அம்மாவின் பெயர் இந்திரா. துணிச்சலான பெண்ணாக இரு என்றல்ல, இந்திரா காந்தி போல் இரு என்று வாழ்த்துவார்கள். இந்திரா காந்தி இருந்திருந்தால் இந்நேரம் பாகிஸ்தானை ஒரு வழி செய்திருப்பார், அப்படிப்பட்ட தலைவர்தான் நமக்கு இங்கே தேவை என்று சமீபத்தில்கூட பலர் முணுமுணுத்து கேட்டிருக்கிறேன். புரியவில்லை. கண்ணைமூடிக்கொண்டு இப்படியெல்லாம் எப்படி கொண்டாடமுடிகிறது இந்திராவை? அவ்வளவு ஞாபகமறதிக்காரர்களா நாம்?
ஆர். முத்துக்குமார் எழுதிய இந்திராவின் வாழ்க்கை வரலாறு கிழக்கு வெளியீடாக வெளிவந்துள்ளது. இந்திராவின் மீது நேரடியாகக் குற்றச்சாட்டுகளை இந்நூல் முன்வைக்கவில்லை என்றாலும், அவர் இழைத்த சில தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றன. இந்திராவின் அரசியல் வாழ்க்கையிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் ஆதிக்கம் செலுத்திய ஃபெரோஸின் ஆளுமை இப்புத்தகத்தில் வெளிப்படுகிறது.
நூலில் இருந்து ஒரு பகுதி.
1955ம் ஆண்டு. நாடாளுமன்றத்தில் ஃபெரோஸ் ஆற்றப்போகும் முதல் உரை. அதில்அவர் எடுத்துக்கொண்ட விவகாரம் காப்பீட்டுத் துறையில் நடைபெற்ற முறைகேடுகள். ராம் கிருஷ்ண டால்மியா என்ற பிரபல தொழிலதிபதிரின் நிர்வாகத்தில் இருந்த பாரத் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனியின் முறைகேடுகளை நாடாளுமன்றத்தில் வைத்து அம்பலப்படுத்தினார் ஃபெரோஸ். விவகாரம் வீரியமிக்கது என்பது தெரிந்ததும் உடனடியாக விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது.
துரித கதியில் விசாரணை நடந்தது. விளைவு, டால்மியா குற்றம் செய்திருப்பது நிருபிக்கப்பட்டது. வெற்றி. அற்புதமான வெற்றி. தன்னுடைய மாமனாருக்கு எதிராக. மனைவிக்கு எதிராக. தன்னுடைய குடும்பத்தைப் பிரிப்பவர்களுக்கு எதிராக. ஃபெரோஸின் இந்த முயற்சியால் காப்பீட்டுத் துறையில் அரசாங்கம் நுழைந்தது.
வெற்றி பெற்றது ஃபெரோஸ். ஆனாலும் இந்திராவால் அந்த வெற்றியைத் தாங்க முடியவில்லை. காரணம், ஃபெரோஸின் வெற்றி தன் தந்தைக்கு எதிரானது என்பதால். ஃபெரோஸை மேலும் வெறுக்கத் தொடங்கினார் இந்திரா.
1956ம் ஆண்டு. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி உறுப்பினராக இந்திராவைத் தேர்வு செய்வது என மூத்த தலைவர்கள் முடிவு செய்தனர். முக்கியமாக, லால் பகதூர் சாஸ்திரி. கட்சிக்குள் அதிகாரம் வாய்ந்த பதவி. ஆகவே, அதனை நியமன முறையில் அடைவதில் இந்திராவுக்கு விருப்பமில்லை.
தேர்தல் அறிவிக்கப்பட்டது. உறுப்பினர்களின் ஏகபோக ஆதரவோடு காரியக் கமிட்டி உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார் இந்திரா. இதனையடுத்து தேர்தல் பிரசாரம், கட்சி வளர்ச்சிப் பணிகள் என்று தொடர்ந்து அரசியல் நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார் இந்திரா. இதற்கு நேர்மாறாக ஃபெரோஸ் தாரகேஷ்வரி சின்ஹா, மஹ்முனா சுல்தானா, சுபத்ரா ஜோஷி என்று பல பெண்களுடன் வெளிப்படையாகப் பழக ஆரம்பித்தார்.
விஷயம் வெளியே கசிந்து அதன்மூலம் நேரு அவமானப்பட நேரிடுமே என்று ஃபெரோஸ் துளியும் கவலைப்படவில்லை. அந்த சமயத்தில் இப்படி ஒரு செய்தி. அல்லது வதந்தி.
‘இந்திராவுக்கும் மத்தாயுக்கும் ரகசிய உறவு.’
நான் எடிட் செய்த புத்தகம் 3 : ஜார்ஜ் வாஷிங்டன்
பாலு சத்யா எழுதிய ஜார்ஜ் வாஷிங்டன் நூலில் இருந்து சில பகுதிகள்.

ஒன்றுபட்ட அமெரிக்கா. பதிமூன்று மாகாணங்களும் இணைந்த, ஒருமித்த ஒரு தேசம். எவ்வளவு பெரிய கனவு!
வாஷிங்டன் இந்தக் கருத்தை பார்க்கிறவர்களிடம் எல்லாம் சொல்லிக்கொண்டிருந்தார். இந்த விஷயத்தை அமெரிக்க சுதந்தரப் போராட்டத்தில் பங்கேற்ற வீரர்களுக்கெல்லாம் கடிதம் மூலமாக அவ்வப்போது தெரிவித்துக்கொண்டும் இருந்தார். அமெரிக்க காங்கிரஸுக்கு நிறைய அதிகாரம் கொடுத்து, ஒன்றுபட்ட ஒரு அமெரிக்காவை உருவாக்குவது அவருடைய பெரிய லட்சியமாக இருந்தது.
பல மாகாணங்கள் இந்தக் கருத்தை ஏற்று, புது அமெரிக்காவை உருவாக முன்வந்தன. அதற்கான முயற்சிகளிலும் இறங்கினார்கள். அமெரிக்க காங்கிரஸுக்கு அதிகாரம் கொடுத்து, முறையாகப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்துப் பார்த்தார்கள். ஆனால் பிரச்னைதான் அதிகமானதே தவிர, சரியான தீர்வு கிடைக்கவில்லை.
1783-ல் அமெரிக்கா சுதந்தரம் பெற்றுவிட்டாலும் 1789-ல் தான் ஜார்ஜ் வாஷிங்டன் அமெரிக்காவின் முதல் ஜனாதிபதியாகப் பதவியேற்றார். இடைப்பட்ட ஆறு ஆண்டுகளில் வேறு யாரும் அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்கவில்லையா? இருந்தார்கள். ஆனால், அவர்கள் சரித்திரத்தின் பக்கங்களில் இருந்து தூக்கி அடிக்கப்பட்டார்கள். அதுதான் அமெரிக்கா.
0
ரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கி, நவீன அமெரிக்கா உருவாகக் காரணமாக இருந்தவர் ஜார்ஜ் வாஷிங்டன். புதிய அரசியலமைப்பு சட்டங்களைக் கொண்ட அமெரிக்காவின் முதல் ஜனாதிபதியாக வாஷிங்டன்தான் பொறுப்பேற்கவேண்டும் என்று எல்லோரும் விரும்பினார்கள்.
‘வாஷிங்டன் தான் ஜனாதிபதியாக வேண்டும்’ என்ற குரல் நாடு முழுக்க வலுத்துக்கொண்டே போனது. வாஷிங்டனுடன் போரில் பங்கெடுத்திருந்த கர்னல் லீ விரிவாக வாஷிங்டனுக்கு ஒரு கடிதம் எழுதினார். ‘எந்தக் காரணத்தைச் சொல்லியும் நீங்கள் ஜனாதிபதியாகிற வாய்ப்பை மறுத்துவிடாதீர்கள். குறிப்பாக, உங்களுடைய தனிப்பட்ட பண்ணை வாழ்க்கைக்காக. நாடு உங்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறது.’
1789, ஏப்ரல் 14. அமெரிக்க காங்கிரஸ், வாஷிங்டன்தான் அமெரிக்காவின் ஜனாதிபதி என்று அதிகாரபூர்வமாக அறிவித்தது. அதற்கான ஆணையை அவருக்கும் அனுப்பியது. அந்த அழைப்பை வாஷிங்டன் ஏற்றுக்கொண்டார். ஏனென்றால், அது அமெரிக்க காங்கிரஸின் அழைப்பல்ல, அமெரிக்க மக்களின் அழைப்பு.
0
தெளிவான, எளிமையான அறிமுகம். பாலு சத்யா முன்னதாக, மார்ட்டின் லூதர் கிங், ஆபிரஹாம் லிங்கன் ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகளை எழுதியுள்ளார். அமெரிக்க தலைவர்கள் வரிசையில் இது மூன்றாவது நூல்.

ஒன்றுபட்ட அமெரிக்கா. பதிமூன்று மாகாணங்களும் இணைந்த, ஒருமித்த ஒரு தேசம். எவ்வளவு பெரிய கனவு!
வாஷிங்டன் இந்தக் கருத்தை பார்க்கிறவர்களிடம் எல்லாம் சொல்லிக்கொண்டிருந்தார். இந்த விஷயத்தை அமெரிக்க சுதந்தரப் போராட்டத்தில் பங்கேற்ற வீரர்களுக்கெல்லாம் கடிதம் மூலமாக அவ்வப்போது தெரிவித்துக்கொண்டும் இருந்தார். அமெரிக்க காங்கிரஸுக்கு நிறைய அதிகாரம் கொடுத்து, ஒன்றுபட்ட ஒரு அமெரிக்காவை உருவாக்குவது அவருடைய பெரிய லட்சியமாக இருந்தது.
பல மாகாணங்கள் இந்தக் கருத்தை ஏற்று, புது அமெரிக்காவை உருவாக முன்வந்தன. அதற்கான முயற்சிகளிலும் இறங்கினார்கள். அமெரிக்க காங்கிரஸுக்கு அதிகாரம் கொடுத்து, முறையாகப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்துப் பார்த்தார்கள். ஆனால் பிரச்னைதான் அதிகமானதே தவிர, சரியான தீர்வு கிடைக்கவில்லை.
1783-ல் அமெரிக்கா சுதந்தரம் பெற்றுவிட்டாலும் 1789-ல் தான் ஜார்ஜ் வாஷிங்டன் அமெரிக்காவின் முதல் ஜனாதிபதியாகப் பதவியேற்றார். இடைப்பட்ட ஆறு ஆண்டுகளில் வேறு யாரும் அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்கவில்லையா? இருந்தார்கள். ஆனால், அவர்கள் சரித்திரத்தின் பக்கங்களில் இருந்து தூக்கி அடிக்கப்பட்டார்கள். அதுதான் அமெரிக்கா.
0
ரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கி, நவீன அமெரிக்கா உருவாகக் காரணமாக இருந்தவர் ஜார்ஜ் வாஷிங்டன். புதிய அரசியலமைப்பு சட்டங்களைக் கொண்ட அமெரிக்காவின் முதல் ஜனாதிபதியாக வாஷிங்டன்தான் பொறுப்பேற்கவேண்டும் என்று எல்லோரும் விரும்பினார்கள்.
‘வாஷிங்டன் தான் ஜனாதிபதியாக வேண்டும்’ என்ற குரல் நாடு முழுக்க வலுத்துக்கொண்டே போனது. வாஷிங்டனுடன் போரில் பங்கெடுத்திருந்த கர்னல் லீ விரிவாக வாஷிங்டனுக்கு ஒரு கடிதம் எழுதினார். ‘எந்தக் காரணத்தைச் சொல்லியும் நீங்கள் ஜனாதிபதியாகிற வாய்ப்பை மறுத்துவிடாதீர்கள். குறிப்பாக, உங்களுடைய தனிப்பட்ட பண்ணை வாழ்க்கைக்காக. நாடு உங்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறது.’
1789, ஏப்ரல் 14. அமெரிக்க காங்கிரஸ், வாஷிங்டன்தான் அமெரிக்காவின் ஜனாதிபதி என்று அதிகாரபூர்வமாக அறிவித்தது. அதற்கான ஆணையை அவருக்கும் அனுப்பியது. அந்த அழைப்பை வாஷிங்டன் ஏற்றுக்கொண்டார். ஏனென்றால், அது அமெரிக்க காங்கிரஸின் அழைப்பல்ல, அமெரிக்க மக்களின் அழைப்பு.
0
தெளிவான, எளிமையான அறிமுகம். பாலு சத்யா முன்னதாக, மார்ட்டின் லூதர் கிங், ஆபிரஹாம் லிங்கன் ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகளை எழுதியுள்ளார். அமெரிக்க தலைவர்கள் வரிசையில் இது மூன்றாவது நூல்.
அத்வானியின் ஆர்.எஸ்.எஸ்
இந்திய அரசியல்வாதிகளின் சுயசரிதைகளில் காணப்படும் சில பொதுவான அம்சங்கள் இவை. சொந்த கதை என்பதை தாண்டி பிரசாரம் தூக்கலாக இருக்கும். எடுத்த தவறான முடிவுகள் அனைத்துக்கும் சப்பைக்கட்டு காரணங்கள் அடுக்கப்பட்டிருக்கும். எதிர்க்கட்சிகள் கூர்மையாக விமரிசிக்கப்படுவார்கள். சாதனைகள் அலங்காரமாக அடுக்கப்பட்டிருக்கும். சுயவிமரிசனம் துளியும் இருக்காது. சாரே ஜஹான் சீ அச்சா நெடி தூக்கலாக இருக்கும். அத்வானியின் My Life, My Country புத்தகத்தை இன்னமும் நான் வாசிக்கவில்லை. வாசிப்பேனா என்று தெரியவில்லை.
தீவிரமான பிரசாரத்தில் இறங்கிவிட்டார் அத்வானி. ஒரு ப்ளாக் ஆரம்பித்திருக்கிறார். ரங்கநாதானந்தா என்னும் இந்துமதத் துறவி பற்றிய உரை ஒன்று இருக்கிறது. சுவாமி சுவாமி என்று புல்லரித்திருக்கிறார். ஆதி சங்கராச்சாரியாரின் நவீன கால வெர்ஷன் இவர்தானாம்.
தேர்தல் பிரசாரத்துக்காக மட்டுமல்ல மதப்பிரசாரத்துக்காகவும் இந்த வலைப்பதிவு பயன்படப்போகிறது. குவிந்திருக்கும் அத்வானிஜி ஜிந்தாபாத் கமெண்ட்ஸை மேலோட்டமாக ஓட்டிப் பார்த்தேன்.
இறுதி வரி மிகவும் பொருத்தம். ரசித்தேன். If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
தீவிரமான பிரசாரத்தில் இறங்கிவிட்டார் அத்வானி. ஒரு ப்ளாக் ஆரம்பித்திருக்கிறார். ரங்கநாதானந்தா என்னும் இந்துமதத் துறவி பற்றிய உரை ஒன்று இருக்கிறது. சுவாமி சுவாமி என்று புல்லரித்திருக்கிறார். ஆதி சங்கராச்சாரியாரின் நவீன கால வெர்ஷன் இவர்தானாம்.
தேர்தல் பிரசாரத்துக்காக மட்டுமல்ல மதப்பிரசாரத்துக்காகவும் இந்த வலைப்பதிவு பயன்படப்போகிறது. குவிந்திருக்கும் அத்வானிஜி ஜிந்தாபாத் கமெண்ட்ஸை மேலோட்டமாக ஓட்டிப் பார்த்தேன்.
இறுதி வரி மிகவும் பொருத்தம். ரசித்தேன். If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
January 10, 2009
சென்னை புத்தகக் கண்காட்சி - நாள் 3
முடிவடைவதற்கு இரண்டு மணி நேரங்களுக்கு முன்புவரை கூட்டம் இல்லை. அரங்க நிர்வாகிகள் வெளிப்படையாகவே சலித்துக்கொண்டார்கள். ப்ச், அப்துல் கலாமோ கலைஞரோ வந்திருந்தால் மீடியாவில் கவனம் பெற்றிருக்கலாம். இருவரும் வரவில்லை. மீடியா கண்டுகொள்ளமாட்டேன் என்கிறது. என்ன செய்ய?
ஆறு மணிக்கு வைரமுத்துவின் வழக்கமான rhetoric உரை. சீனா, இந்தியா. இந்த இரு தேசங்களும்தான் எதிர்காலத்தில் வல்லரசுகளாக இருக்கும் என்று அறிவித்து அரங்கத்தை அதிரவைத்தார். உலகளவிலா அல்லது ஆசியாவிலா என்று தெரியவில்லை. வல்லரசு ஆவது என்றால் என்ன? எதற்காக ஒரு நாடு வல்லரசாக வேண்டும்? வல்லரசாக இருக்கும் பெரிய பெரிய தேசங்கள் அடைந்த நன்மைகள் என்ன? இந்தியா வல்லரசாக மாறிவிட்டால் என்னென்ன மாற்றங்கள் நிகழும்?
கர்த்தர் நினைவுக்கு வந்தார். இதோ, கர்த்தர், இங்கே வந்துவிட்டார். அதோ அந்த வளைவில் முந்திவிட்டார். இதோ, இதோ. வந்துகொண்டேஇருக்கிறார். வந்தேவிட்டார். நான் நிஜமாகவே திரும்பி பார்த்திருக்கிறேன். கர்த்தருக்குப் பதிலாக வைரமுத்து அழைத்தது வல்லரசை.
தமிழர்கள் இருவர் சந்தித்துக்கொண்டால், மூன்று விஷயங்களைப் பற்றி பேசுகிறார்கள் என்றார் வைரமுத்து. திருமங்கலம் என்ன ஆகும்? (அரசியல்), வில்லு ஜெயிக்குமா? (சினிமா), கடைசியா எந்தக் கோவிலுக்குப் போயிருந்தீங்க (ஆன்மிகம்). கவனியுங்கள் நண்பர்களே, இந்த மூன்றும் கற்பனையில் கட்டமைக்கப்பட்டவை. வைரமுத்து தொடர்கிறார். இந்தியா எப்பொழுது உருப்படும் தெரியுமா? புத்தகங்களைப் பற்றி பேசும்போதுதான். கடைசியாக நீங்கள் வாசித்த புத்தகம் என்ன என்று கேளுங்கள். இங்குள்ள ஒவ்வொருவரும் புத்தகத்தின் உயிர் விளம்பரமாக மாறுங்கள்.
பொருளாதாரச் சிக்கல் தீர ஒரு வழியும் சொன்னார் வைரமுத்து. இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் அடையாள அட்டை இல்லாமல் அவதிப்படுகிறார்கள். வேலையிழந்த, வேலையில்லாத அத்தனை இளைஞர்களும் அடையாள அட்டைகளைத் தயாரிக்க முன்வரவேண்டும். அடையாள அட்டை தயாரிக்கும் ஒரு தொழிற்சாலையை அரசாங்கம் அமைத்து இவர்களுக்கு வேலை கொடுக்கவேண்டும். செய்தால், இன்னும் பத்து ஆண்டுகளுக்கு (குறைந்தபட்சமாம்) அனைவருக்கும் வேலை இருக்கும். இதற்கும் கைதட்டினார்கள். நல்லவேளையாக, ரத்த சாட்சியம் சொல்ல ஒருவரும் மேடையேறவில்லை.
இந்தியப் பிரிவினை புத்தகத்துக்கு நல்ல வரவேற்பு. அட, இந்தியா என்று ஒரு நாடு இருப்பதும் உங்களுக்குத் தெரியுமா என்றார் ஒரு வாசகர். இந்திய வரலாறு கொண்டு வருவீர்களா என்று சிலர் கேட்டார்கள். குறித்து வைத்துக்கொண்டேன். கவிஞர் வெண்ணிலா, முருகேஷ் இருவரும் வந்திருந்தார்ள். செங்கிஸ்கான், பாக் ஒரு புதிரின் சரிதம், கிறிஸ்தவ வரலாறு மூன்றும் வாங்கிசென்றார்கள்.
தான் கண்ட வேறு சில கொடுங்கனவுகளை பகிர்ந்துகொண்டார் நண்பர் ஹரன் பிரசன்னா. அதில் ஒன்று, நான் ஆஞ்சநேயர் வாழ்க்கை வரலாறு எழுதுவது. கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கீழைக்காற்று புத்தகங்கள் தனக்குப் பிடிக்கும் என்று சொன்னார். கனவல்ல, நிஜம்.
நான் வாங்கிய புத்தகங்கள். ராகுல் சாங்கிருத்யாயனின் ஐரோப்பியத் தத்துவ இயல். ஜென்னி மார்க்ஸ் எழுதிய எங்கள் ஒருநாள் குடும்ப வாழ்க்கை. கம்யூனிஸ்ட் அறிக்கையின் கதை. ஸன் யாட் ஸென் வாழ்க்கை வரலாறு (வெ. சாமிநாத சர்மா). சென்னை பல்கலைக்கழகத்தில் இருந்து இரு நூல்கள். Being and Unity in Western Philosophy by Herbert Herring. Political Justice, Legislative Reservation for Scheduled Castes and Social Change. (அம்பேத்கர் நினைவு உரைகள்). நைந்துபோன பல புத்தகங்களை மூட்டைகட்டி அடியில் போட்டுவைத்திருக்கிறார்கள். தொன்மம், மானுடவியல், அகழ்வாராய்ச்சி என்று நிறைய கண்ணில் பட்டன. மீண்டும் ஒரு முறை தேடவேண்டும்.
Indian Thought Publications-ல் இருந்து ஆர்.கே. நாராயணனின் மூன்று புத்தகங்களை செட்டாக வாங்கினார், மனைவி அனுஷா. Malgudi Days. Under the Banyan Tree & Other Stories. A Tiger for Malgudi. 250 ரூபாய். தமிழ் சரளமாக வாசிக்க வராது என்பதால், பெண் ஏன் அடிமையானாள் ஆங்கில மொழிபெயர்ப்பை அவருக்குப் பரிசளித்தேன்.
ஆறு மணிக்கு வைரமுத்துவின் வழக்கமான rhetoric உரை. சீனா, இந்தியா. இந்த இரு தேசங்களும்தான் எதிர்காலத்தில் வல்லரசுகளாக இருக்கும் என்று அறிவித்து அரங்கத்தை அதிரவைத்தார். உலகளவிலா அல்லது ஆசியாவிலா என்று தெரியவில்லை. வல்லரசு ஆவது என்றால் என்ன? எதற்காக ஒரு நாடு வல்லரசாக வேண்டும்? வல்லரசாக இருக்கும் பெரிய பெரிய தேசங்கள் அடைந்த நன்மைகள் என்ன? இந்தியா வல்லரசாக மாறிவிட்டால் என்னென்ன மாற்றங்கள் நிகழும்?
கர்த்தர் நினைவுக்கு வந்தார். இதோ, கர்த்தர், இங்கே வந்துவிட்டார். அதோ அந்த வளைவில் முந்திவிட்டார். இதோ, இதோ. வந்துகொண்டேஇருக்கிறார். வந்தேவிட்டார். நான் நிஜமாகவே திரும்பி பார்த்திருக்கிறேன். கர்த்தருக்குப் பதிலாக வைரமுத்து அழைத்தது வல்லரசை.
தமிழர்கள் இருவர் சந்தித்துக்கொண்டால், மூன்று விஷயங்களைப் பற்றி பேசுகிறார்கள் என்றார் வைரமுத்து. திருமங்கலம் என்ன ஆகும்? (அரசியல்), வில்லு ஜெயிக்குமா? (சினிமா), கடைசியா எந்தக் கோவிலுக்குப் போயிருந்தீங்க (ஆன்மிகம்). கவனியுங்கள் நண்பர்களே, இந்த மூன்றும் கற்பனையில் கட்டமைக்கப்பட்டவை. வைரமுத்து தொடர்கிறார். இந்தியா எப்பொழுது உருப்படும் தெரியுமா? புத்தகங்களைப் பற்றி பேசும்போதுதான். கடைசியாக நீங்கள் வாசித்த புத்தகம் என்ன என்று கேளுங்கள். இங்குள்ள ஒவ்வொருவரும் புத்தகத்தின் உயிர் விளம்பரமாக மாறுங்கள்.
பொருளாதாரச் சிக்கல் தீர ஒரு வழியும் சொன்னார் வைரமுத்து. இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் அடையாள அட்டை இல்லாமல் அவதிப்படுகிறார்கள். வேலையிழந்த, வேலையில்லாத அத்தனை இளைஞர்களும் அடையாள அட்டைகளைத் தயாரிக்க முன்வரவேண்டும். அடையாள அட்டை தயாரிக்கும் ஒரு தொழிற்சாலையை அரசாங்கம் அமைத்து இவர்களுக்கு வேலை கொடுக்கவேண்டும். செய்தால், இன்னும் பத்து ஆண்டுகளுக்கு (குறைந்தபட்சமாம்) அனைவருக்கும் வேலை இருக்கும். இதற்கும் கைதட்டினார்கள். நல்லவேளையாக, ரத்த சாட்சியம் சொல்ல ஒருவரும் மேடையேறவில்லை.
இந்தியப் பிரிவினை புத்தகத்துக்கு நல்ல வரவேற்பு. அட, இந்தியா என்று ஒரு நாடு இருப்பதும் உங்களுக்குத் தெரியுமா என்றார் ஒரு வாசகர். இந்திய வரலாறு கொண்டு வருவீர்களா என்று சிலர் கேட்டார்கள். குறித்து வைத்துக்கொண்டேன். கவிஞர் வெண்ணிலா, முருகேஷ் இருவரும் வந்திருந்தார்ள். செங்கிஸ்கான், பாக் ஒரு புதிரின் சரிதம், கிறிஸ்தவ வரலாறு மூன்றும் வாங்கிசென்றார்கள்.
தான் கண்ட வேறு சில கொடுங்கனவுகளை பகிர்ந்துகொண்டார் நண்பர் ஹரன் பிரசன்னா. அதில் ஒன்று, நான் ஆஞ்சநேயர் வாழ்க்கை வரலாறு எழுதுவது. கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கீழைக்காற்று புத்தகங்கள் தனக்குப் பிடிக்கும் என்று சொன்னார். கனவல்ல, நிஜம்.
நான் வாங்கிய புத்தகங்கள். ராகுல் சாங்கிருத்யாயனின் ஐரோப்பியத் தத்துவ இயல். ஜென்னி மார்க்ஸ் எழுதிய எங்கள் ஒருநாள் குடும்ப வாழ்க்கை. கம்யூனிஸ்ட் அறிக்கையின் கதை. ஸன் யாட் ஸென் வாழ்க்கை வரலாறு (வெ. சாமிநாத சர்மா). சென்னை பல்கலைக்கழகத்தில் இருந்து இரு நூல்கள். Being and Unity in Western Philosophy by Herbert Herring. Political Justice, Legislative Reservation for Scheduled Castes and Social Change. (அம்பேத்கர் நினைவு உரைகள்). நைந்துபோன பல புத்தகங்களை மூட்டைகட்டி அடியில் போட்டுவைத்திருக்கிறார்கள். தொன்மம், மானுடவியல், அகழ்வாராய்ச்சி என்று நிறைய கண்ணில் பட்டன. மீண்டும் ஒரு முறை தேடவேண்டும்.
Indian Thought Publications-ல் இருந்து ஆர்.கே. நாராயணனின் மூன்று புத்தகங்களை செட்டாக வாங்கினார், மனைவி அனுஷா. Malgudi Days. Under the Banyan Tree & Other Stories. A Tiger for Malgudi. 250 ரூபாய். தமிழ் சரளமாக வாசிக்க வராது என்பதால், பெண் ஏன் அடிமையானாள் ஆங்கில மொழிபெயர்ப்பை அவருக்குப் பரிசளித்தேன்.
January 9, 2009
நான் எடிட் செய்த புத்தகம் 2 : இருளர்கள்
இருளர்கள் புத்தகத்தை எடிட் செய்ய ஆரம்பிப்பதற்கு முன்னால் நான் படித்த புத்தகம், ஆ. சிவசுப்பிரமணியன் எழுதிய மந்திரமும் சடங்குகளும். (சமபந்தி உணவு முறை பற்றி இவர் எழுதியிருந்த மற்றொரு புத்தகத்தை முன்னர் வாசித்திருக்கிறேன்). புராதனச் சடங்குகள் பற்றியும், மந்திர வைத்தியம் பற்றியும் பண்டைய இனக்குழுக்களின் விசித்திரமான நம்பிக்கை முறைகள் பற்றியும் இந்தப் புத்தகம் விரிவாகப் பேசுகிறது.
சமயம் என்பது என்ன? ஒரு விருப்பத்தை நிறைவேற்ற, வேண்டுதலையும் வழிபாட்டையும் அடிப்டையாகக் கொண்டது சமயம். மந்திரம்? பாவனைச் செயல்களையும் (Mimetic acts) கட்டளையிடுதலையும் அடிப்படையாகக் கொண்டது மந்திரம். மந்திரம் சமயத்துடன் இணையும்போது, சடங்குகள் உருவாகின்றன. இந்தச் சடங்குகளை, மந்திரச் சமயச் சடங்குகள் (Magico-religious rites) என்று மானுடவியலாளர் அழைக்கிறார்கள். புராதனச் சமுதாயத்தில் நிலவிய கூட்டு வாழ்க்கையின் எச்சமாகவும் இந்த மந்திரச் சடங்குகளில் சில அமைந்துள்ளன.
ஆவிகள் பற்றியும் இந்தப் புத்தகம் பேசுகிறது. குழந்தை தரையில் விழுந்துவிட்டால், இரு இரு இந்தத் தரையை அடித்துவிடுகிறேன் அழாதே என்று சமாதானம் செய்கிறோம் அல்லவா? இந்தப் பழக்கத்தை இனக்குழுக்களிடம் இருந்தே நாம் பெற்றிருக்கிறோம். தரையில் மறைந்திருக்கும் தீய ஆவியே குழந்தையைத் தள்ளிவிட்டிருக்கவேண்டும். தரையை அடிப்பதன் மூலம் தள்ளிவிட்ட ஆவியை துரத்திவிடலாம் என்பது அவர்களது நம்பிக்கை. விரைவாக பாய்ந்து செல்லும் ஆறு அத்தனை அசுத்தங்களையும் அடித்துச்சென்றுவிடுவதைக் கண்ட இனக்குழு மக்கள், இது போன்ற ஆறுகளில் குளித்தால் நாம் செய்த பாவமும் அடித்துச் செல்லப்பட்டுவிடும் என்று நம்பியிருக்கிறார்கள். புனித ஆறு இவ்வாறு தோன்றியது.
இருளர்களுக்கு வருகிறேன். இருளர்களைப் பற்றி நாம் ஏன் வாசிக்கவேண்டும்? ஏனென்றால் இவர்களை அறிந்துகொள்வதன் மூலம் நாம் நம் வேர்களை அறிந்துகொள்கிறோம். நம் வேர்கள் என்றால் மனித குலத்தின் வேர்கள். பழங்குடி இனங்களின் வாழ்க்கை முறையில், நம்பிக்கையில், வழிபாடு முறையில், சடங்குகளில், பல நுட்பமான கூறுகள் ஒளிந்துள்ளன.

நான் மிகவும் ரசித்து எடிட் செய்த நூல் இது. கிட்டத்தட்ட ஒவ்வொரு பக்கத்திலும் உள்ள ஒவ்வொரு வரியும் ஒரு புதிய செய்தியைச் சொல்கிறது. விரிவான ஆய்வுகளை உள்ளடக்கிய நூல் என்றாலும், பொதுவான ஆய்வாளர்கள் பயன்படுத்தும் கொட்டாவி மொழி இதில் இல்லை. புத்தகப் பிரதிகளை மட்டும் நம்பியிராமல், இருளர்களின் குடியிருப்புகளுக்கு நேரில் சென்று, பேசி, தகவல்கள் திரட்டி, சரி பார்த்து, ஒப்பிட்டு இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார் குணசேகரன்.
ஆஸ்திரேலிய பழங்குடி இனங்கள் பற்றி Bruce Chatwin எழுதிய The Songlines புத்தகம் நினைவுக்கு வருகிறது. Peter Matthiessen எழுதிய Snow Leopard புத்தகமும். இந்தப் புத்தகத்தை என்னிடம் இருந்து வாங்கிச் சென்ற தோழி, இன்னமும் அதைத் திருப்பித் தரவில்லை.
அட, இப்போதுதான் நினைவுக்கு வருகிறது. மந்திரமும் சடங்குகளும் புத்தகத்தை குணசேகரிடம் திருப்பிக்கொடுக்க வேண்டுமே!
சமயம் என்பது என்ன? ஒரு விருப்பத்தை நிறைவேற்ற, வேண்டுதலையும் வழிபாட்டையும் அடிப்டையாகக் கொண்டது சமயம். மந்திரம்? பாவனைச் செயல்களையும் (Mimetic acts) கட்டளையிடுதலையும் அடிப்படையாகக் கொண்டது மந்திரம். மந்திரம் சமயத்துடன் இணையும்போது, சடங்குகள் உருவாகின்றன. இந்தச் சடங்குகளை, மந்திரச் சமயச் சடங்குகள் (Magico-religious rites) என்று மானுடவியலாளர் அழைக்கிறார்கள். புராதனச் சமுதாயத்தில் நிலவிய கூட்டு வாழ்க்கையின் எச்சமாகவும் இந்த மந்திரச் சடங்குகளில் சில அமைந்துள்ளன.
ஆவிகள் பற்றியும் இந்தப் புத்தகம் பேசுகிறது. குழந்தை தரையில் விழுந்துவிட்டால், இரு இரு இந்தத் தரையை அடித்துவிடுகிறேன் அழாதே என்று சமாதானம் செய்கிறோம் அல்லவா? இந்தப் பழக்கத்தை இனக்குழுக்களிடம் இருந்தே நாம் பெற்றிருக்கிறோம். தரையில் மறைந்திருக்கும் தீய ஆவியே குழந்தையைத் தள்ளிவிட்டிருக்கவேண்டும். தரையை அடிப்பதன் மூலம் தள்ளிவிட்ட ஆவியை துரத்திவிடலாம் என்பது அவர்களது நம்பிக்கை. விரைவாக பாய்ந்து செல்லும் ஆறு அத்தனை அசுத்தங்களையும் அடித்துச்சென்றுவிடுவதைக் கண்ட இனக்குழு மக்கள், இது போன்ற ஆறுகளில் குளித்தால் நாம் செய்த பாவமும் அடித்துச் செல்லப்பட்டுவிடும் என்று நம்பியிருக்கிறார்கள். புனித ஆறு இவ்வாறு தோன்றியது.
இருளர்களுக்கு வருகிறேன். இருளர்களைப் பற்றி நாம் ஏன் வாசிக்கவேண்டும்? ஏனென்றால் இவர்களை அறிந்துகொள்வதன் மூலம் நாம் நம் வேர்களை அறிந்துகொள்கிறோம். நம் வேர்கள் என்றால் மனித குலத்தின் வேர்கள். பழங்குடி இனங்களின் வாழ்க்கை முறையில், நம்பிக்கையில், வழிபாடு முறையில், சடங்குகளில், பல நுட்பமான கூறுகள் ஒளிந்துள்ளன.

நான் மிகவும் ரசித்து எடிட் செய்த நூல் இது. கிட்டத்தட்ட ஒவ்வொரு பக்கத்திலும் உள்ள ஒவ்வொரு வரியும் ஒரு புதிய செய்தியைச் சொல்கிறது. விரிவான ஆய்வுகளை உள்ளடக்கிய நூல் என்றாலும், பொதுவான ஆய்வாளர்கள் பயன்படுத்தும் கொட்டாவி மொழி இதில் இல்லை. புத்தகப் பிரதிகளை மட்டும் நம்பியிராமல், இருளர்களின் குடியிருப்புகளுக்கு நேரில் சென்று, பேசி, தகவல்கள் திரட்டி, சரி பார்த்து, ஒப்பிட்டு இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார் குணசேகரன்.
ஆஸ்திரேலிய பழங்குடி இனங்கள் பற்றி Bruce Chatwin எழுதிய The Songlines புத்தகம் நினைவுக்கு வருகிறது. Peter Matthiessen எழுதிய Snow Leopard புத்தகமும். இந்தப் புத்தகத்தை என்னிடம் இருந்து வாங்கிச் சென்ற தோழி, இன்னமும் அதைத் திருப்பித் தரவில்லை.
அட, இப்போதுதான் நினைவுக்கு வருகிறது. மந்திரமும் சடங்குகளும் புத்தகத்தை குணசேகரிடம் திருப்பிக்கொடுக்க வேண்டுமே!
நான் எடிட் செய்த புத்தகம் 1 : பெரியார்
இளைஞர்களுக்குப் பெரியார் அறிவுரை என்னும் சிறிய பிரசுரத்தை சமீபத்தில் எடுத்துப் படித்தேன். பெரியார் சுயமரியாதைப் பிரசாரர நிறுவன வெளியீடு. ஈரோடு திராவிடர் மாணவர் கழகத்தின் சார்பாக பெரியார் ஆற்றிய உரை ஒன்று இதில் உள்ளது. உங்கள் படிப்புக்கு லட்சியமே இல்லை என்று ஆரம்பிக்கிறார் பெரியார். படித்தவர்களுக்கு அறிவு விருத்தியாகிறதா? இப்படிப்பினால் ஏற்படும் நிச்சயமான பலன் என்ன? எந்த துறையில் படிக்கிறார்களோ அந்தத் துறை பற்றி மாணவர்கள் அறிந்து வைத்திருக்கிறார்களா?
'சரித்திரம் படித்தவன் இராமாயண, பாரதம் முதலிய புராணக் கதையும், சரித்திரத்தில் சேர்ந்துப் படித்து இராமனும், பரதனும் இந்த நாட்டை ஆண்டார்கள் என்றும், அது இன்ன காலம் என்றும், இந்த நாட்டுக்கு பாரத தேசம் என்பது பெயர் என்றும் கருதிக்கொண்டு அனுபவத்தில் அதற்கேற்ற வண்ணம் நடந்து பாரதமாதாவை வணங்கிக்கொண்டு திரிகிறான். நிஜமாக நடந்த சரித்திர உண்மைகள், நிஜமான போர்கள், நபர்கள், அதன் காலங்கள் ஆகியவை சரித்திரம் படித்தவர்கள் என்பவர்களுக்குச் சரியாகத் தெரிவதில்லை. நடவாததும், நடந்ததாக நம்ப முடியாததும் அதற்கும் காலம் நிர்ணயிக்க முடியாததுமான அறிவுக்குப் பொருந்தாத காரியங்களுக்கு அதிக விவரம் தெரிகிறது. ஆனால், நடந்தவைகளுக்கு சரியான விவரம் தெரியவில்லை. சேர, சோழ, பாண்டியர், நாயக்கர் ஆகியவர்களும் அவர்களது வாரிசு, அண்ணன் தம்பிமார்களும், மனைவி மக்களும் ஆண்ட நாட்டெல்லைகளும், முறைகளும், முடிவுகளும், சரித்திரம் படித்த 100-க்கு 90 மாணவர்களுக்கு விவரம் சொல்லத் தெரியாது. தசரதனுக்கும், ராமனுக்கும், கிருஷ்ணனுக்கும், பாண்டவருக்கும், துரியோதனாதிகளுக்கும், இரணியனுக்கும், பலிச்சக்ரவர்த்திக்கும், மனு நீதி கண்ட சோழனுக்கும், அண்ணன் தம்பிமார்கள், மனைவி, மக்கள், அவர்கள் கணவர்கள் இவ்வளவு என்று 100-க்கு 90 மாணவர்களுக்குத் தெரியும்.'
பெரியார் இன்னமும் அனைவரிடமும் போய்ச்சேரவில்லை. கண்மூடித்தனமாக எதிர்க்கிறார்கள். அல்லது, இவரே கடவுள் என்று வழிபடுகிறார்கள். பெரியாருடைய எழுத்துகள் இன்னமும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படவில்லை என்பது தமிழ் அறியாத அனைவருக்கும் ஏற்பட்ட இழப்பு. இப்படி ஒரு இழப்பு ஏற்பட்டிருப்பதே ஒருவருக்கும் தெரியாது என்பது சோகம்.
தமிழில் மட்டும் என்ன வாழ்ந்தது? பெரியாரின் எழுத்துகளும் பேச்சுகளும் சீராகத் தொகுக்கப்படவில்லை. பெரியாரை ஒரு மத எதிர்ப்பாளராகவும், பார்ப்பன எதிர்பபாளராக மட்டுமே பெரும்பாலானோர் அறிந்து வைத்திருக்கிறார்கள். பெண்கள் பற்றியும் கற்பு பற்றியும் மொழி பற்றியும் தேசியம் பற்றியும் அறிவியல் பற்றியும் பெரியார் கொண்டிருக்கும் கருத்துகள் புரட்சிகரமானவை. பரவலான மக்கள் கவனத்துக்கு இன்னமும் இந்தக் கருத்துகள் சென்றடையவில்லை.
வாழ்க்கை வரலாறு என்று தேடிப்போனாலும் நமக்குக் கிடைப்பவை சொற்பமான புத்தகங்கள்தாம். சாமி சிதம்பரனார், கவிஞர் கருணானந்தம், கி. வீரமணி ஆகியோரின் வரலாறு பெரியாரின் முழுமையான வாழ்க்கையை சித்தரிக்கவில்லை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு கட்டத்தில் நிறைவடைந்துவிடுகிறது. கவிஞர் கருணானந்தத்தின் விரிவான புத்தகத்தில், பெரியார் தொடர்பான ஆவணங்களும், நிறைய மேற்கோள்களும் உள்ளன. பாராட்டப்படவேண்டிய தொகுப்பு. பெரியார் குறித்த எஸ்.வி. ராஜதுரையின் திறனாய்வு நூல்கள் முக்கியமானவை.
கிழக்கில் பெரியார் வாழ்க்கை வரலாறு ஏன் இன்னமும் வெளிவரவில்லை என்று எங்களை பலரும் கேட்டு வந்திருக்கிறார்கள். இதோ! ஆர். முத்துக்குமார் எழுதிய பெரியார் புத்தகத்தை இந்தப் புத்தகக் கண்காட்சியில் கிழக்கு அறிமுகம் செய்துவைக்கிறது. இன்றோ நாளையோ அரங்கில் கிடைக்கும். வாசித்துவிட்டு கருத்துச் சொல்லுங்கள். தெரிந்துகொள்வதற்கும், ரசிப்பதற்கும், விவாதிப்பதற்கும், முரண்படுவதற்கும் ஏராளமான விஷயங்கள் உள்ளன.

விவரிக்கும்போது பெரியார் பற்றிய சில முரண்பாடுகளை முத்துக்குமார் தொட்டுச்செல்கிறார். என்னைப் பொறுத்தவரை, பெரியார் பற்றிய விமரிசனங்களில், முரண்பாடுகளில் பிரதானமானதும் பொருட்படுத்தக்கூடியதுமான ஒன்று, மேல்ஜாதியினரின் ஆதிக்கம் பற்றிய அவரது சித்தாந்தம். ம.க.இ.க.வின் அணுகுமுறையை இந்த விஷயத்தில் நான் ஏற்றுக்கொள்கிறேன். பார்ப்பனர்களை எதிர்த்த அளவுக்கு பெரியார் பிற ஆதிக்க ஜாதியினரை எதிர்க்கவில்லை. பிற்படுத்தப்பட்ட வகுப்புகளிலேயே, ஆண்டான் அடிமை மனோபாவம் நீடிக்கிறது. இன்றுவரையிலும். நான் பிற்படுத்தப்பட்டவன்தான். ஆனால், என்னைவிட நீ பிற்படுத்தப்பட்டவன். நான் பார்ப்பனரைவிட ஒரு படி தாழ்ந்தவன். நீ, என்னைவிட ஒரு படி கீழே.
சமூகத்தைத் திருத்த நிலச்சீர்திருத்தத்தில் இருந்து ஆரம்பிக்கலாம் என்றார்கள் கம்யூனிஸ்ட்டுகள். வேண்டாம் முதலில் மதத்தையும் ஜாதியையும் களைவோம் என்றார் பெரியார். இந்த ஒரு புள்ளியில் இருவரும் வேறுபடுகிறார்கள்.
'சரித்திரம் படித்தவன் இராமாயண, பாரதம் முதலிய புராணக் கதையும், சரித்திரத்தில் சேர்ந்துப் படித்து இராமனும், பரதனும் இந்த நாட்டை ஆண்டார்கள் என்றும், அது இன்ன காலம் என்றும், இந்த நாட்டுக்கு பாரத தேசம் என்பது பெயர் என்றும் கருதிக்கொண்டு அனுபவத்தில் அதற்கேற்ற வண்ணம் நடந்து பாரதமாதாவை வணங்கிக்கொண்டு திரிகிறான். நிஜமாக நடந்த சரித்திர உண்மைகள், நிஜமான போர்கள், நபர்கள், அதன் காலங்கள் ஆகியவை சரித்திரம் படித்தவர்கள் என்பவர்களுக்குச் சரியாகத் தெரிவதில்லை. நடவாததும், நடந்ததாக நம்ப முடியாததும் அதற்கும் காலம் நிர்ணயிக்க முடியாததுமான அறிவுக்குப் பொருந்தாத காரியங்களுக்கு அதிக விவரம் தெரிகிறது. ஆனால், நடந்தவைகளுக்கு சரியான விவரம் தெரியவில்லை. சேர, சோழ, பாண்டியர், நாயக்கர் ஆகியவர்களும் அவர்களது வாரிசு, அண்ணன் தம்பிமார்களும், மனைவி மக்களும் ஆண்ட நாட்டெல்லைகளும், முறைகளும், முடிவுகளும், சரித்திரம் படித்த 100-க்கு 90 மாணவர்களுக்கு விவரம் சொல்லத் தெரியாது. தசரதனுக்கும், ராமனுக்கும், கிருஷ்ணனுக்கும், பாண்டவருக்கும், துரியோதனாதிகளுக்கும், இரணியனுக்கும், பலிச்சக்ரவர்த்திக்கும், மனு நீதி கண்ட சோழனுக்கும், அண்ணன் தம்பிமார்கள், மனைவி, மக்கள், அவர்கள் கணவர்கள் இவ்வளவு என்று 100-க்கு 90 மாணவர்களுக்குத் தெரியும்.'
பெரியார் இன்னமும் அனைவரிடமும் போய்ச்சேரவில்லை. கண்மூடித்தனமாக எதிர்க்கிறார்கள். அல்லது, இவரே கடவுள் என்று வழிபடுகிறார்கள். பெரியாருடைய எழுத்துகள் இன்னமும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படவில்லை என்பது தமிழ் அறியாத அனைவருக்கும் ஏற்பட்ட இழப்பு. இப்படி ஒரு இழப்பு ஏற்பட்டிருப்பதே ஒருவருக்கும் தெரியாது என்பது சோகம்.
தமிழில் மட்டும் என்ன வாழ்ந்தது? பெரியாரின் எழுத்துகளும் பேச்சுகளும் சீராகத் தொகுக்கப்படவில்லை. பெரியாரை ஒரு மத எதிர்ப்பாளராகவும், பார்ப்பன எதிர்பபாளராக மட்டுமே பெரும்பாலானோர் அறிந்து வைத்திருக்கிறார்கள். பெண்கள் பற்றியும் கற்பு பற்றியும் மொழி பற்றியும் தேசியம் பற்றியும் அறிவியல் பற்றியும் பெரியார் கொண்டிருக்கும் கருத்துகள் புரட்சிகரமானவை. பரவலான மக்கள் கவனத்துக்கு இன்னமும் இந்தக் கருத்துகள் சென்றடையவில்லை.
வாழ்க்கை வரலாறு என்று தேடிப்போனாலும் நமக்குக் கிடைப்பவை சொற்பமான புத்தகங்கள்தாம். சாமி சிதம்பரனார், கவிஞர் கருணானந்தம், கி. வீரமணி ஆகியோரின் வரலாறு பெரியாரின் முழுமையான வாழ்க்கையை சித்தரிக்கவில்லை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு கட்டத்தில் நிறைவடைந்துவிடுகிறது. கவிஞர் கருணானந்தத்தின் விரிவான புத்தகத்தில், பெரியார் தொடர்பான ஆவணங்களும், நிறைய மேற்கோள்களும் உள்ளன. பாராட்டப்படவேண்டிய தொகுப்பு. பெரியார் குறித்த எஸ்.வி. ராஜதுரையின் திறனாய்வு நூல்கள் முக்கியமானவை.
கிழக்கில் பெரியார் வாழ்க்கை வரலாறு ஏன் இன்னமும் வெளிவரவில்லை என்று எங்களை பலரும் கேட்டு வந்திருக்கிறார்கள். இதோ! ஆர். முத்துக்குமார் எழுதிய பெரியார் புத்தகத்தை இந்தப் புத்தகக் கண்காட்சியில் கிழக்கு அறிமுகம் செய்துவைக்கிறது. இன்றோ நாளையோ அரங்கில் கிடைக்கும். வாசித்துவிட்டு கருத்துச் சொல்லுங்கள். தெரிந்துகொள்வதற்கும், ரசிப்பதற்கும், விவாதிப்பதற்கும், முரண்படுவதற்கும் ஏராளமான விஷயங்கள் உள்ளன.

விவரிக்கும்போது பெரியார் பற்றிய சில முரண்பாடுகளை முத்துக்குமார் தொட்டுச்செல்கிறார். என்னைப் பொறுத்தவரை, பெரியார் பற்றிய விமரிசனங்களில், முரண்பாடுகளில் பிரதானமானதும் பொருட்படுத்தக்கூடியதுமான ஒன்று, மேல்ஜாதியினரின் ஆதிக்கம் பற்றிய அவரது சித்தாந்தம். ம.க.இ.க.வின் அணுகுமுறையை இந்த விஷயத்தில் நான் ஏற்றுக்கொள்கிறேன். பார்ப்பனர்களை எதிர்த்த அளவுக்கு பெரியார் பிற ஆதிக்க ஜாதியினரை எதிர்க்கவில்லை. பிற்படுத்தப்பட்ட வகுப்புகளிலேயே, ஆண்டான் அடிமை மனோபாவம் நீடிக்கிறது. இன்றுவரையிலும். நான் பிற்படுத்தப்பட்டவன்தான். ஆனால், என்னைவிட நீ பிற்படுத்தப்பட்டவன். நான் பார்ப்பனரைவிட ஒரு படி தாழ்ந்தவன். நீ, என்னைவிட ஒரு படி கீழே.
சமூகத்தைத் திருத்த நிலச்சீர்திருத்தத்தில் இருந்து ஆரம்பிக்கலாம் என்றார்கள் கம்யூனிஸ்ட்டுகள். வேண்டாம் முதலில் மதத்தையும் ஜாதியையும் களைவோம் என்றார் பெரியார். இந்த ஒரு புள்ளியில் இருவரும் வேறுபடுகிறார்கள்.
நான் வாங்கிய புத்தகங்கள்
கடந்த இரு தினங்களில், சென்னை புத்தகக் கண்காட்சியில் நான் வாங்கிய புத்தகங்களின் பட்டியல்.
1) முதலாளியமும் அதன் பிறகும். ஜார்ஜ் தாம்ஸன் எழுதியது. தமிழில் மொழிபெயர்த்திருப்பவர் எஸ்.வி. ராஜதுரை. விடியல் வெளியீடு. ராஜதுரை மொழிபெயர்த்த தாம்ஸனின் மற்றொரு புத்தகத்தை (மார்க்ஸ் முதல் மா சே துங் வரை) சென்ற புத்தகக் கண்காட்சியில் வாங்கினேன். பாதி படித்திருக்கிறேன். மார்க்ஸியத்தின் அடிப்படைகளை விளக்கும் ஜார்ஜ் தாம்ஸனின் முக்கிய நூல்கள் இவை. இந்த வரிசையில் இன்னொரு புத்தகமும் உண்டு. மனித சாரம். இது இன்னும் என் கண்ணில் படவில்லை.
2) விஞ்ஞான லோகாயதவாதம். ராகுல் சாங்கிருத்யாயன் எழுதியது. ராகுல்ஜியின் பெரும்பாலான நூல்கள் நியூ செஞ்சுரியில் கிடைக்கின்றன. அவசியம் வாசிக்கவேண்டிய இவரது தத்துவ நூல்கள் : இந்துத் தத்துவ இயல், பௌத்தத் தத்துவ இயல், இஸ்லாமியத் தத்துவ இயல் மற்றும் ஐரோப்பியத் தத்துவ இயல். வோல்கா முதல் கங்கை வரை புத்தகத்தை மீண்டும் ஒரு முறை படிக்கப்போகிறேன்.
3) மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள். நீண்ட காலமாகச் சேகரித்துக்கொண்டிருக்கிறேன். இந்த முறை, முதல் தொகுதி கிடைத்தது. இன்னமும் கிடைக்காதவை, தொகுதி 8 மற்று்ம் 11. இரண்டுமே அச்சில் இல்லை. லெனின் நூல் திரட்டு 3,4 கிடைத்தது. கிடைக்காதவை 5 மற்றும் 6.
4) About Lenin by Progress Publishers. பழைய நூல். அளவில் பெரியது. 275 பக்கங்கள். விலை ரூ. 25. சோவியத் இலக்கியங்களில் லெனின் எவ்வாறு பதிவுசெய்யப்பட்டிருக்கிறார் என்பதை தெரிந்துகொள்ள உதவும் நூல். இத்துடன் சேர்த்து, அநேகமாக, முன்னேற்றப் பதிப்பகம், ராதுகா வெளியீடு வெளியிட்ட அத்தனை ரஷ்ய மொழிபெயர்ப்புப் புத்தகங்களையும் வாங்கிவிட்டேன் என்று நினைக்கிறேன்.
5) சில பிரசுரங்கள் மற்றும் குறுநூல்கள். கீழைக்காற்றில் இருந்து : 1) காஷ்மீர் யாருக்குச் சொந்தம்? 2) வரலாறு திரும்பினால் ஓலமா? டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் நிகழ்ந்த மாணவர் மோதல் குறித்து ஓர் எதிர்வினை 3) யாருக்கு இந்த ஆயுதம்? அரிமாவளவன். செஞ்சோலைத் தாக்குதல் பற்றிய வெளியீடு 4) தமிழீழம் இறையாண்மை இந்தியப் புரட்டு. ஞாலன் சுப்பிரமணியன் என்பவர் எழுதியது. சென்னை புக்ஸ் வெளியீட்டில் சோசலிஸமும் முதலாளித்துவமும். எழுதியிருப்பவர் பி.ஆர். பரமேஸ்வரன். பழைய பிரதி.
6) சென்னை பல்கலைக்கழகம் அரங்கில் இருந்து இரண்டு நூல்கள். 1) Religious Pluralism and the World Religions by Harold G. Coward 2) Studies in Social Philosophy by Dr. S. Gopalan. பலமாகப் புரட்டினால் உதிர்ந்துவிடும் நிலையில் இருக்கின்றன இரண்டும். சென்ற வருடம் வாங்கிய ஆங்கிலம் தமிழ்ச் சொற்களஞ்சியம், பக்கம் பக்கமாக, பொடிப்பொடியாக உதிர்ந்து விழுந்துகொண்டிருக்கிறது.
1) முதலாளியமும் அதன் பிறகும். ஜார்ஜ் தாம்ஸன் எழுதியது. தமிழில் மொழிபெயர்த்திருப்பவர் எஸ்.வி. ராஜதுரை. விடியல் வெளியீடு. ராஜதுரை மொழிபெயர்த்த தாம்ஸனின் மற்றொரு புத்தகத்தை (மார்க்ஸ் முதல் மா சே துங் வரை) சென்ற புத்தகக் கண்காட்சியில் வாங்கினேன். பாதி படித்திருக்கிறேன். மார்க்ஸியத்தின் அடிப்படைகளை விளக்கும் ஜார்ஜ் தாம்ஸனின் முக்கிய நூல்கள் இவை. இந்த வரிசையில் இன்னொரு புத்தகமும் உண்டு. மனித சாரம். இது இன்னும் என் கண்ணில் படவில்லை.
2) விஞ்ஞான லோகாயதவாதம். ராகுல் சாங்கிருத்யாயன் எழுதியது. ராகுல்ஜியின் பெரும்பாலான நூல்கள் நியூ செஞ்சுரியில் கிடைக்கின்றன. அவசியம் வாசிக்கவேண்டிய இவரது தத்துவ நூல்கள் : இந்துத் தத்துவ இயல், பௌத்தத் தத்துவ இயல், இஸ்லாமியத் தத்துவ இயல் மற்றும் ஐரோப்பியத் தத்துவ இயல். வோல்கா முதல் கங்கை வரை புத்தகத்தை மீண்டும் ஒரு முறை படிக்கப்போகிறேன்.
3) மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள். நீண்ட காலமாகச் சேகரித்துக்கொண்டிருக்கிறேன். இந்த முறை, முதல் தொகுதி கிடைத்தது. இன்னமும் கிடைக்காதவை, தொகுதி 8 மற்று்ம் 11. இரண்டுமே அச்சில் இல்லை. லெனின் நூல் திரட்டு 3,4 கிடைத்தது. கிடைக்காதவை 5 மற்றும் 6.
4) About Lenin by Progress Publishers. பழைய நூல். அளவில் பெரியது. 275 பக்கங்கள். விலை ரூ. 25. சோவியத் இலக்கியங்களில் லெனின் எவ்வாறு பதிவுசெய்யப்பட்டிருக்கிறார் என்பதை தெரிந்துகொள்ள உதவும் நூல். இத்துடன் சேர்த்து, அநேகமாக, முன்னேற்றப் பதிப்பகம், ராதுகா வெளியீடு வெளியிட்ட அத்தனை ரஷ்ய மொழிபெயர்ப்புப் புத்தகங்களையும் வாங்கிவிட்டேன் என்று நினைக்கிறேன்.
5) சில பிரசுரங்கள் மற்றும் குறுநூல்கள். கீழைக்காற்றில் இருந்து : 1) காஷ்மீர் யாருக்குச் சொந்தம்? 2) வரலாறு திரும்பினால் ஓலமா? டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் நிகழ்ந்த மாணவர் மோதல் குறித்து ஓர் எதிர்வினை 3) யாருக்கு இந்த ஆயுதம்? அரிமாவளவன். செஞ்சோலைத் தாக்குதல் பற்றிய வெளியீடு 4) தமிழீழம் இறையாண்மை இந்தியப் புரட்டு. ஞாலன் சுப்பிரமணியன் என்பவர் எழுதியது. சென்னை புக்ஸ் வெளியீட்டில் சோசலிஸமும் முதலாளித்துவமும். எழுதியிருப்பவர் பி.ஆர். பரமேஸ்வரன். பழைய பிரதி.
6) சென்னை பல்கலைக்கழகம் அரங்கில் இருந்து இரண்டு நூல்கள். 1) Religious Pluralism and the World Religions by Harold G. Coward 2) Studies in Social Philosophy by Dr. S. Gopalan. பலமாகப் புரட்டினால் உதிர்ந்துவிடும் நிலையில் இருக்கின்றன இரண்டும். சென்ற வருடம் வாங்கிய ஆங்கிலம் தமிழ்ச் சொற்களஞ்சியம், பக்கம் பக்கமாக, பொடிப்பொடியாக உதிர்ந்து விழுந்துகொண்டிருக்கிறது.
இந்தியப் பிரிவினை : உதிரத்தால் ஒரு கோடு
இதுதான் புத்தகத்தின் தலைப்பு. இன்னும் ஓரிரு தினங்களுக்குள் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு வந்து சேர்ந்துவிடும். இந்த வருடம் நான் எழுதிய புத்தகம்.

இந்தப் புத்தகம் உருவான விதம் குறித்து தனி பதிவு ஒன்று எழுத திட்டம். இப்போதைக்கு, புத்தகத்தில் இருந்து ஒரு பகுதி.
பிரிவினை நடந்து அறுபது ஆண்டுகள் கழிந்ததையடுத்து பிபிசி சிலரைப் பேட்டியெடுத்தது.
நார்விச்சில் குடியேறியிருக்கும் ரவி ஷர்மாவின் அனுபவம் இது. எனக்கு அப்போது ஏழு வயது. என் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் லாகூரைவிட்டு கிளம்ப மனமே இல்லை. எல்லாம் சரியாகிவிடும் என்று அம்மா நினைத்திருந்தார். பிறகு, அவருக்குத் தெரிந்த இரண்டு பேர் (இந்துக்கள்) சில முஸ்லீம்களால் கொல்லப்பட்ட செய்தி கிடைத்திருக்கிறது. அவர்கள் யாரிடம் வேலை பார்த்தார்களோ அவர்களாலேயே கொல்லப்பட்டிருந்தார்கள். அப்போது முடிவெடுத்திருக்கிறார்கள். சரி இதுதான் கடைசி சமிக்ஞை, கிளம்பிவிடலாம். டில்லிக்குக் கிளம்பிவிட்டோம். அமைதியாக டெல்லியை வந்தடைந்த இறுதி ரயில் எங்களுடையதுதான். எங்களுக்குப் பிறகு கிளம்பியவர்களில் பலரும் பாதி வழியிலேயே கொல்லப்பட்டு விட்டார்களாம்.
இன்னும் சிலரின் ஏக்கங்கள் இவை.
’இந்தியாவும் பாகிஸ்தானும் அவ்வப்போது போரிட்டுக்கொள்ளாமல் இருந்திருந்தால், இரு தேசங்களும் இன்னமும் வளமாக இருந்திருக்கும்.’
’மதம் என்று ஒன்று இல்லாமல் இருந்திருந்தால், இரு தேசங்களும் பிரிந்திருக்காது. ’
’பிரிவினை நடக்காமலே இருந்திருக்கக்கூடாதா என்று தினம் தினம் வருந்திக்கொண்டிருக்கிறேன். இந்த இரு தேசங்களிடம் இருந்தும் உலகம் பாடம் கற்றுக்கொள்ளவேண்டும். இதுபோல் இனியொரு முறை நடக்கக்கூடாது.’
0
பெண்கள் சிலரைச் சந்தித்திருக்கிறார்கள். சுதந்தரம் கிடைத்தது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? மூதாட்டி ஒருவர் நடுங்கும் விரல்களால் தன் மார்பைத் திறந்து காட்டியிருக்கிறார். இரு குழிகள் இருந்தன அங்கே.
உங்கள் அனுபவங்களைச் சொல்லுங்கள் என்று கேட்டபோது சில பெண்கள் விழித்திருக்கிறார்கள்.
என்ன அனுபவம்? எதைச் சொல்ல? அழுகை வெடித்துகிளம்புகிறது. மீண்டும் மீண்டும் எங்களைத் துன்பப்படுத்தாதீர்கள். தயவுசெய்து இங்கிருந்து போய்விடுங்கள். எங்கள் கதைகளை யாரும் கேட்கவேண்டாம். யாரும் படிக்கவேண்டாம்.

இந்தப் புத்தகம் உருவான விதம் குறித்து தனி பதிவு ஒன்று எழுத திட்டம். இப்போதைக்கு, புத்தகத்தில் இருந்து ஒரு பகுதி.
பிரிவினை நடந்து அறுபது ஆண்டுகள் கழிந்ததையடுத்து பிபிசி சிலரைப் பேட்டியெடுத்தது.
நார்விச்சில் குடியேறியிருக்கும் ரவி ஷர்மாவின் அனுபவம் இது. எனக்கு அப்போது ஏழு வயது. என் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் லாகூரைவிட்டு கிளம்ப மனமே இல்லை. எல்லாம் சரியாகிவிடும் என்று அம்மா நினைத்திருந்தார். பிறகு, அவருக்குத் தெரிந்த இரண்டு பேர் (இந்துக்கள்) சில முஸ்லீம்களால் கொல்லப்பட்ட செய்தி கிடைத்திருக்கிறது. அவர்கள் யாரிடம் வேலை பார்த்தார்களோ அவர்களாலேயே கொல்லப்பட்டிருந்தார்கள். அப்போது முடிவெடுத்திருக்கிறார்கள். சரி இதுதான் கடைசி சமிக்ஞை, கிளம்பிவிடலாம். டில்லிக்குக் கிளம்பிவிட்டோம். அமைதியாக டெல்லியை வந்தடைந்த இறுதி ரயில் எங்களுடையதுதான். எங்களுக்குப் பிறகு கிளம்பியவர்களில் பலரும் பாதி வழியிலேயே கொல்லப்பட்டு விட்டார்களாம்.
இன்னும் சிலரின் ஏக்கங்கள் இவை.
’இந்தியாவும் பாகிஸ்தானும் அவ்வப்போது போரிட்டுக்கொள்ளாமல் இருந்திருந்தால், இரு தேசங்களும் இன்னமும் வளமாக இருந்திருக்கும்.’
’மதம் என்று ஒன்று இல்லாமல் இருந்திருந்தால், இரு தேசங்களும் பிரிந்திருக்காது. ’
’பிரிவினை நடக்காமலே இருந்திருக்கக்கூடாதா என்று தினம் தினம் வருந்திக்கொண்டிருக்கிறேன். இந்த இரு தேசங்களிடம் இருந்தும் உலகம் பாடம் கற்றுக்கொள்ளவேண்டும். இதுபோல் இனியொரு முறை நடக்கக்கூடாது.’
0
பெண்கள் சிலரைச் சந்தித்திருக்கிறார்கள். சுதந்தரம் கிடைத்தது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? மூதாட்டி ஒருவர் நடுங்கும் விரல்களால் தன் மார்பைத் திறந்து காட்டியிருக்கிறார். இரு குழிகள் இருந்தன அங்கே.
உங்கள் அனுபவங்களைச் சொல்லுங்கள் என்று கேட்டபோது சில பெண்கள் விழித்திருக்கிறார்கள்.
என்ன அனுபவம்? எதைச் சொல்ல? அழுகை வெடித்துகிளம்புகிறது. மீண்டும் மீண்டும் எங்களைத் துன்பப்படுத்தாதீர்கள். தயவுசெய்து இங்கிருந்து போய்விடுங்கள். எங்கள் கதைகளை யாரும் கேட்கவேண்டாம். யாரும் படிக்கவேண்டாம்.
January 7, 2009
சென்னை புத்தகக் கண்காட்சி இன்று ஆரம்பம்!
இன்று தொடங்கி ஜனவரி 18 வரை சென்னை புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது. இடம், பச்சையப்பா கல்லூரிக்கு எதிரே உள்ள செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி மைதானம்.
அரங்க வரைபடம் கீழே.

என்னென்ன புத்தகங்களை வாங்கவேண்டும் என்று ஒரு சிறிய பட்டியலைத் தயார் செய்து வைத்திருக்கிறேன். ஆரம்ப தினங்களிலேயே வாங்கிவிட்டால் பிறகு சாவகாசமாக உலாவிக்கொண்டிருக்கலாம்.
நான் எடிட் செய்த புத்தகங்களைப் பற்றியும், பரிந்துரைக்கும் புத்தகங்களைப் பற்றியும் அடுத்தடுத்த தினங்களில் இங்கே எழுதுகிறேன். கூடிய வரை, புத்தகக் கண்காட்சி குறித்து தினமும் எழுதுகிறேன்.
அரங்க வரைபடம் கீழே.

என்னென்ன புத்தகங்களை வாங்கவேண்டும் என்று ஒரு சிறிய பட்டியலைத் தயார் செய்து வைத்திருக்கிறேன். ஆரம்ப தினங்களிலேயே வாங்கிவிட்டால் பிறகு சாவகாசமாக உலாவிக்கொண்டிருக்கலாம்.
நான் எடிட் செய்த புத்தகங்களைப் பற்றியும், பரிந்துரைக்கும் புத்தகங்களைப் பற்றியும் அடுத்தடுத்த தினங்களில் இங்கே எழுதுகிறேன். கூடிய வரை, புத்தகக் கண்காட்சி குறித்து தினமும் எழுதுகிறேன்.
அமெரிக்கக் கல்வி குறித்து சில கட்டுரைகள்
அமெரிக்கப் பள்ளிகள் பற்றி நான் எழுதிய முந்தைய பதிவுக்கான ஆதாரங்களை (சிலவற்றை மட்டும்) கீழே பட்டியலிடுகிறேன். இவற்றை ஒன்றாக வாசிக்கும்போது அமெரிக்க உயர் நிலைப் பள்ளிகளின் எதிர்காலம் குறித்து கவலையே ஏற்படுகிறது.
Arne Duncan and Neoliberal Racism:
http://www.zmag.org/znet/viewArticle/20050
Obama's Betrayal of Public Education? Arne Duncan and the Corporate Model of Schooling
http://www.truthout.org/121708R
Obama Slam-Duncans Education
http://www.informationclearinghouse.info/article21481.htm
Arne Duncan and the Corporate Model of Schooling http://www.zmag.org/znet/viewArticle/20044
Beware School 'Reformers'
http://www.thenation.com/doc/20081229/kohn/print
Beyond Bailouts: On the Politics of Education After Neoliberalism
http://www.truthout.org/123108A
Arne Duncan and Neoliberal Racism:
http://www.zmag.org/znet/viewArticle/20050
Obama's Betrayal of Public Education? Arne Duncan and the Corporate Model of Schooling
http://www.truthout.org/121708R
Obama Slam-Duncans Education
http://www.informationclearinghouse.info/article21481.htm
Arne Duncan and the Corporate Model of Schooling http://www.zmag.org/znet/viewArticle/20044
Beware School 'Reformers'
http://www.thenation.com/doc/20081229/kohn/print
Beyond Bailouts: On the Politics of Education After Neoliberalism
http://www.truthout.org/123108A
அமெரிக்கப் பள்ளிகள் காலி!
திடீரென்று வகுப்பாசிரியர் அழைத்தார். போய் தலைமை ஆசிரியரைப் பார். தயங்கித் தயங்கி சென்றார் அந்த மாணவர். வா என்று உள்ளே அழைத்த தலைமை ஆசிரியர் மேஜை டிராயரைத் திறந்து ஒரு காகிதத்தை எடுத்து நீட்டினார். பெற்றுக்கொண்டு ஆசிரியரிடம் கொண்டு வந்து காண்பித்தார் அந்த மாணவர். பார்த்தவுடனே சொல்லிவிட்டார் அவர். இனி இங்கே வராதே. வீட்டுக்குப் போய்விடு. அதற்கான உத்தரவுதான் இது. தன்னை எதற்காக பள்ளியில் இருந்து நீக்கினார்கள் என்று அந்த மாணவருக்கு இந்த நிமிடம் வரை தெரியாது.
சமீப காலங்களில், பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் அமெரிக்கப் பள்ளிகளில் இருந்து அடித்து துரத்தப்பட்டிருக்கின்றனர். ஒழுங்கீனமானவர்கள் என்று முத்திரை குத்தப்பட்டு பலர் சிறைச்சாலைகளில் (குழந்தைகளுக்கான சிறைச்சாலைகள்) அடைக்கப்பட்டிருக்கிறார்கள். கலவரமடைந்த பல மாணவர்கள் படிப்பு முடிவதற்கு முன்பே பள்ளிகளில் இருந்தும், கல்லூரிகளில் இருந்தும் நின்றுவிடுகிறார்கள்.
பொருளாதாரம் மட்டுமல்ல அமெரிக்காவின் கல்வித்துறையும்கூட கோமா நிலையில்தான் இருக்கிறது. குறிப்பாக, அரசாங்கம் ஏற்று நடத்தும் பொதுப்பள்ளிகளின் கல்வித் தரம். சரி, ஜார்ஜ் புஷ்ஷின் மற்றுமொரு சொதப்பல் என்பதாகத்தான் நினைத்துக்கொண்டது அமெரிக்கா. போனது போகட்டும். எப்படியும் ஒபாமா வரப்போகிறார். பொருளாதாரத்தையே மீட்டெடுக்கப்போகிறவர் கல்வியை விட்டுவிடுவாரா?
அந்த ஆசையும் இப்போது பொய்த்துவிட்டது. ஒரு மந்திரம் போல் பராக் ஒபாமாவின் பெயரை உச்சரித்துக்கொண்டிருப்பவர்கள்கூட கல்வி துறையில் உருப்படிம்ன மாற்றம் வரும் என்பதை நம்ப மறுக்கிறார்கள். காரணம், ஆர்னே டங்கன் என்பரை கல்வி அமைச்சராக ஒபாமா தேர்ந்தெடுத்ததுதான். இளவயது நண்பர் எனும் ஒரே காரணத்துக்காக ஒரு முக்கியப் பதவியை அவரிடம் கொடுப்பது நியாயமா? பல லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் சம்பந்தப்பட்ட முடிவு அல்லவா இது?
டங்கனை அவர்கள் அறிவார்கள். சிகாகோ பொதுப்பள்ளிகளின் சி.ஈ.ஓ.வாக இருப்பவர். அவரது புகழ்பெற்ற திட்டம், மறுமலர்ச்சி 2010. கல்வித்துறையில் சில பரிசோதனை முயற்சிகள் நடத்தவேண்டும் என்பது அவர் கனவு. சில புதிய பரிசோதனை முயற்சிகளைக் கல்வியில் மேற்கொள்ளவேண்டும். சில பள்ளிகளை இழுத்து மூடவேண்டும். பள்ளிக்கூடங்களில் ராணுவக் கட்டுப்பாட்டை கொண்டுவரவேண்டும். பள்ளி நிர்வாகத்தை தனியாரிடம் ஒப்படைக்கவேண்டும். வரிசையாக இதையெல்லாம் செய்தால் கல்வியின் தரம் உயர்ந்துவிடும். அமெரிக்கா கல்விப் பூங்காவாக மாறிவிடும். டங்கனின் நீண்ட கால கனவு திட்டம் இது.
பள்ளிகளில், தலைமை ஆசிரியர் வேண்டாம். தேவை கார்ப்பரேட் நிறுவனங்களில் இருப்பதைப் போன்ற சி.ஈ.ஓ.க்கள். ஆசிரியர்கள் அல்ல, மேனேஜர்கள் தேவை. சொல்லிக்கொடுப்பதில் அல்ல, ஒழுங்கு கடைபிடிக்கப்படுகிறதா என்பதை சூப்பர்வைஸ் செய்வதுதான் அவர்களுக்கு முக்கியப் பணி. பள்ளிகள் அனைத்தும் கல்வி அமைச்சகத்தின் கீழ் வந்து சேரும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பள்ளிகள் ரிப்போர்ட் அனுப்பவேண்டும். பச்சை, மஞ்சள், சிகப்பு என்று கிராஃப் போட்டு. குறிப்பிட்ட வகுப்பில் எத்தனை மாணவர்கள் படிக்கிறார்கள், அவர்களது மூன்று மாத பெர்ஃபார்மன்ஸ் என்ன, எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு அனைத்தையும் கலரில் குறிக்கவேண்டும். இதை வைத்துக்கொண்டு குறிப்பிட்ட பள்ளியின் தரத்தை அதிகாரிகள் முடிவு செய்வார்கள்.
உதாரணத்துக்கு, எழுபது சதவீதத்துக்கும் குறைவாக அந்தப் பள்ளி ஸ்கோர் செய்திருந்தால், மேனேஜர்களை வேலையில் இருந்து தூக்குவார்கள். இன்னும் குறைச்சல் என்றால் சி.ஈ.ஓ. தூக்கப்படுவார். அதையும்விட குறைச்சல் என்றால், குறிப்பிட்ட பள்ளி இழுத்து மூடுப்படும். நஷ்டத்தில் ஓடும் பள்ளி என்னத்துக்கு? பதிலுக்கு, ஏதாவது பிட்ஸா கார்னர் காண்ட்ராக்ட் கொடுத்தால் நாலு காசு கிடைக்கும். மாணவர்கள்? அவர்களை வைத்துக்கொண்டு என்ன செய்ய? நஷ்டத்துக்கு மூலக்காரணமே அவர்கள்தானே? டிஸி கொடுத்து துரத்தியடி.
டங்கனின் நண்பரும் ஆதரவாளருமான ஜோயல் க்ளீன் (டங்கன் இடத்தில் இவரை பதவியில் அமர்த்துவார்கள் என்று பலர் எதிர்பார்த்திருந்தனர்) இந்த திட்டத்தை முன்னர் அறிமுகப்படுத்தியபோது பெற்றோர்களிடம் இருந்து கடுமையான எதிர்ப்புகளை அவர் சந்திக்கவேண்டியிருந்தது. ஜோயல் பதவி விலகவேண்டும் என்று ஊர் முழுக்க கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. ஜோயலின் கனவு நிறைவேறவில்லை. வருத்தம்தான் என்றாலும் தன் நண்பர் டங்கன் ஒபாமாவால் தேர்ந்தெடுக்கப்பட்டதில் அவருக்கு மகிழ்ச்சியே.
1980ல் இருந்தே அமெரிக்காவில் முணுமுணுப்புகள் ஆரம்பித்துவிட்டன. அரசாங்கம் ஏற்கெனவே திணறிக்கொண்டிருக்கிறது. ஏகப்பட்ட வேலை. எக்கச்சக்க செலவு. இதில், பொதுப் பள்ளிக்கூடங்களையும் நடத்திக்கொண்டிருக்கமுடியுமா? அதுவும் இலவசமாக? இலவசமாக அளிக்கப்படும் கல்வி எப்படி இருக்கும்? பேசாமல், அனைத்து பொது பள்ளிக்கூடங்களையும் அப்படியே மூட்டை கட்டி தனியாரிடம் ஒப்படைத்துவிடலாம். டெண்டர் விடுவோம். யார் அதிகம் தருகிறார்களோ அவர்களுக்கு விற்றுவிடலாம். பிறகு அவர்களாச்சு, மாணவர்களாச்சு.
அமெரிக்கர்கள் சீறினார்கள். அரசாங்கமே கல்வியை விற்க தயாராக இருக்கும்போது, காசு போட்டு பிசினஸில் ஈடுபடப்போகும் தனியார் நிறுவனங்கள் என்ன செய்யும்? ஒரு மாணவனுக்கு என்ன தேவையோ அதை அவர்கள் வழங்கமாட்டார்கள். தொழிற்சாலைகளில் இருந்து தயாராகும் கோக் பாட்டில்கள் போல் வரிசை வரிசையாக மாணவர்களுக்குள் எதையாவது திணித்து வெளியில் தள்ளிவிடுவார்கள். பெரும் விலையையும் அதற்கு நாம் அழவேண்டியிருக்கும். வேண்டாம். பொதுப்பள்ளிகளை அரசாங்கமே ஏற்று நடத்தட்டும். தனியார் இதில் வேண்டாம். குறைந்தது, இதிலாவது.
சரி, நேரடியாகத் தனியார் ஆள்களைக் கொண்டுவந்தால்தானே பிரச்னை? வழிமுறையை மாற்றிக்கொண்டது அரசாங்கம். பொதுப் பள்ளிகளை கார்ப்பரேட் பள்ளிகளாக மாற்றும் முயற்சி முடுக்கிவிடப்பட்டது. மாணவர்களும் ஆசிரியர்களும் தலைமை ஆசிரியர்களும் பள்ளி நிர்வாகிகளும் அரசாங்கத்தின் நேரடி கண்காணிப்பின் கீழ் வந்து சேர்ந்தனர். அவர்கள் தரம் கணக்கிடப்பட்டது.
ஆசிரியர்களைத் தனியே அழைத்துப் பேசினார்கள். எங்களுக்கு ஆசிரியர்கள் தேவையில்லை. டெக்னீஷியன்கள் இருந்தால் போதும். அறிவியில், கணக்கு, ஆமணக்கு என்று கண்டதையெல்லாம் சொல்லிக்கொடுத்தால் போதாது. மார்க்கெட்டில் மாணவர்கள் விலைபோகவேண்டும். சுற்றிலும் உள்ள பெரும் நிறுவனங்களைப் பாருங்கள். அவர்கள் தேவைகளை குறிப்பெடுத்துக்கொள்ளுங்கள். வளர்ந்ததும் மாணவர்கள் பணியாற்றப்போவது அவர்களிடத்தில்தான். ஆகவே, நிறுவனங்களின் தேவைக்கு ஏற்ற கல்வியை அளித்தால் போதும். அவர்களை மாணவர்களாகப் பார்க்காதீர்கள். கஸ்டமர்களாகப் பாருங்கள். புரிகிறதா?
கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மாணவர்களுக்கும் ராணுவ வீரர்களுக்கும் வித்தியாசம் அதிகம் இல்லை. போர்வீரர்களைப் பார்த்திருக்கிறீர்கள் அல்லவா? செய் என்றால் உயிரைக் கொடுத்தாவது செய்து முடிப்பார்கள். இவர்களையும் அதுபோல் வளர்த்தெடுக்கவேண்டும். அதற்குத் தேவை கண்டிப்பு. கடுமையான கண்டிப்பு. ஒழுக்க விதிகளிலோ, கொடுக்கப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பதிலோ மாணவர்கள் பின்தங்கினால், கடுமையான தண்டனைகளை அளிக்கவேண்டும். அடங்க மறுத்தால், டிஸியைக் கிழித்து கையோடு கொடுத்துவிடுங்கள்.
உங்களால் கடுமையாகத் தண்டிக்க முடியாவிட்டால் நாங்கள் பார்த்துக்கொளகிறோம். பாதுகாப்பு வீரர்களை அனுப்புகிறோம். அவர்கள் கவனித்துக்கொள்வார்கள். வகுப்பறையில் மட்டுமல்ல வகுப்பறைக்கு வெளியில் மாணவர்கள் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதையும் அதிகாரிகள் சொல்லிக்கொடுப்பார்கள்.
பொதுப் பள்ளிகள் மீது ஏன் அரசாங்கத்துக்கும், குறிப்பாக கல்வி அமைச்சகத்துக்கும் இத்தனை காழ்ப்புணர்ச்சி? ஏன் இத்தனை வெறுப்பு? காரணம், பொதுப் பள்ளிகளில் அதிகம் படிப்பவர்கள் வெள்ளை இன அமெரிக்கக் குழந்தைகள் கிடையாது. கறுப்பினத்தவர். அமெரிக்கர்களுக்கு இரண்டு நிறங்கள் மட்டுமே தெரியும். வெள்ளை. இன்னொன்று, கறுப்பு. வெள்ளை அல்லாத எதுவும் கறுப்புதான் அவர்களுக்கு. வெள்ளை அல்லாத எதற்கும் முன்னுரிமை வேண்டியதில்லை. வெள்ளை அல்லாதவர்களுக்கு செய்யப்படும் செலவுகள் அனைத்தும் வீண். அல்லது, தண்டம்.
டங்கன் தன் கனவை தெளிவாகவே அறிவித்துவிட்டார். கல்வியை கார்ப்பரேட் ஆக்குவேன். கூடுதல் மிலிட்டரி கட்டுப்பாட்டைக் கொண்டுவருவேன். செயல்படாத பொதுப் பள்ளிகளை இழுத்துமூடுவேன். ஒபாமா டங்கனை அங்கீகரித்து ஏற்றுக்கொண்டுள்ளார் என்னும்போது டங்கனின் கனவுத்திட்டத்தையும் சேர்த்தேதான் அவர் அங்கீகரித்திருக்கவேண்டும். ஒபாமாவின் தீவிர ரசிகர்களேகூட இந்த விஷயத்தில் சங்கடத்துடன் நெளிந்துகொண்டிருக்கிறார்கள்.
(ஆனந்த விகடனில் வெளிவந்த என் கட்டுரை
சமீப காலங்களில், பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் அமெரிக்கப் பள்ளிகளில் இருந்து அடித்து துரத்தப்பட்டிருக்கின்றனர். ஒழுங்கீனமானவர்கள் என்று முத்திரை குத்தப்பட்டு பலர் சிறைச்சாலைகளில் (குழந்தைகளுக்கான சிறைச்சாலைகள்) அடைக்கப்பட்டிருக்கிறார்கள். கலவரமடைந்த பல மாணவர்கள் படிப்பு முடிவதற்கு முன்பே பள்ளிகளில் இருந்தும், கல்லூரிகளில் இருந்தும் நின்றுவிடுகிறார்கள்.
பொருளாதாரம் மட்டுமல்ல அமெரிக்காவின் கல்வித்துறையும்கூட கோமா நிலையில்தான் இருக்கிறது. குறிப்பாக, அரசாங்கம் ஏற்று நடத்தும் பொதுப்பள்ளிகளின் கல்வித் தரம். சரி, ஜார்ஜ் புஷ்ஷின் மற்றுமொரு சொதப்பல் என்பதாகத்தான் நினைத்துக்கொண்டது அமெரிக்கா. போனது போகட்டும். எப்படியும் ஒபாமா வரப்போகிறார். பொருளாதாரத்தையே மீட்டெடுக்கப்போகிறவர் கல்வியை விட்டுவிடுவாரா?
அந்த ஆசையும் இப்போது பொய்த்துவிட்டது. ஒரு மந்திரம் போல் பராக் ஒபாமாவின் பெயரை உச்சரித்துக்கொண்டிருப்பவர்கள்கூட கல்வி துறையில் உருப்படிம்ன மாற்றம் வரும் என்பதை நம்ப மறுக்கிறார்கள். காரணம், ஆர்னே டங்கன் என்பரை கல்வி அமைச்சராக ஒபாமா தேர்ந்தெடுத்ததுதான். இளவயது நண்பர் எனும் ஒரே காரணத்துக்காக ஒரு முக்கியப் பதவியை அவரிடம் கொடுப்பது நியாயமா? பல லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் சம்பந்தப்பட்ட முடிவு அல்லவா இது?
டங்கனை அவர்கள் அறிவார்கள். சிகாகோ பொதுப்பள்ளிகளின் சி.ஈ.ஓ.வாக இருப்பவர். அவரது புகழ்பெற்ற திட்டம், மறுமலர்ச்சி 2010. கல்வித்துறையில் சில பரிசோதனை முயற்சிகள் நடத்தவேண்டும் என்பது அவர் கனவு. சில புதிய பரிசோதனை முயற்சிகளைக் கல்வியில் மேற்கொள்ளவேண்டும். சில பள்ளிகளை இழுத்து மூடவேண்டும். பள்ளிக்கூடங்களில் ராணுவக் கட்டுப்பாட்டை கொண்டுவரவேண்டும். பள்ளி நிர்வாகத்தை தனியாரிடம் ஒப்படைக்கவேண்டும். வரிசையாக இதையெல்லாம் செய்தால் கல்வியின் தரம் உயர்ந்துவிடும். அமெரிக்கா கல்விப் பூங்காவாக மாறிவிடும். டங்கனின் நீண்ட கால கனவு திட்டம் இது.
பள்ளிகளில், தலைமை ஆசிரியர் வேண்டாம். தேவை கார்ப்பரேட் நிறுவனங்களில் இருப்பதைப் போன்ற சி.ஈ.ஓ.க்கள். ஆசிரியர்கள் அல்ல, மேனேஜர்கள் தேவை. சொல்லிக்கொடுப்பதில் அல்ல, ஒழுங்கு கடைபிடிக்கப்படுகிறதா என்பதை சூப்பர்வைஸ் செய்வதுதான் அவர்களுக்கு முக்கியப் பணி. பள்ளிகள் அனைத்தும் கல்வி அமைச்சகத்தின் கீழ் வந்து சேரும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பள்ளிகள் ரிப்போர்ட் அனுப்பவேண்டும். பச்சை, மஞ்சள், சிகப்பு என்று கிராஃப் போட்டு. குறிப்பிட்ட வகுப்பில் எத்தனை மாணவர்கள் படிக்கிறார்கள், அவர்களது மூன்று மாத பெர்ஃபார்மன்ஸ் என்ன, எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு அனைத்தையும் கலரில் குறிக்கவேண்டும். இதை வைத்துக்கொண்டு குறிப்பிட்ட பள்ளியின் தரத்தை அதிகாரிகள் முடிவு செய்வார்கள்.
உதாரணத்துக்கு, எழுபது சதவீதத்துக்கும் குறைவாக அந்தப் பள்ளி ஸ்கோர் செய்திருந்தால், மேனேஜர்களை வேலையில் இருந்து தூக்குவார்கள். இன்னும் குறைச்சல் என்றால் சி.ஈ.ஓ. தூக்கப்படுவார். அதையும்விட குறைச்சல் என்றால், குறிப்பிட்ட பள்ளி இழுத்து மூடுப்படும். நஷ்டத்தில் ஓடும் பள்ளி என்னத்துக்கு? பதிலுக்கு, ஏதாவது பிட்ஸா கார்னர் காண்ட்ராக்ட் கொடுத்தால் நாலு காசு கிடைக்கும். மாணவர்கள்? அவர்களை வைத்துக்கொண்டு என்ன செய்ய? நஷ்டத்துக்கு மூலக்காரணமே அவர்கள்தானே? டிஸி கொடுத்து துரத்தியடி.
டங்கனின் நண்பரும் ஆதரவாளருமான ஜோயல் க்ளீன் (டங்கன் இடத்தில் இவரை பதவியில் அமர்த்துவார்கள் என்று பலர் எதிர்பார்த்திருந்தனர்) இந்த திட்டத்தை முன்னர் அறிமுகப்படுத்தியபோது பெற்றோர்களிடம் இருந்து கடுமையான எதிர்ப்புகளை அவர் சந்திக்கவேண்டியிருந்தது. ஜோயல் பதவி விலகவேண்டும் என்று ஊர் முழுக்க கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. ஜோயலின் கனவு நிறைவேறவில்லை. வருத்தம்தான் என்றாலும் தன் நண்பர் டங்கன் ஒபாமாவால் தேர்ந்தெடுக்கப்பட்டதில் அவருக்கு மகிழ்ச்சியே.
1980ல் இருந்தே அமெரிக்காவில் முணுமுணுப்புகள் ஆரம்பித்துவிட்டன. அரசாங்கம் ஏற்கெனவே திணறிக்கொண்டிருக்கிறது. ஏகப்பட்ட வேலை. எக்கச்சக்க செலவு. இதில், பொதுப் பள்ளிக்கூடங்களையும் நடத்திக்கொண்டிருக்கமுடியுமா? அதுவும் இலவசமாக? இலவசமாக அளிக்கப்படும் கல்வி எப்படி இருக்கும்? பேசாமல், அனைத்து பொது பள்ளிக்கூடங்களையும் அப்படியே மூட்டை கட்டி தனியாரிடம் ஒப்படைத்துவிடலாம். டெண்டர் விடுவோம். யார் அதிகம் தருகிறார்களோ அவர்களுக்கு விற்றுவிடலாம். பிறகு அவர்களாச்சு, மாணவர்களாச்சு.
அமெரிக்கர்கள் சீறினார்கள். அரசாங்கமே கல்வியை விற்க தயாராக இருக்கும்போது, காசு போட்டு பிசினஸில் ஈடுபடப்போகும் தனியார் நிறுவனங்கள் என்ன செய்யும்? ஒரு மாணவனுக்கு என்ன தேவையோ அதை அவர்கள் வழங்கமாட்டார்கள். தொழிற்சாலைகளில் இருந்து தயாராகும் கோக் பாட்டில்கள் போல் வரிசை வரிசையாக மாணவர்களுக்குள் எதையாவது திணித்து வெளியில் தள்ளிவிடுவார்கள். பெரும் விலையையும் அதற்கு நாம் அழவேண்டியிருக்கும். வேண்டாம். பொதுப்பள்ளிகளை அரசாங்கமே ஏற்று நடத்தட்டும். தனியார் இதில் வேண்டாம். குறைந்தது, இதிலாவது.
சரி, நேரடியாகத் தனியார் ஆள்களைக் கொண்டுவந்தால்தானே பிரச்னை? வழிமுறையை மாற்றிக்கொண்டது அரசாங்கம். பொதுப் பள்ளிகளை கார்ப்பரேட் பள்ளிகளாக மாற்றும் முயற்சி முடுக்கிவிடப்பட்டது. மாணவர்களும் ஆசிரியர்களும் தலைமை ஆசிரியர்களும் பள்ளி நிர்வாகிகளும் அரசாங்கத்தின் நேரடி கண்காணிப்பின் கீழ் வந்து சேர்ந்தனர். அவர்கள் தரம் கணக்கிடப்பட்டது.
ஆசிரியர்களைத் தனியே அழைத்துப் பேசினார்கள். எங்களுக்கு ஆசிரியர்கள் தேவையில்லை. டெக்னீஷியன்கள் இருந்தால் போதும். அறிவியில், கணக்கு, ஆமணக்கு என்று கண்டதையெல்லாம் சொல்லிக்கொடுத்தால் போதாது. மார்க்கெட்டில் மாணவர்கள் விலைபோகவேண்டும். சுற்றிலும் உள்ள பெரும் நிறுவனங்களைப் பாருங்கள். அவர்கள் தேவைகளை குறிப்பெடுத்துக்கொள்ளுங்கள். வளர்ந்ததும் மாணவர்கள் பணியாற்றப்போவது அவர்களிடத்தில்தான். ஆகவே, நிறுவனங்களின் தேவைக்கு ஏற்ற கல்வியை அளித்தால் போதும். அவர்களை மாணவர்களாகப் பார்க்காதீர்கள். கஸ்டமர்களாகப் பாருங்கள். புரிகிறதா?
கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மாணவர்களுக்கும் ராணுவ வீரர்களுக்கும் வித்தியாசம் அதிகம் இல்லை. போர்வீரர்களைப் பார்த்திருக்கிறீர்கள் அல்லவா? செய் என்றால் உயிரைக் கொடுத்தாவது செய்து முடிப்பார்கள். இவர்களையும் அதுபோல் வளர்த்தெடுக்கவேண்டும். அதற்குத் தேவை கண்டிப்பு. கடுமையான கண்டிப்பு. ஒழுக்க விதிகளிலோ, கொடுக்கப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பதிலோ மாணவர்கள் பின்தங்கினால், கடுமையான தண்டனைகளை அளிக்கவேண்டும். அடங்க மறுத்தால், டிஸியைக் கிழித்து கையோடு கொடுத்துவிடுங்கள்.
உங்களால் கடுமையாகத் தண்டிக்க முடியாவிட்டால் நாங்கள் பார்த்துக்கொளகிறோம். பாதுகாப்பு வீரர்களை அனுப்புகிறோம். அவர்கள் கவனித்துக்கொள்வார்கள். வகுப்பறையில் மட்டுமல்ல வகுப்பறைக்கு வெளியில் மாணவர்கள் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதையும் அதிகாரிகள் சொல்லிக்கொடுப்பார்கள்.
பொதுப் பள்ளிகள் மீது ஏன் அரசாங்கத்துக்கும், குறிப்பாக கல்வி அமைச்சகத்துக்கும் இத்தனை காழ்ப்புணர்ச்சி? ஏன் இத்தனை வெறுப்பு? காரணம், பொதுப் பள்ளிகளில் அதிகம் படிப்பவர்கள் வெள்ளை இன அமெரிக்கக் குழந்தைகள் கிடையாது. கறுப்பினத்தவர். அமெரிக்கர்களுக்கு இரண்டு நிறங்கள் மட்டுமே தெரியும். வெள்ளை. இன்னொன்று, கறுப்பு. வெள்ளை அல்லாத எதுவும் கறுப்புதான் அவர்களுக்கு. வெள்ளை அல்லாத எதற்கும் முன்னுரிமை வேண்டியதில்லை. வெள்ளை அல்லாதவர்களுக்கு செய்யப்படும் செலவுகள் அனைத்தும் வீண். அல்லது, தண்டம்.
டங்கன் தன் கனவை தெளிவாகவே அறிவித்துவிட்டார். கல்வியை கார்ப்பரேட் ஆக்குவேன். கூடுதல் மிலிட்டரி கட்டுப்பாட்டைக் கொண்டுவருவேன். செயல்படாத பொதுப் பள்ளிகளை இழுத்துமூடுவேன். ஒபாமா டங்கனை அங்கீகரித்து ஏற்றுக்கொண்டுள்ளார் என்னும்போது டங்கனின் கனவுத்திட்டத்தையும் சேர்த்தேதான் அவர் அங்கீகரித்திருக்கவேண்டும். ஒபாமாவின் தீவிர ரசிகர்களேகூட இந்த விஷயத்தில் சங்கடத்துடன் நெளிந்துகொண்டிருக்கிறார்கள்.
(ஆனந்த விகடனில் வெளிவந்த என் கட்டுரை
January 1, 2009
உலகம் 2008
2008ம் ஆண்டின் சிறந்த மனிதராக பாரக் ஒபாமாவைத் தேர்வு செய்திருக்கிறது டைம். பளபளப்பையும் மினுமினுப்பையும் தொலைத்துவிட்டு இருண்டு கிடக்கிறது அமெரிக்கா. அமெரிக்கர்கள் நம்பிக்கை இழந்துவிட்டார்கள். அடுத்து என்ன என்று தேசமே திகிலுடன் திகைத்து நிற்கும்போது ரட்சகர் போல் இறக்கைகளுடன் வந்து சேர்ந்த பராக் ஒபாமா ஒரு லட்சியப்பூர்வமான எதிர்காலத்தை உருவாக்கித்தருவதாக வாக்களித்திருக்கிறார். ஆகவே, ஒபாமாவைத் தூக்கி அட்டையில் போட்டுவிட்டது டைம். வருத்தப்பட்டு பாரம் சுமக்கப்போகும் ஒபாமாவுக்காக அத்தேசம் காத்துக்கொண்டிருக்கிறது.
மாற்றம். ஒபாமா தன் அரசியல் சித்ததாந்தமாக முன்வைத்த இந்த மந்திரச்சொல்லைதான் உலகமே உச்சரித்துக்கொண்டிருக்கிறது. சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை 2008.போராட்டங்கள். ஏமாற்றங்கள். தோல்விகள். காயங்கள். ஏழை தேசம், பணக்கார தேசம் என்று பாகுபாடில்லாமல் எங்கும் பிரச்னைகள். வாழ்வா சாவா போராட்டம். வீதிக்குத் திரண்டு வந்து வாய் வலிக்கக் கோஷம் போட்டுக்கொண்டிருக்கிறார்கள் மக்கள்.
எதற்கெடுத்தாலும் அமெரிக்காவைக் குற்றம் சாட்டுவதே வேலையாகப் போய்விட்டது என்று அங்கலாய்த்துக்கொண்டிருந்தவர்கள்கூட ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். ஆம், இந்த வருடத்தை அலைகழிக்கும் பெரும்பாலான அரசியல் பிரச்னைகளின் ஆணிவேர் அமெரிக்கா.
அங்கிருந்தே தொடங்குவோம். பங்குச்சந்தையில் கொடிகட்டிப் பறந்துகொண்டிருந்த ஐந்து பெரும் நிறுவனங்களில் மூன்று (பேர் ஸ்டீன்ஸ், மெரில் லிஞ்ச், லேமன் பிரதர்ஸ்) முடங்கிவிட்டது. உலகின் மிக சக்திவாய்ந்த காப்பீடு நிறுவனமாகத் தன்னை முன்னிறுத்திக்கொண்ட ஏ.ஐ.ஜி. தத்தளித்துக்கொண்டிருக்கிறது. சகாய விலையில் கிடைக்கிறதே என்று வீட்டுக்கடன் வாங்கியவர்கள் வீட்டை இழந்து, வேலையை இழந்து, கடனை மட்டும் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். வங்கிகள். வட்டிக்குக் கடன் கொடுக்கும் அந்த ஊர் சேட்டு கம்பெனிகள். ரியல் எஸ்டேட் நிறுவனங்கள். இந்த மூன்று துறைகளிலும் ஏற்பட்ட ஊழல்கள், மோசடிகள், தவறான அணுகுமுறைகள் காரணமாக ஏற்பட்ட மிக மோசமான பொரும்ளாதார வீழ்ச்சி இது. எப்படியும் போகப்போகிறோம் என்பதால் அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை புஷ்.
பாதிப்பு அமெரிக்காவுக்கு மாத்திரமல்ல. ஒட்டுமொல்ல உலகத்துக்கும்தான். உலகமயமாக்கல் என்னும் மாய சிலந்தி வலையில் சிக்கிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு தேசமும் இந்த விநாடி வரை மீளமுடியாமல் தத்தளித்துக்கொண்டிருக்கிறது. முதலாளித்துவ உற்பத்தி முறைதான் சிறந்தது. அமெரிக்காவைப் பார்த்து நாம் கற்றுக்கொள்வோம் என்று சொல்லிக்கொண்டிருந்த பொருளாதார வல்லுனர்கள் வாயைத் திறக்க மறுக்கிறார்கள். ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்நிலை என்றால் பிற தேசங்களுக்கு?
அமெரிக்காவில் பொருளாத வீழ்ச்சி ஆரம்பமாவதற்கு முன்பே பிற தேசங்களில் தேக்கநிலை தொடங்கிவிட்டது. ஒரு நாள் அரிசி சாதம் சாப்பிடாவிட்டால் உயிரா போய்விடும்? ஆகவே ஒரு நாள் விட்டு ஒரு நாள் அரிசி வாங்குகிறார்கள் பங்களாதேஷ் மக்கள். அதுவும் சாத்தியம் ஆகாவிட்டால் வாரத்துக்கு ஒரு முறை. அல்லது மாதம் இரு முறை. அரை நாள் சம்பாதித்தியம் கொடுத்தால்தான் இரண்டு கிலோ அரிசி கிடைக்கும். எனில், மற்ற செலவுகளை எப்படிச் சமாளிப்பது? ஏமன் நாட்டிலும் இதே நிலைமைதான். ஒரே வித்தியாசம் அரிசிக்குப் பதிலாக ரொட்டி.
அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும்கூட கோதுமையின் விலை கடந்த ஆண்டு மட்டும் 120 மடங்கு அதிகரித்திருக்கிறது. அரிசி 75 சதவீதம். கடந்த மூன்று ஆண்டுகளில் உணவுப் பொருள்களின் விலை சற்றேறக்குரைய 83 மடங்கு அதிகரித்திருக்கிறது. கண்டுபிடித்து அறிவித்திருக்கிறது உலக வங்கி. இன்னும் 500 மில்லியன் டாலர் தேவையாம். அப்போதுதான் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரமுடியுமாம். ஓரளவுக்காவது.
என்ன செய்யலாம் என்று உலகப் பொருளாதார மேதைகளும் சமூக விஞ்ஞானிகளும் ஒரு பக்கம் கருத்தரங்குகள் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். மற்றொரு பக்கம், ஹைத்தி தேசத்து மக்கள் ஒரு மாற்று வழியைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். விலைவாசி உயர்ந்துவிட்டதாம் கண்ணே என்று குழந்தைகளிடம் பொருளாதார வகுப்புகள் எடுத்துக்கொண்டிருக்க முடியாது. ஆனானப்பட்ட அமெரிக்காவிலேயே உணவு விலை அதிகரித்துவிட்டதாம் என்று வரைபடத்தை விரித்து வைத்து கதை சொல்ல முடியாது.
களிமண்ணை எடுத்து வந்து நீர் விட்டு பிசைந்து, தட்டி தட்டி நெருப்பில் வாட்டி சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள். என் கண்ணே, இருப்பதை வைத்து திருப்தி அடைந்துகொள்வோம். இந்தா இது ஒரு புது விதமான கேக். கிட்டத்தட்ட ரொட்டி போலத்தான். மஞ்சள் வண்ண கேக் என்று இதனை நாம் அழைத்துக்கொள்வோம். எத்தனை வேண்டுமானாலும் சாப்பிடு. இதன் ருசி அலாதியானது. ஆரம்பத்தில் உனக்குப் பிடிக்காமல் போனாலும் போகப் போக பழகிவிடும். மட்டுமின்றி, நீ கேட்கும்போதெல்லாம் தயாரித்துத் தருகிறேன் அன்பே! ஹைத்தி குழந்தைகள் மண் கேக் சாப்பிடும் புகைப்படும் வெளிவந்து, உலகத்தை அதிரச் செய்தது.
இராக் மற்றும் ஆப்கனிஸ்தான். கட்டக்கடைசியாக இந்த இரு தேசங்களுக்கும் ஒரு நடை போய் பார்த்துவிட்டு வந்துவிடலாம் என்று புஷ் ஆசைப்பட்டது தவறாகிவிட்டது. திட்டத்தை முன்கூட்டியே அறிவித்தால் களேபரமாகிவிடும் என்பதால் சாமர்த்தியமாக, பொய்யான டைம் டேபிள் ஒன்றை வெளியிட்டு உலகத்தின் கவனத்தை திசை திருப்ப முயன்றது வெள்ளை மாளிகை.
காதும் காதும் வைத்ததுபோல் இராக் சென்று இறங்கியிருக்கிறார். இராக் அதிபர் நூரி அல் மாலிக்கோடு போஸ் கொடுத்துக்கொண்டே தன் தொண்டையைச் செருமியபோது அந்த எகிப்திய பத்திரிகையாளர் (முந்தாஸர் அல் ஜெய்தி) இரண்டு ஷூக்களையும் கழற்றி ஒன்றன் பின் ஒன்றாக வீச, வாத்து போல தலைகுனிந்திருக்கிறார் புஷ். (எப்போதோ தலைகுனிய வேண்டியவர்). முந்தாநாள் வரை ஒருவருக்கும் அறிமுகமாகாத அந்தப் பத்திரிகையாளர் இப்போது இராக்கியர்களின் ஹீரோ. நாங்கள் செய்ய நினைத்ததை அல்லது செய்யத் தவறியதைத்தான் அவர் செய்திருக்கிறார், விடுதலை செய்யுங்கள் என்று அங்கே ஆவேசத்துடன் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த வருடமும் ரத்த வருடம்தான் இராக்குக்கு. ஜனவரி 1, 2008 அன்று இருபத்தைந்து பேர் பாக்தாத்தில் வெடித்துச் சிதறியிருக்கிறார்கள். தற்கொலைப்படைத் தாக்குதல். இதுவரை கொல்லப்பட்ட இராக்கியர்களின் எண்ணிக்கை 98 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. இன்றைய தேதி வரை பயங்கர ஆயுதம் எதுவும் அகப்படவில்லை. ஸோ வாட், திஸ் ஈஸ் இண்டெலிஜண்ஷ் ஃபெயிலியர் என்று தோள்களைக் குலுக்குகிறார் புஷ்.
பிறகு, ஆப்கனிஸ்தான். தாலிபன்களிடம் இருந்து ஆப்கனை மீட்டுவிட்டதாக 2001ம் ஆண்டு அறிவித்தது அமெரிக்கா. மிகச் சரியாக, அந்தக் கணத்தில் இருந்துதான் அங்கே தீவிரவாதம் புதிய வீரியத்துடன் வெடிக்க ஆரம்பித்தது. இந்த ஆண்டு தொடங்கி முதல் ஆறு மாதங்களில் மட்டும் மொத்தம் 1853 குண்டுகள் விமானம் வழியாக ஆப்கன் முழுவதும் தூவப்பட்டிருக்கின்றன. ஜனவரி தொடங்கி ஆகஸ்ட் 2008 வரை மொத்தம் 1445 ஆப்கன்வாசிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
மேலும் மேலும் துருப்புகளை அனுப்பிக்கொண்டிருக்கிறது அமெரிக்கா. பாதுகாப்பைப் பலப்படுத்தவேண்டும் என்று மேலும் பல ராணுவத்தினரைக் குவிக்கிறது ஆப்கன் அரசு. எங்களையா அழிக்கப் பார்க்கிறீர்கள் என்று பன்மடங்கு தீவிரத்துடன் பாய்ந்து வருகிறார்கள் தாலிபன்கள். ஏராளமான இனக்குழுக்களைக் கொண்ட ஆப்கனிஸ்தானில் ஒவ்வொரு குழுவின் சார்பிலும் பல்வேறு போராளி இயக்கங்கங்கள் பெருகியிருக்கின்றன. மாட்டிக்கொண்டிருப்பவர்கள் மக்கள்தாம். மூன்று முனையில் இருந்தும் ஆபத்து. தாலிபன்களைக் கொல்கிறோம் என்று சொல்லி குண்டு வீசும் அமெரிக்க விமானங்கள். சந்தேகப்பட்டு தாக்க வரும் சொந்த தேசத்து ராணுவம். பிறகு, தாலிபன்கள். வேறு வழியே இல்லாமல், துப்பாக்கியுடன் வீதிகளில் இறங்கி ஓடிக்கொண்டிருக்கிறார்கள் மக்கள்.
போதை மருந்துகள் தவிர வேறு எதுவும் உருப்படியாக அங்கே உற்பத்தியாவது கிடையாது. ஒரு ஆப்கனின் சராசரி ஆயுள்காலம் 43 வயது மட்டுமே. ஐந்து வயதைத் தொடுவதற்குள் ஐந்தில் ஒரு குழந்தை இறந்துவிடுகிறது. சுகாதார நிலையங்கள் கிடையாது. அதிபர் ஹமீத் கர்ஸாய் மீது கொலைமுயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. தேர்தல் வரவிருக்கிறது. ஹமீதுக்கு அடுத்த முக்கியத் தலைவர் என்று இப்போதைக்கு யாரும் இல்லை.
தேவையில்லாமல் நாங்கள் மாட்டிக்கொண்டு அழிந்துகொண்டிருக்கிறோம் என்று குறைப்பட்டுக்கொள்கிறார் ஹமீத். தாலிபன், அல் காயிதா. இந்த இரு பெரும் தீவிரவாத இயக்கங்கள் செழித்துக்கொண்டிருப்பது பாகிஸ்தானில். ஆப்கனிஸ்தானில் அல்ல. நியாயப்படி பார்த்தால் அமெரிக்கா பாகிஸ்தானின் மீது தன் பார்வையையும் ராணுவத்தையும் திருப்பவேண்டும். அதைவிட்டுவிட்டு எங்கள் எல்லையில் குண்டு வீசுவது தகுமா?
ஒபாமா முன்வைக்கும் தீர்வு ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை. இராக்கில் இருந்து படிப்படியாக ராணுவத்தை விலக்கிக்கொள்வதாக அறிவிக்கிறார். ஆனால், இராக்கைக் காப்பாற்ற ஒரு டீம் அங்கேயே தங்கியிருக்குமாம். தவிரவும், விலக்கிக்கொள்ளப்படும் துருப்புகள் ஆப்கனிஸ்தானில் குவிக்கப்படும் என்று சொல்கிறார். அடுத்த ஆண்டும் இதே போல் ஆப்கனிஸ்தான் மீது குண்டுகள் தூவிக்கொண்டிருந்தால், ஆப்கனிஸ்தான் உலக வரைபடத்தில் தங்கியிருக்காது.
இராக், ஆப்கனிஸ்தானுக்கு அடுத்தபடியாக, அதிர்ச்சியலைகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் நாடு, பாகிஸ்தான். சென்ற ஆண்டு முடிவில் (டிசம்பர் 27, 2007) பெனாசீர் புட்டோ கொல்லப்பட்டதையடுத்து குழப்பத்துடனும் பீதியுடனும் ஆரம்பித்தது பாகிஸ்தானின் புது வருடம். முஷரஃப் பதவி விலகினார். பெனாசீரின் கணவர் ஆஸிஃப் அலி ஜர்தாரி புதிய பிரதமராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். ஜர்தாரியை, பத்து பர்செண்ட் என்றுதான் அழைப்பார்கள். தொட்டதற்கெல்லாம் கமிஷன் கேட்பாராம். இப்போது அதற்கெல்லாம் நேரம் கிடைக்கிறதா என்று தெரியவில்லை. ஆயிரத்தெட்டு பிரச்னைகள் அங்கே. 2008 செப்டம்பர் 20 அன்று ஹோட்டல் மாரியட் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டது. பாகிஸ்தானின் முதல் பெரும் ஐந்து நட்சத்திர ஹோட்டல். ஆயிரம் கிலோ வெடி மருந்துகளைக் கொண்டு தாக்கினார்கள். அதே ஹோட்டலில் நடத்தப்பட்ட மூன்றாவது அட்டாக் அது.
சமீபத்தில், மும்பை பற்றிஎரிந்தபோதும் சரி, லஷ்கர்தான் காரணம் என்று இந்தியா விரலைக் காட்டியபின்பும் சரி, ஜர்தாரியால் மேலதிகம் எதுவும் செய்ய இயலவில்லை. நாங்களும் உங்களைப் போலவே தாக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறோம் என்று மூக்கால் அழுதுகொண்டிருக்கிறார். அடுத்து இந்தியாவின் எந்த மூலையில் தாக்குதல் நடத்தப்பட்டாலும் இந்தியா படையெடுத்துவரும் என்று ஜர்தாரிக்குத் தெரியும். லஷ்கரை ஒழிக்கிறோம் என்று அமெரிக்கா முன்னால் சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்டு, பயந்து பயந்து, தயங்கி தயங்கி நடவடிக்கை என்னும் பெயரில் என்னத்தையோ செய்துகொண்டிருக்கிறார்.
நெல்சன் மண்டேலா தனது 90வது பிறந்த நாளைக் கொண்டாடியபோது (ஜுன் 27, 2008) ஒரு விநோதமான பரிசு அவருக்கு வந்து சேர்ந்தது. உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் தீவிரவாதிகள் என்னும் பட்டியலில் இருந்து அமெரிக்கா அவர் பெயரையும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் பெயரையும் அழித்திருக்கிறது. இத்தனை காலம் உங்கள் பெயரை பட்டியலில் வைத்திருந்ததற்கு வெட்கப்படுகிறோம் என்று அறிவித்தது அமெரிக்கா. 46664. சிறையில் இருந்தபோது மண்டேலாவின் அடையாளம் இந்த எண். இன்று தென் ஆப்பிரிக்காவை உலுக்கியெடுத்துக்கொண்டிருக்கும் முக்கிய பிரச்னை எய்ட்ஸ். மண்டேலாவின் சிறை எண் 46664 இப்போது எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரசாரத்தின் குறியீடாக மாறியிருக்கிறது.
ஆங் சான் சூ கீயும் தன் பிறந்த நாளைக் கொண்டாடினார். (ஜுன் 19, 2008) ஆனால் பூட்டிய கதவுக்குள். ஹேப்பி பர்த்டே பாடல் இல்லை. ஒரே ஒரு மெழுகுவர்த்தி மட்டும் ஒரு ஓரத்தில் எரிந்துகொண்டிருந்தது. மின்சாரம் இல்லை. கடந்து போன நர்கீஸ் சூறாவளியில் வீட்டின் மேற்கூரை காணாமல் போய்விட்டது. சூ கீயை விடுவிக்க மியான்மர் அரசாங்கத்துக்கு இன்னமும் மனம் வரவில்லை.
ஆகஸ்ட் மாதம் பீய்ஜிங்கில் நடந்த கோலாகல ஒலிம்பிக்ஸை தனக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொண்டது திபெத். சீன ஏகாதிபத்தியம் ஒழிக என்னும் பதாகையைத் தாங்கிப் பிடித்தபடி பௌத்த லாமாக்கள் தெருக்களில் இறங்கினார்கள். அமைதிப் போராட்டம் உதவாது என்று முடிவு செய்த திபெத்திய இளைஞர்கள் ஆவேசத்துடன் கோஷம் போட ஆரம்பித்தார்கள். சீனர்கள் எங்கள் இனத்தை அழிக்கிறார்கள். எங்கள் மதத்தை, மொழியை, கலாசாரத்தை, உரிமைகளை நசுக்குகிறார்கள். உலக மக்களே, ஒலிம்பிக்ஸ் விளையாட்டுகளை புறக்கணியுங்கள். சீனாவை கண்டியுங்கள். எங்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவியுங்கள். போராட்டங்கள் அடக்கப்பட்டன. இது அநியாயம் என்று எகிறி குதித்த நாடுகள் ஒன்றன் பின் ஒன்றாக சீனாவோடு கைகோர்த்துக்கொண்டன.
இனி என்னால் முடியாது என்று சரண்டர் ஆனார் தலாய் லாமா. திபெத் கோரிக்கை அத்துடன் முடிவுக்கு வந்தது. சீன தலைவர் ஹூ ஜிண்டாவ் கம்யூனிஸத்தைச் சுருட்டி குப்பைத்தொட்டியில் வீசிவிட்டு, கதவுகளை அகலமாகத் திறந்துவிட்டிருக்கிறார். ஆசியாவின் வலிமையான சக்தியாக சீனா இந்த ஆண்டு உருவெடுத்திருக்கிறது.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்துவைக்க எகிப்து ஜூன் மாதம் முன் வந்தது. பிரச்னை தீர்ந்தபாடில்லை. 2005ம் ஆண்டு அதிகாரபூர்வமாக காஸாவில் இருந்து படைகளை விலக்கிக்கொண்டது இஸ்ரேல். அதாவது பெயரளவுக்கு. ஆனால், அது வெறும் கண்துடைப்புதான் என்கிறது பாலஸ்தீனப் போராளி இயக்கம் (இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் தீவிரவாத இயக்கம்) ஹமாஸ். காஸா முனையில் இஸ்ரேலிய துருப்புகள் நிரம்பியிருக்கின்றன. இங்கள்ள பாலஸ்தீனர்கள் பெரும்பாலும் அகதிகள் முகாம்களில் வசிக்கிறார்கள். ஐ.நா. சாப்பாடு பொட்டலம் போட்டுக்கொண்டிருக்கிறது.
ரஷ்யாவில், அதிபர் புடினின் பாப்புலாரிட்டி அதிகரித்திருக்கிறது. எண்ணெய் விலை ஏற்றம் ரஷ்யாவை செழிப்படைய செய்திருக்கிறது. இந்த வருடம், ஸ்டாலினின் கல்லறையில் நிறைய மலர் வளையங்கள் வைக்கப்பட்டன. ஆசானே உங்களைத் தவறாகப் புரிந்துகொண்டதற்கு மன்னிக்கவும் என்று பல கடிதங்கள்.
க்யூபாவில் ரால் காஸ்ட்ரோ அமைதியாக ஆட்சி நடத்திக்கொண்டிருக்கிறார். ஃபிடல் அவ்வப்போது கடிதங்கள் எழுதிக்கொண்டிருக்கிறார். ஒபாமாவை வாழ்த்தினார். கூடவே, கண்டித்தார். இலங்கையில் போர் முடிந்தபாடில்லை. எல்.டி.டி.ஈ.யின் பலம் இந்த ஆண்டு வெகுவாகக் குறைந்துவிட்டதாக சிங்கள ராணுவம் பெருமிதத்துடன் அறிவித்தது. விடுதலைப் புலிகள் இதை மறுத்துள்ளனர்.
அமெரிக்கா உள்பட, உலகின் பல பகுதிகளில் கம்யூனிச அலை அடித்துக்கொண்டிருக்கிறது. சும்மா சும்மா திட்டவேண்டாம் மார்க்ஸ் பொருளாதாரத்தைப் பற்றி என்னதான் சொல்லியிருக்கிறார் பார்ப்போம் என்று தேட ஆரம்பித்திருக்கிறார்கள். மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் ஆகியோரின் புத்தகங்கள் அதிக அளவில் விற்பனை ஆகியிருக்கின்றன. இந்தியாவில், சத்திய சோதனை அதிக பதிப்புகளைக் கண்டிருக்கிறது.
(ஆனந்த விகடனி்ல் வெளிவந்த என் கட்டுரை)
மாற்றம். ஒபாமா தன் அரசியல் சித்ததாந்தமாக முன்வைத்த இந்த மந்திரச்சொல்லைதான் உலகமே உச்சரித்துக்கொண்டிருக்கிறது. சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை 2008.போராட்டங்கள். ஏமாற்றங்கள். தோல்விகள். காயங்கள். ஏழை தேசம், பணக்கார தேசம் என்று பாகுபாடில்லாமல் எங்கும் பிரச்னைகள். வாழ்வா சாவா போராட்டம். வீதிக்குத் திரண்டு வந்து வாய் வலிக்கக் கோஷம் போட்டுக்கொண்டிருக்கிறார்கள் மக்கள்.
எதற்கெடுத்தாலும் அமெரிக்காவைக் குற்றம் சாட்டுவதே வேலையாகப் போய்விட்டது என்று அங்கலாய்த்துக்கொண்டிருந்தவர்கள்கூட ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். ஆம், இந்த வருடத்தை அலைகழிக்கும் பெரும்பாலான அரசியல் பிரச்னைகளின் ஆணிவேர் அமெரிக்கா.
அங்கிருந்தே தொடங்குவோம். பங்குச்சந்தையில் கொடிகட்டிப் பறந்துகொண்டிருந்த ஐந்து பெரும் நிறுவனங்களில் மூன்று (பேர் ஸ்டீன்ஸ், மெரில் லிஞ்ச், லேமன் பிரதர்ஸ்) முடங்கிவிட்டது. உலகின் மிக சக்திவாய்ந்த காப்பீடு நிறுவனமாகத் தன்னை முன்னிறுத்திக்கொண்ட ஏ.ஐ.ஜி. தத்தளித்துக்கொண்டிருக்கிறது. சகாய விலையில் கிடைக்கிறதே என்று வீட்டுக்கடன் வாங்கியவர்கள் வீட்டை இழந்து, வேலையை இழந்து, கடனை மட்டும் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். வங்கிகள். வட்டிக்குக் கடன் கொடுக்கும் அந்த ஊர் சேட்டு கம்பெனிகள். ரியல் எஸ்டேட் நிறுவனங்கள். இந்த மூன்று துறைகளிலும் ஏற்பட்ட ஊழல்கள், மோசடிகள், தவறான அணுகுமுறைகள் காரணமாக ஏற்பட்ட மிக மோசமான பொரும்ளாதார வீழ்ச்சி இது. எப்படியும் போகப்போகிறோம் என்பதால் அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை புஷ்.
பாதிப்பு அமெரிக்காவுக்கு மாத்திரமல்ல. ஒட்டுமொல்ல உலகத்துக்கும்தான். உலகமயமாக்கல் என்னும் மாய சிலந்தி வலையில் சிக்கிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு தேசமும் இந்த விநாடி வரை மீளமுடியாமல் தத்தளித்துக்கொண்டிருக்கிறது. முதலாளித்துவ உற்பத்தி முறைதான் சிறந்தது. அமெரிக்காவைப் பார்த்து நாம் கற்றுக்கொள்வோம் என்று சொல்லிக்கொண்டிருந்த பொருளாதார வல்லுனர்கள் வாயைத் திறக்க மறுக்கிறார்கள். ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்நிலை என்றால் பிற தேசங்களுக்கு?
அமெரிக்காவில் பொருளாத வீழ்ச்சி ஆரம்பமாவதற்கு முன்பே பிற தேசங்களில் தேக்கநிலை தொடங்கிவிட்டது. ஒரு நாள் அரிசி சாதம் சாப்பிடாவிட்டால் உயிரா போய்விடும்? ஆகவே ஒரு நாள் விட்டு ஒரு நாள் அரிசி வாங்குகிறார்கள் பங்களாதேஷ் மக்கள். அதுவும் சாத்தியம் ஆகாவிட்டால் வாரத்துக்கு ஒரு முறை. அல்லது மாதம் இரு முறை. அரை நாள் சம்பாதித்தியம் கொடுத்தால்தான் இரண்டு கிலோ அரிசி கிடைக்கும். எனில், மற்ற செலவுகளை எப்படிச் சமாளிப்பது? ஏமன் நாட்டிலும் இதே நிலைமைதான். ஒரே வித்தியாசம் அரிசிக்குப் பதிலாக ரொட்டி.
அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும்கூட கோதுமையின் விலை கடந்த ஆண்டு மட்டும் 120 மடங்கு அதிகரித்திருக்கிறது. அரிசி 75 சதவீதம். கடந்த மூன்று ஆண்டுகளில் உணவுப் பொருள்களின் விலை சற்றேறக்குரைய 83 மடங்கு அதிகரித்திருக்கிறது. கண்டுபிடித்து அறிவித்திருக்கிறது உலக வங்கி. இன்னும் 500 மில்லியன் டாலர் தேவையாம். அப்போதுதான் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரமுடியுமாம். ஓரளவுக்காவது.
என்ன செய்யலாம் என்று உலகப் பொருளாதார மேதைகளும் சமூக விஞ்ஞானிகளும் ஒரு பக்கம் கருத்தரங்குகள் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். மற்றொரு பக்கம், ஹைத்தி தேசத்து மக்கள் ஒரு மாற்று வழியைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். விலைவாசி உயர்ந்துவிட்டதாம் கண்ணே என்று குழந்தைகளிடம் பொருளாதார வகுப்புகள் எடுத்துக்கொண்டிருக்க முடியாது. ஆனானப்பட்ட அமெரிக்காவிலேயே உணவு விலை அதிகரித்துவிட்டதாம் என்று வரைபடத்தை விரித்து வைத்து கதை சொல்ல முடியாது.
களிமண்ணை எடுத்து வந்து நீர் விட்டு பிசைந்து, தட்டி தட்டி நெருப்பில் வாட்டி சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள். என் கண்ணே, இருப்பதை வைத்து திருப்தி அடைந்துகொள்வோம். இந்தா இது ஒரு புது விதமான கேக். கிட்டத்தட்ட ரொட்டி போலத்தான். மஞ்சள் வண்ண கேக் என்று இதனை நாம் அழைத்துக்கொள்வோம். எத்தனை வேண்டுமானாலும் சாப்பிடு. இதன் ருசி அலாதியானது. ஆரம்பத்தில் உனக்குப் பிடிக்காமல் போனாலும் போகப் போக பழகிவிடும். மட்டுமின்றி, நீ கேட்கும்போதெல்லாம் தயாரித்துத் தருகிறேன் அன்பே! ஹைத்தி குழந்தைகள் மண் கேக் சாப்பிடும் புகைப்படும் வெளிவந்து, உலகத்தை அதிரச் செய்தது.
இராக் மற்றும் ஆப்கனிஸ்தான். கட்டக்கடைசியாக இந்த இரு தேசங்களுக்கும் ஒரு நடை போய் பார்த்துவிட்டு வந்துவிடலாம் என்று புஷ் ஆசைப்பட்டது தவறாகிவிட்டது. திட்டத்தை முன்கூட்டியே அறிவித்தால் களேபரமாகிவிடும் என்பதால் சாமர்த்தியமாக, பொய்யான டைம் டேபிள் ஒன்றை வெளியிட்டு உலகத்தின் கவனத்தை திசை திருப்ப முயன்றது வெள்ளை மாளிகை.
காதும் காதும் வைத்ததுபோல் இராக் சென்று இறங்கியிருக்கிறார். இராக் அதிபர் நூரி அல் மாலிக்கோடு போஸ் கொடுத்துக்கொண்டே தன் தொண்டையைச் செருமியபோது அந்த எகிப்திய பத்திரிகையாளர் (முந்தாஸர் அல் ஜெய்தி) இரண்டு ஷூக்களையும் கழற்றி ஒன்றன் பின் ஒன்றாக வீச, வாத்து போல தலைகுனிந்திருக்கிறார் புஷ். (எப்போதோ தலைகுனிய வேண்டியவர்). முந்தாநாள் வரை ஒருவருக்கும் அறிமுகமாகாத அந்தப் பத்திரிகையாளர் இப்போது இராக்கியர்களின் ஹீரோ. நாங்கள் செய்ய நினைத்ததை அல்லது செய்யத் தவறியதைத்தான் அவர் செய்திருக்கிறார், விடுதலை செய்யுங்கள் என்று அங்கே ஆவேசத்துடன் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த வருடமும் ரத்த வருடம்தான் இராக்குக்கு. ஜனவரி 1, 2008 அன்று இருபத்தைந்து பேர் பாக்தாத்தில் வெடித்துச் சிதறியிருக்கிறார்கள். தற்கொலைப்படைத் தாக்குதல். இதுவரை கொல்லப்பட்ட இராக்கியர்களின் எண்ணிக்கை 98 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. இன்றைய தேதி வரை பயங்கர ஆயுதம் எதுவும் அகப்படவில்லை. ஸோ வாட், திஸ் ஈஸ் இண்டெலிஜண்ஷ் ஃபெயிலியர் என்று தோள்களைக் குலுக்குகிறார் புஷ்.
பிறகு, ஆப்கனிஸ்தான். தாலிபன்களிடம் இருந்து ஆப்கனை மீட்டுவிட்டதாக 2001ம் ஆண்டு அறிவித்தது அமெரிக்கா. மிகச் சரியாக, அந்தக் கணத்தில் இருந்துதான் அங்கே தீவிரவாதம் புதிய வீரியத்துடன் வெடிக்க ஆரம்பித்தது. இந்த ஆண்டு தொடங்கி முதல் ஆறு மாதங்களில் மட்டும் மொத்தம் 1853 குண்டுகள் விமானம் வழியாக ஆப்கன் முழுவதும் தூவப்பட்டிருக்கின்றன. ஜனவரி தொடங்கி ஆகஸ்ட் 2008 வரை மொத்தம் 1445 ஆப்கன்வாசிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
மேலும் மேலும் துருப்புகளை அனுப்பிக்கொண்டிருக்கிறது அமெரிக்கா. பாதுகாப்பைப் பலப்படுத்தவேண்டும் என்று மேலும் பல ராணுவத்தினரைக் குவிக்கிறது ஆப்கன் அரசு. எங்களையா அழிக்கப் பார்க்கிறீர்கள் என்று பன்மடங்கு தீவிரத்துடன் பாய்ந்து வருகிறார்கள் தாலிபன்கள். ஏராளமான இனக்குழுக்களைக் கொண்ட ஆப்கனிஸ்தானில் ஒவ்வொரு குழுவின் சார்பிலும் பல்வேறு போராளி இயக்கங்கங்கள் பெருகியிருக்கின்றன. மாட்டிக்கொண்டிருப்பவர்கள் மக்கள்தாம். மூன்று முனையில் இருந்தும் ஆபத்து. தாலிபன்களைக் கொல்கிறோம் என்று சொல்லி குண்டு வீசும் அமெரிக்க விமானங்கள். சந்தேகப்பட்டு தாக்க வரும் சொந்த தேசத்து ராணுவம். பிறகு, தாலிபன்கள். வேறு வழியே இல்லாமல், துப்பாக்கியுடன் வீதிகளில் இறங்கி ஓடிக்கொண்டிருக்கிறார்கள் மக்கள்.
போதை மருந்துகள் தவிர வேறு எதுவும் உருப்படியாக அங்கே உற்பத்தியாவது கிடையாது. ஒரு ஆப்கனின் சராசரி ஆயுள்காலம் 43 வயது மட்டுமே. ஐந்து வயதைத் தொடுவதற்குள் ஐந்தில் ஒரு குழந்தை இறந்துவிடுகிறது. சுகாதார நிலையங்கள் கிடையாது. அதிபர் ஹமீத் கர்ஸாய் மீது கொலைமுயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. தேர்தல் வரவிருக்கிறது. ஹமீதுக்கு அடுத்த முக்கியத் தலைவர் என்று இப்போதைக்கு யாரும் இல்லை.
தேவையில்லாமல் நாங்கள் மாட்டிக்கொண்டு அழிந்துகொண்டிருக்கிறோம் என்று குறைப்பட்டுக்கொள்கிறார் ஹமீத். தாலிபன், அல் காயிதா. இந்த இரு பெரும் தீவிரவாத இயக்கங்கள் செழித்துக்கொண்டிருப்பது பாகிஸ்தானில். ஆப்கனிஸ்தானில் அல்ல. நியாயப்படி பார்த்தால் அமெரிக்கா பாகிஸ்தானின் மீது தன் பார்வையையும் ராணுவத்தையும் திருப்பவேண்டும். அதைவிட்டுவிட்டு எங்கள் எல்லையில் குண்டு வீசுவது தகுமா?
ஒபாமா முன்வைக்கும் தீர்வு ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை. இராக்கில் இருந்து படிப்படியாக ராணுவத்தை விலக்கிக்கொள்வதாக அறிவிக்கிறார். ஆனால், இராக்கைக் காப்பாற்ற ஒரு டீம் அங்கேயே தங்கியிருக்குமாம். தவிரவும், விலக்கிக்கொள்ளப்படும் துருப்புகள் ஆப்கனிஸ்தானில் குவிக்கப்படும் என்று சொல்கிறார். அடுத்த ஆண்டும் இதே போல் ஆப்கனிஸ்தான் மீது குண்டுகள் தூவிக்கொண்டிருந்தால், ஆப்கனிஸ்தான் உலக வரைபடத்தில் தங்கியிருக்காது.
இராக், ஆப்கனிஸ்தானுக்கு அடுத்தபடியாக, அதிர்ச்சியலைகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் நாடு, பாகிஸ்தான். சென்ற ஆண்டு முடிவில் (டிசம்பர் 27, 2007) பெனாசீர் புட்டோ கொல்லப்பட்டதையடுத்து குழப்பத்துடனும் பீதியுடனும் ஆரம்பித்தது பாகிஸ்தானின் புது வருடம். முஷரஃப் பதவி விலகினார். பெனாசீரின் கணவர் ஆஸிஃப் அலி ஜர்தாரி புதிய பிரதமராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். ஜர்தாரியை, பத்து பர்செண்ட் என்றுதான் அழைப்பார்கள். தொட்டதற்கெல்லாம் கமிஷன் கேட்பாராம். இப்போது அதற்கெல்லாம் நேரம் கிடைக்கிறதா என்று தெரியவில்லை. ஆயிரத்தெட்டு பிரச்னைகள் அங்கே. 2008 செப்டம்பர் 20 அன்று ஹோட்டல் மாரியட் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டது. பாகிஸ்தானின் முதல் பெரும் ஐந்து நட்சத்திர ஹோட்டல். ஆயிரம் கிலோ வெடி மருந்துகளைக் கொண்டு தாக்கினார்கள். அதே ஹோட்டலில் நடத்தப்பட்ட மூன்றாவது அட்டாக் அது.
சமீபத்தில், மும்பை பற்றிஎரிந்தபோதும் சரி, லஷ்கர்தான் காரணம் என்று இந்தியா விரலைக் காட்டியபின்பும் சரி, ஜர்தாரியால் மேலதிகம் எதுவும் செய்ய இயலவில்லை. நாங்களும் உங்களைப் போலவே தாக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறோம் என்று மூக்கால் அழுதுகொண்டிருக்கிறார். அடுத்து இந்தியாவின் எந்த மூலையில் தாக்குதல் நடத்தப்பட்டாலும் இந்தியா படையெடுத்துவரும் என்று ஜர்தாரிக்குத் தெரியும். லஷ்கரை ஒழிக்கிறோம் என்று அமெரிக்கா முன்னால் சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்டு, பயந்து பயந்து, தயங்கி தயங்கி நடவடிக்கை என்னும் பெயரில் என்னத்தையோ செய்துகொண்டிருக்கிறார்.
நெல்சன் மண்டேலா தனது 90வது பிறந்த நாளைக் கொண்டாடியபோது (ஜுன் 27, 2008) ஒரு விநோதமான பரிசு அவருக்கு வந்து சேர்ந்தது. உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் தீவிரவாதிகள் என்னும் பட்டியலில் இருந்து அமெரிக்கா அவர் பெயரையும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் பெயரையும் அழித்திருக்கிறது. இத்தனை காலம் உங்கள் பெயரை பட்டியலில் வைத்திருந்ததற்கு வெட்கப்படுகிறோம் என்று அறிவித்தது அமெரிக்கா. 46664. சிறையில் இருந்தபோது மண்டேலாவின் அடையாளம் இந்த எண். இன்று தென் ஆப்பிரிக்காவை உலுக்கியெடுத்துக்கொண்டிருக்கும் முக்கிய பிரச்னை எய்ட்ஸ். மண்டேலாவின் சிறை எண் 46664 இப்போது எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரசாரத்தின் குறியீடாக மாறியிருக்கிறது.
ஆங் சான் சூ கீயும் தன் பிறந்த நாளைக் கொண்டாடினார். (ஜுன் 19, 2008) ஆனால் பூட்டிய கதவுக்குள். ஹேப்பி பர்த்டே பாடல் இல்லை. ஒரே ஒரு மெழுகுவர்த்தி மட்டும் ஒரு ஓரத்தில் எரிந்துகொண்டிருந்தது. மின்சாரம் இல்லை. கடந்து போன நர்கீஸ் சூறாவளியில் வீட்டின் மேற்கூரை காணாமல் போய்விட்டது. சூ கீயை விடுவிக்க மியான்மர் அரசாங்கத்துக்கு இன்னமும் மனம் வரவில்லை.
ஆகஸ்ட் மாதம் பீய்ஜிங்கில் நடந்த கோலாகல ஒலிம்பிக்ஸை தனக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொண்டது திபெத். சீன ஏகாதிபத்தியம் ஒழிக என்னும் பதாகையைத் தாங்கிப் பிடித்தபடி பௌத்த லாமாக்கள் தெருக்களில் இறங்கினார்கள். அமைதிப் போராட்டம் உதவாது என்று முடிவு செய்த திபெத்திய இளைஞர்கள் ஆவேசத்துடன் கோஷம் போட ஆரம்பித்தார்கள். சீனர்கள் எங்கள் இனத்தை அழிக்கிறார்கள். எங்கள் மதத்தை, மொழியை, கலாசாரத்தை, உரிமைகளை நசுக்குகிறார்கள். உலக மக்களே, ஒலிம்பிக்ஸ் விளையாட்டுகளை புறக்கணியுங்கள். சீனாவை கண்டியுங்கள். எங்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவியுங்கள். போராட்டங்கள் அடக்கப்பட்டன. இது அநியாயம் என்று எகிறி குதித்த நாடுகள் ஒன்றன் பின் ஒன்றாக சீனாவோடு கைகோர்த்துக்கொண்டன.
இனி என்னால் முடியாது என்று சரண்டர் ஆனார் தலாய் லாமா. திபெத் கோரிக்கை அத்துடன் முடிவுக்கு வந்தது. சீன தலைவர் ஹூ ஜிண்டாவ் கம்யூனிஸத்தைச் சுருட்டி குப்பைத்தொட்டியில் வீசிவிட்டு, கதவுகளை அகலமாகத் திறந்துவிட்டிருக்கிறார். ஆசியாவின் வலிமையான சக்தியாக சீனா இந்த ஆண்டு உருவெடுத்திருக்கிறது.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்துவைக்க எகிப்து ஜூன் மாதம் முன் வந்தது. பிரச்னை தீர்ந்தபாடில்லை. 2005ம் ஆண்டு அதிகாரபூர்வமாக காஸாவில் இருந்து படைகளை விலக்கிக்கொண்டது இஸ்ரேல். அதாவது பெயரளவுக்கு. ஆனால், அது வெறும் கண்துடைப்புதான் என்கிறது பாலஸ்தீனப் போராளி இயக்கம் (இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் தீவிரவாத இயக்கம்) ஹமாஸ். காஸா முனையில் இஸ்ரேலிய துருப்புகள் நிரம்பியிருக்கின்றன. இங்கள்ள பாலஸ்தீனர்கள் பெரும்பாலும் அகதிகள் முகாம்களில் வசிக்கிறார்கள். ஐ.நா. சாப்பாடு பொட்டலம் போட்டுக்கொண்டிருக்கிறது.
ரஷ்யாவில், அதிபர் புடினின் பாப்புலாரிட்டி அதிகரித்திருக்கிறது. எண்ணெய் விலை ஏற்றம் ரஷ்யாவை செழிப்படைய செய்திருக்கிறது. இந்த வருடம், ஸ்டாலினின் கல்லறையில் நிறைய மலர் வளையங்கள் வைக்கப்பட்டன. ஆசானே உங்களைத் தவறாகப் புரிந்துகொண்டதற்கு மன்னிக்கவும் என்று பல கடிதங்கள்.
க்யூபாவில் ரால் காஸ்ட்ரோ அமைதியாக ஆட்சி நடத்திக்கொண்டிருக்கிறார். ஃபிடல் அவ்வப்போது கடிதங்கள் எழுதிக்கொண்டிருக்கிறார். ஒபாமாவை வாழ்த்தினார். கூடவே, கண்டித்தார். இலங்கையில் போர் முடிந்தபாடில்லை. எல்.டி.டி.ஈ.யின் பலம் இந்த ஆண்டு வெகுவாகக் குறைந்துவிட்டதாக சிங்கள ராணுவம் பெருமிதத்துடன் அறிவித்தது. விடுதலைப் புலிகள் இதை மறுத்துள்ளனர்.
அமெரிக்கா உள்பட, உலகின் பல பகுதிகளில் கம்யூனிச அலை அடித்துக்கொண்டிருக்கிறது. சும்மா சும்மா திட்டவேண்டாம் மார்க்ஸ் பொருளாதாரத்தைப் பற்றி என்னதான் சொல்லியிருக்கிறார் பார்ப்போம் என்று தேட ஆரம்பித்திருக்கிறார்கள். மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் ஆகியோரின் புத்தகங்கள் அதிக அளவில் விற்பனை ஆகியிருக்கின்றன. இந்தியாவில், சத்திய சோதனை அதிக பதிப்புகளைக் கண்டிருக்கிறது.
(ஆனந்த விகடனி்ல் வெளிவந்த என் கட்டுரை)
Subscribe to:
Posts (Atom)