1984 போபால் பயங்கரத்தை மீண்டும் நினைவுபடுத்தவேண்டிய அவசியம் வந்துவிட்டது. இந்தப் பேரழிவுக்குக் காரணமான ஓர் அமெரிக்க நிறுவனத்தை (இப்போது அதன் பெயர் டௌ கெமிக்கல்ஸ்) அரசாங்கம் இந்த நிமிடம் வரை தாங்கிப் பிடித்துக்கொண்டு இருப்பது வேதனையளிக்கிறது. செய்தி அறிய இங்கே. சற்றே விரிவான ஒரு அறிமுகம் கீழே.
0
போபால், டிசம்பர் 2, 1984. போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டு பகுதிவாசிகள் உறங்க ஆரம்பித்தபோதே நச்சுப் புகை கசிய ஆரம்பித்திருக்கிறது. மொத்தம் ஐந்து லட்சம் பேர். துடிக்கத் துடிதுடிக்க எழுந்து ஓட ஆரம்பித்தார்கள். என்ன, ஏது என்று தெரியவில்லை. உறக்கம் கலைந்த எரிச்சல் கண்களுக்கு. ஆனால், மார்பு முழுவதும் ஏன் எரியவேண்டும்? ஏன் இத்தனை இருமல்? கை, கால்கள் ஏன் பின்னிக்கொள்கின்றன? இதென்ன சாத்தானின் வேலையா? முன்னரே இறந்து போன குழந்தைகளை தூக்கிக்கொண்டு வாசலுக்கு ஓடினார்கள் பெண்கள். தடுக்கி விழுந்தார்கள். வாசல் முழுவதும் பிணங்கள். அலறவேண்டும் என்று கூடத் தோன்றவில்லை. அன்றைய தினம் இறந்துபோனவர்கள் மட்டும் 8000 பேர்.
1984-ல் குழி தோண்ட ஆரம்பித்தவர்கள் இன்னமும் தோண்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இன்றைய தேதி வரை நச்சு வாயு தாக்குதலால் இறந்துபோனவர்களின் எண்ணிக்கை 22,000. பிரசவம் என்றாலே துடிதுடித்துப்போகிறார்கள் பெண்கள். ஆணா பெண்ணா? கறுப்பா சிவப்பா? அப்பா ஜாடையா அம்மா ஜாடையா? அக்கறையில்லை அவர்களுக்கு. ஐயோ கடவுளே, குழந்தை உயிருடன், முழுமையாக இருக்குமா?
ஓர் உயிர் முழுமையாக பிறப்பது அங்கே அபூர்வம். கைகள் இருக்கும். இரண்டல்ல. இரண்டரை. அல்லது மூன்றேகால். இடுப்புக்குக் கீழே கால் இருக்கவேண்டிய பகுதியில் கை. மார்புக்கு வெளியில் துருத்தியபடி துடிக்கும் இதயம். உடைந்த வாய். பானை போல் வீங்கிய தலை. வேலை செய்யாத சிறுநீரகம். ரத்த ஓட்டம் இல்லாத உடல். பார்வையற்ற மூன்று கண்கள். பின்பக்கம் வால். சில சமயம், இன்னதுதான் என்று கண்டுபிடிக்கவே இயலாத வகையில் கனமாக ஒரு மாமிசத் துண்டு பிரசவம் ஆவதுண்டு.
ஒரு வேளை குழந்தை ஆரோக்கியமாகப் பிறந்துவிட்டால் நாள்பட நாள்பட குறைபாடுகள் ஒவ்வொன்றாக வெளியில் வர ஆரம்பிக்கும்.சிறிநீரகக் கோளாறு, சுவாசக் குறைபாடுகள், மனஅழுத்தம். இன்னும் நிறைய. இன்றைய தேதியில், 1,20,000 பேருக்கும் அதிகமானவர்கள் தீவிர மருத்துவ சிகிச்சை பெறாமல் தத்தளித்துக்கொண்டிருக்கிறார்கள்.
அந்த நச்சு வாயு கசிந்தது யூனியன் கார்பைடு என்னும் ரசாயன நிறுவனத்திலிருந்து. அந்த நிறுவனத்தின் தலைவர் வாரன் ஆண்டர்ஸன். பாய்ந்து சென்று அவரை அமுக்கினார்கள். ஒரு சில நாள்கள். தன் கோட் மீதும், டை மீதும் படிந்திருந்த தூசியை ஊதிவிட்டபடியே வெளியில் வந்துவிட்டார் அவர். வந்த கையோடு, அமெரிக்காவுக்குப் பறந்துவிட்டார். குட்டியூண்டு பூட்டு ஒன்றை காசு கொடுத்து வாங்கி ஃபாக்டரிக்கு வெளியில் பூட்டிவிட்டார்கள். ஆச்சு.
கமிட்டி மேல் கமிட்டி வைத்தார்கள். யூனியன் கார்பைட் மீதும் ஆண்டர்ஸன் மீதும் வழக்குப் பதிவு செய்தார்கள். அமெரிக்காவுக்கு ஃபேக்ஸ் அனுப்பினார்கள். கூரியரில் குற்றப்பத்திரிகை. கூடவே இரண்டு கோரிக்கைகள். பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு தா. ஆண்டர்ஸனை இந்தியாவுக்கு அனுப்பு.
எங்களைக் கேட்காதே யூனியன் கார்பைடை கேட்டுக்கொள் என்றது அமெரிக்கா. அமெரிக்கக் கம்பெனிதான். ஆனால் இயங்கிக்கொண்டிருந்தது இந்தியாவில் அல்லவா? நாங்கள் பாதுகாப்புடன்தான் வேலை செய்துகொண்டிருந்தோம். இந்த விபத்து எப்படி நேர்ந்தது என்றே எங்களுக்குத் தெரியாது என்று உதட்டைப் பிதுக்கியது யூனியன் கார்பைட். இந்தியா முன்வைத்த மனுவை கையில் எடுத்துப் பார்த்துவிட்டு, ரொம்ப அதிகம் என்று முணுமுணுத்த அதிகாரிகள் வேண்டுமானால் பத்து, பதினைந்து பர்செண்ட் தருகிறோம் ஓகேவா என்று கண்ணடித்தார்கள். ஆண்டர்ஸன்? ரிடையர்மெண்ட் வாங்கிவிட்டார். ஏதோ ஒரு ரிசார்ட்டில் கடற்கரை மணலில் பல வண்ணக் குடையின் கீழே காலை நீட்டி அமர்ந்து ஆரஞ்சு பழச் சாறு உறிஞ்சிக்கொண்டிருக்கிறார்.
நவம்பர் 1988-ல் உச்ச நீதிமன்றத்தின் உந்துதலால், யூனியன் கார்பைடு அழுதுக்கொண்டே 470 மில்லியன் அமெரிக்க டாலரை நஷ்ட ஈடாக அளிக்க முன்வந்தது. அதாவது, இந்தியா விண்ணப்பித்திருந்த தொகையில் இருந்து வெறும் பதினைந்து சதவீதம் மட்டுமே. ஐந்து லட்ச சொச்சம் பேருக்கு நஷ்ட ஈட்டுத் தொகை பிரித்துக்கொடுக்கப்பட்டதாக செய்தி வெளிவந்தது.
இந்த நிமிடம் வரை பல ஆயிரம் டன் ரசாயன நச்சு பொருள்கள் போபால் முழுவதும் சிதறிக்கிடக்கின்றன. நிலத்தடி நீரில் நஞ்சு. கிணற்றில், குழாய் நீரில் நஞ்சு. பெண்களின் மார்பில் சுரக்கும் பாலில் என்னவோ ஒரு பெயரில் எத்தனையோ சதவீத நஞ்சு கலந்திருப்பதாக ஒரு மருத்துவ குழு அறிக்கை சமர்ப்பித்திருக்கிறது. ஆக, அடுத்தடுத்த தலைமுறைக்கும் சேர்த்தே குழி தோண்டவேண்டியிருக்கும்.
இன்னும் எத்தனை லட்சம் பேர்? எத்தனை லட்சம் குழந்தைகள்? இன்னும் என்னென்ன கோர நோய்கள் போபாலைத் தாக்க காத்திருக்கின்றன? ஆராய்ந்துகொண்டிருக்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்களை மீட்க என்ன செய்யவேண்டும் என்பது பற்றி ஒரு தெளிவான திட்டம் இன்னமும் உருவாக்கப்படவில்லை. எவ்வளவு செலவு ஆகும்? தெரியவில்லை.
1993-ம் ஆண்டு அமெரிக்க உச்ச நீதி மன்றம் அளித்த தீர்ப்பு இது. பசி, பட்டினி, பிரசவம், நோய் என்று போபாலில் இருந்து ஒரு பெட்டிஷன் கூட அமெரிக்காவுக்கு வரக்கூடாது. ஒரு டாலர் கூட இங்கிருந்து இனி கிடைக்காது.
பொறுத்துப் பொறுத்துப் பார்த்த மக்கள், குமுறி வெடிக்க ஆரம்பித்தார்கள். ஒவ்வொரு நாளும் புதுப்புது வியாதிகள். இறப்பு சதவீதம் உயர்ந்துகொண்டே போகிறது. எல்லாவற்றையும் விட கொடுமையான மற்றொரு தகவல், யூனியன் கார்பைட் கொடுத்த அந்த கொஞ்ச நஞ்ச நஷ்டஈடும் பெரும்பாலான மக்களுக்கு போய்ச் சேரவில்லை. அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள் என்று யார் யாரோ இடையில் புகுந்து பொய்க் கணக்குக் காட்டி சுருட்டிக்கொண்டுவிட்டார்கள். எங்கே சென்று, யார் சட்டையைப் பிடிப்பது?
2001ம் ஆண்டு யூனியன் கார்பைட் நிறுவனத்தை டௌ கெமிக்கல்ஸ் (Dow Chemicals) என்னும் நிறுவனம் சுவீகாரம் செய்துகொண்டது. வியட்நாம் மீது அமெரிக்கா நடத்திய யுத்தத்தில் (1959-1975)அமெரிக்காவுக்குத் துணை போன நிறுவனம் இது. அமெரிக்காவின் ஆர்டரை ஏற்றுக்கொண்டு, நாபாம் (Napalm) என்னும் திரவத்தை வேண்டிய மட்டும் உற்பத்தி செய்து கொடுத்தவர்கள் இவர்கள். ஆனால், சில ஆயிரம் பேர்களை மட்டுமே இந்தத் திரவியம் கொன்றது. கஸ்டமர் சேடிஸ்ஃபேக்ஷன் இல்லை. அடடா சொதப்பிவிட்டதே என்று வருத்தப்பட்ட டௌ, மெனக்கெட்டு ஓவர்டைம் செய்து கூடுதல் வீரியமுள்ள ஏஜெண்ட் ஆரஞ்சு என்னும் ரசாயனத்தை தயாரித்துக்கொடுத்தது. அப்படியே அள்ளிச்சென்று வானத்தில் இருந்து தூவிக்கொண்டே சென்றனர் அமெரிக்கர்கள். இந்த முறை பாதிக்கப்பட்ட வியட்நாமியர்களின் எண்ணிக்கை சில லட்சங்களைத் தொட்டது. ஆஹா என்றது அமெரிக்கா. பலே, பலே!
அன்று அனுபவித்த அதே எரிச்சலை மீண்டும் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள் போபால் மக்கள். கோபம். வெறுப்பு. தவிரவும், துக்கம். அமெரிக்கா கைவிரித்துவிட்டது. யூனியன் கார்பைடு என்று ஒரு கம்பெனியே இன்று இங்கே இல்லை. ஆண்டர்ஸன் ஆப்பிள் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்.
இந்திய அரசாங்கம்? என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் அத்தனை பேரும்? பெயரை மாற்றிக்கொண்டால் விட்டுவிடுவீர்களா? எங்களுக்குப் பணம் வேண்டும். நீங்கள் கொடுக்கும் பிசாத்துப் பணம் செத்துப் போனவர்களைத் திருப்பித் தராது. ஆனால், உடைந்து போய் கிடக்கும் எங்கள் குழந்தைகளின் கன்னங்களை சரிசெய்ய எங்களுக்குப் பணம் வேண்டும். ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தை காண்பிக்கலாம். பிறக்கும் அத்தனை குழந்தைகளின் கன்னங்களிலும் யூனியன் கார்பைட் மாறிமாறி அறைந்துக்கொண்டிருக்கிறது. இனி, நாங்கள் எந்தக் காற்றை சுவாசிப்பது? எந்த நீரை அருந்துவது? என்ன சாப்பிடுவது? இதற்கெல்லாம் யார் காரணம்? நாங்கள் என்ன செய்யவேண்டும்? எங்களை என்ன செய்யப்போகிறீர்கள்?
போபால் மக்களுக்கு இன்னமும் விடை கிடைத்தபாடில்லை.
நன்றி : கல்கி
September 29, 2008
September 27, 2008
கடத்தல் கூடாரத்தின் கதை
மும்பை நிழலுகம் பற்றிய ஆய்வில் சென்ற ஆண்டு ஈடுபட்டிருந்தேன். சில முக்கியக் குறிப்புகள்.
இந்தியாவில் கிரிமனல் நடவடிக்கைகளுக்கு உகந்த இடம் எது என்று பத்து கடத்தல்காரர்களிடம் மைக் நீட்டிக் கேட்டால் ஒன்பது பேர் மும்பை என்பார்கள். ஏன்?
1) மும்பையின் பொருளாதாரம் :
பிற நகரங்களோடு ஒப்பிடும்போது மும்பையின் பொருளாதாரம் போஷாக்கானது. மும்பை ஒரு முக்கிய வர்த்தக நகரம் என்பதால் பணப் புழக்கம் இங்கு அதிகம். உள்ளுர் கரன்ஸிகள் மாத்திரமல்ல, உலகிலுள்ள அனைத்து நாடுகளின் கரன்ஸிகளும் சர்வ சாதாரணமாக இங்கு கிடைக்கிறது. வர்த்தகம் எங்கு அதிகமோ அங்குதானே கடத்தலும் செழிப்புடன் வளரும்?
2) புவியியல் அமைப்பு :
மும்பையின் புவியியல் அமைப்பு குற்றவாளிகளுக்கு மிகவும் ஏற்றது. திரை மறைவு வேலைகள் செய்வது இங்கு சுலபம், ஒளிந்துக்கொள்வதும் சுலபம். தாராவி போன்ற அகண்டவெளியில் ஒருவர் ஒளிந்துக்கொண்டால் அவரை கண்டுபிடிப்பது இயலாத காரியம். குற்றவாளிகள் ஒளிந்துகொள்ள யாருமற்ற காடுகள்தான் தேவை என்று கிடையாது. மும்பையே போதும். இந்தியாவில் வேறு எங்கும் இல்லாதபடி மும்பையில் மட்டும் நிழலுலகத்தின் சாம்ராஜ்ஜியம் விருட்சத்தைப் போல படர்ந்துள்ளதற்கு இதுதான் காரணம்.
3) மும்பை துறைமுகம் :
மும்பை என்றில்லை, உலகெங்கிலுமுள்ள பல துறைமுகங்கள் கடத்தல்காரர்களின் சொர்கபுரியாக இன்று வரை நீடிக்கிறது. இன்று நேற்று முளைத்ததல்ல இது. துறைமுகம் எப்போது உருவானதோ அப்போது முதல் இதுதான் நிலைமை.
ஏன்?
பெரும்பயணம் மேற்கொள்ளும் கப்பல் ஊழியர்கள் எப்போதாவதுதான் தரையை வந்தடைகிறார்கள். அவர்களுடைய பெரும்பாலான வாழ்க்கை கடல் பயணத்திலேயே கழிந்துவிடுகிறது. கப்பலில் அவர்களுக்கு பொழுதுபோக்குகள் குறைச்சல். ஒரு வித இறுக்கமான சூழலிலேயே வாழ வேண்டிய கட்டாயம். ஆகவே கரையைத் தொடும்போதெல்லாம் அவர்கள் உற்சாகம் கரைபுரண்டு ஓடத்தொடங்கிவிடும். இவர்கள் தேவையை உணர்ந்தே துறைமுகத்தை ஒட்டிய பகுதிகளில் மது வியாபாரம் தொடங்கப்பட்டது. இதே காரணத்துக்காகத்தான் பாலியல் தொழிலும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கவனிக்கவும். இவை இரண்டுமே அரசாங்கத்தின் பார்வையில் படாமல் நடத்தப்பட வேண்டிய சங்கதிகள். அப்படியானால் இவற்றை யார் எடுத்து நடத்த முடியும்? பெரிய ஆள்கள்? சரி, ஆள்கள் இருக்கிறார்கள் என்றே வைத்துக்கொள்வோம். அவர்களை காவல்துறை மோப்பம் பிடித்து உள்ளே தள்ளிவிட்டால்?
ஆக, வியாபாரம் நடத்த ஆள்கள் தேவை, காவல்துறையின் குறுக்கீடு இல்லாமல் கவனித்துக் கெள்ள ஆள்கள் தேவை. மது, மாது போன்றவற்றை தங்குத் தடையில்லாமல் 'சப்ளை' செய்யவேண்டும். மிக முக்கியமாக, இவை அனைத்தையும் ஒருங்கிணைக்க ஒரு தலைமை தேவை.
இங்குதான் தாதாக்கள் நுழைகிறார்கள். கரீம் லாலா, வரதராஜ முதலியார் தொடங்கி தாவூத் இப்ராகிம் வரை அனைவரும் இதைத்தான் செய்துகொண்டிருக்கிறார்கள். அப்போது மது, மாது மட்டுமே தேவைப்பட்டது. இப்போது கூடுதலாக அபின், கஞ்சா, வெடிமருந்து, தங்கம், வெள்ளி என்று தேவைகள் பெருகி விட்டன. முதலில் கப்பலில் பணி புரிந்த ஊழியர்களுக்காக மட்டுமே திரை மறைவு வேலைகள் செய்யப்படவேண்டியிருந்தது. இப்போது இந்த வட்டம் விரிவடைந்துவிட்டது.
அடிமட்ட ஆள்கள் முதல் மேல்தட்டு வர்க்கம் வரை போதை மருந்துகளை உட்கொள்ளும் ஆள்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. அதேபோலத்தான் ஆயுதங்களின் தேவைகளும். 'இன்ன ரகம், இன்ன அளவு, இத்தனை மணிக்குள் இத்தனை வேண்டும்' என்று ஆர்டர் கொடுப்பவர்கள் பெருகிக் கொண்டே போகிறார்கள்.
நிழலுலகை நம்பித்தான் இவர்கள் பிழைத்துக்கொண்டிருக்கிறார்கள். இவர்களை நம்பித்தான் நிழலுலகம் பிழைத்துக்கொண்டிருக்கிறது.
4) தாதாக்கள் இல்லாமல் வர்த்தகம் இல்லை
அரசாங்கம், நிழலுலகம் இரண்டும் சரிக்கு சமானமாக மும்பையை நிர்வகித்து வருகிறது. தனித்தனி வழிகளில். இது கிட்டத்தட்ட எழுதப்படாத ஓர் ஒப்பந்தம். நட்ட நடுப்பகலில் மோட்டார் சைக்கிளில் வந்து கடைக்குக் கடை கப்பம் வாங்கிச் செல்லும் சிறு தாதாக்களை இங்கு அநாயசமாகச் சந்திக்கலாம்.
ஒரு சின்ன பிஸினஸ் தொடங்கவேண்டும் என்றாலும்கூட நிழலுலகத்தின் உதவி தேவை. உங்கள் பிசினஸ் சட்டப்பூர்வமாக நடப்பதாக இருந்தால், ஒரு தாதாவின் மிரட்டலிலிருந்து தப்பிக்க மற்றொரு தாதாவுக்கு கப்பம் கட்ட வேண்டியிருக்கும். சட்டத்துக்குப் புறம்பான பிசினஸ் என்றால் கேட்கவே வேண்டும்.
பணம் அதிகம் புழங்கும் வர்த்தகங்களில் தாதாக்களின் பங்கு நிறையவே இருக்கும். உதாரணம் ரியல் எஸ்டேட், சினிமா.
இந்தியாவில் கிரிமனல் நடவடிக்கைகளுக்கு உகந்த இடம் எது என்று பத்து கடத்தல்காரர்களிடம் மைக் நீட்டிக் கேட்டால் ஒன்பது பேர் மும்பை என்பார்கள். ஏன்?
1) மும்பையின் பொருளாதாரம் :
பிற நகரங்களோடு ஒப்பிடும்போது மும்பையின் பொருளாதாரம் போஷாக்கானது. மும்பை ஒரு முக்கிய வர்த்தக நகரம் என்பதால் பணப் புழக்கம் இங்கு அதிகம். உள்ளுர் கரன்ஸிகள் மாத்திரமல்ல, உலகிலுள்ள அனைத்து நாடுகளின் கரன்ஸிகளும் சர்வ சாதாரணமாக இங்கு கிடைக்கிறது. வர்த்தகம் எங்கு அதிகமோ அங்குதானே கடத்தலும் செழிப்புடன் வளரும்?
2) புவியியல் அமைப்பு :
மும்பையின் புவியியல் அமைப்பு குற்றவாளிகளுக்கு மிகவும் ஏற்றது. திரை மறைவு வேலைகள் செய்வது இங்கு சுலபம், ஒளிந்துக்கொள்வதும் சுலபம். தாராவி போன்ற அகண்டவெளியில் ஒருவர் ஒளிந்துக்கொண்டால் அவரை கண்டுபிடிப்பது இயலாத காரியம். குற்றவாளிகள் ஒளிந்துகொள்ள யாருமற்ற காடுகள்தான் தேவை என்று கிடையாது. மும்பையே போதும். இந்தியாவில் வேறு எங்கும் இல்லாதபடி மும்பையில் மட்டும் நிழலுலகத்தின் சாம்ராஜ்ஜியம் விருட்சத்தைப் போல படர்ந்துள்ளதற்கு இதுதான் காரணம்.
3) மும்பை துறைமுகம் :
மும்பை என்றில்லை, உலகெங்கிலுமுள்ள பல துறைமுகங்கள் கடத்தல்காரர்களின் சொர்கபுரியாக இன்று வரை நீடிக்கிறது. இன்று நேற்று முளைத்ததல்ல இது. துறைமுகம் எப்போது உருவானதோ அப்போது முதல் இதுதான் நிலைமை.
ஏன்?
பெரும்பயணம் மேற்கொள்ளும் கப்பல் ஊழியர்கள் எப்போதாவதுதான் தரையை வந்தடைகிறார்கள். அவர்களுடைய பெரும்பாலான வாழ்க்கை கடல் பயணத்திலேயே கழிந்துவிடுகிறது. கப்பலில் அவர்களுக்கு பொழுதுபோக்குகள் குறைச்சல். ஒரு வித இறுக்கமான சூழலிலேயே வாழ வேண்டிய கட்டாயம். ஆகவே கரையைத் தொடும்போதெல்லாம் அவர்கள் உற்சாகம் கரைபுரண்டு ஓடத்தொடங்கிவிடும். இவர்கள் தேவையை உணர்ந்தே துறைமுகத்தை ஒட்டிய பகுதிகளில் மது வியாபாரம் தொடங்கப்பட்டது. இதே காரணத்துக்காகத்தான் பாலியல் தொழிலும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கவனிக்கவும். இவை இரண்டுமே அரசாங்கத்தின் பார்வையில் படாமல் நடத்தப்பட வேண்டிய சங்கதிகள். அப்படியானால் இவற்றை யார் எடுத்து நடத்த முடியும்? பெரிய ஆள்கள்? சரி, ஆள்கள் இருக்கிறார்கள் என்றே வைத்துக்கொள்வோம். அவர்களை காவல்துறை மோப்பம் பிடித்து உள்ளே தள்ளிவிட்டால்?
ஆக, வியாபாரம் நடத்த ஆள்கள் தேவை, காவல்துறையின் குறுக்கீடு இல்லாமல் கவனித்துக் கெள்ள ஆள்கள் தேவை. மது, மாது போன்றவற்றை தங்குத் தடையில்லாமல் 'சப்ளை' செய்யவேண்டும். மிக முக்கியமாக, இவை அனைத்தையும் ஒருங்கிணைக்க ஒரு தலைமை தேவை.
இங்குதான் தாதாக்கள் நுழைகிறார்கள். கரீம் லாலா, வரதராஜ முதலியார் தொடங்கி தாவூத் இப்ராகிம் வரை அனைவரும் இதைத்தான் செய்துகொண்டிருக்கிறார்கள். அப்போது மது, மாது மட்டுமே தேவைப்பட்டது. இப்போது கூடுதலாக அபின், கஞ்சா, வெடிமருந்து, தங்கம், வெள்ளி என்று தேவைகள் பெருகி விட்டன. முதலில் கப்பலில் பணி புரிந்த ஊழியர்களுக்காக மட்டுமே திரை மறைவு வேலைகள் செய்யப்படவேண்டியிருந்தது. இப்போது இந்த வட்டம் விரிவடைந்துவிட்டது.
அடிமட்ட ஆள்கள் முதல் மேல்தட்டு வர்க்கம் வரை போதை மருந்துகளை உட்கொள்ளும் ஆள்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. அதேபோலத்தான் ஆயுதங்களின் தேவைகளும். 'இன்ன ரகம், இன்ன அளவு, இத்தனை மணிக்குள் இத்தனை வேண்டும்' என்று ஆர்டர் கொடுப்பவர்கள் பெருகிக் கொண்டே போகிறார்கள்.
நிழலுலகை நம்பித்தான் இவர்கள் பிழைத்துக்கொண்டிருக்கிறார்கள். இவர்களை நம்பித்தான் நிழலுலகம் பிழைத்துக்கொண்டிருக்கிறது.
4) தாதாக்கள் இல்லாமல் வர்த்தகம் இல்லை
அரசாங்கம், நிழலுலகம் இரண்டும் சரிக்கு சமானமாக மும்பையை நிர்வகித்து வருகிறது. தனித்தனி வழிகளில். இது கிட்டத்தட்ட எழுதப்படாத ஓர் ஒப்பந்தம். நட்ட நடுப்பகலில் மோட்டார் சைக்கிளில் வந்து கடைக்குக் கடை கப்பம் வாங்கிச் செல்லும் சிறு தாதாக்களை இங்கு அநாயசமாகச் சந்திக்கலாம்.
ஒரு சின்ன பிஸினஸ் தொடங்கவேண்டும் என்றாலும்கூட நிழலுலகத்தின் உதவி தேவை. உங்கள் பிசினஸ் சட்டப்பூர்வமாக நடப்பதாக இருந்தால், ஒரு தாதாவின் மிரட்டலிலிருந்து தப்பிக்க மற்றொரு தாதாவுக்கு கப்பம் கட்ட வேண்டியிருக்கும். சட்டத்துக்குப் புறம்பான பிசினஸ் என்றால் கேட்கவே வேண்டும்.
பணம் அதிகம் புழங்கும் வர்த்தகங்களில் தாதாக்களின் பங்கு நிறையவே இருக்கும். உதாரணம் ரியல் எஸ்டேட், சினிமா.
September 25, 2008
பிசாசு, அமெரிக்கா, இயேசு நாதர்
(வெனிசுலா அதிபர் ஹியூகோ சாவேஸிடம் வெவ்வேறு சமயங்களில் கேட்கப்பட்ட முக்கியமான பதினெட்டு கேள்விகள் இவை. சாவேஸின் வாழ்க்கை வரலாறை எழுதிக்கொண்டிருந்த சமயத்தில் திரட்டப்பட்ட அவர் பேட்டிகளில் இருந்து இவற்றை மொழிபெயர்த்திருக்கிறேன்).
1) கேள்வி : நீங்கள் புஷ்ஷைப் பிசாசு என்று பகிரங்கமாகத் திட்டியது அநாகரிகமான செயல் என்று எல்லோரும் சொல்கிறார்கள். ஏன் அப்படிச் செய்தீர்கள்?
சாவேஸ் : அப்படியா சொல்கிறீர்கள்? பிசாசு என்று பேசுவது அநாகரிகமானது என்றால் பிற நாடுகளின் மீது குண்டு வீசுவதை எப்படிச் சொல்வீர்கள்? ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களைக் கொல்வதை என்னவென்று சொல்வீர்கள்? மற்றொரு நாட்டை ஆக்கிரமிப்பது எந்த மாதிரியான செயல்? சொந்த மக்களையே ஏமாற்றிக்கொண்டிருக்கும் ஒருவரை என்னவென்று அழைப்பது?
பேரழிவை உண்டாக்கம் ஆயுதங்களைப் பயன்படுத்தி பிறரைக் கொல்வது பிசாசின் செயல். இதில் எந்த சந்தேகமும் கிடையாது. ஃபலூஜாவில் (இராக்) பறவைகள் குவியல் குவியலாக மரித்திருக்கின்றன. கரப்பான் பூச்சிகள் செத்துப் போயிருக்கின்றன. ஓர் உயிரினம் கூட பாக்கியில்லாமல் அத்தனையும் அழிந்து போயிருக்கின்றன. இதையெல்லாம் என்னவென்று சொல்வது? ஒரு பிசாசைத் தவிர வேறு ஏதாவது இப்படிச் செய்யுமா?
புஷ் என்னை எத்தனையோ பெயர்களைச் சொல்லி திட்டியிருப்பதை நீங்கள் மறந்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன். வேண்டுமானால், சில பெயர்களை நினைவுப் படுத்துகிறேன். சர்வாதிகாரி, கொடுங்கோலன், போதை மருந்து கடத்தல்காரன். போதுமா? இப்படியெல்லாம் என்னை அழைக்கும் புஷ் எப்படிப்பட்ட நபர் என்று நான் சொல்லத்தானே வேண்டும்?
2) கேள்வி : உங்கள் நாட்டை சேர்ந்த யாராவது உங்களைப் பிசாசு என்று திட்டினால் சும்மா விடுவீர்களா?
சாவேஸ் : நீங்கள் வெனிசுலா வந்து பார்க்கவேண்டும். பிசாசு என்று நான் திட்டியதற்கே இத்தனை உணர்ச்சிவசப்படுகீறீர்களே, அங்கே வந்து பாருங்கள். வெனிசுலா டிவி நிகழ்ச்சி எதையாவது பாருங்கள். என்னை கண்டபடி திட்டுவார்கள். (சிரிக்கிறார்).
3) கேள்வி : எதற்கெடுத்தாலும் ஏன் புஷ்ஷை குறை சொல்கிறீர்கள்?
சாவேஸ் : மூன்று வேளை உணவு முழுவதுமாகக் கிடைக்காமல் எத்தனையோ அமெரிக்கர்கள் சிரமப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். மருத்துவ வசதி எல்லோருக்கும் இன்னும் கிடைத்துவிடவில்லை. எத்தனையோ ஏழைகள் வசிக்க இடமில்லாமல் அலைந்துகொண்டிருக்கிறார்கள். இத்தனை இருக்க, 500 பில்லியன் டாலரை ஆயுதங்கள் வாங்க புஷ் செலவிடுகிறார். அவரை குறை சொல்லாமல் என்ன செய்ய சொல்கிறீர்கள்? இந்தப் பணத்தை மிச்சம் பிடித்தால் அமெரிக்கா மட்டுமல்ல ஆப்பிரிக்காவிலும் மத்திய அமெரிக்காவிலும் உள்ள அத்தனை ஏழைகளும் மறுவாழ்வு பெற முடியும்.
4) கேள்வி : உங்கள் ஆட்சியைக் கவிழ்க்க ஜார்ஜ் புஷ் நேரடியாக சம்பந்தப்பட்டிருக்கிறார் என்று சொல்கிறீர்களா?
சாவேஸ் : அதுதான் உண்மை. நூறு சதவிகிதம் உண்மை. ஜார்ஜ் புஷ்ஷிடமிருந்து பணம் பெற்றதாகப் பலர் எங்களிடம் ஒப்புக்கொண்டுள்ளார்கள். அவர்களை நீதிமன்றம் விசாரித்துக்கொண்டிருக்கிறது. இப்படியெல்லாம் அமெரிக்கா சதி வேலை செய்வதை எங்களால் அனுமதிக்கவே முடியாது. இதே போல் அமெரிக்காவுக்கு போய் அமெரிக்கர்களுக்கு இதுபோல் பணம் கொடுத்து புஷ்ஷின் ஆட்சியைக் கவிழ்க்கச் சொன்னால் அவர் என்ன செய்வார்?
5) கேள்வி : உங்கள் நாட்டில் நடக்கும் தேர்தல்களில் கூட அமெரிக்கா தலையிடுவதாகச் சொல்லியிருக்கிறீர்கள். இது உண்மையா?
சாவேஸ் : இன்று நேற்று முளைத்ததல்ல இந்த தலையீடு. சுமார் 200 ஆண்டுகளாக அவர்கள் இதைத்தான் செய்துகொண்டிருக்கிறார்கள். நாங்கள் தேர்தலில் வெற்றி பெறக் கூடாது என்பதில் அமெரிக்கா உறுதியாக இருக்கிறது. அதற்காக என்னென்ன செய்ய வேண்டுமோ அனைத்தையும் செய்தார்கள். எங்களுக்கு எதிராக யாராவது இருக்கிறார்களா என்று பார்த்து அவர்களிடம் ஆயுதங்கள் கொடுத்து ஆட்சியைக் கவிழ்க்கச் சொன்னார்கள்.
6) கேள்வி : அமெரிக்க அரசியலின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?
சாவேஸ் : அமெரிக்க சாம்ராஜ்ஜியத்தின் கதை முடிந்துவிட்டது. இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் அமெரிக்காவின் தாக்கம் பிற நாடுகளிலிருந்தும் மறைந்துவிடும். அமெரிக்கக் கழுகைக் குழித் தோண்டிப் புதைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. அதை நாங்கள் பார்க்கத்தான் போகிறோம்.
7) கேள்வி : தனிப்பட்ட காரணங்களுக்காகத்தான் புஷ் இராக்கை ஆக்கிரமிக்க விரும்பினார் என்று சொல்வதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா?
சாவேஸ் : கிடையாது. இது புஷ்ஷின் தனிப்பட்ட காரணம் கிடையாது. பயங்கர ஆயுதங்களைத் தேடித்தான் இராக்குக்குள் நுழைந்தோம் என்று புஷ் கூறியதும் பொய்தான். அமெரிக்காவின் தற்போதைய தேவை எண்ணெய். எண்ணெய்க்காகத்தான் புஷ் இராக்கை ஆக்கிரமித்திருக்கிறார். அதே காரணங்களுக்காகத்தான் வெனிசுலாவையும் அவர் தொடர்ந்து குறி வைத்துக்கொண்டிருக்கிறார்.
8) கேள்வி : நீங்கள் அமெரிக்க எதிர்ப்பாளரா?
சாவேஸ் : நான் ஏகாதிபத்திய எதிர்ப்பாளர். அமெரிக்காவின் ஏகாதிபத்தியக் கொள்கைகளை நான் தீவிரமாக எதிர்க்கிறேன். இனியும் எதிர்ப்பேன்.
9) கேள்வி : உங்களுடைய தேர்தல் வாசகத்தைப் பார்த்தோம். ’நீங்கள் சாவேஸுக்கு எதிராக இருந்தால், மக்களுக்கு எதிராக இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.’ இப்படிச் சொல்வது கூட பயமுறுத்துவது போலத்தானே?
சாவேஸ் : இந்த வாக்கியத்தை வைத்து நாங்கள் யாரையும் பயமுறுத்தவில்லையே! என்னென்ன முன்னேற்றங்களைக் கொண்டு வந்தோம் என்பதன் அடிப்படையில் மட்டும்தான் நாங்கள் தேர்தல் பிரச்சாரம் செய்கிறோம். எனக்கு ஓட்டு போடாவிட்டால் கொன்று விடுவேன் என்று சொல்வதில்லை. எங்களுடைய எண்ணத்தை மக்களிடம் திணிக்கும் அநாகரீகத்தை செய்யமாட்டோம்.
10) கேள்வி : உங்கள் மீது ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. வெனிசுலாவிலுள்ள எண்ணெய் வளத்தைப் பயன்படுத்தி, அதிலிருந்து கிடைக்கும் வருவாயைப் பயன்படுத்தி உங்களை ஒரு ஹீரோவாக மாற்றிக்கொள்ள நீங்கள் முயற்சிக்கிறீர்கள். எல்லோருடைய கவனத்தையும் உங்கள் மீது திருப்புகிறீர்கள். உண்மையா?
சாவேஸ் : இயேசு நாதர் ஒரு முறை சொன்னதை எனக்கு நானே நினைவுப்படுத்திக்கொள்ள விரும்புகிறேன். ’அவர்களை மன்னித்துவிடுங்கள், தாம் என்ன செய்கிறோம் என்பதை அவர்கள் உணர்ந்திருக்கவில்லை.’ யாரோ சொல்லிக்கொடுத்ததை கிளிப்பிள்ளை போல் என்னிடம் வந்து கேட்காதீர்கள். நீங்களாகவே யோசித்துப் பாருங்கள். விடை கிடைக்கும்.
11) கேள்வி : அமெரிக்காவையும் புஷ்ஷையும் இத்தனை தீவிரமாக விமர்சிக்கும் உங்களை அமெரிக்கர்கள் எப்படி விமர்சிக்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா?
சாவேஸ் : அமெரிக்கர்கள் என்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி கவலைப்படுவதைவிட அமெரிக்கர்களின் எதிர்காலத்தைப் பற்றி நான் படும் கவலைதான் அதிகம். அமெரிக்காவுக்கு உள்ளேதான் அந்தப் பிசாசு இருக்கிறது.
12) கேள்வி : புஷ்ஷை மட்டும் எதிர்க்கிறீர்களா அல்லது ஒட்டுமொத்த அமெரிக்கர்களையுமா?
சாவேஸ் : அமெரிக்கர்களை நான் ஏன் எதிர்க்கவேண்டும்? ஆபிரகாம் லிங்கன், மார்டின் லூதர் கிங் போன்றவர்கள் ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள். அமெரிக்கர்கள் மீது எனக்கு எந்த விதமான வெறுப்பும் கிடையாது.
13) கேள்வி : அமெரிக்கா வெனிசுலாவை ஆக்கிரமிக்க முயல்கிறது என்ற குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறீர்கள். இது எந்த அளவுக்கு உண்மை?
சாவேஸ் : நூற்றுக்கு நூறு சதவிகிதம் உண்மை. வெனிசுலாவை ஆக்கிரமித்து கபளீகரம் செய்யும் திட்டம் அமெரிக்காவுக்கு உண்டு. எத்தனை ஜெட் விமானங்கள் வேவு பார்ப்பதற்காக எங்கள் வானத்தில் பறந்து செல்கின்றன என்று எனக்குத் தெரியும். எல்லாவற்றுக்கும் என்னிடம் ஆதாரம் உண்டு. அமெரிக்காவிலேயே எனக்குச் சில நண்பர்கள் இருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் வெள்ளை மாளிகையிலேயே என்னுடைய ஆள்கள் இருக்கிறார்கள். இது புஷ்
க்குத் தெரியாது.
14) கேள்வி : நீங்கள் ஒரு மார்க்சியவாதியா?
சாவேஸ் : நான் ஒரு மார்க்சியவாதி அல்ல. மார்க்ஸை நான் ஆழமாக வாசித்தது கிடையாது. நான் ஒரு பொலிவரியவாதி. மார்க்ஸை வாசிக்க நான் விரும்புகிறேன்.
15) கேள்வி : நீங்கள் ஒரு சர்வாதிகாரியாக மாறி வருகிறீர்கள் என்று சொல்கிறார்கள். அது சரியா?
சாவேஸ் : நீண்ட காலமாக சிலர் அப்படித்தான் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு என்னுடைய பதில் இதுதான். வெனிசுலாவுக்கு வாருங்கள். எங்கள் தெருக்களில் நடந்துச் செல்லுங்கள். எங்கள் மக்களிடம் பேசுங்கள். எங்கள் டிவியைப் பாருங்கள். செய்தித்தாள்களை வாசியுங்கள். பிறகு, உங்களுக்கே உண்மை தெரிந்துவிடும்.
புஷ்தான் மெய்யான சர்வாதிகாரி. என்ன ஏது என்று விசாரிக்காமல் ஒருவரை சிறையில் தள்ளும் வல்லமை கொண்டவர் புஷ். எல்லோருடைய டெலிபோனையும் அமெரிக்காவில் ஒட்டுக்கேட்கிறார்கள். லைப்ரரியிலிருந்து மக்கள் என்னென்ன புத்தகங்களை எடுத்துச் சென்று வாசிக்கிறார்கள் என்று வேவு பார்க்கிறார்கள். ’இராக்கை விட்டு வெளியேறு!’ என்று டி-ஷர்ட்டில் எழுதி வைத்திருப்பவர்களை சிறையில் தள்ளிய நாடு அமெரிக்கா.
16) கேள்வி : எண்ணெய் விஷயத்துக்கு வருவோம். அமெரிக்க நிறுவனங்கள் வரி செலுத்தவேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறீர்களாமே! வட அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சார்ந்த நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துகொள்ளமாட்டோம் என்று சொல்லியிருக்கிறீர்களாமே!
சாவேஸ் : அவர்கள் வெளியேறவேண்டும் என்பது எனது நோக்கம் அல்ல. அவர்களுக்கு நாங்கள் தேவை. எங்களுக்கு அவர்கள் தேவை. ஆனால் வரி செலுத்துவது பொதுவான ஒரு வழக்கம் அல்லவா? அதைக்கூட செய்ய மாட்டேன் என்று சொன்னால் எப்படி? வரி செலுத்தவில்லை. ராயல்டி செலுத்தவில்லை. என்னென்ன செய்கிறார்கள், என்னென்ன செய்திருக்கிறார்கள் போன்ற விவரங்களைச் சொல்வதில்லை. ஒப்பந்தத்தில் இருப்பதைக் காட்டிலும் நிறைய நிலங்களை வளைத்துப் போட்டிருக்கிறார்கள். தவிரவும், வெனிசுலாவின் சுற்றுப்புறச் சூழலை மாசுப்படுத்துகிறார்கள். அவர்களுக்கு நான் சொல்வது இதைத்தான். இனி ஒழுங்காக சட்டத்துக்குக் கட்டுப்பட்டு நடந்துகொள்ளுங்கள்.
17) கேள்வி : எண்ணெய் என்னும் ஒரு சமாசாரம் மட்டும் இல்லையென்றால், வெனிசுலா என்ன ஆகியிருக்கும்?
சாவேஸ் : ஒன்றும் ஆகியிருக்காது. நன்றாகவே இருக்கும். எண்ணெய் எங்கள் ஆதார சக்தி. இல்லையென்று மறுக்கவில்லை. ஆனால் அதற்காக, எண்ணெயை நம்பி மட்டுமே நாங்கள் இயங்கிக்கொண்டிருக்கிறோம் என்று நினைத்துவிடவேண்டாம். வெனிசுலாவை ஒரு விவசாய நாடாக மாற்ற நாங்கள் முயற்சித்துக்கொண்டிருக்கிறோம். மின்சார உற்பத்திக்காவும், ரயில் பாதைகள் அமைப்பதற்காகவும், சாலைகள் அமைப்பதற்காகவும் மில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்துகொண்டிருக்கிறோம். எண்ணெய் ஒரு சொட்டுக்கூட இல்லாமல் போகும் ஒரு நாள் வரலாம். ஆனால் இப்போதைக்கு அல்ல. இருநூறு ஆண்டுகளுக்குப் பிறகே. அது வரை எங்களுக்கு எண்ணெய் தட்டுப்பாடு வராது.
18) கேள்வி : உங்களுக்கு மத நம்பிக்கை உண்டா?
சாவேஸ் : உண்டு. என்னைப் பொறுத்தவரை இயேசு நாதர்தான் உலகின் முதல் சோஷலிசவாதி. தனது கொள்கைகளுக்காக அவர் உயிர் நீத்தார். சடங்குகளிலும் சம்பிரதாயங்களிலும் எனக்கு நம்பிக்கை கிடையாது. மதவாதிகள் இயேசு நாதரைப் பார்க்கும் பார்வை வேறு. நான் அவரைப் பார்க்கும் பார்வை வேறு. அவர் ஓர் அற்புத கடவுள் என்பதை விட, அவர் ஒரு கலகக்காரர் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்.
ஆதாரம் :
1. Chavez interviewed on US TV show By Tavis Smiley 04 October 2006
2. Hugo Chavez By Greg Palast July 2006 Issue
3. Venezuelan President On Rocky Relations with Washington, Koppel, Sept. 16, 2005
4. The Sound and Fury & Time magazine interviews Chavez By Tim Padgett, Time.com, 04 October 2006.
1) கேள்வி : நீங்கள் புஷ்ஷைப் பிசாசு என்று பகிரங்கமாகத் திட்டியது அநாகரிகமான செயல் என்று எல்லோரும் சொல்கிறார்கள். ஏன் அப்படிச் செய்தீர்கள்?
சாவேஸ் : அப்படியா சொல்கிறீர்கள்? பிசாசு என்று பேசுவது அநாகரிகமானது என்றால் பிற நாடுகளின் மீது குண்டு வீசுவதை எப்படிச் சொல்வீர்கள்? ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களைக் கொல்வதை என்னவென்று சொல்வீர்கள்? மற்றொரு நாட்டை ஆக்கிரமிப்பது எந்த மாதிரியான செயல்? சொந்த மக்களையே ஏமாற்றிக்கொண்டிருக்கும் ஒருவரை என்னவென்று அழைப்பது?
பேரழிவை உண்டாக்கம் ஆயுதங்களைப் பயன்படுத்தி பிறரைக் கொல்வது பிசாசின் செயல். இதில் எந்த சந்தேகமும் கிடையாது. ஃபலூஜாவில் (இராக்) பறவைகள் குவியல் குவியலாக மரித்திருக்கின்றன. கரப்பான் பூச்சிகள் செத்துப் போயிருக்கின்றன. ஓர் உயிரினம் கூட பாக்கியில்லாமல் அத்தனையும் அழிந்து போயிருக்கின்றன. இதையெல்லாம் என்னவென்று சொல்வது? ஒரு பிசாசைத் தவிர வேறு ஏதாவது இப்படிச் செய்யுமா?
புஷ் என்னை எத்தனையோ பெயர்களைச் சொல்லி திட்டியிருப்பதை நீங்கள் மறந்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன். வேண்டுமானால், சில பெயர்களை நினைவுப் படுத்துகிறேன். சர்வாதிகாரி, கொடுங்கோலன், போதை மருந்து கடத்தல்காரன். போதுமா? இப்படியெல்லாம் என்னை அழைக்கும் புஷ் எப்படிப்பட்ட நபர் என்று நான் சொல்லத்தானே வேண்டும்?
2) கேள்வி : உங்கள் நாட்டை சேர்ந்த யாராவது உங்களைப் பிசாசு என்று திட்டினால் சும்மா விடுவீர்களா?
சாவேஸ் : நீங்கள் வெனிசுலா வந்து பார்க்கவேண்டும். பிசாசு என்று நான் திட்டியதற்கே இத்தனை உணர்ச்சிவசப்படுகீறீர்களே, அங்கே வந்து பாருங்கள். வெனிசுலா டிவி நிகழ்ச்சி எதையாவது பாருங்கள். என்னை கண்டபடி திட்டுவார்கள். (சிரிக்கிறார்).
3) கேள்வி : எதற்கெடுத்தாலும் ஏன் புஷ்ஷை குறை சொல்கிறீர்கள்?
சாவேஸ் : மூன்று வேளை உணவு முழுவதுமாகக் கிடைக்காமல் எத்தனையோ அமெரிக்கர்கள் சிரமப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். மருத்துவ வசதி எல்லோருக்கும் இன்னும் கிடைத்துவிடவில்லை. எத்தனையோ ஏழைகள் வசிக்க இடமில்லாமல் அலைந்துகொண்டிருக்கிறார்கள். இத்தனை இருக்க, 500 பில்லியன் டாலரை ஆயுதங்கள் வாங்க புஷ் செலவிடுகிறார். அவரை குறை சொல்லாமல் என்ன செய்ய சொல்கிறீர்கள்? இந்தப் பணத்தை மிச்சம் பிடித்தால் அமெரிக்கா மட்டுமல்ல ஆப்பிரிக்காவிலும் மத்திய அமெரிக்காவிலும் உள்ள அத்தனை ஏழைகளும் மறுவாழ்வு பெற முடியும்.
4) கேள்வி : உங்கள் ஆட்சியைக் கவிழ்க்க ஜார்ஜ் புஷ் நேரடியாக சம்பந்தப்பட்டிருக்கிறார் என்று சொல்கிறீர்களா?
சாவேஸ் : அதுதான் உண்மை. நூறு சதவிகிதம் உண்மை. ஜார்ஜ் புஷ்ஷிடமிருந்து பணம் பெற்றதாகப் பலர் எங்களிடம் ஒப்புக்கொண்டுள்ளார்கள். அவர்களை நீதிமன்றம் விசாரித்துக்கொண்டிருக்கிறது. இப்படியெல்லாம் அமெரிக்கா சதி வேலை செய்வதை எங்களால் அனுமதிக்கவே முடியாது. இதே போல் அமெரிக்காவுக்கு போய் அமெரிக்கர்களுக்கு இதுபோல் பணம் கொடுத்து புஷ்ஷின் ஆட்சியைக் கவிழ்க்கச் சொன்னால் அவர் என்ன செய்வார்?
5) கேள்வி : உங்கள் நாட்டில் நடக்கும் தேர்தல்களில் கூட அமெரிக்கா தலையிடுவதாகச் சொல்லியிருக்கிறீர்கள். இது உண்மையா?
சாவேஸ் : இன்று நேற்று முளைத்ததல்ல இந்த தலையீடு. சுமார் 200 ஆண்டுகளாக அவர்கள் இதைத்தான் செய்துகொண்டிருக்கிறார்கள். நாங்கள் தேர்தலில் வெற்றி பெறக் கூடாது என்பதில் அமெரிக்கா உறுதியாக இருக்கிறது. அதற்காக என்னென்ன செய்ய வேண்டுமோ அனைத்தையும் செய்தார்கள். எங்களுக்கு எதிராக யாராவது இருக்கிறார்களா என்று பார்த்து அவர்களிடம் ஆயுதங்கள் கொடுத்து ஆட்சியைக் கவிழ்க்கச் சொன்னார்கள்.
6) கேள்வி : அமெரிக்க அரசியலின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?
சாவேஸ் : அமெரிக்க சாம்ராஜ்ஜியத்தின் கதை முடிந்துவிட்டது. இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் அமெரிக்காவின் தாக்கம் பிற நாடுகளிலிருந்தும் மறைந்துவிடும். அமெரிக்கக் கழுகைக் குழித் தோண்டிப் புதைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. அதை நாங்கள் பார்க்கத்தான் போகிறோம்.
7) கேள்வி : தனிப்பட்ட காரணங்களுக்காகத்தான் புஷ் இராக்கை ஆக்கிரமிக்க விரும்பினார் என்று சொல்வதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா?
சாவேஸ் : கிடையாது. இது புஷ்ஷின் தனிப்பட்ட காரணம் கிடையாது. பயங்கர ஆயுதங்களைத் தேடித்தான் இராக்குக்குள் நுழைந்தோம் என்று புஷ் கூறியதும் பொய்தான். அமெரிக்காவின் தற்போதைய தேவை எண்ணெய். எண்ணெய்க்காகத்தான் புஷ் இராக்கை ஆக்கிரமித்திருக்கிறார். அதே காரணங்களுக்காகத்தான் வெனிசுலாவையும் அவர் தொடர்ந்து குறி வைத்துக்கொண்டிருக்கிறார்.
8) கேள்வி : நீங்கள் அமெரிக்க எதிர்ப்பாளரா?
சாவேஸ் : நான் ஏகாதிபத்திய எதிர்ப்பாளர். அமெரிக்காவின் ஏகாதிபத்தியக் கொள்கைகளை நான் தீவிரமாக எதிர்க்கிறேன். இனியும் எதிர்ப்பேன்.
9) கேள்வி : உங்களுடைய தேர்தல் வாசகத்தைப் பார்த்தோம். ’நீங்கள் சாவேஸுக்கு எதிராக இருந்தால், மக்களுக்கு எதிராக இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.’ இப்படிச் சொல்வது கூட பயமுறுத்துவது போலத்தானே?
சாவேஸ் : இந்த வாக்கியத்தை வைத்து நாங்கள் யாரையும் பயமுறுத்தவில்லையே! என்னென்ன முன்னேற்றங்களைக் கொண்டு வந்தோம் என்பதன் அடிப்படையில் மட்டும்தான் நாங்கள் தேர்தல் பிரச்சாரம் செய்கிறோம். எனக்கு ஓட்டு போடாவிட்டால் கொன்று விடுவேன் என்று சொல்வதில்லை. எங்களுடைய எண்ணத்தை மக்களிடம் திணிக்கும் அநாகரீகத்தை செய்யமாட்டோம்.
10) கேள்வி : உங்கள் மீது ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. வெனிசுலாவிலுள்ள எண்ணெய் வளத்தைப் பயன்படுத்தி, அதிலிருந்து கிடைக்கும் வருவாயைப் பயன்படுத்தி உங்களை ஒரு ஹீரோவாக மாற்றிக்கொள்ள நீங்கள் முயற்சிக்கிறீர்கள். எல்லோருடைய கவனத்தையும் உங்கள் மீது திருப்புகிறீர்கள். உண்மையா?
சாவேஸ் : இயேசு நாதர் ஒரு முறை சொன்னதை எனக்கு நானே நினைவுப்படுத்திக்கொள்ள விரும்புகிறேன். ’அவர்களை மன்னித்துவிடுங்கள், தாம் என்ன செய்கிறோம் என்பதை அவர்கள் உணர்ந்திருக்கவில்லை.’ யாரோ சொல்லிக்கொடுத்ததை கிளிப்பிள்ளை போல் என்னிடம் வந்து கேட்காதீர்கள். நீங்களாகவே யோசித்துப் பாருங்கள். விடை கிடைக்கும்.
11) கேள்வி : அமெரிக்காவையும் புஷ்ஷையும் இத்தனை தீவிரமாக விமர்சிக்கும் உங்களை அமெரிக்கர்கள் எப்படி விமர்சிக்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா?
சாவேஸ் : அமெரிக்கர்கள் என்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி கவலைப்படுவதைவிட அமெரிக்கர்களின் எதிர்காலத்தைப் பற்றி நான் படும் கவலைதான் அதிகம். அமெரிக்காவுக்கு உள்ளேதான் அந்தப் பிசாசு இருக்கிறது.
12) கேள்வி : புஷ்ஷை மட்டும் எதிர்க்கிறீர்களா அல்லது ஒட்டுமொத்த அமெரிக்கர்களையுமா?
சாவேஸ் : அமெரிக்கர்களை நான் ஏன் எதிர்க்கவேண்டும்? ஆபிரகாம் லிங்கன், மார்டின் லூதர் கிங் போன்றவர்கள் ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள். அமெரிக்கர்கள் மீது எனக்கு எந்த விதமான வெறுப்பும் கிடையாது.
13) கேள்வி : அமெரிக்கா வெனிசுலாவை ஆக்கிரமிக்க முயல்கிறது என்ற குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறீர்கள். இது எந்த அளவுக்கு உண்மை?
சாவேஸ் : நூற்றுக்கு நூறு சதவிகிதம் உண்மை. வெனிசுலாவை ஆக்கிரமித்து கபளீகரம் செய்யும் திட்டம் அமெரிக்காவுக்கு உண்டு. எத்தனை ஜெட் விமானங்கள் வேவு பார்ப்பதற்காக எங்கள் வானத்தில் பறந்து செல்கின்றன என்று எனக்குத் தெரியும். எல்லாவற்றுக்கும் என்னிடம் ஆதாரம் உண்டு. அமெரிக்காவிலேயே எனக்குச் சில நண்பர்கள் இருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் வெள்ளை மாளிகையிலேயே என்னுடைய ஆள்கள் இருக்கிறார்கள். இது புஷ்
க்குத் தெரியாது.
14) கேள்வி : நீங்கள் ஒரு மார்க்சியவாதியா?
சாவேஸ் : நான் ஒரு மார்க்சியவாதி அல்ல. மார்க்ஸை நான் ஆழமாக வாசித்தது கிடையாது. நான் ஒரு பொலிவரியவாதி. மார்க்ஸை வாசிக்க நான் விரும்புகிறேன்.
15) கேள்வி : நீங்கள் ஒரு சர்வாதிகாரியாக மாறி வருகிறீர்கள் என்று சொல்கிறார்கள். அது சரியா?
சாவேஸ் : நீண்ட காலமாக சிலர் அப்படித்தான் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு என்னுடைய பதில் இதுதான். வெனிசுலாவுக்கு வாருங்கள். எங்கள் தெருக்களில் நடந்துச் செல்லுங்கள். எங்கள் மக்களிடம் பேசுங்கள். எங்கள் டிவியைப் பாருங்கள். செய்தித்தாள்களை வாசியுங்கள். பிறகு, உங்களுக்கே உண்மை தெரிந்துவிடும்.
புஷ்தான் மெய்யான சர்வாதிகாரி. என்ன ஏது என்று விசாரிக்காமல் ஒருவரை சிறையில் தள்ளும் வல்லமை கொண்டவர் புஷ். எல்லோருடைய டெலிபோனையும் அமெரிக்காவில் ஒட்டுக்கேட்கிறார்கள். லைப்ரரியிலிருந்து மக்கள் என்னென்ன புத்தகங்களை எடுத்துச் சென்று வாசிக்கிறார்கள் என்று வேவு பார்க்கிறார்கள். ’இராக்கை விட்டு வெளியேறு!’ என்று டி-ஷர்ட்டில் எழுதி வைத்திருப்பவர்களை சிறையில் தள்ளிய நாடு அமெரிக்கா.
16) கேள்வி : எண்ணெய் விஷயத்துக்கு வருவோம். அமெரிக்க நிறுவனங்கள் வரி செலுத்தவேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறீர்களாமே! வட அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சார்ந்த நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துகொள்ளமாட்டோம் என்று சொல்லியிருக்கிறீர்களாமே!
சாவேஸ் : அவர்கள் வெளியேறவேண்டும் என்பது எனது நோக்கம் அல்ல. அவர்களுக்கு நாங்கள் தேவை. எங்களுக்கு அவர்கள் தேவை. ஆனால் வரி செலுத்துவது பொதுவான ஒரு வழக்கம் அல்லவா? அதைக்கூட செய்ய மாட்டேன் என்று சொன்னால் எப்படி? வரி செலுத்தவில்லை. ராயல்டி செலுத்தவில்லை. என்னென்ன செய்கிறார்கள், என்னென்ன செய்திருக்கிறார்கள் போன்ற விவரங்களைச் சொல்வதில்லை. ஒப்பந்தத்தில் இருப்பதைக் காட்டிலும் நிறைய நிலங்களை வளைத்துப் போட்டிருக்கிறார்கள். தவிரவும், வெனிசுலாவின் சுற்றுப்புறச் சூழலை மாசுப்படுத்துகிறார்கள். அவர்களுக்கு நான் சொல்வது இதைத்தான். இனி ஒழுங்காக சட்டத்துக்குக் கட்டுப்பட்டு நடந்துகொள்ளுங்கள்.
17) கேள்வி : எண்ணெய் என்னும் ஒரு சமாசாரம் மட்டும் இல்லையென்றால், வெனிசுலா என்ன ஆகியிருக்கும்?
சாவேஸ் : ஒன்றும் ஆகியிருக்காது. நன்றாகவே இருக்கும். எண்ணெய் எங்கள் ஆதார சக்தி. இல்லையென்று மறுக்கவில்லை. ஆனால் அதற்காக, எண்ணெயை நம்பி மட்டுமே நாங்கள் இயங்கிக்கொண்டிருக்கிறோம் என்று நினைத்துவிடவேண்டாம். வெனிசுலாவை ஒரு விவசாய நாடாக மாற்ற நாங்கள் முயற்சித்துக்கொண்டிருக்கிறோம். மின்சார உற்பத்திக்காவும், ரயில் பாதைகள் அமைப்பதற்காகவும், சாலைகள் அமைப்பதற்காகவும் மில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்துகொண்டிருக்கிறோம். எண்ணெய் ஒரு சொட்டுக்கூட இல்லாமல் போகும் ஒரு நாள் வரலாம். ஆனால் இப்போதைக்கு அல்ல. இருநூறு ஆண்டுகளுக்குப் பிறகே. அது வரை எங்களுக்கு எண்ணெய் தட்டுப்பாடு வராது.
18) கேள்வி : உங்களுக்கு மத நம்பிக்கை உண்டா?
சாவேஸ் : உண்டு. என்னைப் பொறுத்தவரை இயேசு நாதர்தான் உலகின் முதல் சோஷலிசவாதி. தனது கொள்கைகளுக்காக அவர் உயிர் நீத்தார். சடங்குகளிலும் சம்பிரதாயங்களிலும் எனக்கு நம்பிக்கை கிடையாது. மதவாதிகள் இயேசு நாதரைப் பார்க்கும் பார்வை வேறு. நான் அவரைப் பார்க்கும் பார்வை வேறு. அவர் ஓர் அற்புத கடவுள் என்பதை விட, அவர் ஒரு கலகக்காரர் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்.
ஆதாரம் :
1. Chavez interviewed on US TV show By Tavis Smiley 04 October 2006
2. Hugo Chavez By Greg Palast July 2006 Issue
3. Venezuelan President On Rocky Relations with Washington, Koppel, Sept. 16, 2005
4. The Sound and Fury & Time magazine interviews Chavez By Tim Padgett, Time.com, 04 October 2006.
September 23, 2008
சாரு நிவேதிதாவும் மோர்க்குழம்பும்
சென்ற சனிக்கிழமை கிழக்கு பதிப்பகத்தில் நடைபெற்ற மொட்டை மாடிக்கூட்டத்தில் சாரு நிவேதிதா உரையாற்றி முடித்தபோது ஒரு விஷயம் புரிந்தது. கோணலாக எழுத மட்டுமல்ல, பேசவும் அவரால் முடியும். முடிந்திருக்கிறது.
ஒரே ஒரு உதாரணம். பணம். புகழ். இரண்டுமே வேண்டாம் எனக்கு. இப்படிச் சொல்லி முடித்த கையோடு ஓர் அங்கலாய்ப்பு. ஓரான் பாமுக்கின் புத்தகம் ஒரு லட்சம் காபி விற்றுக்கொண்டிருக்கிறது. இங்கே? சுஜாதாவின் புத்தகங்கள் குறைந்தது ஒரு லட்சம் போகவேண்டும். என்னுடையது பத்தாயிரம் போகலாம். ஆனால், 150 காபி விற்றாலே இங்கே பெஸ்ட் செல்லர் என்கிறார்கள். எத்தனை பெரிய துன்பம் இது!
துன்பம்தான். ஆனால் யாருக்கு? பணம், புகழ் இரண்டையுமே விரும்பாதவருக்கு தன் படைப்புகள் லட்சம் போகிறதா கோடி போகிறதா என்னும் வீண் விசனம் என்னத்துக்கு? ஒரு வேளை, தன் சீரிய சிந்தனைகள் பரவலாக மக்களிடம் போய் சேர்ந்தால் போதும் என்று நினைக்கிறாரோ? ஐயோ!
சென்னை ஸ்கேன் என்னும் கல்கி இணைப்பில் கோணல் பக்கங்கள் பற்றி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சிறிய விமரிசனக் கட்டுரை எழுதியிருந்தேன். (அந்தப் பிரதி இப்போதைக்கு என்னிடம் இல்லை. கிடைத்தால், இங்கே பிரசுரிக்கிறேன்). அந்தக் கட்டுரையை இப்படி முடித்திருந்தேன். யாருமே பேசத்துணியாத விஷயங்களை எடுத்துக்கொண்டு விரிவாக, ஆழமாக, அக்கு அக்காகப் பிரித்துப்போட்டு விவாதித்துக்கொண்டிருக்கிறார் சாரு நிவேதிதா. மகிழ்ச்சி. ஆனால், யாருமே பேசத்துணியாத விஷயங்கள் எவ்வளவோ இருக்கின்றன. ஆராய்ந்து விவாதிப்பதற்கு எத்தனையோ சங்கதிகள் உள்ளன. அவற்றை எல்லாம் விட்டுவிட்டு மற்றவர்களை கலவரப்படுத்தும் எண்ணங்களை மட்டும் ஏன் அவர் தொடர்ச்சியாகப் பதிவு செய்யவேண்டும்?
வேறு சில நண்பர்களும் அவரை இதுபோல் கேட்டிருக்கிறார்களாம். அவர்களுக்கு சாரு அளித்த பதில் இது . நான் எதைப் பற்றி பேசவேண்டும், எதை எப்படி எழுதவேண்டும் என்று யாரும் அறிவுரை சொல்லத்தேவையில்லை. உங்களுக்கு இஷ்டம் இல்லாவிட்டால், என்னைப் படிக்காதீர்கள்.
இதே சாரு நிவேதிதா, இணையத்தளத்தில் எழுதும் பதிவர்களை உரிமையுடன் கண்டிக்கிறார். நான் ஜென் மாஸ்டர்போல. ஓங்கி ஒரு அடிஅடித்து ஒழுங்கா விளையாடு என்பேன். ஒழுங்கா ஆடு என்பேன். நிறைய பிராக்டிஸ் செய். பிறகு வா, விளையாடுவோம். Intense ஆக ஆடுங்கள். நான் கேட்பது Intensity தான். Blog-ல் எழுதுவதுபோல எழுத்தை டெமாக்ரடைஸ் பண்ணியது நல்லதுதான். ஆனால் அந்த ஆட்டத்தை போகிற போக்கில் ஆடாமல் intense-ஆக ஆடுங்கள்.
புரிகிறதா? சாரு எதைப் பற்றி எழுதுகிறார், எப்படி எழுதுகிறார் என்பதை நாம் கண்டுகொள்ளக்கூடாது. ஆனால் மற்றவர்கள் எதை எழுதவேண்டும், எப்படி எழுதவேண்டும் என்பதை சாரு சொல்லிக்கொடுப்பார். சரி, அதென்ன intensity? சாருவின் எழுத்தில் வெளிப்படும் intensity எப்படிப்பட்டது?
சாருவின் எழுத்துகளை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். முதலில் பொழுதுபோக்கு. (சினிமா, இசை, மது மற்றும் பெண் வகைகள்). இரண்டாவது, இலக்கியம். (லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்கள், ஃபோர்னோ எழுத்துகள், ஜெயமோகன் சாடல், சொந்த சிறுகதைகள், நாவல்கள்) மூன்றாவது, அரசியல். (சமூகப் பிரச்னைகள்).
கோணல் பக்கங்களில் சாரு எழுதுபவை பெரும்பாலும் முதல் வகையராவைச் சேர்ந்தவை. காரல் மார்க்ஸ், பைபிள், நமீதா, பாபா, சாய் பாபா, கமலஹாசன், தலித்தியம், புரட்சி, சீலே, ஆண்டாள், செ கெபாரா என்று எல்லாமே இந்த டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் கிடைக்கும். சொந்த அனுபவங்கள் நிறைய. வாசகர்கள் இவருக்கு உருகி உருகி எழுதிய கடிதங்கள். பதில்கள். பாரீஸ் வீதிகளையும் விலை மாதர்களையும் மது வகைகளையும் சிலாகித்து எழுதப்படும் பயண அனுபவங்கள். நல்லி குப்புசாமி செட்டியார். அந்துமணி. ஆப்பிரிக்க சினிமா. காபரே நடனங்கள். கம்யூனிஸம்.
இன்னது என்றில்லை. எழுதிக்கொண்டே போவார். ஜிலுஜிலு நடையில். தொடர்ந்து பத்து கட்டுரைகளில் கொண்டாடியதை பதினோறாவது கட்டுரையில் தூக்கிப் போட்டு மிதிப்பார். ச்சீ வேண்டாம் என்று அவர் ஒதுக்கியதை பின்னர் எடுத்து சுத்தப்படுத்தி புனிதத்தன்மை சேர்த்து ஆஹா ஓஹோ என்பார். பெரியார், தலித்தியம், நாத்திகவாதம் என்று அனல் பறக்கும் கட்டுரைகளைப் படித்துக்கொண்டிருக்கும்போது திடீரென்று சாய் பாபாவின் படத்தில் இருந்து விபூதி கொட்டும். கும்பிட்டுவிட்டு தொடர்ந்து படித்துக்கொண்டிருக்கவேண்டும்.
இரண்டாவது, இலக்கியம். ஜீரோ டிகிரியில் சில பக்கங்களை அல்லது சில வரிகளை மேலோட்டமாகப் படித்துவிட்டு அதிர்ந்து அல்லது மிரண்டு போன வாசகர்களுக்கு சாரு தன் உரையில் தெரிவித்த ஒரு செய்தி இதோ. என் எழுத்துகளை சிலர் ஃபோர்னோ என்று சொல்கிறார்கள். நான் ஃபோர்னோவுக்குப் பக்கத்தில்கூட இதுவரை போனது கிடையாது. சில எரோடிக் எலிமெண்ட்ஸ் இருக்கும். மற்றபடி, ஃபோர்னோ எழுதுவது மிகவும் கடினம். இங்கு யாருக்கும் அது எழுதத்தெரியாது.
மூன்றாவது, சமூகக் கட்டுரைகள். லத்தீன் அமெரிக்காவில் சுற்றியலைந்துவிட்டு கால் வலிக்கும்போது சிறிது ஆசுவாசப்படுத்திக்கொள்வதற்காக இந்தியா, இலங்கை, தமிழ் நாடு என்று தொட்டுச் செல்வார். இவருக்கென்று அரசியல் கருத்துகள் எதுவும் கிடையாது. இந்துத்துவாவை எதிர்ப்பார். அடக்குமுறை என்று கத்துவார். எழுத்துகளில் தணிக்கை கூடாது என்பார். அச்சமில்லை, அச்சமில்லை என்று பாடுவார். கூர்மையாகவும், பரபரப்பாகவும் எழுதி இணையத்தில் வெளியிட்ட ஓர் அரசியல் கட்டுரையை மறுநாள் டெலீட் செய்துவிடுவார்.
Intensity என்றால் தீவிரம். பலம். அதிகாரம். சாருவின் எழுத்துகளில் வெளிப்படும் inensity இவ்வளவுதான்.
ஆனால் இதே சாரு இப்படியும் பேசுகிறார். போகிற போக்கில் ஆடாமல் intense-ஆக ஆடுங்கள். ரிஸ்க் ஃபேக்டர் ஏதாவது இருந்தால் ஓடிவிடக்கூடாது. அப்போதும் விளையாடவேண்டும்.
எனில், நீங்கள் மட்டும் ஏன் ஸார் நின்று விளையாடவில்லை? நான் எழுதிய கட்டுரையைத் டெலீட் செய்யமாட்டேன் என்று சொல்லும் தில் ஏன் இல்லாமல் போனது?
ஒரு கலகக்காரனாகத் தன்னை முன்னிறுத்திக்கொள்வதில் சாருவுக்கு அதீத ஆர்வம். என்னை எல்லோரும் திட்டுகிறார்கள், ஒரு புழுவைப் போல் பார்க்கிறார்கள், என் எழுத்தை யாரும் இங்கே கொண்டாடுவதில்லை என்று எல்லோருக்கும் தெரிந்த உண்மைகளை தனக்குச் சாதகமாகத் திருப்பிக்கொள்ளத் தெரிந்தவர்.
இவர் ஒரு போராளியும்கூட என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? கேரளாவில் பல போராட்டங்களை முன்னின்று நடத்திருக்கிறாராம் சாரு. பெப்ஸிக்கு எதிராக. கோக்குக்கு எதிராக. சந்தேகம் இருந்தால் கேரள இதழ்களைப் பிரித்து பாருங்கள். முதல் பக்கத்தில் என் புகைப்படம் வந்திருக்கிறது. சவால் விடுகிறார் சாரு. நமக்கு ஒரு சந்தேகம் வரலாம். அவர் வாழும் தமிழகத்தில் பல பிரச்னைகள் இருக்கும்போது, புகைவண்டி பிடித்து கேரளா சென்று அவிட புரட்சி நடத்துவது ஏன்?
நேர்மையாக இப்படி ஒப்புக்கொள்கிறார் சாரு.
இங்கே நான் அடிவாங்கினால் பிளாட்பார்மில் அடிவாங்கிவிட்டு உள்ளே போவதுபோல போகவேண்டும். கேரளாவில் நான் போராடுவது என்பது ஒரு செய்தி. அங்கே நான் ஓர் அடையாளம். என்னால்தான் லத்தி சார்ஜ் எதுவும் நடக்கவில்லை என்று அங்கு சொன்னார்கள். ஏனென்றால் என்னைப் பார்த்து போலீஸ் பயப்படுகிறது. இங்கே I am Nobody. Nobody. தமிழ்நாட்டில் எம்.எல்.ஏ. ரவிகுமாரையே அடித்து மன்னிப்புக் கேட்டார்கள்.ஒரு எம்.எல்.ஏ.வையே அடிக்கும்போது வேறு என்ன சொல்ல? சுப்ரீம்கோர்ட் நீதிபதி தார்குண்டையே ஒரு இன்ஸ்பெக்டர் இங்கு அடித்துவிட்டார். மேதா பட்கராக இருக்கட்டும், அருந்ததி ராயாக இருக்கட்டும், தார்குண்டாக இருக்கட்டும் யாராக இருக்கட்டும் இங்கே வந்து பாருங்கள், நாங்கள் அடிப்போம். என்ன நடந்தாலும் அது இங்கே செய்தி ஆகாது. நான் தமிழ்நாட்டில் ஒரு போராட்டத்தில் கலந்துகொண்டால் அந்த நிகழ்ச்சி இங்கு செய்தியாக்கப்படவேண்டும். சும்மா அடிவாங்குவதில் என்ன இருக்கிறது?
சாரு போராடுவார். கொடி பிடிப்பார். அடக்குமுறை ஒழிக என்று குரல் கொடுப்பார். அடிகூட வாங்குவார். ஆனால் யாராவது டிஜிடல் காமிரா கொண்டு போய் அவரை விதவிதமாகப் படம் எடுக்கவேண்டும். மீடியா முழுவதும் (தி ஹிந்து, தெஹல்கா, முடிந்தால் நியூ யார்க் டைம்ஸ்) இந்தச் செய்தி விவாதிக்கப்படவேண்டும். சாரு, சாரு என்று தமிழகமே, இந்தியாவே குரல் கொடுக்கவேண்டும். இருக்கும் வேலைகளை ஒதுக்கிவிட்டு மனித உரிமை காவலர்கள் ஓடிவந்து சாருவின் நெற்றியில் பேண்ட எய்ட் போடவேண்டும். இத்தனையும் செய்வதாக இருந்தால், சாரு புரட்சி செய்வார். ரத்தம் சிந்துவார். வருத்தப்பட்டு நமக்காக பாரம் சுமப்பார்.
அருந்ததி ராயின் பெயரை சாரு அடிக்கடி முணுமுணுப்பது வழக்கம். அவரைப் பிடிக்குமாம். எனக்குப் பயமாக இருக்கிறது. பிடிக்கும் என்று சாரு சொல்வது அருந்ததி ராயின் எழுத்துகளையா அல்லது அவரையேவா? காரணம், அருந்ததி ராயை இவர் படித்ததாகத் தெரியவில்லை.
அருந்ததி ராய்க்கும் சாருவுக்கும் சில ஒற்றுமைகள் உள்ளன. மற்றவர்கள் விவாதிக்காத பல விஷயங்களை அருந்ததி ராய் துணிச்சலுடன் எழுதிக்கொண்டிருக்கிறார். இவரும் ஒரு நாவலாசிரியர். இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டவர். எழுதுவதோடு நிறத்திக்கொள்ளாமல் அனல் பறக்கப் பேசுபவர். சர்ச்சைகளில் அடிக்கடி சிக்கிக்கொள்பவர். இவர் எழுத்துகளைப் பார்த்து கோபம் அடைந்தவர்கள் அநேகம். கலகக்காரர் என்னும் முத்திரை இவருக்கு உண்டு.
இனி, வித்தியாசங்கள். அருந்ததி ராய் எழுதுவது தன் சமூகத்தைப் பற்றி. சமூகத்தில் நடைபெறும் அத்துமீறல்கள் பற்றி. மக்களை நேரடியாக பாதிக்கும் அரசியல் முடிவுகள் பற்றி. என் தேசம் எது செய்தாலும் சரியாகத்தான் இருக்கும் என்னும் மயக்கம் இல்லை இவரிடம். பல முறை அதிகாரத்தைப் பகைத்துக்கொண்டிருக்கிறார். வழக்குகள், மிரட்டல்கள் எதுவும் இவரை எதுவொன்றும் செய்துவிடவில்லை. இரவோடு இரவாக தான் எழுதியவற்றை டெலீட் செய்யும் வழக்கமும் இல்லை இவரிடம்.
எனில், சாருவுக்கு எழுத்துத்துணிச்சலே இல்லையா என்று ஆதங்கப்படுபவர்களுக்கு ஒரு செய்தி. சாரு நிவேதிதா சமீபத்தில், ரோஜா முத்தையா நூலகம் சென்றாராம்.
சரபோஜி மன்னரின் சமையல் குறிப்புகள் அவரைப் பெரிதும் கவர்ந்துள்ளன. எடுத்து பயன்படுத்திக்கொள்ளலாமா என்று கேட்டபோது அது ஓர் அமெரிக்க நிறுவனத்தால் காபிரைட் செய்யப்பட்டுள்ளது என்று தெரிந்துகொண்டிருக்கிறார். உடனே, அவருக்குக் கோபம் வந்துவிட்டது. சரபோஜியின் சமையல் குறிப்புகளை எடுத்தாள அமெரிக்காவிடம் அனுமதி கேட்கவேண்டுமா, இதென்ன அநியாயம்?
அமெரிக்க அடக்குமுறைக்கு எதிராக சாரு செய்யவிருக்கும் காரியம் என்ன தெரியுமா? நீ என்ன வேண்டுமானாலும் செய்துகொள் என்று துணிச்சலாக தன் வலைத்தளத்தில் சரபோஜியின் சமையல் குறிப்புகளை அடுத்தடுத்து விவரிக்கப்போகிறாராம். சாருவின் இந்த மோர்க்குழம்பு துணிச்சலை நிச்சயம் பாராட்டியே தீரவேண்டும்.
எதைப் பற்றியும் யாரும் எப்படியும் எழுதலாம். எதைப் பற்றியும் எல்லோரும் படிக்கலாம். எனவே சாரு எழுதிக்கொண்டிருக்கிறார். எனவே, சாருவைப் படித்துக்கொண்டிருக்கிறார்கள்.
ஒரே ஒரு உதாரணம். பணம். புகழ். இரண்டுமே வேண்டாம் எனக்கு. இப்படிச் சொல்லி முடித்த கையோடு ஓர் அங்கலாய்ப்பு. ஓரான் பாமுக்கின் புத்தகம் ஒரு லட்சம் காபி விற்றுக்கொண்டிருக்கிறது. இங்கே? சுஜாதாவின் புத்தகங்கள் குறைந்தது ஒரு லட்சம் போகவேண்டும். என்னுடையது பத்தாயிரம் போகலாம். ஆனால், 150 காபி விற்றாலே இங்கே பெஸ்ட் செல்லர் என்கிறார்கள். எத்தனை பெரிய துன்பம் இது!
துன்பம்தான். ஆனால் யாருக்கு? பணம், புகழ் இரண்டையுமே விரும்பாதவருக்கு தன் படைப்புகள் லட்சம் போகிறதா கோடி போகிறதா என்னும் வீண் விசனம் என்னத்துக்கு? ஒரு வேளை, தன் சீரிய சிந்தனைகள் பரவலாக மக்களிடம் போய் சேர்ந்தால் போதும் என்று நினைக்கிறாரோ? ஐயோ!
சென்னை ஸ்கேன் என்னும் கல்கி இணைப்பில் கோணல் பக்கங்கள் பற்றி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சிறிய விமரிசனக் கட்டுரை எழுதியிருந்தேன். (அந்தப் பிரதி இப்போதைக்கு என்னிடம் இல்லை. கிடைத்தால், இங்கே பிரசுரிக்கிறேன்). அந்தக் கட்டுரையை இப்படி முடித்திருந்தேன். யாருமே பேசத்துணியாத விஷயங்களை எடுத்துக்கொண்டு விரிவாக, ஆழமாக, அக்கு அக்காகப் பிரித்துப்போட்டு விவாதித்துக்கொண்டிருக்கிறார் சாரு நிவேதிதா. மகிழ்ச்சி. ஆனால், யாருமே பேசத்துணியாத விஷயங்கள் எவ்வளவோ இருக்கின்றன. ஆராய்ந்து விவாதிப்பதற்கு எத்தனையோ சங்கதிகள் உள்ளன. அவற்றை எல்லாம் விட்டுவிட்டு மற்றவர்களை கலவரப்படுத்தும் எண்ணங்களை மட்டும் ஏன் அவர் தொடர்ச்சியாகப் பதிவு செய்யவேண்டும்?
வேறு சில நண்பர்களும் அவரை இதுபோல் கேட்டிருக்கிறார்களாம். அவர்களுக்கு சாரு அளித்த பதில் இது . நான் எதைப் பற்றி பேசவேண்டும், எதை எப்படி எழுதவேண்டும் என்று யாரும் அறிவுரை சொல்லத்தேவையில்லை. உங்களுக்கு இஷ்டம் இல்லாவிட்டால், என்னைப் படிக்காதீர்கள்.
இதே சாரு நிவேதிதா, இணையத்தளத்தில் எழுதும் பதிவர்களை உரிமையுடன் கண்டிக்கிறார். நான் ஜென் மாஸ்டர்போல. ஓங்கி ஒரு அடிஅடித்து ஒழுங்கா விளையாடு என்பேன். ஒழுங்கா ஆடு என்பேன். நிறைய பிராக்டிஸ் செய். பிறகு வா, விளையாடுவோம். Intense ஆக ஆடுங்கள். நான் கேட்பது Intensity தான். Blog-ல் எழுதுவதுபோல எழுத்தை டெமாக்ரடைஸ் பண்ணியது நல்லதுதான். ஆனால் அந்த ஆட்டத்தை போகிற போக்கில் ஆடாமல் intense-ஆக ஆடுங்கள்.
புரிகிறதா? சாரு எதைப் பற்றி எழுதுகிறார், எப்படி எழுதுகிறார் என்பதை நாம் கண்டுகொள்ளக்கூடாது. ஆனால் மற்றவர்கள் எதை எழுதவேண்டும், எப்படி எழுதவேண்டும் என்பதை சாரு சொல்லிக்கொடுப்பார். சரி, அதென்ன intensity? சாருவின் எழுத்தில் வெளிப்படும் intensity எப்படிப்பட்டது?
சாருவின் எழுத்துகளை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். முதலில் பொழுதுபோக்கு. (சினிமா, இசை, மது மற்றும் பெண் வகைகள்). இரண்டாவது, இலக்கியம். (லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்கள், ஃபோர்னோ எழுத்துகள், ஜெயமோகன் சாடல், சொந்த சிறுகதைகள், நாவல்கள்) மூன்றாவது, அரசியல். (சமூகப் பிரச்னைகள்).
கோணல் பக்கங்களில் சாரு எழுதுபவை பெரும்பாலும் முதல் வகையராவைச் சேர்ந்தவை. காரல் மார்க்ஸ், பைபிள், நமீதா, பாபா, சாய் பாபா, கமலஹாசன், தலித்தியம், புரட்சி, சீலே, ஆண்டாள், செ கெபாரா என்று எல்லாமே இந்த டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் கிடைக்கும். சொந்த அனுபவங்கள் நிறைய. வாசகர்கள் இவருக்கு உருகி உருகி எழுதிய கடிதங்கள். பதில்கள். பாரீஸ் வீதிகளையும் விலை மாதர்களையும் மது வகைகளையும் சிலாகித்து எழுதப்படும் பயண அனுபவங்கள். நல்லி குப்புசாமி செட்டியார். அந்துமணி. ஆப்பிரிக்க சினிமா. காபரே நடனங்கள். கம்யூனிஸம்.
இன்னது என்றில்லை. எழுதிக்கொண்டே போவார். ஜிலுஜிலு நடையில். தொடர்ந்து பத்து கட்டுரைகளில் கொண்டாடியதை பதினோறாவது கட்டுரையில் தூக்கிப் போட்டு மிதிப்பார். ச்சீ வேண்டாம் என்று அவர் ஒதுக்கியதை பின்னர் எடுத்து சுத்தப்படுத்தி புனிதத்தன்மை சேர்த்து ஆஹா ஓஹோ என்பார். பெரியார், தலித்தியம், நாத்திகவாதம் என்று அனல் பறக்கும் கட்டுரைகளைப் படித்துக்கொண்டிருக்கும்போது திடீரென்று சாய் பாபாவின் படத்தில் இருந்து விபூதி கொட்டும். கும்பிட்டுவிட்டு தொடர்ந்து படித்துக்கொண்டிருக்கவேண்டும்.
இரண்டாவது, இலக்கியம். ஜீரோ டிகிரியில் சில பக்கங்களை அல்லது சில வரிகளை மேலோட்டமாகப் படித்துவிட்டு அதிர்ந்து அல்லது மிரண்டு போன வாசகர்களுக்கு சாரு தன் உரையில் தெரிவித்த ஒரு செய்தி இதோ. என் எழுத்துகளை சிலர் ஃபோர்னோ என்று சொல்கிறார்கள். நான் ஃபோர்னோவுக்குப் பக்கத்தில்கூட இதுவரை போனது கிடையாது. சில எரோடிக் எலிமெண்ட்ஸ் இருக்கும். மற்றபடி, ஃபோர்னோ எழுதுவது மிகவும் கடினம். இங்கு யாருக்கும் அது எழுதத்தெரியாது.
மூன்றாவது, சமூகக் கட்டுரைகள். லத்தீன் அமெரிக்காவில் சுற்றியலைந்துவிட்டு கால் வலிக்கும்போது சிறிது ஆசுவாசப்படுத்திக்கொள்வதற்காக இந்தியா, இலங்கை, தமிழ் நாடு என்று தொட்டுச் செல்வார். இவருக்கென்று அரசியல் கருத்துகள் எதுவும் கிடையாது. இந்துத்துவாவை எதிர்ப்பார். அடக்குமுறை என்று கத்துவார். எழுத்துகளில் தணிக்கை கூடாது என்பார். அச்சமில்லை, அச்சமில்லை என்று பாடுவார். கூர்மையாகவும், பரபரப்பாகவும் எழுதி இணையத்தில் வெளியிட்ட ஓர் அரசியல் கட்டுரையை மறுநாள் டெலீட் செய்துவிடுவார்.
Intensity என்றால் தீவிரம். பலம். அதிகாரம். சாருவின் எழுத்துகளில் வெளிப்படும் inensity இவ்வளவுதான்.
ஆனால் இதே சாரு இப்படியும் பேசுகிறார். போகிற போக்கில் ஆடாமல் intense-ஆக ஆடுங்கள். ரிஸ்க் ஃபேக்டர் ஏதாவது இருந்தால் ஓடிவிடக்கூடாது. அப்போதும் விளையாடவேண்டும்.
எனில், நீங்கள் மட்டும் ஏன் ஸார் நின்று விளையாடவில்லை? நான் எழுதிய கட்டுரையைத் டெலீட் செய்யமாட்டேன் என்று சொல்லும் தில் ஏன் இல்லாமல் போனது?
ஒரு கலகக்காரனாகத் தன்னை முன்னிறுத்திக்கொள்வதில் சாருவுக்கு அதீத ஆர்வம். என்னை எல்லோரும் திட்டுகிறார்கள், ஒரு புழுவைப் போல் பார்க்கிறார்கள், என் எழுத்தை யாரும் இங்கே கொண்டாடுவதில்லை என்று எல்லோருக்கும் தெரிந்த உண்மைகளை தனக்குச் சாதகமாகத் திருப்பிக்கொள்ளத் தெரிந்தவர்.
இவர் ஒரு போராளியும்கூட என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? கேரளாவில் பல போராட்டங்களை முன்னின்று நடத்திருக்கிறாராம் சாரு. பெப்ஸிக்கு எதிராக. கோக்குக்கு எதிராக. சந்தேகம் இருந்தால் கேரள இதழ்களைப் பிரித்து பாருங்கள். முதல் பக்கத்தில் என் புகைப்படம் வந்திருக்கிறது. சவால் விடுகிறார் சாரு. நமக்கு ஒரு சந்தேகம் வரலாம். அவர் வாழும் தமிழகத்தில் பல பிரச்னைகள் இருக்கும்போது, புகைவண்டி பிடித்து கேரளா சென்று அவிட புரட்சி நடத்துவது ஏன்?
நேர்மையாக இப்படி ஒப்புக்கொள்கிறார் சாரு.
இங்கே நான் அடிவாங்கினால் பிளாட்பார்மில் அடிவாங்கிவிட்டு உள்ளே போவதுபோல போகவேண்டும். கேரளாவில் நான் போராடுவது என்பது ஒரு செய்தி. அங்கே நான் ஓர் அடையாளம். என்னால்தான் லத்தி சார்ஜ் எதுவும் நடக்கவில்லை என்று அங்கு சொன்னார்கள். ஏனென்றால் என்னைப் பார்த்து போலீஸ் பயப்படுகிறது. இங்கே I am Nobody. Nobody. தமிழ்நாட்டில் எம்.எல்.ஏ. ரவிகுமாரையே அடித்து மன்னிப்புக் கேட்டார்கள்.ஒரு எம்.எல்.ஏ.வையே அடிக்கும்போது வேறு என்ன சொல்ல? சுப்ரீம்கோர்ட் நீதிபதி தார்குண்டையே ஒரு இன்ஸ்பெக்டர் இங்கு அடித்துவிட்டார். மேதா பட்கராக இருக்கட்டும், அருந்ததி ராயாக இருக்கட்டும், தார்குண்டாக இருக்கட்டும் யாராக இருக்கட்டும் இங்கே வந்து பாருங்கள், நாங்கள் அடிப்போம். என்ன நடந்தாலும் அது இங்கே செய்தி ஆகாது. நான் தமிழ்நாட்டில் ஒரு போராட்டத்தில் கலந்துகொண்டால் அந்த நிகழ்ச்சி இங்கு செய்தியாக்கப்படவேண்டும். சும்மா அடிவாங்குவதில் என்ன இருக்கிறது?
சாரு போராடுவார். கொடி பிடிப்பார். அடக்குமுறை ஒழிக என்று குரல் கொடுப்பார். அடிகூட வாங்குவார். ஆனால் யாராவது டிஜிடல் காமிரா கொண்டு போய் அவரை விதவிதமாகப் படம் எடுக்கவேண்டும். மீடியா முழுவதும் (தி ஹிந்து, தெஹல்கா, முடிந்தால் நியூ யார்க் டைம்ஸ்) இந்தச் செய்தி விவாதிக்கப்படவேண்டும். சாரு, சாரு என்று தமிழகமே, இந்தியாவே குரல் கொடுக்கவேண்டும். இருக்கும் வேலைகளை ஒதுக்கிவிட்டு மனித உரிமை காவலர்கள் ஓடிவந்து சாருவின் நெற்றியில் பேண்ட எய்ட் போடவேண்டும். இத்தனையும் செய்வதாக இருந்தால், சாரு புரட்சி செய்வார். ரத்தம் சிந்துவார். வருத்தப்பட்டு நமக்காக பாரம் சுமப்பார்.
அருந்ததி ராயின் பெயரை சாரு அடிக்கடி முணுமுணுப்பது வழக்கம். அவரைப் பிடிக்குமாம். எனக்குப் பயமாக இருக்கிறது. பிடிக்கும் என்று சாரு சொல்வது அருந்ததி ராயின் எழுத்துகளையா அல்லது அவரையேவா? காரணம், அருந்ததி ராயை இவர் படித்ததாகத் தெரியவில்லை.
அருந்ததி ராய்க்கும் சாருவுக்கும் சில ஒற்றுமைகள் உள்ளன. மற்றவர்கள் விவாதிக்காத பல விஷயங்களை அருந்ததி ராய் துணிச்சலுடன் எழுதிக்கொண்டிருக்கிறார். இவரும் ஒரு நாவலாசிரியர். இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டவர். எழுதுவதோடு நிறத்திக்கொள்ளாமல் அனல் பறக்கப் பேசுபவர். சர்ச்சைகளில் அடிக்கடி சிக்கிக்கொள்பவர். இவர் எழுத்துகளைப் பார்த்து கோபம் அடைந்தவர்கள் அநேகம். கலகக்காரர் என்னும் முத்திரை இவருக்கு உண்டு.
இனி, வித்தியாசங்கள். அருந்ததி ராய் எழுதுவது தன் சமூகத்தைப் பற்றி. சமூகத்தில் நடைபெறும் அத்துமீறல்கள் பற்றி. மக்களை நேரடியாக பாதிக்கும் அரசியல் முடிவுகள் பற்றி. என் தேசம் எது செய்தாலும் சரியாகத்தான் இருக்கும் என்னும் மயக்கம் இல்லை இவரிடம். பல முறை அதிகாரத்தைப் பகைத்துக்கொண்டிருக்கிறார். வழக்குகள், மிரட்டல்கள் எதுவும் இவரை எதுவொன்றும் செய்துவிடவில்லை. இரவோடு இரவாக தான் எழுதியவற்றை டெலீட் செய்யும் வழக்கமும் இல்லை இவரிடம்.
எனில், சாருவுக்கு எழுத்துத்துணிச்சலே இல்லையா என்று ஆதங்கப்படுபவர்களுக்கு ஒரு செய்தி. சாரு நிவேதிதா சமீபத்தில், ரோஜா முத்தையா நூலகம் சென்றாராம்.
சரபோஜி மன்னரின் சமையல் குறிப்புகள் அவரைப் பெரிதும் கவர்ந்துள்ளன. எடுத்து பயன்படுத்திக்கொள்ளலாமா என்று கேட்டபோது அது ஓர் அமெரிக்க நிறுவனத்தால் காபிரைட் செய்யப்பட்டுள்ளது என்று தெரிந்துகொண்டிருக்கிறார். உடனே, அவருக்குக் கோபம் வந்துவிட்டது. சரபோஜியின் சமையல் குறிப்புகளை எடுத்தாள அமெரிக்காவிடம் அனுமதி கேட்கவேண்டுமா, இதென்ன அநியாயம்?
அமெரிக்க அடக்குமுறைக்கு எதிராக சாரு செய்யவிருக்கும் காரியம் என்ன தெரியுமா? நீ என்ன வேண்டுமானாலும் செய்துகொள் என்று துணிச்சலாக தன் வலைத்தளத்தில் சரபோஜியின் சமையல் குறிப்புகளை அடுத்தடுத்து விவரிக்கப்போகிறாராம். சாருவின் இந்த மோர்க்குழம்பு துணிச்சலை நிச்சயம் பாராட்டியே தீரவேண்டும்.
எதைப் பற்றியும் யாரும் எப்படியும் எழுதலாம். எதைப் பற்றியும் எல்லோரும் படிக்கலாம். எனவே சாரு எழுதிக்கொண்டிருக்கிறார். எனவே, சாருவைப் படித்துக்கொண்டிருக்கிறார்கள்.
September 22, 2008
யார் கம்யூனிஸ்ட்?
ஃபிடல் காஸ்ட்ரோ ஒரு கம்யூனிஸ்டா? சே குவேரா? ஹியூகோ சாவேஸ்? இவர்களை எப்படி மதிப்பிடுவது? புரட்சியாளராகவா? கம்யூனிஸ்ட் தலைவர்களாகவா? கலகக்காரர்களாகவா? ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களாகவா? இவர்களுடைய அடையாளம் என்ன?
நான் எழுதிய ஹியூகோ சாவேஸ் புத்தகம் பற்றிய விமரிசனம் ஒன்று இன்று காலை என் பார்வைக்கு வந்தது. அந்த விமரிசனத்தின் முடிவில் சிலர் இந்தக் கேள்விகளை எழுப்பியிருந்தனர்.
சற்று ஆழமாக அலசவேண்டிய விஷயம் இது. அடுத்தடுத்த தினங்களில், ஒவ்வொருவரையும் தனித்தனியே எடுத்துக்கொண்டு மதிப்பிடலாம் என்று நினைக்கிறேன்.
புத்தக விமரிசனங்கள் : மோதிப்பார். முதல் காம்ரேட்.
நான் ரசித்த ஒரு வலைத்தளம்.
நான் எழுதிய ஹியூகோ சாவேஸ் புத்தகம் பற்றிய விமரிசனம் ஒன்று இன்று காலை என் பார்வைக்கு வந்தது. அந்த விமரிசனத்தின் முடிவில் சிலர் இந்தக் கேள்விகளை எழுப்பியிருந்தனர்.
சற்று ஆழமாக அலசவேண்டிய விஷயம் இது. அடுத்தடுத்த தினங்களில், ஒவ்வொருவரையும் தனித்தனியே எடுத்துக்கொண்டு மதிப்பிடலாம் என்று நினைக்கிறேன்.
புத்தக விமரிசனங்கள் : மோதிப்பார். முதல் காம்ரேட்.
நான் ரசித்த ஒரு வலைத்தளம்.
September 18, 2008
மால்கம் எக்ஸ்
நான் எழுதிய மால்கம் எக்ஸின் வாழ்க்கை வரலாறு கிழக்கில் வெளிவந்துள்ளது. சில பகுதிகள்.
0
ஒரு துப்பாக்கி வைத்துக்கொண்டால் என்ன? சட்டைப் பைக்குள் ஆயுதம் ஒன்று இருக்கிறது என்னும் நினைப்பேகூட கூடுதல் துணிச்சலை கொண்டு வந்துவிடலாம். இந்தக் கூடுதல் துணிச்சல் இப்போது அத்தியாவசியம். எந்தப் பக்கத்தில் இருந்து யார் தாக்குவார்கள் என்று நிச்சயமாகச் சொல்வதற்கில்லை. இனியும் அமெரிக்கக் காவல்துறையை நம்பிக்கொண்டிருக்கமுடியாது. அவர்கள் கண் முன்பாக என்னைக் கொன்று போட்டால்கூட தலையைத் திருப்பிக்கொண்டு நகர்ந்துவிடுவார்கள்.
மிஸ்டர் மால்கம் எக்ஸ், உங்கள் எதிரிகள் அபாயகரமானவர்கள். நீங்கள்தான் கவனமாக இருக்கவேண்டும். யார் கேட்டார்கள்? எனக்கு அறிவுரை சொல்லவேண்டும் என்று ஏன் உனக்குத் தோன்றவேண்டும்? முடிந்தால் பாதுகாப்பு கொடு. முடியவில்லையா? வாயை மூடிக்கொண்டு நகர்ந்துவிடு. போலியான கரிசனம். போலியான பாதுகாப்பு. எதுவும் தேவையில்லை எனக்கு.
சொல், கவனமாக இருப்பது என்றால் என்ன? பொதுக்கூட்டங்களுக்குச் செல்லாமல் இருப்பதா? என்னை நாடி வருபவர்களைத் திருப்பி அனுப்புவதா? வெள்ளையர்களின் இனவெறியை அம்பலப்படுத்தாமல் விட்டுவிடுவதா? எனக்கென்ன என்று என் குடும்பத்துடன் வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்வதா?
இதில் எதுவொன்றை செய்தாலும் அது இறப்பதற்குச் சமமானதே. பெருச்சாளியைப் போல் பதுங்கியிருப்பதற்காகவா இத்தனைக் காலம் உயிரைக் கையில் பிடித்திருந்தேன்? கட்டிலுக்கு அடியில் நூறு ஆண்டுகள் தேங்கி கிடப்பதற்குப் பதிலாக சிறுத்தையைப் போல் ஒரு நிமிடம், ஒரே ஒரு நிமிடம் பாய்ந்து வாழ்ந்து உயிரைக் கொடுத்துவிடலாம்.
இதற்குத்தான். இந்தப் பாய்ச்சலுக்குத்தான் துப்பாக்கி தேவை. தகுந்த காரியாலகத்தைத் தொடர்பு கொண்டு முறைப்படி விண்ணப்பிக்கலாம். உங்களுக்கு இல்லாததா? அவசியம் செய்துவிடுகிறோம் என்று புன்னகை செய்து அனுப்பிவைப்பார்கள். அத்தோடு தீர்ந்தது.
அதற்கான காரணத்தையும் மால்கம் எக்ஸ் அறிந்திருந்தார். எனது கடந்த வாழ்க்கையை புரட்டிப் பார்க்கும் எவரொருவருக்கும் என் மீது நம்பிக்கை ஏற்படாது. முன்னாள் குற்றவாளி. முன்னாள் கைதி. தவிரவும், கறுப்பன். அவமானத்தின் அடையாளம். கறுப்பன் அருவருக்கத்தக்கவன். சேற்றில் விழுந்து புரண்ட எருமை மாட்டை நெருங்குவது போல்தான் எந்தவொரு கறுப்பனையும் வெள்ளையர்கள் நெருங்குவார்கள். எட்டி நின்று வேண்டாவெறுப்பாகப் பேசுவார்கள். கறுப்பனின் மூச்சுக்காற்றை சுவாசித்து அதனால் ஏதேனும் தீரா வியாதி வந்து தொலைத்துவிட்டால்?
கறுப்பன் நிராகரிக்கப்படவேண்டியவன். சரி, ஒரு கறுப்பனே முஸ்லீமாகவும் இருந்துவிட்டால்? அதுவும் அடாவடி முஸ்லீமாக? நிச்சயம் துப்பாக்கி கிடைக்காது.
கண்களைப் பிரிக்கலாமா அல்லது அப்படியே சிறிது நேரம் படுத்திருக்கலாமா என்று யோசித்துக்கொண்டிருந்தார் மால்கம் எக்ஸ். இறப்பைப் பற்றி சிந்திக்க வேண்டிய அவசியம் இப்போது ஏற்பட்டிருக்கவேண்டாம் என்று தோன்றியது. இது வாழ்வைப் பற்றி சிந்திக்கவேண்டிய தருணம். என் சமூகத்து மக்களின் வாழ்க்கை. ஒடுக்கப்பட்டவர்களின் எதிர்காலம். நான் எதிர்பார்க்கும் வெளிச்சம் அவர்கள் மீது படருமா? மிருகங்களைப் போல் அல்லாமல் ரத்தமும் நகமும் சதையும் கொண்ட மனிதர்களாக அவர்கள் நடத்தப்படும் காலம் வருமா?
0
‘ஏன் நம் வீட்டை அவர்கள் கொளுத்தவேண்டும்?’
‘உன்னால் அந்தக் காரணங்களைப் புரிந்துகொள்ளமுடியாது மால்கம்.’
‘சொல்லுங்கள் புரிந்துகொள்கிறேன். அப்பா அவர்களிடம் ஏதாவது சண்டை போட்டாரா?’
‘யாருடனும் சண்டை போடாமல் அவர் இருந்திருந்தாலும் நம்மை அவர்கள் தாக்கியிருப்பார்கள். நாம் கறுப்பர்கள்.’
கறுப்பர்கள் என்றால்? அவர்கள் வீடுகளைக் கொளுத்தலாமா? மால்கம் பதில் பேசாமல் அமர்ந்திருந்தான். லூசியா அவன் கன்னங்களை வருடிக்கொடுத்தார்.
‘இது முதன் முறையல்ல மால்கம். இதற்கு முன்னால் நாம் ஒமாஹாவில் இருந்தபோதும் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டோம். அப்போது நான் உன்னை வயிற்றில் சுமந்துகொண்டிருந்தேன். திடீரென்று சிலர் வீட்டை முற்றுகையிட்டார்கள். உன் அப்பாவின் பெயரை உரக்கச் சொல்லி வெளியில் வருமாறு கத்தினார்கள். அவர்களிடம் துப்பாக்கி இருந்தது. உன் அப்பா அப்போது வீட்டில் இல்லை. நான் வெளியில் போகாவிட்டால் அவர்கள் உள்ளே நுழைந்துவிடுவார்கள் என்று தெரிந்தது. பருத்திருந்த என் வயிற்றை இரு கரங்களால் பற்றியபடி கதவைத் திறந்தேன். உன் சகோதரர்கள் எனக்குப் பின்னால் பயத்துடன் ஒளிந்துகொண்டிருந்தார்கள். என்னை எரித்துவிடுவதைப் போல் அவர்கள் பார்த்தார்கள். கணவர் ஊரில் இல்லை என்று சொன்னேன். அவர்கள் கோபத்துடன் கத்தினார்கள். உடனே இங்கிருந்து காலி செய்யாவிட்டால் கொன்றுவிடுவோம் என்று மிரட்டினார்கள். வேறு வழியில்லாமல் அங்கிருந்து குடிபெயர்ந்துவிட்டோம்.’
0
முதல் குண்டு மால்கம் எக்ஸைத் தாக்கியபோது அவர் தன் மார்பை பிடித்துக்கொண்டார். கால்கள் தடுமாறின. அவரது மற்றொரு கையும் மார்பை நோக்கி விரைந்த போது இரண்டாவது குண்டு பாய்ந்தது. இடதுகை நடுவிரல் சிதைந்து ரத்தம் தெரித்தது. மால்கமின் வெள்ளை தாடியில் இருந்து ரத்தம் கசிய ஆரம்பித்தது. பொத்தென்று பின்புறம் உள்ள இருக்கைகள் மீது விழுந்தார் மால்கம் எக்ஸ். அவர் தலை தரையில் மோதியது. மொத்தம் பதினாறு குண்டுகள் அவரைத் துளைத்திருந்தன.
மேடையை நோக்கிப் பாய்ந்து ஓடினார் மால்கமின் மனைவி பெட்டி. ஐயோ என் கணவரைக் கொல்கிறார்கள். அவரை யாராவது காப்பாற்றுங்கள். அவருக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது. கடவுளே!
மால்கமின் கழுத்துப் பட்டையை சிலர் தளர்த்திக்கொண்டிருந்தார்கள். ஒரு பெண் கத்திக்கொண்டே ஓடி வந்தார்.
‘தள்ளுங்கள் தள்ளுங்கள் முதலில் அவருக்கு சுவாசம் கொடுக்கவேண்டும்.’
மால்கமின் தலையைக் கையில் ஏந்தி அவர் வாய் மீது வாய் பதித்து செயற்கை சுவாசம் அளிக்க முயற்சி செய்தார் அவர்.
‘உன்னால் முடியவில்லை என்றால் தள்ளிப்போ. மால்கமை நான் காப்பாற்றுகிறேன்.’
மற்றொரு இளைஞரும் முயன்று பார்த்தார்.
மால்கம், மால்கம் என்று கத்தியபடியே சிலர் வெறியுடன் தாவிக்குதித்து மேடை மீது ஏற ஆரம்பித்தார்கள். ஏதேனும் சிறு அசைவு தெரிகிறதா பாருங்களேன். மூச்சுக்காற்று? இந்த ரத்தத்தையாவது கட்டுப்படுத்துங்களேன். மருத்துவமனைக்குச் சொல்லிவிட்டீர்களா? நம் கண் முன்பாகவே இவரை நாம் பலிகொடுக்கப்போகிறோமா? அல்லா!
0
ஒரு துப்பாக்கி வைத்துக்கொண்டால் என்ன? சட்டைப் பைக்குள் ஆயுதம் ஒன்று இருக்கிறது என்னும் நினைப்பேகூட கூடுதல் துணிச்சலை கொண்டு வந்துவிடலாம். இந்தக் கூடுதல் துணிச்சல் இப்போது அத்தியாவசியம். எந்தப் பக்கத்தில் இருந்து யார் தாக்குவார்கள் என்று நிச்சயமாகச் சொல்வதற்கில்லை. இனியும் அமெரிக்கக் காவல்துறையை நம்பிக்கொண்டிருக்கமுடியாது. அவர்கள் கண் முன்பாக என்னைக் கொன்று போட்டால்கூட தலையைத் திருப்பிக்கொண்டு நகர்ந்துவிடுவார்கள்.
மிஸ்டர் மால்கம் எக்ஸ், உங்கள் எதிரிகள் அபாயகரமானவர்கள். நீங்கள்தான் கவனமாக இருக்கவேண்டும். யார் கேட்டார்கள்? எனக்கு அறிவுரை சொல்லவேண்டும் என்று ஏன் உனக்குத் தோன்றவேண்டும்? முடிந்தால் பாதுகாப்பு கொடு. முடியவில்லையா? வாயை மூடிக்கொண்டு நகர்ந்துவிடு. போலியான கரிசனம். போலியான பாதுகாப்பு. எதுவும் தேவையில்லை எனக்கு.
சொல், கவனமாக இருப்பது என்றால் என்ன? பொதுக்கூட்டங்களுக்குச் செல்லாமல் இருப்பதா? என்னை நாடி வருபவர்களைத் திருப்பி அனுப்புவதா? வெள்ளையர்களின் இனவெறியை அம்பலப்படுத்தாமல் விட்டுவிடுவதா? எனக்கென்ன என்று என் குடும்பத்துடன் வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்வதா?
இதில் எதுவொன்றை செய்தாலும் அது இறப்பதற்குச் சமமானதே. பெருச்சாளியைப் போல் பதுங்கியிருப்பதற்காகவா இத்தனைக் காலம் உயிரைக் கையில் பிடித்திருந்தேன்? கட்டிலுக்கு அடியில் நூறு ஆண்டுகள் தேங்கி கிடப்பதற்குப் பதிலாக சிறுத்தையைப் போல் ஒரு நிமிடம், ஒரே ஒரு நிமிடம் பாய்ந்து வாழ்ந்து உயிரைக் கொடுத்துவிடலாம்.
இதற்குத்தான். இந்தப் பாய்ச்சலுக்குத்தான் துப்பாக்கி தேவை. தகுந்த காரியாலகத்தைத் தொடர்பு கொண்டு முறைப்படி விண்ணப்பிக்கலாம். உங்களுக்கு இல்லாததா? அவசியம் செய்துவிடுகிறோம் என்று புன்னகை செய்து அனுப்பிவைப்பார்கள். அத்தோடு தீர்ந்தது.
அதற்கான காரணத்தையும் மால்கம் எக்ஸ் அறிந்திருந்தார். எனது கடந்த வாழ்க்கையை புரட்டிப் பார்க்கும் எவரொருவருக்கும் என் மீது நம்பிக்கை ஏற்படாது. முன்னாள் குற்றவாளி. முன்னாள் கைதி. தவிரவும், கறுப்பன். அவமானத்தின் அடையாளம். கறுப்பன் அருவருக்கத்தக்கவன். சேற்றில் விழுந்து புரண்ட எருமை மாட்டை நெருங்குவது போல்தான் எந்தவொரு கறுப்பனையும் வெள்ளையர்கள் நெருங்குவார்கள். எட்டி நின்று வேண்டாவெறுப்பாகப் பேசுவார்கள். கறுப்பனின் மூச்சுக்காற்றை சுவாசித்து அதனால் ஏதேனும் தீரா வியாதி வந்து தொலைத்துவிட்டால்?
கறுப்பன் நிராகரிக்கப்படவேண்டியவன். சரி, ஒரு கறுப்பனே முஸ்லீமாகவும் இருந்துவிட்டால்? அதுவும் அடாவடி முஸ்லீமாக? நிச்சயம் துப்பாக்கி கிடைக்காது.
கண்களைப் பிரிக்கலாமா அல்லது அப்படியே சிறிது நேரம் படுத்திருக்கலாமா என்று யோசித்துக்கொண்டிருந்தார் மால்கம் எக்ஸ். இறப்பைப் பற்றி சிந்திக்க வேண்டிய அவசியம் இப்போது ஏற்பட்டிருக்கவேண்டாம் என்று தோன்றியது. இது வாழ்வைப் பற்றி சிந்திக்கவேண்டிய தருணம். என் சமூகத்து மக்களின் வாழ்க்கை. ஒடுக்கப்பட்டவர்களின் எதிர்காலம். நான் எதிர்பார்க்கும் வெளிச்சம் அவர்கள் மீது படருமா? மிருகங்களைப் போல் அல்லாமல் ரத்தமும் நகமும் சதையும் கொண்ட மனிதர்களாக அவர்கள் நடத்தப்படும் காலம் வருமா?
0
‘ஏன் நம் வீட்டை அவர்கள் கொளுத்தவேண்டும்?’
‘உன்னால் அந்தக் காரணங்களைப் புரிந்துகொள்ளமுடியாது மால்கம்.’
‘சொல்லுங்கள் புரிந்துகொள்கிறேன். அப்பா அவர்களிடம் ஏதாவது சண்டை போட்டாரா?’
‘யாருடனும் சண்டை போடாமல் அவர் இருந்திருந்தாலும் நம்மை அவர்கள் தாக்கியிருப்பார்கள். நாம் கறுப்பர்கள்.’
கறுப்பர்கள் என்றால்? அவர்கள் வீடுகளைக் கொளுத்தலாமா? மால்கம் பதில் பேசாமல் அமர்ந்திருந்தான். லூசியா அவன் கன்னங்களை வருடிக்கொடுத்தார்.
‘இது முதன் முறையல்ல மால்கம். இதற்கு முன்னால் நாம் ஒமாஹாவில் இருந்தபோதும் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டோம். அப்போது நான் உன்னை வயிற்றில் சுமந்துகொண்டிருந்தேன். திடீரென்று சிலர் வீட்டை முற்றுகையிட்டார்கள். உன் அப்பாவின் பெயரை உரக்கச் சொல்லி வெளியில் வருமாறு கத்தினார்கள். அவர்களிடம் துப்பாக்கி இருந்தது. உன் அப்பா அப்போது வீட்டில் இல்லை. நான் வெளியில் போகாவிட்டால் அவர்கள் உள்ளே நுழைந்துவிடுவார்கள் என்று தெரிந்தது. பருத்திருந்த என் வயிற்றை இரு கரங்களால் பற்றியபடி கதவைத் திறந்தேன். உன் சகோதரர்கள் எனக்குப் பின்னால் பயத்துடன் ஒளிந்துகொண்டிருந்தார்கள். என்னை எரித்துவிடுவதைப் போல் அவர்கள் பார்த்தார்கள். கணவர் ஊரில் இல்லை என்று சொன்னேன். அவர்கள் கோபத்துடன் கத்தினார்கள். உடனே இங்கிருந்து காலி செய்யாவிட்டால் கொன்றுவிடுவோம் என்று மிரட்டினார்கள். வேறு வழியில்லாமல் அங்கிருந்து குடிபெயர்ந்துவிட்டோம்.’
0
முதல் குண்டு மால்கம் எக்ஸைத் தாக்கியபோது அவர் தன் மார்பை பிடித்துக்கொண்டார். கால்கள் தடுமாறின. அவரது மற்றொரு கையும் மார்பை நோக்கி விரைந்த போது இரண்டாவது குண்டு பாய்ந்தது. இடதுகை நடுவிரல் சிதைந்து ரத்தம் தெரித்தது. மால்கமின் வெள்ளை தாடியில் இருந்து ரத்தம் கசிய ஆரம்பித்தது. பொத்தென்று பின்புறம் உள்ள இருக்கைகள் மீது விழுந்தார் மால்கம் எக்ஸ். அவர் தலை தரையில் மோதியது. மொத்தம் பதினாறு குண்டுகள் அவரைத் துளைத்திருந்தன.
மேடையை நோக்கிப் பாய்ந்து ஓடினார் மால்கமின் மனைவி பெட்டி. ஐயோ என் கணவரைக் கொல்கிறார்கள். அவரை யாராவது காப்பாற்றுங்கள். அவருக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது. கடவுளே!
மால்கமின் கழுத்துப் பட்டையை சிலர் தளர்த்திக்கொண்டிருந்தார்கள். ஒரு பெண் கத்திக்கொண்டே ஓடி வந்தார்.
‘தள்ளுங்கள் தள்ளுங்கள் முதலில் அவருக்கு சுவாசம் கொடுக்கவேண்டும்.’
மால்கமின் தலையைக் கையில் ஏந்தி அவர் வாய் மீது வாய் பதித்து செயற்கை சுவாசம் அளிக்க முயற்சி செய்தார் அவர்.
‘உன்னால் முடியவில்லை என்றால் தள்ளிப்போ. மால்கமை நான் காப்பாற்றுகிறேன்.’
மற்றொரு இளைஞரும் முயன்று பார்த்தார்.
மால்கம், மால்கம் என்று கத்தியபடியே சிலர் வெறியுடன் தாவிக்குதித்து மேடை மீது ஏற ஆரம்பித்தார்கள். ஏதேனும் சிறு அசைவு தெரிகிறதா பாருங்களேன். மூச்சுக்காற்று? இந்த ரத்தத்தையாவது கட்டுப்படுத்துங்களேன். மருத்துவமனைக்குச் சொல்லிவிட்டீர்களா? நம் கண் முன்பாகவே இவரை நாம் பலிகொடுக்கப்போகிறோமா? அல்லா!
இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக இந்தியா
பிரபாகரனுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொள்ள ஒரு விசேஷ தகுதி தேவை. நீங்கள் ஒரு கரும்புலியாக இருக்கவேண்டும். என் உயிர் பெரிதல்ல; நான் கொண்ட கனவே பெரிது என்று மனப்பூர்வமாக உணரவேண்டும். கட்டளையை ஏற்று நிறைவேற்றும் பக்குவமும் கீழ்ப்படியும் குணமும் அவசியம். எப்போது வேண்டுமானாலும் எங்கே வேண்டுமானாலும் இயங்க தயாராக இருக்கவேண்டும். இறக்கவும்!
கரும்புலிகள் இதற்காகவே காத்துக்கிடப்பார்கள். சிலருக்கு மட்டும் இந்த மாதம் அந்த அதிர்ஷ்டம் வாய்த்திருக்கிறது. தலைவரிடம் இருந்து இனிக்கும் கட்டளை. மாவீரர்களே, தயாராக இருங்கள். நீங்கள் செல்லவேண்டியது வவுனியாவுக்கு. இரவு உணவை முடித்துக்கொண்டு அதிகாலை கிளம்பிவிடுங்கள். பணியை சீராக முடித்துவிடுங்கள். உங்களைச் சந்திக்க ஆர்வத்துடன் நான் காத்துக்கொண்டிருக்கிறேன். வீரவணக்கம்!
கரும்புலிகள் ஆரவாரத்துடன் தயாரானார்கள். பிரபாகரன் அவர்களை புன்னகையுடன் வரவேற்றார். சிறிது நேரம் உரையாடினார். குழுவினருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இரவு உணவு முடிந்தது. அதிகாலை அவர்கள் கிளம்பிவிட்டார்கள்.
பிறகு, அந்த செய்தி வந்தது. வவுனியாவில் உள்ள வன்னி இலங்கை படைத் தலைமையகத்தின் மீது விடுதலைப் புலிகள் திடீர் தாக்குதல். செயலிழந்தது இலங்கை ராணுவம். விடுதலைப் புலிகளுக்கு பாரிய வெற்றி!
நிரந்தர போர் பிரதேசமாக இலங்கை மாறி நெடுங்காலம் ஆகிவிட்டது. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் பிரதேசங்களை இலங்கை ராணுவம் தாக்கி கைப்பற்றுவதும், பதிலுக்கு மேலதிக தீவிரத்துடன் புலிகள் போர் தொடுத்து கைப்பற்றப்பட்ட பிரதேசங்களை மீட்டெடுப்பதும் மாறிமாறி நிகழ்ந்துகொண்டிருக்கிறது. போரைத் தவிர வேறொன்றை அறியாமலேயே ஒரு தலைமுறை அங்கே வளர்ந்திருக்கிறது. தலைக்கு மேலே காகம், குருவி பறந்து சென்றால்கூட, ஐயோ ஷெல் அடிக்கிறாங்க என்று காதைப்பொத்திக்கொண்டு வீட்டுக்குள் ஓடும் வழக்கத்தை தமிழர்கள் இன்றுவரை கைவிடவில்லை.
இந்நிலையில், சென்ற வார வவுனியா தாக்குதலுக்கு (செப்டம்பர் 8, 2008) மட்டும் ஏன் இத்தனை முக்கியத்துவம்? இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் இந்திய அரசாங்கமும் ஒருசேர இப்போது வவுனியா பற்றி கவலைப்பட்டுக்கொண்டும் விவாதித்துக்கொண்டும் இருப்பது ஏன்?
தாக்குதல் பற்றி இலங்கை அரசிடம் இருந்து வெளிவந்த முதல் செய்தியை கவனித்தால் காரணம் புரியும். தரை வழியாகவும், ஆகாய வழியாவும் அதிகாலையிலேயே விடுதலைப் புலிகள் குண்டு வீச ஆரம்பித்துவிட்டார்கள். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரங்கள் நடைபெற்ற போரில் எங்கள் தரப்பில் 13 பேர் இறந்துவிட்டனர். 29 பேருக்குக் காயம். அலுவலகத்தில் இயங்கிக்கொண்டிருந்த ராடர் கருவிகள் நாசமாகிவிட்டன. அவற்றை பரமரித்துக்கொண்டிருந்த இரண்டு இந்தியர்கள் படுகாயம். விரைவில் சுதாரித்துக்கொண்ட இலங்கை ராணுவம், 10 புலிகளை கொன்றொழித்தது. வெகு விரைவில், ஒரு புலி பாக்கியில்லாமல் அனைவரையும் அழிப்போம். இது சத்தியம்.
சவடாலை விட்டுவிடுவோம். தன் தரப்பு அழிவை குறைத்து சொல்வதும் புலிகள் தரப்பு அழிவை அதிகப்படுத்திச் சொல்வதும் இலங்கை அரசுக்கு வாடிக்கையான ஒன்று. ஆகவே இழப்பு எண்ணிக்கையையும் விட்டுவிடுவோம். விஷயம் ராடர் கருவிகளைப் பற்றியது. காயமடைந்த இந்தியர்களைப் பற்றியது.
அடுத்த அரசாங்க செய்தி வெளிவந்தது. ராடர் கருவிகளை எங்களுக்கு வழங்கியது இந்திய அரசாங்கம். 2005ல் வழங்கப்பட்டன. பணம் கொடுத்து வாங்கியவை அல்ல. பரிசாகக் கிடைத்தவை. காயமடைந்த இரு இந்தியர்களும் பெறியியலாளர்கள். ராடரை மேம்படுத்தவும் பராமரிக்கவும் அவர்களை இந்தியா அன்புடன் அனுப்பி வைத்தது. ஆற்றல் குறைந்த எங்கள் முந்தைய ராடர்களை சரிசெய்து கொடுத்ததும் இந்தியாதான்.
இந்தியா மீது விடுதலைப் புலிகள் தொடர்ச்சியாக தொடுத்துவந்த குற்றச்சாட்டு மெய்தான் என்பதை இலங்கை அரசு முதன் முறையாக இப்போது ஒப்புக்கொண்டுள்ளது. பிரச்னை பூதாகரம் ஆனது இங்கேதான். இந்தியா ஏன் இலங்கைக்கு ராடர் கருவிகளை அன்பளிக்கவேண்டும்? கருவிகளை கொடுத்ததோடு நிறுத்திக்கொள்ளாமல் எதற்காக இந்திய பொறியியலாளர்களை இலங்கைக்கு அனுப்பவேண்டும்? அப்படி என்ன கரிசனம் இலங்கையின் மீது?
குறிப்பாக வவுனியா தலைமையகத்தை விடுதலைப் புலிகள் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் இதுதான். இந்தியா அளித்த ராடர்களின் துணையுடன்தான் இலங்கை ராணுவம் தங்களை கண்காணித்துக்கொண்டிருக்கிறது என்பதை அவர்கள் முன்னரே கண்டுபிடித்துவிட்டனர். சிங்களர்களுக்கு ஆதரவாக இந்தியா ஆயுதம் அளித்துக்கொண்டிருக்கிறது என்று வெறுமனே சொன்னால் சேச்சே அதெல்லாம் இல்லை என்று இலங்கையும் இந்தியாவும் ஒரே சமயத்தில் உதட்டைப் பிதுக்கியிருக்கும். குற்றச்சாட்டுக்கு ஆதாரம் கிடைக்காது. ஆகவேதான், மிகத் துல்லியமாகத் திட்டமிட்டு இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள் விடுதலைப் புலிகள்.
இப்போது சந்தேகங்கள் விரிவடைகின்றன. ராடர் கருவிகளை மட்டும்தான் இந்தியா இலங்கைக்கு அளித்திருக்கிறதா? நிச்சயம் இல்லை என்கிறார்கள் புலிகள். இலங்கைக்கு ஆயுதங்கள் அளிக்கும் நான்கு முக்கிய நாடுகளில் இந்தியாவும் ஒன்று. (மற்ற மூன்று, சீனா, பாகிஸ்தான், இஸ்ரேல்). ஆயுதங்களை மட்டுமல்ல ஆள்களையும் இந்தியா இலங்கைக்கு அனுப்பியிருக்கிறது. ராணுவ ரீதியிலான உதவிகள் செய்ய. ஆலோசனைகள் வழங்க. பயிற்சிகள் அளிக்க. இத்யாதிகள். இன்றைய தேதியில் இலங்கையில் குறைந்தது 265 இந்தியர்கள் மறைமுகமாக இயங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்கிறது ஒரு செய்தி.
இந்த ராடர்களை உருவாக்கிய இந்திய நிறுவனம் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட். இந்திய அரசு கேட்டுக்கொண்டதன் பேரில் இவை உருவாக்கப்பட்டுள்ளன. இரு பரிமாண ராடர் வகையைச் சார்ந்தவை. வேவு பார்க்கும் ஆற்றல் அதிகம். உங்களிடம் இருக்கும் ராடர் வேலைக்கு ஆகாது இவற்றை வைத்து புலிகளின் வரவை கண்காணியுங்கள் என்று தோழையுடன் இவற்றை இலங்கைக்கு அனுப்பியிருக்கிறது இந்தியா.
வவுனியா தாக்குதலில் காயமடைந்த இருவரும் இந்தியர்கள்தாம் என்பதை இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் ஒப்புக்கொண்டுள்ளது. இருவருமே பாரத் எலெக்ட்ரானிக்ஸ் ஊழியர்கள். அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கும் முயற்சிகள் மும்மரமாக நடந்துகொண்டிருக்கின்றன என்பதை தவிர வேறு செய்திகள் எதுவும் தூதரகத்தில் இருந்து வரவில்லை.
வரப்போவதும் இல்லை என்கிறார்கள் புலிகள். ஆமாம் நாங்கள் இலங்கைக்கு உதவி செய்கிறோம் என்று இந்தியா பகிரங்கமாக ஒப்புக்கொள்ளப்போவதில்லை. இது தெரிந்ததே. ஏதாவது காரணம் சொல்லி இந்தியா தப்பித்துக்கொள்ளவே பார்க்கும். இலங்கைத் தமிழர்கள் பிரச்னைக்குத் தீர்வு காணவேண்டும் என்னும் அக்கறை இந்தியாவுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. மாறாக, மேலும் மேலும் சிங்களர்கள் பக்கம் அவர்கள் சாய்ந்து வருவது வருத்தத்துக்குரியது.
ஈழத் தமிழர்களின் வருத்தமும் இதுவேதான். சிங்களர்களுக்கு இந்தியா அளிக்கும் எந்தவொரு சிறிய உதவியும் எங்களை அழிப்பதற்காகவே பயன்படுத்துப்படுகிறது என்பதை இந்தியா புரிந்துகொள்ளவேண்டும். இனத்தால், மொழியால் நாங்கள் இந்தியத் தமிழர்களோடு ஒன்றுபட்டிருக்கிறோம். ஆனால், இன்றைய தேதி வரை இந்தியா எங்கள் போராட்டத்தை அழுத்தமாக ஆதரிக்கவில்லை. வரவேற்கவும் இல்லை. குறைந்தது, இலங்கை ராணுவத்தோடு கைகுலுக்கிக்கொள்வதையாவது இந்தியா நிறுத்திக்கொள்ளக்கூடாதா?
நிறுத்திக்கொள்ளாது என்றுதான் தோன்றுகிறது. கூடிய விரைவில், ராணுவப் பொறியியல் தொழில்நுட்ப குழு ஒன்று இந்தியாவில் இருந்து புறப்பட்டு வவுனியா செல்ல உத்தேசித்திருக்கிறது. தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியை நேரில் சென்று பார்வையிடப் போகிறார்களாம். கவலைப்படாதீர்கள் எல்லாம் சரியாகிவிடும் வேறு ராடர் தருகிறோம் என்று இலங்கை ராணுவத்தின் தோளில் தட்டி அவர்கள் ஆறுதல் சொல்லக்கூடும்.
இதற்கிடையில், வவுனியா தாக்குதலுக்குப் பழிக்குப் பழி வாங்கிவிட்டதாகப் பெருமையுடன் தன் காலரை தூக்கிவிட்டுக்கொண்டிருக்கிறது இலங்கை அரசு. கிளிநொச்சியில் விடுதலைப் புலிகள் உயர் மட்ட மீட்டிங் நடத்திக்கொண்டிருந்தபோது பறந்தபடி குண்டு வீசி பல முக்கியத் தலைவர்களைக் கொன்றுவிட்டார்களாம். விடுதலைப் புலிகள் வருத்தத்துடன் இதற்கு அளித்த மறுமொழி இது. ஐயோ அவர்கள் குண்டு வீசியது பொதுமக்கள் வாழும் பகுதிகளில். இறந்துபோனவர்கள் அப்பாவிகள்.
வரும் நாள்களில் மேலும் பல மோதல்களை எதிர்பார்க்கலாம்.
கரும்புலிகள் இதற்காகவே காத்துக்கிடப்பார்கள். சிலருக்கு மட்டும் இந்த மாதம் அந்த அதிர்ஷ்டம் வாய்த்திருக்கிறது. தலைவரிடம் இருந்து இனிக்கும் கட்டளை. மாவீரர்களே, தயாராக இருங்கள். நீங்கள் செல்லவேண்டியது வவுனியாவுக்கு. இரவு உணவை முடித்துக்கொண்டு அதிகாலை கிளம்பிவிடுங்கள். பணியை சீராக முடித்துவிடுங்கள். உங்களைச் சந்திக்க ஆர்வத்துடன் நான் காத்துக்கொண்டிருக்கிறேன். வீரவணக்கம்!
கரும்புலிகள் ஆரவாரத்துடன் தயாரானார்கள். பிரபாகரன் அவர்களை புன்னகையுடன் வரவேற்றார். சிறிது நேரம் உரையாடினார். குழுவினருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இரவு உணவு முடிந்தது. அதிகாலை அவர்கள் கிளம்பிவிட்டார்கள்.
பிறகு, அந்த செய்தி வந்தது. வவுனியாவில் உள்ள வன்னி இலங்கை படைத் தலைமையகத்தின் மீது விடுதலைப் புலிகள் திடீர் தாக்குதல். செயலிழந்தது இலங்கை ராணுவம். விடுதலைப் புலிகளுக்கு பாரிய வெற்றி!
நிரந்தர போர் பிரதேசமாக இலங்கை மாறி நெடுங்காலம் ஆகிவிட்டது. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் பிரதேசங்களை இலங்கை ராணுவம் தாக்கி கைப்பற்றுவதும், பதிலுக்கு மேலதிக தீவிரத்துடன் புலிகள் போர் தொடுத்து கைப்பற்றப்பட்ட பிரதேசங்களை மீட்டெடுப்பதும் மாறிமாறி நிகழ்ந்துகொண்டிருக்கிறது. போரைத் தவிர வேறொன்றை அறியாமலேயே ஒரு தலைமுறை அங்கே வளர்ந்திருக்கிறது. தலைக்கு மேலே காகம், குருவி பறந்து சென்றால்கூட, ஐயோ ஷெல் அடிக்கிறாங்க என்று காதைப்பொத்திக்கொண்டு வீட்டுக்குள் ஓடும் வழக்கத்தை தமிழர்கள் இன்றுவரை கைவிடவில்லை.
இந்நிலையில், சென்ற வார வவுனியா தாக்குதலுக்கு (செப்டம்பர் 8, 2008) மட்டும் ஏன் இத்தனை முக்கியத்துவம்? இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் இந்திய அரசாங்கமும் ஒருசேர இப்போது வவுனியா பற்றி கவலைப்பட்டுக்கொண்டும் விவாதித்துக்கொண்டும் இருப்பது ஏன்?
தாக்குதல் பற்றி இலங்கை அரசிடம் இருந்து வெளிவந்த முதல் செய்தியை கவனித்தால் காரணம் புரியும். தரை வழியாகவும், ஆகாய வழியாவும் அதிகாலையிலேயே விடுதலைப் புலிகள் குண்டு வீச ஆரம்பித்துவிட்டார்கள். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரங்கள் நடைபெற்ற போரில் எங்கள் தரப்பில் 13 பேர் இறந்துவிட்டனர். 29 பேருக்குக் காயம். அலுவலகத்தில் இயங்கிக்கொண்டிருந்த ராடர் கருவிகள் நாசமாகிவிட்டன. அவற்றை பரமரித்துக்கொண்டிருந்த இரண்டு இந்தியர்கள் படுகாயம். விரைவில் சுதாரித்துக்கொண்ட இலங்கை ராணுவம், 10 புலிகளை கொன்றொழித்தது. வெகு விரைவில், ஒரு புலி பாக்கியில்லாமல் அனைவரையும் அழிப்போம். இது சத்தியம்.
சவடாலை விட்டுவிடுவோம். தன் தரப்பு அழிவை குறைத்து சொல்வதும் புலிகள் தரப்பு அழிவை அதிகப்படுத்திச் சொல்வதும் இலங்கை அரசுக்கு வாடிக்கையான ஒன்று. ஆகவே இழப்பு எண்ணிக்கையையும் விட்டுவிடுவோம். விஷயம் ராடர் கருவிகளைப் பற்றியது. காயமடைந்த இந்தியர்களைப் பற்றியது.
அடுத்த அரசாங்க செய்தி வெளிவந்தது. ராடர் கருவிகளை எங்களுக்கு வழங்கியது இந்திய அரசாங்கம். 2005ல் வழங்கப்பட்டன. பணம் கொடுத்து வாங்கியவை அல்ல. பரிசாகக் கிடைத்தவை. காயமடைந்த இரு இந்தியர்களும் பெறியியலாளர்கள். ராடரை மேம்படுத்தவும் பராமரிக்கவும் அவர்களை இந்தியா அன்புடன் அனுப்பி வைத்தது. ஆற்றல் குறைந்த எங்கள் முந்தைய ராடர்களை சரிசெய்து கொடுத்ததும் இந்தியாதான்.
இந்தியா மீது விடுதலைப் புலிகள் தொடர்ச்சியாக தொடுத்துவந்த குற்றச்சாட்டு மெய்தான் என்பதை இலங்கை அரசு முதன் முறையாக இப்போது ஒப்புக்கொண்டுள்ளது. பிரச்னை பூதாகரம் ஆனது இங்கேதான். இந்தியா ஏன் இலங்கைக்கு ராடர் கருவிகளை அன்பளிக்கவேண்டும்? கருவிகளை கொடுத்ததோடு நிறுத்திக்கொள்ளாமல் எதற்காக இந்திய பொறியியலாளர்களை இலங்கைக்கு அனுப்பவேண்டும்? அப்படி என்ன கரிசனம் இலங்கையின் மீது?
குறிப்பாக வவுனியா தலைமையகத்தை விடுதலைப் புலிகள் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் இதுதான். இந்தியா அளித்த ராடர்களின் துணையுடன்தான் இலங்கை ராணுவம் தங்களை கண்காணித்துக்கொண்டிருக்கிறது என்பதை அவர்கள் முன்னரே கண்டுபிடித்துவிட்டனர். சிங்களர்களுக்கு ஆதரவாக இந்தியா ஆயுதம் அளித்துக்கொண்டிருக்கிறது என்று வெறுமனே சொன்னால் சேச்சே அதெல்லாம் இல்லை என்று இலங்கையும் இந்தியாவும் ஒரே சமயத்தில் உதட்டைப் பிதுக்கியிருக்கும். குற்றச்சாட்டுக்கு ஆதாரம் கிடைக்காது. ஆகவேதான், மிகத் துல்லியமாகத் திட்டமிட்டு இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள் விடுதலைப் புலிகள்.
இப்போது சந்தேகங்கள் விரிவடைகின்றன. ராடர் கருவிகளை மட்டும்தான் இந்தியா இலங்கைக்கு அளித்திருக்கிறதா? நிச்சயம் இல்லை என்கிறார்கள் புலிகள். இலங்கைக்கு ஆயுதங்கள் அளிக்கும் நான்கு முக்கிய நாடுகளில் இந்தியாவும் ஒன்று. (மற்ற மூன்று, சீனா, பாகிஸ்தான், இஸ்ரேல்). ஆயுதங்களை மட்டுமல்ல ஆள்களையும் இந்தியா இலங்கைக்கு அனுப்பியிருக்கிறது. ராணுவ ரீதியிலான உதவிகள் செய்ய. ஆலோசனைகள் வழங்க. பயிற்சிகள் அளிக்க. இத்யாதிகள். இன்றைய தேதியில் இலங்கையில் குறைந்தது 265 இந்தியர்கள் மறைமுகமாக இயங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்கிறது ஒரு செய்தி.
இந்த ராடர்களை உருவாக்கிய இந்திய நிறுவனம் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட். இந்திய அரசு கேட்டுக்கொண்டதன் பேரில் இவை உருவாக்கப்பட்டுள்ளன. இரு பரிமாண ராடர் வகையைச் சார்ந்தவை. வேவு பார்க்கும் ஆற்றல் அதிகம். உங்களிடம் இருக்கும் ராடர் வேலைக்கு ஆகாது இவற்றை வைத்து புலிகளின் வரவை கண்காணியுங்கள் என்று தோழையுடன் இவற்றை இலங்கைக்கு அனுப்பியிருக்கிறது இந்தியா.
வவுனியா தாக்குதலில் காயமடைந்த இருவரும் இந்தியர்கள்தாம் என்பதை இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் ஒப்புக்கொண்டுள்ளது. இருவருமே பாரத் எலெக்ட்ரானிக்ஸ் ஊழியர்கள். அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கும் முயற்சிகள் மும்மரமாக நடந்துகொண்டிருக்கின்றன என்பதை தவிர வேறு செய்திகள் எதுவும் தூதரகத்தில் இருந்து வரவில்லை.
வரப்போவதும் இல்லை என்கிறார்கள் புலிகள். ஆமாம் நாங்கள் இலங்கைக்கு உதவி செய்கிறோம் என்று இந்தியா பகிரங்கமாக ஒப்புக்கொள்ளப்போவதில்லை. இது தெரிந்ததே. ஏதாவது காரணம் சொல்லி இந்தியா தப்பித்துக்கொள்ளவே பார்க்கும். இலங்கைத் தமிழர்கள் பிரச்னைக்குத் தீர்வு காணவேண்டும் என்னும் அக்கறை இந்தியாவுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. மாறாக, மேலும் மேலும் சிங்களர்கள் பக்கம் அவர்கள் சாய்ந்து வருவது வருத்தத்துக்குரியது.
ஈழத் தமிழர்களின் வருத்தமும் இதுவேதான். சிங்களர்களுக்கு இந்தியா அளிக்கும் எந்தவொரு சிறிய உதவியும் எங்களை அழிப்பதற்காகவே பயன்படுத்துப்படுகிறது என்பதை இந்தியா புரிந்துகொள்ளவேண்டும். இனத்தால், மொழியால் நாங்கள் இந்தியத் தமிழர்களோடு ஒன்றுபட்டிருக்கிறோம். ஆனால், இன்றைய தேதி வரை இந்தியா எங்கள் போராட்டத்தை அழுத்தமாக ஆதரிக்கவில்லை. வரவேற்கவும் இல்லை. குறைந்தது, இலங்கை ராணுவத்தோடு கைகுலுக்கிக்கொள்வதையாவது இந்தியா நிறுத்திக்கொள்ளக்கூடாதா?
நிறுத்திக்கொள்ளாது என்றுதான் தோன்றுகிறது. கூடிய விரைவில், ராணுவப் பொறியியல் தொழில்நுட்ப குழு ஒன்று இந்தியாவில் இருந்து புறப்பட்டு வவுனியா செல்ல உத்தேசித்திருக்கிறது. தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியை நேரில் சென்று பார்வையிடப் போகிறார்களாம். கவலைப்படாதீர்கள் எல்லாம் சரியாகிவிடும் வேறு ராடர் தருகிறோம் என்று இலங்கை ராணுவத்தின் தோளில் தட்டி அவர்கள் ஆறுதல் சொல்லக்கூடும்.
இதற்கிடையில், வவுனியா தாக்குதலுக்குப் பழிக்குப் பழி வாங்கிவிட்டதாகப் பெருமையுடன் தன் காலரை தூக்கிவிட்டுக்கொண்டிருக்கிறது இலங்கை அரசு. கிளிநொச்சியில் விடுதலைப் புலிகள் உயர் மட்ட மீட்டிங் நடத்திக்கொண்டிருந்தபோது பறந்தபடி குண்டு வீசி பல முக்கியத் தலைவர்களைக் கொன்றுவிட்டார்களாம். விடுதலைப் புலிகள் வருத்தத்துடன் இதற்கு அளித்த மறுமொழி இது. ஐயோ அவர்கள் குண்டு வீசியது பொதுமக்கள் வாழும் பகுதிகளில். இறந்துபோனவர்கள் அப்பாவிகள்.
வரும் நாள்களில் மேலும் பல மோதல்களை எதிர்பார்க்கலாம்.
அண்ணாவின் சறுக்கல்
பெரியாருக்கு அரசியலில் நம்பிக்கை இருந்ததில்லை. ஆட்சி, அதிகாரம், அரசாங்கம் எல்லாமே வெங்காயம்தான் அவருக்கு. தேசியம், மொழி, கற்பு, புனிதம் எதன் மீதும் அவருக்கு மயக்கம் இருந்ததில்லை. போராட்டம். அது மட்டும்தான் தெரியும். மூக்குக் கண்ணாடியை மாட்டிக்கொண்டு முஷ்டியை உயர்த்தியபடி தெருவில் இறங்கிவிடுவார்.
உங்கள் வாரிசு யார் என்று கேட்கப்பட்டபோது பெரியார் அளித்த பதில் இது. என் சிந்தனைகள். பெரியாரின் சிந்தனைகள் விலைமதிப்பற்றவை என்று கீ. வீரமணிக்குத் தெரியும். ஆகவேதான் அவற்றை விட்டுக்கொடுக்க இந்த நிமிடம் வரை அவர் தயாராக இல்லை.
அண்ணாவின் படைப்புகள் அனைத்தும் நாட்டுடைமையாக்கப்பட்டுவிட்டன. பெரியார் படைப்புகளையும் பொதுவில் வைக்கலாமே என்று கோரிக்கை எழுந்தபோது, அவசரம் அவசரமாகக் கையை பின்னுக்கு இழுத்துக்கொண்டுவிட்டார் வீரமணி. இது குறித்து யார் பேசினாலும் சீறுகிறார். சண்டை போடுகிறார். பெரியார் அவருடையவராம்.
பயம்தான் காரணம். யாராவது அவருக்குப் புரியவைக்கவேண்டும். பெரியாரின் சொத்துக்கள் வேண்டாம். அவர் படைப்புகள் மட்டும் போதும்.
0
முன்னெப்போதையும்விட பெரியாரின் தேவை இப்போது அதிகரித்திருக்கிறது. அவருக்குப் பிறகு, நாத்திகவாதத்தை சீற்றத்துடன் பிரசாரம் செய்த இன்னொரு தலைவர் இங்கே தோன்றவே இல்லை. இந்த நிமிடம் வரை.
எல்லோரிடமும் சமரசமம் செய்துகொண்டால்தான் அதிகாரம் என்பதால் எல்லோரும் சமரசம் செய்துகொள்ள ஆரம்பித்துவிட்டார்கள். ஒன்றே குலம்; ஒருவனே தேவன். இது அண்ணாவின் சறுக்கல். தனிப்பட்ட முறையில் அண்ணாவுக்குக் கடவுள் நம்பிக்கை இருந்ததில்லை என்றாலும் பட்டவர்த்தனமாக நாத்திகவாதத்தை முன்னெடுத்துச்செல்ல அவரால் இயலவில்லை. காரணம், அவர் எல்லோருக்கும் முதல்வர்!
இங்கிருந்துதான் சரிவு ஆரம்பித்தது. இதைத்தான் சமரசம் என்றார் பெரியார். இதனால்தான் அதிகாரத்தை அவர் வெங்காயம் என்றார். இதனால்தான் முஷ்டியை உயர்த்திக்கொண்டு தெருவில் நின்றார். இதுவே அவருக்குத் தோதாக இருந்தது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, கூட்டணிக்கட்சி என்று பார்த்துக்கொண்டிருக்கவேண்டாம். கண்ணை மூடிக்கொண்டு துணிச்சலாகப் பிரசங்கம் செய்யலாம்.
நிலச் சீர்திருத்தத்தில் இருந்து தொடங்குவோம் என்று கம்யூனிஸ்டுகள் சொன்னபோது, இது சரிப்பட்டு வராது என்று ஒதுங்கிக்கொண்டார் பெரியார். அவரைப் பொறுத்தவரை ஜாதியும் இறைநம்பிக்கையும்தான் அனைத்து பிரச்னைகளுக்கும் ஆணி வேர்.
போராட்டப் பாரம்பரியம் பெரியாரோடு தொடங்கி பெரியாரோடு முற்றுபெற்றுவிட்டது. ஜாதிக் கட்சிகள் பெருகிக்கொண்டிருக்கின்றன. முத்துராமலிங்க தேவர் போன்ற பிம்பங்கள் மீள்உருவாக்கம் செய்யப்படுகின்றன. புதுப் புது கடவுள்களும் புதிய கார்ப்பரேட் சாமியார்களும் தோன்றிக்கொண்டிருக்கிறார்கள்.
அண்ணாவுக்குப் பிறகு தலைமையேற்றுக்கொண்ட மு. கருணாநிதி மேலும் சில படிகள் கீழே இறங்கினார். மூலைக்கு மூலை பெருகிவரும் கோவில்களைப் பற்றி அவர் கவலைப்படவில்லை. கோவில்கள் கொடியவர்களின் கூடாரங்களாக மாறிவிடக்கூடாது என்பது மட்டுமே அவர் கவலை.
சமரசத்தின் அடுத்த வடிவம் இது. மதம் இருக்கட்டும். ஜாதி இருக்கட்டும். இறைநம்பிக்கை பெருகினால் பரவாயில்லை. கோவில்கள் கட்டிக்கொள்கிறார்களா? போகட்டும். கொடியவர்கள் அல்லாது நல்லவர்கள் கையில் கோவில் நிர்வாகம் போனால் போதும்.
துணிச்சலான நாத்திகவாதப் பிரசாரத்தை இனி திமுகவிடம் இருந்து எதிர்பார்க்கமுடியாது. வீரமணியிடம் இருந்தும் எதிர்பார்க்கமுடியாது. ஆகவே, பெரியார் தேவை. பெரியாரின் சிந்தனைகள் தேவை.
உங்கள் வாரிசு யார் என்று கேட்கப்பட்டபோது பெரியார் அளித்த பதில் இது. என் சிந்தனைகள். பெரியாரின் சிந்தனைகள் விலைமதிப்பற்றவை என்று கீ. வீரமணிக்குத் தெரியும். ஆகவேதான் அவற்றை விட்டுக்கொடுக்க இந்த நிமிடம் வரை அவர் தயாராக இல்லை.
அண்ணாவின் படைப்புகள் அனைத்தும் நாட்டுடைமையாக்கப்பட்டுவிட்டன. பெரியார் படைப்புகளையும் பொதுவில் வைக்கலாமே என்று கோரிக்கை எழுந்தபோது, அவசரம் அவசரமாகக் கையை பின்னுக்கு இழுத்துக்கொண்டுவிட்டார் வீரமணி. இது குறித்து யார் பேசினாலும் சீறுகிறார். சண்டை போடுகிறார். பெரியார் அவருடையவராம்.
பயம்தான் காரணம். யாராவது அவருக்குப் புரியவைக்கவேண்டும். பெரியாரின் சொத்துக்கள் வேண்டாம். அவர் படைப்புகள் மட்டும் போதும்.
0
முன்னெப்போதையும்விட பெரியாரின் தேவை இப்போது அதிகரித்திருக்கிறது. அவருக்குப் பிறகு, நாத்திகவாதத்தை சீற்றத்துடன் பிரசாரம் செய்த இன்னொரு தலைவர் இங்கே தோன்றவே இல்லை. இந்த நிமிடம் வரை.
எல்லோரிடமும் சமரசமம் செய்துகொண்டால்தான் அதிகாரம் என்பதால் எல்லோரும் சமரசம் செய்துகொள்ள ஆரம்பித்துவிட்டார்கள். ஒன்றே குலம்; ஒருவனே தேவன். இது அண்ணாவின் சறுக்கல். தனிப்பட்ட முறையில் அண்ணாவுக்குக் கடவுள் நம்பிக்கை இருந்ததில்லை என்றாலும் பட்டவர்த்தனமாக நாத்திகவாதத்தை முன்னெடுத்துச்செல்ல அவரால் இயலவில்லை. காரணம், அவர் எல்லோருக்கும் முதல்வர்!
இங்கிருந்துதான் சரிவு ஆரம்பித்தது. இதைத்தான் சமரசம் என்றார் பெரியார். இதனால்தான் அதிகாரத்தை அவர் வெங்காயம் என்றார். இதனால்தான் முஷ்டியை உயர்த்திக்கொண்டு தெருவில் நின்றார். இதுவே அவருக்குத் தோதாக இருந்தது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, கூட்டணிக்கட்சி என்று பார்த்துக்கொண்டிருக்கவேண்டாம். கண்ணை மூடிக்கொண்டு துணிச்சலாகப் பிரசங்கம் செய்யலாம்.
நிலச் சீர்திருத்தத்தில் இருந்து தொடங்குவோம் என்று கம்யூனிஸ்டுகள் சொன்னபோது, இது சரிப்பட்டு வராது என்று ஒதுங்கிக்கொண்டார் பெரியார். அவரைப் பொறுத்தவரை ஜாதியும் இறைநம்பிக்கையும்தான் அனைத்து பிரச்னைகளுக்கும் ஆணி வேர்.
போராட்டப் பாரம்பரியம் பெரியாரோடு தொடங்கி பெரியாரோடு முற்றுபெற்றுவிட்டது. ஜாதிக் கட்சிகள் பெருகிக்கொண்டிருக்கின்றன. முத்துராமலிங்க தேவர் போன்ற பிம்பங்கள் மீள்உருவாக்கம் செய்யப்படுகின்றன. புதுப் புது கடவுள்களும் புதிய கார்ப்பரேட் சாமியார்களும் தோன்றிக்கொண்டிருக்கிறார்கள்.
அண்ணாவுக்குப் பிறகு தலைமையேற்றுக்கொண்ட மு. கருணாநிதி மேலும் சில படிகள் கீழே இறங்கினார். மூலைக்கு மூலை பெருகிவரும் கோவில்களைப் பற்றி அவர் கவலைப்படவில்லை. கோவில்கள் கொடியவர்களின் கூடாரங்களாக மாறிவிடக்கூடாது என்பது மட்டுமே அவர் கவலை.
சமரசத்தின் அடுத்த வடிவம் இது. மதம் இருக்கட்டும். ஜாதி இருக்கட்டும். இறைநம்பிக்கை பெருகினால் பரவாயில்லை. கோவில்கள் கட்டிக்கொள்கிறார்களா? போகட்டும். கொடியவர்கள் அல்லாது நல்லவர்கள் கையில் கோவில் நிர்வாகம் போனால் போதும்.
துணிச்சலான நாத்திகவாதப் பிரசாரத்தை இனி திமுகவிடம் இருந்து எதிர்பார்க்கமுடியாது. வீரமணியிடம் இருந்தும் எதிர்பார்க்கமுடியாது. ஆகவே, பெரியார் தேவை. பெரியாரின் சிந்தனைகள் தேவை.
'நாட் நைஷ்!'
’டோண்ட் ஒர்ரி. ஆஃப்ட்டர் லஞ்ச் ஸ்ரீரங்கப்பட்டணம் போகலாம் ஷார், என்ஜாய் டிரிப் ஷார்’ என்றார் எங்கள் கைடு. காலை உணவுக்கு அரை மணி நேரம் வண்டியை ஓரங்கட்டினார்கள். உயிரியல் பூங்காவைச் சுற்றி வர முக்கால் மணி நேரம் அளிக்கப்பட்டது. (ஐந்து நிமிடங்கள் தாமதமாக வந்தாலும் பேருந்து புறப்பட்டுவிடும் என்னும் மிரட்டலுடன்). சாமுண்டி மலையில் ஒரு மணி நேரம். ஷாப்பிங்குக்கு ஒரு மணி நேரம். (’ஒரிஜினல் மைசூர் சில்க் சாரீஷ், ஒரிஜினல் ஷாண்டல்வுட் ஐடம்ஷ், கிஃப்ட் ஐடம்ஷ். கவர்ண்மெண்ட் ரேட். வெரி சீப் ஷார். ஆல் கோ அண்டு பை ஷார்’).
மதிய உணவுக்குப் பிறகு மீண்டும் கைடை அணுகினேன். அடுத்து ஸ்ரீரங்கப்பட்டணம்தானே? பான்பராக்கைக் கீழே துப்பிவிட்டு சிரித்தார் கைடு. ஷ்யூர் ஷார். ஃபர்ஷ்ஸ்ட் ப்ரிண்டாவன் கார்டன்ஸ். ஆஃப்டர் தட், ஸ்ரீரங்கப்பட்டணம். ப்ளீஷ் ஷிட் ஷார்.
ஸ்ரீரங்கப்பட்டணத்துக்குள் வண்டி நுழையும்போது மணி நான்கு. கைடு அவர் தம் இருக்கையில் இருந்து எழுந்துகொண்டார். ’ஷார், (குறிப்பாக என்னைப் பார்த்து) யுவர் ரைட் ஆண்ட் ஷைட் ஸ்ரீரங்கப்பட்டணம் ஈஸ் தேர். யூ நோ திப்பு ஷூல்டான், வெரி குட் ஃபைட்டர் ஷார். ஹி ஈஷ் டெட் ஹியர் ஷார். திப்பு ஃபோர்ட் நவ் நாட் ஹியர். கொலாப்ஷ்ட். நவ் ஃபாண்டா ஷாப் ஹியர். குட் கூல்டிரிங்க்ஸ்.’
நிறத்தாமல் தொடர்ந்து வண்டியை ஓட்டிக்கொண்டிருந்ததைப் பார்த்ததும் எனக்குப் பயம் வந்துவிட்டது. மிஸ்டர் கைட், வண்டியை நிறுத்துவீர்களா மாட்டீர்களா? ’ஹியர் நோ ப்ளேஷ் டூ ஷி ஸார். ஆல் கொலாப்ஷ்ட். ரங்கநாதர் டெம்பில் 45 மினிட்ஷ் பஷ் ஷ்டாப். யூ என்ஷாய் ஷார். ’
கண்ணாடி வழியாக எட்டிப் பார்த்தேன். சிதிலமடைந்த சுவர்கள். தூண்கள். மண்டபங்கள். இடையிடையே பாலிதீன் கவரை விரித்து டீ, சமோசா மற்றும் குளிர்பானங்கள் விற்றுக்கொண்டிருந்தார்கள். ஒரு நாய் பன்றியைத் துரத்தியபடி ஓடிக்கொண்டிருந்தது. திஷ் ப்ளேஷ் நவ் வெரி பேட் ஷார் என்று கையை வெளியில் காட்டி பேசிக்கொண்டிருந்தார் கைடு.
கூடுதலாக, மழையும் பிடித்துக்கொண்டதால் ரங்கநாதர் கோயிலிலும் வண்டியை நிறுத்தவில்லை. ஐந்தே நிமிடங்களில் ஸ்ரீரங்கப்பட்டணத்தைக் கடந்துவிட்டோம். பேருந்து ஜன்னலையும் மூடிவிட்டார்கள். பிறகு, மைஷூர் பேலஷ். மியூஷிக் ஃபவுண்டன். எல்லாம் முடிந்து இறக்கிவிடும்போது, கைடு என்னிடம் வந்தார். ’ஷார், கைடு சார்ஷ் 25 ரூபிஸ் ப்ளீஷ்.’
மதிய உணவுக்குப் பிறகு மீண்டும் கைடை அணுகினேன். அடுத்து ஸ்ரீரங்கப்பட்டணம்தானே? பான்பராக்கைக் கீழே துப்பிவிட்டு சிரித்தார் கைடு. ஷ்யூர் ஷார். ஃபர்ஷ்ஸ்ட் ப்ரிண்டாவன் கார்டன்ஸ். ஆஃப்டர் தட், ஸ்ரீரங்கப்பட்டணம். ப்ளீஷ் ஷிட் ஷார்.
ஸ்ரீரங்கப்பட்டணத்துக்குள் வண்டி நுழையும்போது மணி நான்கு. கைடு அவர் தம் இருக்கையில் இருந்து எழுந்துகொண்டார். ’ஷார், (குறிப்பாக என்னைப் பார்த்து) யுவர் ரைட் ஆண்ட் ஷைட் ஸ்ரீரங்கப்பட்டணம் ஈஸ் தேர். யூ நோ திப்பு ஷூல்டான், வெரி குட் ஃபைட்டர் ஷார். ஹி ஈஷ் டெட் ஹியர் ஷார். திப்பு ஃபோர்ட் நவ் நாட் ஹியர். கொலாப்ஷ்ட். நவ் ஃபாண்டா ஷாப் ஹியர். குட் கூல்டிரிங்க்ஸ்.’
நிறத்தாமல் தொடர்ந்து வண்டியை ஓட்டிக்கொண்டிருந்ததைப் பார்த்ததும் எனக்குப் பயம் வந்துவிட்டது. மிஸ்டர் கைட், வண்டியை நிறுத்துவீர்களா மாட்டீர்களா? ’ஹியர் நோ ப்ளேஷ் டூ ஷி ஸார். ஆல் கொலாப்ஷ்ட். ரங்கநாதர் டெம்பில் 45 மினிட்ஷ் பஷ் ஷ்டாப். யூ என்ஷாய் ஷார். ’
கண்ணாடி வழியாக எட்டிப் பார்த்தேன். சிதிலமடைந்த சுவர்கள். தூண்கள். மண்டபங்கள். இடையிடையே பாலிதீன் கவரை விரித்து டீ, சமோசா மற்றும் குளிர்பானங்கள் விற்றுக்கொண்டிருந்தார்கள். ஒரு நாய் பன்றியைத் துரத்தியபடி ஓடிக்கொண்டிருந்தது. திஷ் ப்ளேஷ் நவ் வெரி பேட் ஷார் என்று கையை வெளியில் காட்டி பேசிக்கொண்டிருந்தார் கைடு.
கூடுதலாக, மழையும் பிடித்துக்கொண்டதால் ரங்கநாதர் கோயிலிலும் வண்டியை நிறுத்தவில்லை. ஐந்தே நிமிடங்களில் ஸ்ரீரங்கப்பட்டணத்தைக் கடந்துவிட்டோம். பேருந்து ஜன்னலையும் மூடிவிட்டார்கள். பிறகு, மைஷூர் பேலஷ். மியூஷிக் ஃபவுண்டன். எல்லாம் முடிந்து இறக்கிவிடும்போது, கைடு என்னிடம் வந்தார். ’ஷார், கைடு சார்ஷ் 25 ரூபிஸ் ப்ளீஷ்.’
நேபாளத்தில் இன்னொரு போர்!
பிரசந்தா என்று ஒருவர் உண்மையில் இருக்கிறாரா? மிகச் சமீப காலம் வரை இந்த சந்தேகம் பலருக்கும் இருந்தது. ஆனால் அவரைப் பற்றி வெவ்வேறு செய்திகள் பல்வேறு ரூபங்களில் உலாவிக்கொண்டிருந்தன. பதுங்கு குழிகளில் மறைந்திருக்கிறார். ஆயுதப் பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கிறார். என்றாவது ஒரு நாள் திடீரென்று பாய்ந்து வந்து போரிட்டு மன்னரை வீழ்த்திவிட்டு மக்கள் ஆட்சியை மலரச் செய்வார்.
2000ம் ஆண்டில்தான் முதன் முறையாக பிரசந்தாவின் உருவம் வெளிவந்தது. கையால் வரையப்பட்ட ஒரு படம். தடித்த மீசை. கம்பளி அணிந்த சட்டை. கீழே அவர் பெயர். அதே ஆண்டு அவர் பேட்டி வெளிவந்தது. நேபாள மக்கள் ஆர்வத்துடன் படித்தார்கள். பிரசந்தா இப்படி கூறியிருந்தார். நேபாளம் சிறிய நாடு. எங்கள் இயக்கமும் சிறியது. ஆனால் எங்கள் கனவுகள் பெரியவை; பிரமாண்டமானவை. சிறு பொறிகளை ஏற்படுத்தவே நாங்கள் முயற்சி செய்கிறோம். பெரிய நெருப்பை ஏற்படுத்துவதற்கு சிறு பொறிகள் போதும்தானே?
போதும்தான். ஆனால் அத்தனை சுலபமான பணியாக இருக்கவில்லை அது. பத்து ஆண்டு காலம் இடைவிடாமல் போராடியது பிரசந்தாவின் மாவோயிஸ்ட் இயக்கம். மிகத் தெளிவான சித்தாந்தம் ஒன்றை வளர்த்தெடுத்துக்கொண்டார்கள். மாவோயிசம். மன்னர் ஆட்சியில் சுதந்தரம் கிடைக்காது. மன்னரை துரத்தியடித்துவிட்டு மக்கள் ஆட்சி நிறுவவேண்டும். ஜனநாயகம் தழைக்கவேண்டும். அதற்கு ஒரே வழி ஆயுதப் போராட்டம் மட்டுமே.
நூறு பேரில் 95 பேர் ஏழைகளாக இருந்த நேபாளத்தில் மன்னராட்சிக்கு எதிராக மக்களைத் திரட்டுவதில் சிரமம் அதிகம் இருக்கவில்லை பிரசந்தாவுக்கு. வருகிறீர்களா என்று கேட்டதும் பயிற்சியை எப்போது தொடங்கப்போகிறீர்கள் என்று மட்டுமே கேட்டார்கள் மக்கள். விவசாயிகள், பட்டதாரிகள், வேலை கிடைக்காதவர்கள், பெண்கள், முதியோர் என்று அனைவரும் திரண்டு வந்தனர். ஒரு கையில் சிவப்பு கொடி. மறு கையில் துப்பாக்கி. பிரசந்தா சொன்ன அந்த சிறு பொறி இப்படித்தான் வெடித்தது.
நேபாளத்தில் உள்ள காஸ்கி என்னும் மாவட்டத்தில் பிறந்தவர் (டிசம்பர் 11, 1954) பிரசந்தா. அவரது பெருவாரியான இளமைக்காலம் கழிந்தது சித்வான் என்னும் பகுதியில். அது ஒரு காட்டுப்பகுதி. நகரத்தில் இருந்தால் கட்டுப்படியாகாது என்பதால் ஆயிரக்கணக்கான ஏழைகள் வெளியேறி இந்தக் காட்டுப்பகுதியில் குடியேறினர். பிரசந்தாவின் தந்தை இதே காட்டுப்பகுதியில் ஒரு மூலையில் வேலை செய்துவந்தார். கொடிய மிருகங்கள். அதைவிட கொடுமையான ஏழைமை. இரண்டையும் சமாளித்து மீளவேண்டும்.
வேளாண்மை கல்லூரியில் படிக்கும்போது பிரசந்தாவுக்கு தோன்றியது. நாம் மட்டும் ஏன் இத்தனை சிரமப்படவேண்டும்? ஒரு புதிய சட்டை வாங்கவேண்டுமானால் ஆண்டுகணக்கில் கனவு காணவேண்டும். மாதக் கணக்கில் சேமிக்க வேண்டும். ஆனால், ஒரு பிரிவினருக்கு எல்லாமே சுலபத்தில் கிடைத்துவிடுகிறது. கனவு காண ஆரம்பிப்பதற்கு முன்னரே இந்தா என்று அலாவுதின் பூதம் தோன்றிவிடுகிறது.
அது வரம் தரும் பூதம் அல்ல ஒழிக்கப்படவேண்டிய பூதம் என்பதை பிரசந்தா விரைவிலேயே உணர்ந்துகொண்டார். ஏழைகள் மென்மேலும் ஏழைகளாக மாறிக்கொண்டிருக்கிறார்கள். செல்வந்தர்களுக்குப் பணம் குவிந்துகொண்டிருக்கிறது. எப்படி? ஏழைகளின் உழைப்பை சுரண்டுவது மூலம். உழைப்பை சுரண்டுவது என்றால் என்ன? உழைப்பு என்றால் என்ன? உழைப்பின் மதிப்பு என்ன?
மார்க்ஸ், லெனின், மாவோ மூவரையும் இடைவிடாமல் வாசிக்க ஆரம்பித்தார் பிரசந்தா. சில விஷயங்கள் புரிந்தன. நேபாளத்துக்கு மட்டுமேயான பிரச்னை அல்ல இது. ரஷ்யாவிலும், சீனாவிலும்கூட இதே நிலைமை இருந்திருக்கிறது. லெனினும் மாவோவும் அதை மாற்றியிருக்கிறார்கள். மன்னர் ஆட்சியை அவர்கள் ஒழித்திருக்கிறார்கள். புதிய ஜனநாயக அரசை அவர்கள் நிர்மாணித்திருக்கிறார்கள். சீனாவிலும் ரஷ்யாவிலும் சாத்தியமாகக்கூடிய ஒரு மாற்றம் நேபாளத்திலும்கூட சாத்தியமாகும் அல்லவா?
படித்து முடித்ததும் இரண்டு ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார். கிராமப்புற நலத் திட்டங்களில் பங்கெடுத்துக்கொண்டார். நேபாளத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் நுழைந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. உலகின் ஒரே இந்து தேசம் என்று ஆர்ப்பாட்டத்துடன் கொக்கரிக்கும் மன்னர்களின் வெட்டி பெருமை எரிச்சலை ஏற்படுத்தியது. வீடுகளில் குந்துமணி அரிசி இல்லை. இதில் இந்து மதத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வது?
1980ம் ஆண்டு தனது இருபத்தைந்தாவது வயதில் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்துகொண்டார். இதோ இன்னும் சிறிது காலத்தில் தலைவர்கள் போராட்டத்தை ஆரம்பிக்கப்போகிறார்கள். வா, பிரசந்தா வந்து இணைந்துகொள் என்று என்னை அழைக்கப்போகிறார்கள். மன்னருக்கு எதிராக போர் தொடுக்கப்போகிறோம். கனவுகளுடன் காத்திருந்தார் பிரசந்தா. ஆனால் அப்படி ஒரு அழைப்பு இயக்கத்திடம் இருந்து வரவேயில்லை. மெதுவாக சென்று ஒவ்வொருவரையும் கேட்டுப் பார்த்தார். ஐயா, நாம் எப்போது ஆயுதப் போராட்டத்தை ஆரம்பிக்கப்போகிறோம்? ஆகட்டும் பார்ப்போம் என்று சொல்லி அனுப்பினார்கள்.
வெறுத்து போனார் பிரசந்தா. இவர்களை நம்பி பிரயோஜனமில்லை. பயம் இவர்களைத் தடுக்கிறது. போராடும் உத்வேகம் இல்லை இவர்களிடம். நாம் எதற்கு ஒரு தலைமையை எதிர்பார்த்து காத்திருக்கவேண்டும்? தலைமை தாங்கும் தகுதி என்னிடம் இல்லையா? நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) தோன்றியது இப்படித்தான். இயக்கத்தின் கொள்கை என்ன என்பதை பிரசந்தா தெளிவாக வெளிப்படுத்தினார். இந்து தேசம் என்னும் அடையாளத்தை உடைப்போம். மன்னரை விரட்டியடிப்போம். கம்யூனிச அரசை ஏற்படுத்துவோம். இனம், மொழி, வர்க்கம் சார்ந்த பிரிவினைகள் இல்லாமல் செய்வோம்.
பகிரங்கமாகப் போர் பிரகடனம் செய்தது மாவோயிஸ்ட் கட்சி. நாங்கள் மக்களின் பிரதிநிதிகள். எங்களுக்கு மக்கள் ஆட்சி வேண்டுஎங்கள் மீது அதிகாரம் செலுத்தும் எந்தவொரு அமைப்பும் தேவையில்லை. மக்களிடம் இருந்து அபகரிக்கப்பட்ட நிலங்கள் திருப்பி அளிக்கப்படவேண்டும். உங்களுக்கு ஆட்சி நடத்த தெரியவில்லை என்றால் பொறுப்பை எங்களிடம் ஒப்படைத்துவிட்டு அரண்மனைக்குச் சென்று ஒளிந்துகொள்ளுங்கள். இந்த வாக்குறுதிகளை தராவிட்டால் நாங்கள் கலகம் செய்வோம்.
மாவோயிஸ்டுகளின் பின்னால் அணி திரண்டது தேசம். கலகம். கெரில்லா தாக்குதல். அரசியல் பிரசாரம். தேர்தல். ஒவ்வொரு கட்டமாக முன்னேறினார்கள் மாவோயிஸ்டுகள். நேபாள மக்கள் அவர்கள் பின்னால் அணிவகுத்து சென்றார்கள். பாய்ந்து வா என்று சொன்னால் பாய்ந்தார்கள். கொடி பிடி என்றால் பிடித்தார்கள். கலகம் வேண்டாம் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று பிரசந்தா சொன்னபோது சரி என்று துப்பாக்கியை தரையில் வைத்துவிட்டு அமைதி காத்தார்கள். நேபாளத்தை இயக்கும் உந்துசக்தியாக மாறிப்போனார் பிரசந்தா.
ஏப்ரல் 2006ல் ஞானேந்திராவின் ஆட்சி தூக்கியெறியப்பட்டது. மாவோயிஸ்டுகளின் செயல்திட்டத்திலும் மாற்றம் ஏற்பட்டது. கெரில்லா தாக்குதல்களுக்கு இனி வேலையில்லை. அடுத்து நாம் சந்திக்க வேண்டியது அரசியல் போராட்டத்தை மட்டுமே. பிரசந்தா தயாரானார். ஏப்ரல் 2008ல் நடைபெற்ற தேர்தலில் மாவோயிஸ்ட் கட்சி வெற்றி பெற்றது.
அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதில் பிரசந்தா தெளிவாக இருந்தார். இது எங்களுக்குக் கிடைத்த வெற்றி என்பதைவிட ஜனநாயகத்துக்குக் கிடைத்த வெற்றி என்றுதான் சொல்லவேண்டும். அதிகாரத்தை பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறோம். மலைவாசி மக்கள், பழங்குடி மக்கள், பெண்கள் ஆகியோரை உள்ளடக்கிய அரசாங்கம் ஒன்றை அமைக்கப் போகிறோம். கூட்டணிக் கட்சிகள் எங்களுக்கு ஒத்துழைக்கவேண்டும்.
மாவோயிஸ்டுகளுக்கு எதிராக ஒரு அணி திரண்டது. மூன்று பேர் கொண்ட கூட்டணி இது. நேபாள காங்கிரஸ். நேபாள ஐக்கியக் கம்யூனிஸ்ட் (மார்க்சிய லெனினிய) கட்சி. மாதேசி மக்கள் அதிகார அரங்கம். குடியரசுத் தலைவர், துணைத் தலைவர் மற்றும் அரசியல் நிர்ணய சபைத் தலைவர் ஆகிய பதவிகளை இவர்கள் கைப்பற்றிக்கொண்டனர். பிரதமராக பிரசந்தா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஆஹா பிரமாதம் என்று நேபாள மக்கள் இந்த வெற்றியைக் கொண்டாடிக்கொண்டிருந்தாலும், போராட்டம் இனிமேல்தான் ஆரம்பமாகப்போகிறது என்பதை பிரசந்தா உணர்ந்தே இருக்கிறார். எங்களுக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. கூட்டணி கட்சிகளின் உதவியுடன்தான் இந்த அரசாங்கம் அமைக்கப்பட்டிருக்கிறது. அதிகாரத்தைக் கைப்பற்றுவது மட்டுமே எங்கள் நோக்கமல்ல. மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை ஒவ்வொன்றாக ஏற்படுத்தியாகவேண்டும். அதற்குத் தடையாக இருக்கும் கூட்டணி கட்சிகளை சமாளித்தாகவேண்டும். இது கெரில்லா தாக்குதல்களை விடவும் ஆபத்தானது.
0
ஆனந்த விகடனுக்காக நான் எழுதிய கட்டுரையின் முழு வடிவம் இது. இதழில் பிரசுரம் ஆகும்போது இந்தக் கட்டுரையின் வடிவம் மட்டுமல்ல மைய கருத்தும்கூட பெரிதும் சிதைந்துவிட்டது. கட்டுரைக்கு விகடன் வைத்த ஹீரோவா வில்லனா என்னும் தலைப்பே கூட ஏற்றுக்கொள்ளமுடியாததுதான். நேபாளம் பற்றிய என் உறுதியான நிலைப்பாடு இதுதான். அங்கே நடந்த மக்கள் புரட்சியை நான் ஆதரிக்கிறேன். பிரசந்தா தலைமையில் நடைபெற்று வரும் மாற்றங்களை மிகவும் உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருக்கிறேன். இதழ்களில் அல்லாது இந்த வலைத்தளத்தில் நேபாளம் பற்றி தொடர்ந்து எழுத விருப்பம்.
2000ம் ஆண்டில்தான் முதன் முறையாக பிரசந்தாவின் உருவம் வெளிவந்தது. கையால் வரையப்பட்ட ஒரு படம். தடித்த மீசை. கம்பளி அணிந்த சட்டை. கீழே அவர் பெயர். அதே ஆண்டு அவர் பேட்டி வெளிவந்தது. நேபாள மக்கள் ஆர்வத்துடன் படித்தார்கள். பிரசந்தா இப்படி கூறியிருந்தார். நேபாளம் சிறிய நாடு. எங்கள் இயக்கமும் சிறியது. ஆனால் எங்கள் கனவுகள் பெரியவை; பிரமாண்டமானவை. சிறு பொறிகளை ஏற்படுத்தவே நாங்கள் முயற்சி செய்கிறோம். பெரிய நெருப்பை ஏற்படுத்துவதற்கு சிறு பொறிகள் போதும்தானே?
போதும்தான். ஆனால் அத்தனை சுலபமான பணியாக இருக்கவில்லை அது. பத்து ஆண்டு காலம் இடைவிடாமல் போராடியது பிரசந்தாவின் மாவோயிஸ்ட் இயக்கம். மிகத் தெளிவான சித்தாந்தம் ஒன்றை வளர்த்தெடுத்துக்கொண்டார்கள். மாவோயிசம். மன்னர் ஆட்சியில் சுதந்தரம் கிடைக்காது. மன்னரை துரத்தியடித்துவிட்டு மக்கள் ஆட்சி நிறுவவேண்டும். ஜனநாயகம் தழைக்கவேண்டும். அதற்கு ஒரே வழி ஆயுதப் போராட்டம் மட்டுமே.
நூறு பேரில் 95 பேர் ஏழைகளாக இருந்த நேபாளத்தில் மன்னராட்சிக்கு எதிராக மக்களைத் திரட்டுவதில் சிரமம் அதிகம் இருக்கவில்லை பிரசந்தாவுக்கு. வருகிறீர்களா என்று கேட்டதும் பயிற்சியை எப்போது தொடங்கப்போகிறீர்கள் என்று மட்டுமே கேட்டார்கள் மக்கள். விவசாயிகள், பட்டதாரிகள், வேலை கிடைக்காதவர்கள், பெண்கள், முதியோர் என்று அனைவரும் திரண்டு வந்தனர். ஒரு கையில் சிவப்பு கொடி. மறு கையில் துப்பாக்கி. பிரசந்தா சொன்ன அந்த சிறு பொறி இப்படித்தான் வெடித்தது.
நேபாளத்தில் உள்ள காஸ்கி என்னும் மாவட்டத்தில் பிறந்தவர் (டிசம்பர் 11, 1954) பிரசந்தா. அவரது பெருவாரியான இளமைக்காலம் கழிந்தது சித்வான் என்னும் பகுதியில். அது ஒரு காட்டுப்பகுதி. நகரத்தில் இருந்தால் கட்டுப்படியாகாது என்பதால் ஆயிரக்கணக்கான ஏழைகள் வெளியேறி இந்தக் காட்டுப்பகுதியில் குடியேறினர். பிரசந்தாவின் தந்தை இதே காட்டுப்பகுதியில் ஒரு மூலையில் வேலை செய்துவந்தார். கொடிய மிருகங்கள். அதைவிட கொடுமையான ஏழைமை. இரண்டையும் சமாளித்து மீளவேண்டும்.
வேளாண்மை கல்லூரியில் படிக்கும்போது பிரசந்தாவுக்கு தோன்றியது. நாம் மட்டும் ஏன் இத்தனை சிரமப்படவேண்டும்? ஒரு புதிய சட்டை வாங்கவேண்டுமானால் ஆண்டுகணக்கில் கனவு காணவேண்டும். மாதக் கணக்கில் சேமிக்க வேண்டும். ஆனால், ஒரு பிரிவினருக்கு எல்லாமே சுலபத்தில் கிடைத்துவிடுகிறது. கனவு காண ஆரம்பிப்பதற்கு முன்னரே இந்தா என்று அலாவுதின் பூதம் தோன்றிவிடுகிறது.
அது வரம் தரும் பூதம் அல்ல ஒழிக்கப்படவேண்டிய பூதம் என்பதை பிரசந்தா விரைவிலேயே உணர்ந்துகொண்டார். ஏழைகள் மென்மேலும் ஏழைகளாக மாறிக்கொண்டிருக்கிறார்கள். செல்வந்தர்களுக்குப் பணம் குவிந்துகொண்டிருக்கிறது. எப்படி? ஏழைகளின் உழைப்பை சுரண்டுவது மூலம். உழைப்பை சுரண்டுவது என்றால் என்ன? உழைப்பு என்றால் என்ன? உழைப்பின் மதிப்பு என்ன?
மார்க்ஸ், லெனின், மாவோ மூவரையும் இடைவிடாமல் வாசிக்க ஆரம்பித்தார் பிரசந்தா. சில விஷயங்கள் புரிந்தன. நேபாளத்துக்கு மட்டுமேயான பிரச்னை அல்ல இது. ரஷ்யாவிலும், சீனாவிலும்கூட இதே நிலைமை இருந்திருக்கிறது. லெனினும் மாவோவும் அதை மாற்றியிருக்கிறார்கள். மன்னர் ஆட்சியை அவர்கள் ஒழித்திருக்கிறார்கள். புதிய ஜனநாயக அரசை அவர்கள் நிர்மாணித்திருக்கிறார்கள். சீனாவிலும் ரஷ்யாவிலும் சாத்தியமாகக்கூடிய ஒரு மாற்றம் நேபாளத்திலும்கூட சாத்தியமாகும் அல்லவா?
படித்து முடித்ததும் இரண்டு ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார். கிராமப்புற நலத் திட்டங்களில் பங்கெடுத்துக்கொண்டார். நேபாளத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் நுழைந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. உலகின் ஒரே இந்து தேசம் என்று ஆர்ப்பாட்டத்துடன் கொக்கரிக்கும் மன்னர்களின் வெட்டி பெருமை எரிச்சலை ஏற்படுத்தியது. வீடுகளில் குந்துமணி அரிசி இல்லை. இதில் இந்து மதத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வது?
1980ம் ஆண்டு தனது இருபத்தைந்தாவது வயதில் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்துகொண்டார். இதோ இன்னும் சிறிது காலத்தில் தலைவர்கள் போராட்டத்தை ஆரம்பிக்கப்போகிறார்கள். வா, பிரசந்தா வந்து இணைந்துகொள் என்று என்னை அழைக்கப்போகிறார்கள். மன்னருக்கு எதிராக போர் தொடுக்கப்போகிறோம். கனவுகளுடன் காத்திருந்தார் பிரசந்தா. ஆனால் அப்படி ஒரு அழைப்பு இயக்கத்திடம் இருந்து வரவேயில்லை. மெதுவாக சென்று ஒவ்வொருவரையும் கேட்டுப் பார்த்தார். ஐயா, நாம் எப்போது ஆயுதப் போராட்டத்தை ஆரம்பிக்கப்போகிறோம்? ஆகட்டும் பார்ப்போம் என்று சொல்லி அனுப்பினார்கள்.
வெறுத்து போனார் பிரசந்தா. இவர்களை நம்பி பிரயோஜனமில்லை. பயம் இவர்களைத் தடுக்கிறது. போராடும் உத்வேகம் இல்லை இவர்களிடம். நாம் எதற்கு ஒரு தலைமையை எதிர்பார்த்து காத்திருக்கவேண்டும்? தலைமை தாங்கும் தகுதி என்னிடம் இல்லையா? நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) தோன்றியது இப்படித்தான். இயக்கத்தின் கொள்கை என்ன என்பதை பிரசந்தா தெளிவாக வெளிப்படுத்தினார். இந்து தேசம் என்னும் அடையாளத்தை உடைப்போம். மன்னரை விரட்டியடிப்போம். கம்யூனிச அரசை ஏற்படுத்துவோம். இனம், மொழி, வர்க்கம் சார்ந்த பிரிவினைகள் இல்லாமல் செய்வோம்.
பகிரங்கமாகப் போர் பிரகடனம் செய்தது மாவோயிஸ்ட் கட்சி. நாங்கள் மக்களின் பிரதிநிதிகள். எங்களுக்கு மக்கள் ஆட்சி வேண்டுஎங்கள் மீது அதிகாரம் செலுத்தும் எந்தவொரு அமைப்பும் தேவையில்லை. மக்களிடம் இருந்து அபகரிக்கப்பட்ட நிலங்கள் திருப்பி அளிக்கப்படவேண்டும். உங்களுக்கு ஆட்சி நடத்த தெரியவில்லை என்றால் பொறுப்பை எங்களிடம் ஒப்படைத்துவிட்டு அரண்மனைக்குச் சென்று ஒளிந்துகொள்ளுங்கள். இந்த வாக்குறுதிகளை தராவிட்டால் நாங்கள் கலகம் செய்வோம்.
மாவோயிஸ்டுகளின் பின்னால் அணி திரண்டது தேசம். கலகம். கெரில்லா தாக்குதல். அரசியல் பிரசாரம். தேர்தல். ஒவ்வொரு கட்டமாக முன்னேறினார்கள் மாவோயிஸ்டுகள். நேபாள மக்கள் அவர்கள் பின்னால் அணிவகுத்து சென்றார்கள். பாய்ந்து வா என்று சொன்னால் பாய்ந்தார்கள். கொடி பிடி என்றால் பிடித்தார்கள். கலகம் வேண்டாம் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று பிரசந்தா சொன்னபோது சரி என்று துப்பாக்கியை தரையில் வைத்துவிட்டு அமைதி காத்தார்கள். நேபாளத்தை இயக்கும் உந்துசக்தியாக மாறிப்போனார் பிரசந்தா.
ஏப்ரல் 2006ல் ஞானேந்திராவின் ஆட்சி தூக்கியெறியப்பட்டது. மாவோயிஸ்டுகளின் செயல்திட்டத்திலும் மாற்றம் ஏற்பட்டது. கெரில்லா தாக்குதல்களுக்கு இனி வேலையில்லை. அடுத்து நாம் சந்திக்க வேண்டியது அரசியல் போராட்டத்தை மட்டுமே. பிரசந்தா தயாரானார். ஏப்ரல் 2008ல் நடைபெற்ற தேர்தலில் மாவோயிஸ்ட் கட்சி வெற்றி பெற்றது.
அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதில் பிரசந்தா தெளிவாக இருந்தார். இது எங்களுக்குக் கிடைத்த வெற்றி என்பதைவிட ஜனநாயகத்துக்குக் கிடைத்த வெற்றி என்றுதான் சொல்லவேண்டும். அதிகாரத்தை பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறோம். மலைவாசி மக்கள், பழங்குடி மக்கள், பெண்கள் ஆகியோரை உள்ளடக்கிய அரசாங்கம் ஒன்றை அமைக்கப் போகிறோம். கூட்டணிக் கட்சிகள் எங்களுக்கு ஒத்துழைக்கவேண்டும்.
மாவோயிஸ்டுகளுக்கு எதிராக ஒரு அணி திரண்டது. மூன்று பேர் கொண்ட கூட்டணி இது. நேபாள காங்கிரஸ். நேபாள ஐக்கியக் கம்யூனிஸ்ட் (மார்க்சிய லெனினிய) கட்சி. மாதேசி மக்கள் அதிகார அரங்கம். குடியரசுத் தலைவர், துணைத் தலைவர் மற்றும் அரசியல் நிர்ணய சபைத் தலைவர் ஆகிய பதவிகளை இவர்கள் கைப்பற்றிக்கொண்டனர். பிரதமராக பிரசந்தா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஆஹா பிரமாதம் என்று நேபாள மக்கள் இந்த வெற்றியைக் கொண்டாடிக்கொண்டிருந்தாலும், போராட்டம் இனிமேல்தான் ஆரம்பமாகப்போகிறது என்பதை பிரசந்தா உணர்ந்தே இருக்கிறார். எங்களுக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. கூட்டணி கட்சிகளின் உதவியுடன்தான் இந்த அரசாங்கம் அமைக்கப்பட்டிருக்கிறது. அதிகாரத்தைக் கைப்பற்றுவது மட்டுமே எங்கள் நோக்கமல்ல. மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை ஒவ்வொன்றாக ஏற்படுத்தியாகவேண்டும். அதற்குத் தடையாக இருக்கும் கூட்டணி கட்சிகளை சமாளித்தாகவேண்டும். இது கெரில்லா தாக்குதல்களை விடவும் ஆபத்தானது.
0
ஆனந்த விகடனுக்காக நான் எழுதிய கட்டுரையின் முழு வடிவம் இது. இதழில் பிரசுரம் ஆகும்போது இந்தக் கட்டுரையின் வடிவம் மட்டுமல்ல மைய கருத்தும்கூட பெரிதும் சிதைந்துவிட்டது. கட்டுரைக்கு விகடன் வைத்த ஹீரோவா வில்லனா என்னும் தலைப்பே கூட ஏற்றுக்கொள்ளமுடியாததுதான். நேபாளம் பற்றிய என் உறுதியான நிலைப்பாடு இதுதான். அங்கே நடந்த மக்கள் புரட்சியை நான் ஆதரிக்கிறேன். பிரசந்தா தலைமையில் நடைபெற்று வரும் மாற்றங்களை மிகவும் உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருக்கிறேன். இதழ்களில் அல்லாது இந்த வலைத்தளத்தில் நேபாளம் பற்றி தொடர்ந்து எழுத விருப்பம்.
13ம் நம்பர் வீடு
இப்படித்தான் ஆரம்பிக்கிறது அந்தப் பு்த்தகம்.
எல்லாவற்றுக்கும் மேலாக, அந்த கேன்சர் வார்டின் எண் 13. பாவேலுக்கு மூடநம்பிக்கைகள் கிடையாது என்றாலும் அவனுடைய நுழைவுச் சீட்டில் 13 என்னும் எண்ணைப் பார்த்ததும் அவன் இதயம் கலங்கியது. போயும் போயும் இந்த எண்தான் கிடைத்ததா? எத்தனையோ உபாதைகள் இருக்கின்றன. ஒவ்வொன்றுக்கும் தனித்தனி வார்டுகள். அவற்றில் ஏதாவது ஓர் அறைக்கு இந்த எண்ணை கொடுத்திருக்கக்கூடாதா?
தன் கழுத்தில் உள்ள கட்டியைத் தொட்டுப்பார்த்தபடியே மருத்துவரிடம் கேட்கிறான் பாவேல்.
’டாக்டர், எனக்கு கேன்சர் இல்லையே?’
’நிச்சயம் இல்லை.’ என்று ஒன்பதாவது முறையாகச் சொன்னார் அவர்.
அலெக்ஸாண்டர் சோல்ஸெனிட்ஸின் (Alexander Solzhenitsyn) முக்கிய நாவல்களாகக் கொண்டாடப்படும் One Day in the Life of Ivan Denisovich, The Gulag Archipelago, The Full Circle எதுவொன்றையும் நான் வாசித்ததில்லை. நான் படித்தது Cancer Ward மட்மே. படித்தபோது எனக்கு அவரைப் பற்றி ஒன்றும் தெரியாது. தெரிந்துகொண்டபோது கேன்சர் வார்டை மீண்டும் ஒரு முறை ஆழ்ந்து வாசிக்கவேண்டும் என்று தோன்றியது.
இரண்டாம் உலகப் போரின்போது செம்படையின் ஒரு பிரிவில் கமாண்டராகப் பணியாற்றியிருக்கிறார் சோல்ஸெனிட்ஸின். ஸ்டாலினையும் தேசத்தையும் அவதூறு செய்தார் என்னும் குற்றச்சாட்டை முன்வைத்து பிப்ரவரி 1945ல் இவர் கைது செய்யப்பட்டார். சோவியத்துக்கு எதிராக ரகசிய அமைப்பை ஆரம்பித்தார் என்றும் சொல்லப்பட்டது.
லேபர் கேம்பில் எட்டு ஆண்டுகளைக் கழித்து முடித்தபோது கழுத்தில் ஒரு கட்டி. நாடு கடத்துவதாகத் தீர்மானம் வந்து சேர்ந்தபோது அது புற்றுநோய்தான் என்று முடிவானது. தாஷ்கண்டில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்த்தார்கள். அநேகமான இறந்துவிடுவார் என்று உடன் இருந்தவர்கள் முடிவுக்கு வந்தபோது பிழைத்துக்கொண்டார். அந்த வகையில் கேன்சர் வார்ட் கிட்டத்தட்ட அவருடைய சொந்த அனுபவம் என்று சொல்லலாம்.
மார்க்சியம் இனி வேண்டாம் என்று முடிவு செய்தார் சோல்ஸெனிட்ஸின். ஸ்டாலினையும் செம்படையையும் தீர்மானமாக வெறுக்க ஆரம்பித்தார். ரஷ்யா ஒரு தேசமே அல்ல அது ஒரு கேன்சர் வார்ட்தான் என்றார். கேன்சர் வார்ட் நாவலின் இறுதி வரி இது. அந்தக் குரங்கின் கண்களில் ஒரு தீய மனிதன் புகையிலையை வீசினான். ஏன்? சும்மாதான். தீய மனிதன், ஸ்டாலின். ஒன்றும் அறியாத குரங்கு என்பது ரஷ்யர்களைக் குறிக்கும். புகையிலை, கம்யூனிசம்.
இனி நீ வேண்டாம் என்று சோவியத் யூனியன் சோல்ஸெனிட்ஸினைப் பிடித்து வெளியே தள்ளியது. நீதான் எங்களுக்கு வேண்டும் என்று மேலை நாடுகள் அவரை ஆழத் தழுவிக்கொண்டன. அவர்களுக்கு நூறு அலெக்ஸாண்டர் சோல்ஸெனிட்ஸின் தேவையாக இருந்தது. ஸ்டாலினை விமரிசிக்கிறாயா? சோவியத் யூனியனின் நடைபெறும் கொடுமைகளை எழுதித் தருகிறாயா? லெனின்? காரல் மார்க்ஸ்? இவர்களைத் தாக்கி எழுதித்தரமுடியுமா? வா இங்கே.
1970ம் ஆண்டு நோபல் பரிசு கிடைத்தது. இதை வாங்கிக்கொண்டு சோவியத்துக்குள் அடியெடுத்து வைக்கமுடியாது என்று அவருக்குத் தெரியும். நான்கு ஆண்டுகள் காத்திருந்தார். சோவியத் அவரை மீண்டும் நாடு கடத்தியபோது, விரைந்து சென்று பரிசைப் பெற்றுக்கொண்டார். 1994ல் ரஷ்யா திரும்பினார். கம்யூனிசத்தின் சாயல்கூட இல்லாத ரஷ்யா. சோல்ஸெனிட்ஸின் கனவு கண்ட ரஷ்யா. மீண்டும் எழுத ஆரம்பித்தார். அவர் மனைவி, மகன்கள் அனைவரும் அமெரிக்கப் பிரஜைகளாக மாறியிருந்தனர்.
இரண்டு தினங்களுக்கு முன் (ஆகஸ்ட் 3, 2008) மாஸ்கோவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அலெக்ஸாண்டர் சோல்ஸெனிட்ஸின் இறந்துபோனார்.
எல்லாவற்றுக்கும் மேலாக, அந்த கேன்சர் வார்டின் எண் 13. பாவேலுக்கு மூடநம்பிக்கைகள் கிடையாது என்றாலும் அவனுடைய நுழைவுச் சீட்டில் 13 என்னும் எண்ணைப் பார்த்ததும் அவன் இதயம் கலங்கியது. போயும் போயும் இந்த எண்தான் கிடைத்ததா? எத்தனையோ உபாதைகள் இருக்கின்றன. ஒவ்வொன்றுக்கும் தனித்தனி வார்டுகள். அவற்றில் ஏதாவது ஓர் அறைக்கு இந்த எண்ணை கொடுத்திருக்கக்கூடாதா?
தன் கழுத்தில் உள்ள கட்டியைத் தொட்டுப்பார்த்தபடியே மருத்துவரிடம் கேட்கிறான் பாவேல்.
’டாக்டர், எனக்கு கேன்சர் இல்லையே?’
’நிச்சயம் இல்லை.’ என்று ஒன்பதாவது முறையாகச் சொன்னார் அவர்.
அலெக்ஸாண்டர் சோல்ஸெனிட்ஸின் (Alexander Solzhenitsyn) முக்கிய நாவல்களாகக் கொண்டாடப்படும் One Day in the Life of Ivan Denisovich, The Gulag Archipelago, The Full Circle எதுவொன்றையும் நான் வாசித்ததில்லை. நான் படித்தது Cancer Ward மட்மே. படித்தபோது எனக்கு அவரைப் பற்றி ஒன்றும் தெரியாது. தெரிந்துகொண்டபோது கேன்சர் வார்டை மீண்டும் ஒரு முறை ஆழ்ந்து வாசிக்கவேண்டும் என்று தோன்றியது.
இரண்டாம் உலகப் போரின்போது செம்படையின் ஒரு பிரிவில் கமாண்டராகப் பணியாற்றியிருக்கிறார் சோல்ஸெனிட்ஸின். ஸ்டாலினையும் தேசத்தையும் அவதூறு செய்தார் என்னும் குற்றச்சாட்டை முன்வைத்து பிப்ரவரி 1945ல் இவர் கைது செய்யப்பட்டார். சோவியத்துக்கு எதிராக ரகசிய அமைப்பை ஆரம்பித்தார் என்றும் சொல்லப்பட்டது.
லேபர் கேம்பில் எட்டு ஆண்டுகளைக் கழித்து முடித்தபோது கழுத்தில் ஒரு கட்டி. நாடு கடத்துவதாகத் தீர்மானம் வந்து சேர்ந்தபோது அது புற்றுநோய்தான் என்று முடிவானது. தாஷ்கண்டில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்த்தார்கள். அநேகமான இறந்துவிடுவார் என்று உடன் இருந்தவர்கள் முடிவுக்கு வந்தபோது பிழைத்துக்கொண்டார். அந்த வகையில் கேன்சர் வார்ட் கிட்டத்தட்ட அவருடைய சொந்த அனுபவம் என்று சொல்லலாம்.
மார்க்சியம் இனி வேண்டாம் என்று முடிவு செய்தார் சோல்ஸெனிட்ஸின். ஸ்டாலினையும் செம்படையையும் தீர்மானமாக வெறுக்க ஆரம்பித்தார். ரஷ்யா ஒரு தேசமே அல்ல அது ஒரு கேன்சர் வார்ட்தான் என்றார். கேன்சர் வார்ட் நாவலின் இறுதி வரி இது. அந்தக் குரங்கின் கண்களில் ஒரு தீய மனிதன் புகையிலையை வீசினான். ஏன்? சும்மாதான். தீய மனிதன், ஸ்டாலின். ஒன்றும் அறியாத குரங்கு என்பது ரஷ்யர்களைக் குறிக்கும். புகையிலை, கம்யூனிசம்.
இனி நீ வேண்டாம் என்று சோவியத் யூனியன் சோல்ஸெனிட்ஸினைப் பிடித்து வெளியே தள்ளியது. நீதான் எங்களுக்கு வேண்டும் என்று மேலை நாடுகள் அவரை ஆழத் தழுவிக்கொண்டன. அவர்களுக்கு நூறு அலெக்ஸாண்டர் சோல்ஸெனிட்ஸின் தேவையாக இருந்தது. ஸ்டாலினை விமரிசிக்கிறாயா? சோவியத் யூனியனின் நடைபெறும் கொடுமைகளை எழுதித் தருகிறாயா? லெனின்? காரல் மார்க்ஸ்? இவர்களைத் தாக்கி எழுதித்தரமுடியுமா? வா இங்கே.
1970ம் ஆண்டு நோபல் பரிசு கிடைத்தது. இதை வாங்கிக்கொண்டு சோவியத்துக்குள் அடியெடுத்து வைக்கமுடியாது என்று அவருக்குத் தெரியும். நான்கு ஆண்டுகள் காத்திருந்தார். சோவியத் அவரை மீண்டும் நாடு கடத்தியபோது, விரைந்து சென்று பரிசைப் பெற்றுக்கொண்டார். 1994ல் ரஷ்யா திரும்பினார். கம்யூனிசத்தின் சாயல்கூட இல்லாத ரஷ்யா. சோல்ஸெனிட்ஸின் கனவு கண்ட ரஷ்யா. மீண்டும் எழுத ஆரம்பித்தார். அவர் மனைவி, மகன்கள் அனைவரும் அமெரிக்கப் பிரஜைகளாக மாறியிருந்தனர்.
இரண்டு தினங்களுக்கு முன் (ஆகஸ்ட் 3, 2008) மாஸ்கோவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அலெக்ஸாண்டர் சோல்ஸெனிட்ஸின் இறந்துபோனார்.
ஒபாமா பராக் பராக்!
கிட்டத்தட்ட ஒரு தேவதூதனைப் போலத்தான் ஒபாமாவை அமெரிக்கர்கள் பார்க்கிறார்கள். இறக்கைகள் இல்லாத தேவதூதன். ஒரு பெரிய ரப்பரால் எல்லா தவறுகளையும் ஒபாமா அழுத்தமாகத் துடைத்து அழித்துவிட்டு அமெரிக்காவின் தலைவிதியைப் பளிச்சென்று மாற்றி எழுதுவார் என்னும் எதிர்பார்ப்பு அவர்களுக்கு. கன்னாபின்னாவென்று சரிந்து கிடக்கும் பங்குச்சந்தை நிமிர்ந்து நிற்கவேண்டும். டாலரின் மதிப்பு உயரவேண்டும். அதைவிட முக்கியம் தேசத்தின் மதிப்பு. இராக் விவகாரத்தால் ஊர், உலகம் முழுவதும் வண்டி வண்டியாகக் கெட்ட பெயர். எல்லாம் மாறவேண்டும். நல்லபடியாக. அதிரடியாக. அடியோடு. ஆகவே, தேவை பராக் ஒபாமா.
பராக் ஒபாமா ஒரு மீட்பராகக் கருதப்படுவதற்கு மீடியா முன்வைக்கும் காரணங்கள் இவை. இராக்கில் இருந்து படிப்படியாக அமெரிக்க வீரர்களை திரும்பப் பெற்றுக்கொள்வதாக வாக்களித்திருக்கிறார். புஷ் போல் அசட்டுத்தனமாக நடந்துகொள்ளமாட்டேன் என்று கட் அண்டு ரைட்டாகச் சொல்கிறார். அமெரிக்கா விரும்பும் மாற்றத்தைக் கொண்டு வருவேன் என்று நம்பிக்கை அளிக்கிறார். நாற்பத்தேழு வயது இளைஞர். துடிதுடிப்பும் செயல்வேகமும் விவேகமும் வெளிப்படையாகத் தெரிகிறது. மிக மிக எளிமையான குடும்பப் பின்னணி என்பதால் அடித்தட்டு மக்களின் அவலங்களை நன்கு உணர்ந்திருப்பார். நிச்சயம் அவர்களைக் கைவிடமாட்டார்.
ஒபாமாவின் முழுப் பெயர் தெரியும் இல்லையா? பராக் ஹுசேன் ஒபாமா. பெரும்பாலான இஸ்லாமியர்கள் அமெரிக்காவுக்கு எதிராகத் திரும்பியிருக்கும் இந்தச் சமயத்தில் ஒரு ஹுசேன் அதிபராவது நல்ல விஷயம். தவிரவும், ஒபாமா ஒரு கறுப்பினத்தவர். ஆகவே, அமெரிக்காவில் உள்ள கறுப்பர்களின் ஆதரவு முழுமையாக ஒபாமாவுக்குக் கிடைக்கும். கறுப்பர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் நலன் இனி பாதுகாக்கப்படும். மொத்தத்தில், அமெரிக்கர்களின் ஒட்டுமொத்த எண்ணங்களையும் கனவுகளையும் பிரதிபலிப்பவராக இருக்கிறார் ஒபாமா.
அப்படித்தானா? பராக் ஒபாமா உண்மையிலேயே ஒரு மீட்பர்தானா? அலசுவோம். அதற்கு முன்னால் அமெரிக்கப் பத்திரிகைகள் ஒபாமா குறித்து முன்வைக்கும் ஒர் ஆர்ப்பாட்டமான வாதத்தை எடுத்துக்கொள்வோம். வெள்ளையர்களின் தேசமாக அமெரிக்காவில் ஒரு கறுப்பர் இந்த அளவுக்கு முன்னேறி வந்திருக்கிறார் என்றால் என்ன அர்த்தம்? அமெரிக்கர்கள் நிறத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்பதுதானே? ஐயோ அமெரிக்காவா அது இனவெறி கொண்ட நாடு அல்லவா என்று இனி யாரும் நாக்கில் பல் போட்டு பேச முடியாது அல்லவா?
அமெரிக்கச் சரித்திரத்திலேயே ஒரு கறுப்பினத்தவர் அதிபர் பதவி தேர்தலில் இந்த அளவுக்கு முன்னேறி வந்தது இதுவே முதன் முறை. உண்மை. ஆனால், இந்த வெற்றி ஒபாமாவுக்குக் கிடைக்கக்கூடாது என்பதற்காக ஹிலாரியும் பில் கிளிண்டனும் செய்த அட்டகாசங்கள் என்னென்ன தெரியுமா? தெற்கு கரோலினாவில் முதல் கட்டத் தேர்தலில் ஒபாமா வெற்றி பெற்றபோது பில் கிளிண்டன் அடித்த கமெண்ட் இது. இந்த வெற்றியை நீங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. காரணம், அது கறுப்பர்களின் மாநிலம்.
அதாவது, ஒபாமாவால் கறுப்பர்களை மட்டுமே கவர முடியும். அமெரிக்கா கறுப்பர்களின் தேசம் அல்ல. கறுப்பர்கள் மட்டுமே ஓட்டுப்போட்டு ஒரு அதிபரைத் தேர்ந்தெடுத்துவிடமுடியாது. ஆகவே, வெள்ளையர்களே கவலை வேண்டாம். இதுதான் கிளிண்டன் தெரிவிக்க விரும்பிய செய்தி. தன் மனைவிக்காக தேர்தல் பிரசாரம் செய்தபோது மேடை தவறாமல் கிளிண்டன் வலியுறுத்திய விஷயம் இது. பராக் ஒபாமா நமக்கான ஆள் கிடையாது. அவர் ஒரு கறுப்பர்.
ஹிலாரி இவருக்குச் சற்றும் சளைத்தவர் கிடையாது. அமெரிக்க மக்களின் ஆதரவை ஒபாமா பெறுவது சாத்தியமே இல்லை என்று அடித்துப் பேசினார். ஏனென்றார் அவர் ஒரு கறுப்பராம். போயும் போயும் ஒரு கறுப்பரிடம் நாட்டை எப்படி ஒப்படைப்பது என்று ஹிலாரியின் ஆதரவாளர்கள் வெளிப்படையாகவே பேசிக்கொண்டார்கள். ஹிலாரி அவர்களைத் தடுக்கவில்லை.
இதனையெல்லாம் கடந்துதான் பராக் ஒபாமா வெற்றிபெற்றிருக்கிறார். இனி ஜெயிக்க முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிந்தபிறகுதான் போட்டியில் இருந்து விலகி ஒபாமாவுக்குப் பின்னால் பதுங்கிக்கொண்டார் ஹிலாரி. தேர்தல் பிரசாரத்திலேயே தோலின் நிறத்தை இழுத்து வந்தவர்களை இனவெறி கொண்டவர்கள் என்று விமரிசிப்பதில் என்ன தவறு? ஆக, அமெரிக்கா இதுவரை மாறவில்லை என்பதுதான் நிஜம். சரி, போகட்டும். இனியாவது பராக் ஒபாமா அந்த மாற்றத்தை ஏற்படுத்துவாரா?
முதலில் ஒபாமாவின் பின்னணி. செல்வச் செழிப்புள்ள குடும்பத்தில் இருந்து வந்தவர் அல்லர் அவர். உண்மைதான். ஒபாமாவின் தந்தை கறுப்பினத்தவர். தாயார் அமெரிக்காவைச் சேர்ந்தவர். வெள்ளையினத்தவர். ஒபாமா ஆரம்பக் கல்வி பயின்றது இந்தோனேஷியா என்னும் ஏழை தேசத்தில். இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, ஒபாமா ஒரு நடுத்தர வர்க்கத்தின் பிரதிநிதி போல் காட்சியளிக்கக்கூடும். ஆனால் உண்மை அதுவல்ல. ஒபாமாவை வளர்த்தது அவர் தாயார் மற்றும் பாட்டி. இந்தோனேஷியாவில் இருந்தாலும் அவர் படித்தது மேட்டுக்குடிப் பள்ளியில். உயர்படிப்பு அமெரிக்காவில். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில். பழகியது மேல்தட்டு வர்க்கத்தினருடன். ஒபாமாவின் தோற்றம், சிந்தனை, பழக்க வழக்கம் அனைத்துமே மேட்டுக்குடியினரின் இயல்புகளை ஒட்டியே அமைந்திருக்கின்றன. நிறத்தால் அவர் கறுப்பாக இருந்தாலும் உணர்வுகளால் அவர் கறுப்பர் கிடையாது.
ஒபாமாவின் தேர்தல் பிரசார உரையே இதற்குச் சாட்சி. கறுப்பர்களின் வாழ்க்கை பின்தங்கியிருப்பதன் காரணம் என்ன? அவர்கள் வறுமை. கறுப்பர்கள் வசிக்கும் தெருக்கள் அசுத்தமாக இருக்கின்றன. கறுப்பினக் குழந்தைகள் விளையாட பூங்காக்கள் இல்லை. கறுப்பர்களுக்குக் கல்வி இல்லை. வேலைவாய்ப்புகள் இல்லை. எதிலும் முன்னுரிமை இல்லை. ஆகவே அவர்கள் இரண்டாம்தரக் குடிமக்களாக மாறியிருக்கிறார்கள். அவர்கள் பரிதாப நிலைக்குக் காரணம் அவர்கள்தாம்.
அதாவது, கறுப்பர்கள் தாமாகவே தேய்ந்து சுருங்கி இரண்டாம்தரக் குடிமக்களாக õறிவிட்டார்களாம். ஒரு அடிமை தானாகவே அடிமையாக மாறிவிட்டான் என்கிறார் ஒபாமா. கறுப்பர்கள் அடிமைகள் என்றால் அவர்கள் எஜமானர்கள் யார் என்பதை ஒபாமா தெரிவிக்கவில்லை. தெரிவிக்க விருப்பமில்லை அவருக்கு. கறுப்பர்களைத் திருப்திப்படுத்தவேண்டியது எத்தனை அவசியமோ அதைவிட பல மடங்கு அவசியமானது வெள்ளையர்களைத் திருப்திப்படுத்துவது. கறுப்பர்கள் தாழ்ந்துபோயிருப்பதற்கு நீங்கள்தான் காரணம் என்று சொல்வதற்கு ஒரு நிமிடம் பிடிக்காது. ஆனால், அப்படிச் சொல்லிவிட்ட பிறகு, தேர்தலில் ஜெயிக்க முடியுமா?
ஹுசேன் விஷயத்தை எடுத்துக்கொள்வோம். பராக்குக்கும் ஒபாமாவுக்கும் இடையே வந்து விழுந்துவிட்ட பெயர் ஹுசேன். இஸ்லாத்துக்கும் ஒபாமாவுக்கும் துளி தொடர்பும் இல்லை. கிறிஸ்தவ ஐக்கிய தேவாலயம் என்ற கிறிஸ்தவ மதப் பிரிவைச் சேர்ந்தவர் ஒபாமா. வாரம் தவறாமல் தேவாலயம் செல்பவர். இஸ்லாமியர்களோடு இவர் கைகுலுக்கிக்கொள்வார் என்று எதிர்பார்க்க முடியாது. இதோ ஒபாமாவின் சமீபத்திய இரு வாக்குறுதிகள். தேவைப்பட்டால் குண்டு போட்டு பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமியத் தீவிரவாதிகளை அழித்தொழிப்பேன். ஆப்கனிஸ்தானுக்குக் கூடுதல் அமெரிக்கப் படைகளை அனுப்பி வைப்பேன்.
இராக்? ஆரம்பத்தில் இருந்தே நான் இந்தப் போரை வெறுக்கிறேன் என்பது போன்ற ஒரு மாயையை ஏற்படத்தியிருக்கிறார் ஒபாமா. இராக் போரைத் தொடர்வதற்கு கூடுதல் தளவாடங்கள் தேவை ஆகவே ராணுவ பட்ஜெட்டை அதிகரிக்கவேண்டும் என்று புஷ் ஒரு தீர்மானம் கொண்டுவந்தபோது ஜனநாயகக் கட்சி அதை எதிர்க்கவில்லை. அதாவது, பராக் ஒபாமாவின் ஜனநாயகக் கட்சி. பராக் ஒபாமாவின் பங்கு இதில் என்ன? இது தவறு என்று தன் கட்சியோடு இவர் சண்டை போட்டாரா? போர் எதிர்ப்பாளரான ஒபாமாவால் எப்படி போருக்கு ஆதரவு அளிக்கும் கட்சியின் சார்பாக போட்டியிட முடிகிறது?
இங்கே இருப்பது போல் அமெரிக்காவிலும் கறுப்பர்களுக்கு சில இட ஒதுக்கீடுகள் நடைமுறையில் உள்ளன. இந்த இட ஒதுக்கீடு கூடாது என்று சில வெள்ளையின அமைப்புகள் அங்கே போராடிக்கொண்டிருக்கின்றன. இது பற்றி பராக் ஒபாமா என்ன சொல்கிறார்? கறுப்பர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கிறாரா? கிடையாது. ஏன்? ஒரே வார்த்தையில் சொல்லவேண்டுமானால் சமரசம். மிகத் தெளிவாகத் திட்டமிட்டு தன் பாதையில் படிப்படியாக முன்னேறிக்கொண்டிருப்பவர் பராக் ஒபாமா. எப்போது தேவையோ அப்போது மட்டும் ஒரு கறுப்பராகத் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளத்தெரிந்தவர் அவர். கறுப்பர் என்னும் அடையாளம் அவருக்கு ஒரு கவர்ச்சி அம்சம் மட்டுமே.
இருப்பதிலேயே அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் பாலஸ்தீனர்கள்தாம் என்று ஒரு முறை பேட்டி கொடுத்தார். எனில், இஸ்ரேலின் தரப்பில்தான் தவறு என்று ஒப்புக்கொள்கிறீர்களா என்று பின்னர் கேட்டபோது பதிலளிக்காமல் நழுகிக்கொண்டார். காரணம், அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் உள்ள சிறப்புத் தொடர்பு. இஸ்ரேலியர்கள் வன்முறையைக் கைவிட்டால்தான் அவர்களுக்கு நல்லது என்று அறிவுரை வேறு சொன்னார்.
க்யூபாவின் அதிபர் ரால் காஸ்ட்ரோவைச் சந்தீப்பீர்களா என்று கேட்டபோது ஒபாமா அளித்த பதில் இது. ஃபிடல் காஸ்ட்ரோ இருந்தவரை க்யூபாவில் சுதந்தரம் இருந்ததில்லை. நல்ல வேளையாக இப்போது அங்கே ஆட்சி மாறியிருக்கிறது. இனி அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம். ஆனால், க்யூபா மீது அமெரிக்கா முன்வைத்த பொருளாதாரத் தடைகள் அப்படியே நீடிக்கும். நான் அதை மாற்றமாட்டேன்.
புரிகிறது அல்லவா? ஜார்ஜ் புஷ்ஷின் கொள்கைகள்தான் பராக் ஒபாமாவின் கொள்கைகளும். பில் கிளிண்டனின் கொள்கைகள்தான் பராக் ஒபாமாவின் கொள்கைகளும். யார் அதிபர் என்பது அவ்வளவு முக்கியமில்லை. குடியரசுக் கட்சியா அல்லது ஜனநாயகக் கட்சியா என்பதல்ல கேள்வி. வெள்ளையரா கறுப்பரா என்பதல்ல முக்கியம். அமெரிக்காவின் தன்மை மாறாது. அமெரிக்காவின் நிறம் மாறாது. அமெரிக்காவின் கொள்கைகள் மாறாது. தனிநபர்களால் ஆளப்படும் தேசம் அல்ல அது.
பராக் ஒபாமாவுக்கும் இது தெரியும். ஆனாலும் மூலைக்கு மூலை சென்று மைக் முன்னால் உணர்ச்சிகரமாக உரைகள் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். அமெரிக்கா நிச்சயம் மாறும். நான் மாற்றுவேன். அமெரிக்கா விரும்பும், அமெரிக்கர்கள் விரும்பும் மாற்றத்தை நான் ஏற்படுத்துவேன். ஒபாமாவை நம்பத் தயாராக இருக்கிறார்கள் அமெரிக்கர்கள். ஒபாமாவை நம்பத் தயாராக இருக்கிறது உலகம். எனக்கு உன்னைப் பற்றித் தெரியும் கண்ணா என்று ஒபாமாவைப் பார்த்து கண் சிமிட்டிக்கொண்டிருக்கிறது அமெரிக்கா.
பராக் ஒபாமா ஒரு மீட்பராகக் கருதப்படுவதற்கு மீடியா முன்வைக்கும் காரணங்கள் இவை. இராக்கில் இருந்து படிப்படியாக அமெரிக்க வீரர்களை திரும்பப் பெற்றுக்கொள்வதாக வாக்களித்திருக்கிறார். புஷ் போல் அசட்டுத்தனமாக நடந்துகொள்ளமாட்டேன் என்று கட் அண்டு ரைட்டாகச் சொல்கிறார். அமெரிக்கா விரும்பும் மாற்றத்தைக் கொண்டு வருவேன் என்று நம்பிக்கை அளிக்கிறார். நாற்பத்தேழு வயது இளைஞர். துடிதுடிப்பும் செயல்வேகமும் விவேகமும் வெளிப்படையாகத் தெரிகிறது. மிக மிக எளிமையான குடும்பப் பின்னணி என்பதால் அடித்தட்டு மக்களின் அவலங்களை நன்கு உணர்ந்திருப்பார். நிச்சயம் அவர்களைக் கைவிடமாட்டார்.
ஒபாமாவின் முழுப் பெயர் தெரியும் இல்லையா? பராக் ஹுசேன் ஒபாமா. பெரும்பாலான இஸ்லாமியர்கள் அமெரிக்காவுக்கு எதிராகத் திரும்பியிருக்கும் இந்தச் சமயத்தில் ஒரு ஹுசேன் அதிபராவது நல்ல விஷயம். தவிரவும், ஒபாமா ஒரு கறுப்பினத்தவர். ஆகவே, அமெரிக்காவில் உள்ள கறுப்பர்களின் ஆதரவு முழுமையாக ஒபாமாவுக்குக் கிடைக்கும். கறுப்பர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் நலன் இனி பாதுகாக்கப்படும். மொத்தத்தில், அமெரிக்கர்களின் ஒட்டுமொத்த எண்ணங்களையும் கனவுகளையும் பிரதிபலிப்பவராக இருக்கிறார் ஒபாமா.
அப்படித்தானா? பராக் ஒபாமா உண்மையிலேயே ஒரு மீட்பர்தானா? அலசுவோம். அதற்கு முன்னால் அமெரிக்கப் பத்திரிகைகள் ஒபாமா குறித்து முன்வைக்கும் ஒர் ஆர்ப்பாட்டமான வாதத்தை எடுத்துக்கொள்வோம். வெள்ளையர்களின் தேசமாக அமெரிக்காவில் ஒரு கறுப்பர் இந்த அளவுக்கு முன்னேறி வந்திருக்கிறார் என்றால் என்ன அர்த்தம்? அமெரிக்கர்கள் நிறத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்பதுதானே? ஐயோ அமெரிக்காவா அது இனவெறி கொண்ட நாடு அல்லவா என்று இனி யாரும் நாக்கில் பல் போட்டு பேச முடியாது அல்லவா?
அமெரிக்கச் சரித்திரத்திலேயே ஒரு கறுப்பினத்தவர் அதிபர் பதவி தேர்தலில் இந்த அளவுக்கு முன்னேறி வந்தது இதுவே முதன் முறை. உண்மை. ஆனால், இந்த வெற்றி ஒபாமாவுக்குக் கிடைக்கக்கூடாது என்பதற்காக ஹிலாரியும் பில் கிளிண்டனும் செய்த அட்டகாசங்கள் என்னென்ன தெரியுமா? தெற்கு கரோலினாவில் முதல் கட்டத் தேர்தலில் ஒபாமா வெற்றி பெற்றபோது பில் கிளிண்டன் அடித்த கமெண்ட் இது. இந்த வெற்றியை நீங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. காரணம், அது கறுப்பர்களின் மாநிலம்.
அதாவது, ஒபாமாவால் கறுப்பர்களை மட்டுமே கவர முடியும். அமெரிக்கா கறுப்பர்களின் தேசம் அல்ல. கறுப்பர்கள் மட்டுமே ஓட்டுப்போட்டு ஒரு அதிபரைத் தேர்ந்தெடுத்துவிடமுடியாது. ஆகவே, வெள்ளையர்களே கவலை வேண்டாம். இதுதான் கிளிண்டன் தெரிவிக்க விரும்பிய செய்தி. தன் மனைவிக்காக தேர்தல் பிரசாரம் செய்தபோது மேடை தவறாமல் கிளிண்டன் வலியுறுத்திய விஷயம் இது. பராக் ஒபாமா நமக்கான ஆள் கிடையாது. அவர் ஒரு கறுப்பர்.
ஹிலாரி இவருக்குச் சற்றும் சளைத்தவர் கிடையாது. அமெரிக்க மக்களின் ஆதரவை ஒபாமா பெறுவது சாத்தியமே இல்லை என்று அடித்துப் பேசினார். ஏனென்றார் அவர் ஒரு கறுப்பராம். போயும் போயும் ஒரு கறுப்பரிடம் நாட்டை எப்படி ஒப்படைப்பது என்று ஹிலாரியின் ஆதரவாளர்கள் வெளிப்படையாகவே பேசிக்கொண்டார்கள். ஹிலாரி அவர்களைத் தடுக்கவில்லை.
இதனையெல்லாம் கடந்துதான் பராக் ஒபாமா வெற்றிபெற்றிருக்கிறார். இனி ஜெயிக்க முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிந்தபிறகுதான் போட்டியில் இருந்து விலகி ஒபாமாவுக்குப் பின்னால் பதுங்கிக்கொண்டார் ஹிலாரி. தேர்தல் பிரசாரத்திலேயே தோலின் நிறத்தை இழுத்து வந்தவர்களை இனவெறி கொண்டவர்கள் என்று விமரிசிப்பதில் என்ன தவறு? ஆக, அமெரிக்கா இதுவரை மாறவில்லை என்பதுதான் நிஜம். சரி, போகட்டும். இனியாவது பராக் ஒபாமா அந்த மாற்றத்தை ஏற்படுத்துவாரா?
முதலில் ஒபாமாவின் பின்னணி. செல்வச் செழிப்புள்ள குடும்பத்தில் இருந்து வந்தவர் அல்லர் அவர். உண்மைதான். ஒபாமாவின் தந்தை கறுப்பினத்தவர். தாயார் அமெரிக்காவைச் சேர்ந்தவர். வெள்ளையினத்தவர். ஒபாமா ஆரம்பக் கல்வி பயின்றது இந்தோனேஷியா என்னும் ஏழை தேசத்தில். இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, ஒபாமா ஒரு நடுத்தர வர்க்கத்தின் பிரதிநிதி போல் காட்சியளிக்கக்கூடும். ஆனால் உண்மை அதுவல்ல. ஒபாமாவை வளர்த்தது அவர் தாயார் மற்றும் பாட்டி. இந்தோனேஷியாவில் இருந்தாலும் அவர் படித்தது மேட்டுக்குடிப் பள்ளியில். உயர்படிப்பு அமெரிக்காவில். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில். பழகியது மேல்தட்டு வர்க்கத்தினருடன். ஒபாமாவின் தோற்றம், சிந்தனை, பழக்க வழக்கம் அனைத்துமே மேட்டுக்குடியினரின் இயல்புகளை ஒட்டியே அமைந்திருக்கின்றன. நிறத்தால் அவர் கறுப்பாக இருந்தாலும் உணர்வுகளால் அவர் கறுப்பர் கிடையாது.
ஒபாமாவின் தேர்தல் பிரசார உரையே இதற்குச் சாட்சி. கறுப்பர்களின் வாழ்க்கை பின்தங்கியிருப்பதன் காரணம் என்ன? அவர்கள் வறுமை. கறுப்பர்கள் வசிக்கும் தெருக்கள் அசுத்தமாக இருக்கின்றன. கறுப்பினக் குழந்தைகள் விளையாட பூங்காக்கள் இல்லை. கறுப்பர்களுக்குக் கல்வி இல்லை. வேலைவாய்ப்புகள் இல்லை. எதிலும் முன்னுரிமை இல்லை. ஆகவே அவர்கள் இரண்டாம்தரக் குடிமக்களாக மாறியிருக்கிறார்கள். அவர்கள் பரிதாப நிலைக்குக் காரணம் அவர்கள்தாம்.
அதாவது, கறுப்பர்கள் தாமாகவே தேய்ந்து சுருங்கி இரண்டாம்தரக் குடிமக்களாக õறிவிட்டார்களாம். ஒரு அடிமை தானாகவே அடிமையாக மாறிவிட்டான் என்கிறார் ஒபாமா. கறுப்பர்கள் அடிமைகள் என்றால் அவர்கள் எஜமானர்கள் யார் என்பதை ஒபாமா தெரிவிக்கவில்லை. தெரிவிக்க விருப்பமில்லை அவருக்கு. கறுப்பர்களைத் திருப்திப்படுத்தவேண்டியது எத்தனை அவசியமோ அதைவிட பல மடங்கு அவசியமானது வெள்ளையர்களைத் திருப்திப்படுத்துவது. கறுப்பர்கள் தாழ்ந்துபோயிருப்பதற்கு நீங்கள்தான் காரணம் என்று சொல்வதற்கு ஒரு நிமிடம் பிடிக்காது. ஆனால், அப்படிச் சொல்லிவிட்ட பிறகு, தேர்தலில் ஜெயிக்க முடியுமா?
ஹுசேன் விஷயத்தை எடுத்துக்கொள்வோம். பராக்குக்கும் ஒபாமாவுக்கும் இடையே வந்து விழுந்துவிட்ட பெயர் ஹுசேன். இஸ்லாத்துக்கும் ஒபாமாவுக்கும் துளி தொடர்பும் இல்லை. கிறிஸ்தவ ஐக்கிய தேவாலயம் என்ற கிறிஸ்தவ மதப் பிரிவைச் சேர்ந்தவர் ஒபாமா. வாரம் தவறாமல் தேவாலயம் செல்பவர். இஸ்லாமியர்களோடு இவர் கைகுலுக்கிக்கொள்வார் என்று எதிர்பார்க்க முடியாது. இதோ ஒபாமாவின் சமீபத்திய இரு வாக்குறுதிகள். தேவைப்பட்டால் குண்டு போட்டு பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமியத் தீவிரவாதிகளை அழித்தொழிப்பேன். ஆப்கனிஸ்தானுக்குக் கூடுதல் அமெரிக்கப் படைகளை அனுப்பி வைப்பேன்.
இராக்? ஆரம்பத்தில் இருந்தே நான் இந்தப் போரை வெறுக்கிறேன் என்பது போன்ற ஒரு மாயையை ஏற்படத்தியிருக்கிறார் ஒபாமா. இராக் போரைத் தொடர்வதற்கு கூடுதல் தளவாடங்கள் தேவை ஆகவே ராணுவ பட்ஜெட்டை அதிகரிக்கவேண்டும் என்று புஷ் ஒரு தீர்மானம் கொண்டுவந்தபோது ஜனநாயகக் கட்சி அதை எதிர்க்கவில்லை. அதாவது, பராக் ஒபாமாவின் ஜனநாயகக் கட்சி. பராக் ஒபாமாவின் பங்கு இதில் என்ன? இது தவறு என்று தன் கட்சியோடு இவர் சண்டை போட்டாரா? போர் எதிர்ப்பாளரான ஒபாமாவால் எப்படி போருக்கு ஆதரவு அளிக்கும் கட்சியின் சார்பாக போட்டியிட முடிகிறது?
இங்கே இருப்பது போல் அமெரிக்காவிலும் கறுப்பர்களுக்கு சில இட ஒதுக்கீடுகள் நடைமுறையில் உள்ளன. இந்த இட ஒதுக்கீடு கூடாது என்று சில வெள்ளையின அமைப்புகள் அங்கே போராடிக்கொண்டிருக்கின்றன. இது பற்றி பராக் ஒபாமா என்ன சொல்கிறார்? கறுப்பர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கிறாரா? கிடையாது. ஏன்? ஒரே வார்த்தையில் சொல்லவேண்டுமானால் சமரசம். மிகத் தெளிவாகத் திட்டமிட்டு தன் பாதையில் படிப்படியாக முன்னேறிக்கொண்டிருப்பவர் பராக் ஒபாமா. எப்போது தேவையோ அப்போது மட்டும் ஒரு கறுப்பராகத் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளத்தெரிந்தவர் அவர். கறுப்பர் என்னும் அடையாளம் அவருக்கு ஒரு கவர்ச்சி அம்சம் மட்டுமே.
இருப்பதிலேயே அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் பாலஸ்தீனர்கள்தாம் என்று ஒரு முறை பேட்டி கொடுத்தார். எனில், இஸ்ரேலின் தரப்பில்தான் தவறு என்று ஒப்புக்கொள்கிறீர்களா என்று பின்னர் கேட்டபோது பதிலளிக்காமல் நழுகிக்கொண்டார். காரணம், அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் உள்ள சிறப்புத் தொடர்பு. இஸ்ரேலியர்கள் வன்முறையைக் கைவிட்டால்தான் அவர்களுக்கு நல்லது என்று அறிவுரை வேறு சொன்னார்.
க்யூபாவின் அதிபர் ரால் காஸ்ட்ரோவைச் சந்தீப்பீர்களா என்று கேட்டபோது ஒபாமா அளித்த பதில் இது. ஃபிடல் காஸ்ட்ரோ இருந்தவரை க்யூபாவில் சுதந்தரம் இருந்ததில்லை. நல்ல வேளையாக இப்போது அங்கே ஆட்சி மாறியிருக்கிறது. இனி அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம். ஆனால், க்யூபா மீது அமெரிக்கா முன்வைத்த பொருளாதாரத் தடைகள் அப்படியே நீடிக்கும். நான் அதை மாற்றமாட்டேன்.
புரிகிறது அல்லவா? ஜார்ஜ் புஷ்ஷின் கொள்கைகள்தான் பராக் ஒபாமாவின் கொள்கைகளும். பில் கிளிண்டனின் கொள்கைகள்தான் பராக் ஒபாமாவின் கொள்கைகளும். யார் அதிபர் என்பது அவ்வளவு முக்கியமில்லை. குடியரசுக் கட்சியா அல்லது ஜனநாயகக் கட்சியா என்பதல்ல கேள்வி. வெள்ளையரா கறுப்பரா என்பதல்ல முக்கியம். அமெரிக்காவின் தன்மை மாறாது. அமெரிக்காவின் நிறம் மாறாது. அமெரிக்காவின் கொள்கைகள் மாறாது. தனிநபர்களால் ஆளப்படும் தேசம் அல்ல அது.
பராக் ஒபாமாவுக்கும் இது தெரியும். ஆனாலும் மூலைக்கு மூலை சென்று மைக் முன்னால் உணர்ச்சிகரமாக உரைகள் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். அமெரிக்கா நிச்சயம் மாறும். நான் மாற்றுவேன். அமெரிக்கா விரும்பும், அமெரிக்கர்கள் விரும்பும் மாற்றத்தை நான் ஏற்படுத்துவேன். ஒபாமாவை நம்பத் தயாராக இருக்கிறார்கள் அமெரிக்கர்கள். ஒபாமாவை நம்பத் தயாராக இருக்கிறது உலகம். எனக்கு உன்னைப் பற்றித் தெரியும் கண்ணா என்று ஒபாமாவைப் பார்த்து கண் சிமிட்டிக்கொண்டிருக்கிறது அமெரிக்கா.
Subscribe to:
Posts (Atom)